என் மலர்
சினிமா

அடுத்த படத்திற்கு தயாரான அரவிந்த் சாமி
பல படங்களில் பிசியாக நடித்து வரும் அரவிந்த் சாமி, அடுத்ததாக தான் நடிக்க இருக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். #ArvindSwami
செக்கச் சிவந்த வானம் படத்தின் வெற்றிக்குப் பிறகு அரவிந்த் சாமி நடிப்பில் ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’ ஆகிய படங்கள் உருவாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் கள்ளபார்ட் படத்திலும் அரவிந்த் சாமி நடித்து வருகிறார்.

இந்நிலையில், அடுத்த படம் பற்றிய அறிவிப்பை அரவிந்த் சாமி வெளியிட்டுள்ளார். எட்சட்ரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் நடிக்க இருப்பதாக கூறியிருக்கிறார். இப்படம் பற்றிய முழுவிவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ArvindSwami
Next Story