என் மலர்
சினி வரலாறு
தமிழக நடிகைகளில் 350 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்தவர் ஸ்ரீபிரியா. எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெய்சங்கர், கமல், ரஜினி என எல்லா முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தவர்.
தமிழக நடிகைகளில் 350 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்தவர் ஸ்ரீபிரியா. எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெய்சங்கர், கமல், ரஜினி என எல்லா முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தவர்.
தமிழ்ப் படங்கள் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று 350 படங்களை தாண்டியிருக்கிறார். தமிழில் மட்டும் கிட்டத்தட்ட 150 படங்கள். சிவாஜியுடன் 20 படங்கள், ஜெய்சங்கருடன் 20 படங்கள், கமலுடன் 32 படங்கள், ரஜினியுடன் 30 படங்கள் என்று முன்னணி நட்சத்திரங்களின் `தொடர் நாயகியாக' உலா வந்த பெருமை இவருக்கு உண்டு.
ஜெமினி, ஏவி.எம். போன்ற பெரிய சினிமா நிறுவனங்களில் ஆஸ்தான நடனக்கலைஞர் என்ற அந்தஸ்துடன் இருந்த பிரபல நடனமேதை கே.என். தண்டாயுதபாணி பிள்ளை, ஸ்ரீபிரியாவின் பெரியப்பா. இவர் எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார். நடன அமைப்பாளர்கள் சங்கத்தில் இப்போதும் கே.என்.தண்டாயுதபாணி பிள்ளையின் படம் இருக்கிறது.
பெரியப்பாவின் நடனப்பின்னணியில் ஸ்ரீபிரியாவின் அப்பா பக்கிரிசாமியும் நடனக் கலைஞர். அம்மா கிரிஜாவும் நடனத்தில் தேர்ந்தவர்.
ஜெமினி தயாரித்த "மூன்று பிள்ளைகள்'' படத்தில் பக்கிரிசாமி நடன இயக்குனராக இருந்து, கிரிஜாவை நடனமாடச் செய்திருக்கிறார்.
`ஸ்ரீபிரியா' என்பது சினிமாவுக்காக டைரக்டர் பி.மாதவன் சூட்டிய பெயர். நிஜப்பெயர் அலமேலு.
டைரக்டர் பி.மாதவன் இயக்கிய "முருகன் காட்டிய வழி'' என்ற படம் மூலம்தான் ஸ்ரீபிரியா சினிமாவில் அறிமுகமானார். ஆனால், டைரக்டர் ஏ.பி.நாகராஜன் இயக்கி சிவாஜி -சாவித்திரி சிவன்- பார்வதியாக நடித்த "திருவிளையாடல்'' படத்திலேயே நடித்திருக்க வேண்டியவர்.
அதுபற்றி ஸ்ரீபிரியாவே கூறுகிறார்:-
"அப்போது எனக்கு 6 வயது இருக்கும். `திருவிளையாடல்' படத்தில் பாலமுருகனாக நடிக்க சிறுவர்- சிறுமி தேவை என்று, `தினத்தந்தி'யில் விளம்பரம் வந்திருந்தது. என் பெரியப்பா, அந்தப் படத்திற்கு டான்ஸ் மாஸ்டராக இருந்தார். அவர் என்னிடம் "பாலமுருகனாக நடிக்க ஆலு (ஸ்ரீபிரியா) நீ வேணும்னா முயற்சி பண்ணேன்'' என்றார்.
பெரியப்பா இப்படிச் சொன்னதும், எனக்கும் ஆசை வந்துவிட்டது. நடிக்கும் ஆசை அல்ல; சினிமாவில் நடிக்கப்போனால் ஸ்கூலுக்கு லீவு போடலாமே என்ற ஆசைதான்!
முருகனாக நடிப்பதற்காக அம்மா என்னை அழைத்துப்போனார். அங்கே போனால், என் வயதில் சுமார் 200 பேர் வந்திருந்தார்கள். அத்தனை பேருக்கும் `மேக்கப் டெஸ்ட்' நடந்தது. அதில் என்னை மட்டுமே தேர்வு செய்தார்கள். என்னிடம் ஒரு வசனத்தைக் கொடுத்து, படிக்கச் சொன்னார்கள்.
அப்போது எனக்கு சுத்தமாக தமிழ் படிக்கத் தெரியாது! நான் படித்த `சர்ச் பார்க்' கான்வென்டில் ஆங்கிலம்தான் பிரதானம். அதோடு நான் சிறப்புப்பாடமாக இந்தியை எடுத்திருந்தேன்.
