என் மலர்
சினிமா

பண மோசடி வழக்கில் இயக்குனர் கைது
பண மோசடி வழக்கில் கமரகட்டு பட இயக்குனர் ராம்கி ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். #KamarKattu #Director
‘கமரகட்டு’ என்ற படத்தை இயக்கியவர் ராம்கி ராமகிருஷ்ணன். இவர் நர்த்தகி என்ற படத்தை இயக்கிய விஜயபத்மா மற்றும் அவரது கணவர் முத்துகிருஷ்ணன் என்பவருடன் சேர்ந்து சவுகார்பேட்டையை சேர்ந்த அசோக் என்ற பைனான்சியரிடம் ‘இதயம் திரையரங்கம்’ என்ற படத்தை தயாரிப்பதற்காக பணம் வாங்கினார். இதற்கு ஈடாக சொத்து பத்திரம் ஒன்றையும் கொடுத்துள்ளார்.

ஆனால் சொன்ன தேதியில் மொத்த கடன் தொகையான 40 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் அசோக் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மூவரும் கடந்த 27-ந்தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story