எனக்கு, தமிழ் தெரியாவிட்டாலும் வசனத்தை எப்படிப் பேசவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்கள்.
பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு மலைக்குப்போன முருகனை அவ்வையார் சந்தித்து, சாந்தப்படுத்த முயற்சிக்கிற காட்சி அது.
முருகன் தங்கியிருக்கும் மலைக்கு அவ்வையார் சென்று, "முருகா! ஞானபண்டிதா!'' என்று அழைக்க, பதிலுக்கு முருகன், "ஓ அவ்வையா!'' என்று கேட்க வேண்டும்.
இந்தக் காட்சி பற்றி விளக்கி எனக்கான வசனத்தையும் சொல்லிக் கொடுத்து என்னை நடிக்க வைத்தார்கள். அது ஒத்திகை என்று கூட அப்போது எனக்குத் தெரியாது. என் நடிப்பு டைரக்டர் ஏ.பி.நாகராஜனுக்கு பிடித்துப்போக, மறுநாள் வருமாறு சொன்னார்கள். `கார் வரும்' என்றார்கள்.
மறுநாள் காரும் வரவில்லை; அழைப்பும் வரவில்லை. என்ன நடந்தது என்று போய்ப்பார்த்தால், நான் நடிக்க வேண்டிய அந்த பாலமுருகன் வேடத்தில் இன்னொரு பெண் நடித்துக் கொண்டிருந்தாள்! பிறகுதான் அந்த பாலமுருகன் வேடத்துக்கு, சிவாஜி சார் சிபாரிசு செய்த பெண்ணைப் போட்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தது.
பின்னாளில் நான் கதாநாயகியாக நிறைய படங்களில் நடித்தபோது, டைரக்டர் ஏ.பி.நாகராஜன் எம்.ஜி.ஆரை வைத்து "நவரத்தினம்'' என்ற படத்தை இயக்கினார். அதில் 9 கதாநாயகிகளில் நானும் இருந்தேன். இந்தப்படத்தில் நடித்துவிட்டு வரும்போது, ஏ.பி.நாகராஜனிடம் "சார்! நான் படத்தில் நடித்த இந்தக்காட்சி இருக்குமா? அல்லது திருவிளையாடல் படத்தில் `ஓ.கே' பண்ணிய பிறகு என்னை விலக்கியது மாதிரி இதிலும் செய்து விடுவீர்களா?'' என்று விளையாட்டாகக் கேட்டேன். அவரோ, பதறியபடி, "என்னம்மா நீ! சின்ன வயதில் நடந்ததைக் கூடவா இப்படி நினைவில் வைத்திருப்பாய்!'' என்று சொன்னார்.
ஸ்ரீபிரியா எட்டாவது படித்துக் கொண்டிருந்த நேரத்தில், ஸ்ரீபிரியாவின் அக்கா மீனாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது. நடன நிகழ்ச்சிகளை பிரபல `ஸ்டில் போட்டோகிராபர்' நாகராஜராவ் படம் எடுத்தார். விழாவைப் பார்க்க வந்த ஸ்ரீபிரியா நாகராஜராவ் எடுத்த படங்களில் விழுந்திருந்தார்.
படங்களை நாகராஜராவ் பிரிண்ட் போட்டு தயார் நிலையில் வைத்திருந்தபோது, டைரக்டர் பி.மாதவன் அங்கு வந்தார். தற்செயலாக ஸ்ரீபிரியாவின் படத்தைப் பார்த்த மாதவன் `நாம் எடுக்கும் படத்துக்கு இந்தப்பெண்ணும் சரியாக இருப்பாள்' என்று நினைத்தார். அன்று மதியமே ஸ்ரீபிரியா படித்த சர்ச்பார்க் பள்ளிக்கு சினிமா கம்பெனி கார் போயிற்று.
"அப்போது எனக்கு நடிப்பில் எல்லாம் ஆர்வம் கிடையாது. ஏற்கனவே சிறு வயதில் ஏற்பட்ட சினிமா அனுபவம், `அந்தத் திசைக்கு ஒரு கும்பிடு' என்ற நிலைக்கு என்னைக் கொண்டு வந்திருந்தது. அதோடு அப்போது ஸ்கூலில் `த்ரோபால்', `நெட்பால்' என்று விளையாட்டுகளில் `நம்பர் ஒன்'னாக இருந்தேன். என் `ஸ்போர்ட்ஸ்' ஆர்வம் என்னை `கேம்ஸ் டீச்சர்' ஆகவேண்டும் என்ற கனவில் வைத்திருந்தது. இப்படியிருக்கும்போது, தேடி வந்த நடிப்பு வாய்ப்பை ஏற்கத் தயங்கினேன்'' என்று கூறுகிறார், ஸ்ரீபிரியா.
ஆனால் அவர் தாயாரோ, "மாதவன் சார் பெரிய டைரக்டர். நீ நடிக்க வேண்டாம் என்று நினைத்தாலும் அதை நேரில் போய் சொன்னால்தான் மரியாதை'' என்று சொல்ல, அம்மாவுடன் போய் டைரக்டர் மாதவனை பார்த்தார்.
மாதவன் அப்போது கதாசிரியர் பாலமுருகன் தயாரித்த "மாணிக்கத் தொட்டில்'' என்ற படத்தை டைரக்ட் செய்ய இருந்தார். அதில் ஜெமினிகணேசனின் 5 மகள்களில் ஒருவராக ஸ்ரீபிரியாவை நடிக்க வைக்கும் முடிவில்தான் அழைத்திருந்தார். எப்படியாவது நடிக்கும் வாய்ப்பை தட்டிக்கழிக்க விரும்பிய ஸ்ரீபிரியா, "5 பேரில் ஒருவராக நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை'' என்று கூறினார்.
"பொண்ணுக்குத் தங்கமனசு'' என்ற வெற்றிப்படத்தை மாதவன் இயக்கியிருந்த நேரம் அது. அந்தப் படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. "அப்படி ஒரு படத்தை தயாரிக்கும்போது, அழைப்பு அனுப்புகிறேன்'' என்று கூறினார், மாதவன். சொன்னதைச் செய்தார்.
தமிழ்ப் படங்கள் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று 350 படங்களை தாண்டியிருக்கிறார். தமிழில் மட்டும் கிட்டத்தட்ட 150 படங்கள். சிவாஜியுடன் 20 படங்கள், ஜெய்சங்கருடன் 20 படங்கள், கமலுடன் 32 படங்கள், ரஜினியுடன் 30 படங்கள் என்று முன்னணி நட்சத்திரங்களின் `தொடர் நாயகியாக' உலா வந்த பெருமை இவருக்கு உண்டு.
ஜெமினி, ஏவி.எம். போன்ற பெரிய சினிமா நிறுவனங்களில் ஆஸ்தான நடனக்கலைஞர் என்ற அந்தஸ்துடன் இருந்த பிரபல நடனமேதை கே.என். தண்டாயுதபாணி பிள்ளை, ஸ்ரீபிரியாவின் பெரியப்பா. இவர் எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார். நடன அமைப்பாளர்கள் சங்கத்தில் இப்போதும் கே.என்.தண்டாயுதபாணி பிள்ளையின் படம் இருக்கிறது.
பெரியப்பாவின் நடனப்பின்னணியில் ஸ்ரீபிரியாவின் அப்பா பக்கிரிசாமியும் நடனக் கலைஞர். அம்மா கிரிஜாவும் நடனத்தில் தேர்ந்தவர்.
ஜெமினி தயாரித்த "மூன்று பிள்ளைகள்'' படத்தில் பக்கிரிசாமி நடன இயக்குனராக இருந்து, கிரிஜாவை நடனமாடச் செய்திருக்கிறார்.
`ஸ்ரீபிரியா' என்பது சினிமாவுக்காக டைரக்டர் பி.மாதவன் சூட்டிய பெயர். நிஜப்பெயர் அலமேலு.
டைரக்டர் பி.மாதவன் இயக்கிய "முருகன் காட்டிய வழி'' என்ற படம் மூலம்தான் ஸ்ரீபிரியா சினிமாவில் அறிமுகமானார். ஆனால், டைரக்டர் ஏ.பி.நாகராஜன் இயக்கி சிவாஜி -சாவித்திரி சிவன்- பார்வதியாக நடித்த "திருவிளையாடல்'' படத்திலேயே நடித்திருக்க வேண்டியவர்.
அதுபற்றி ஸ்ரீபிரியாவே கூறுகிறார்:-
"அப்போது எனக்கு 6 வயது இருக்கும். `திருவிளையாடல்' படத்தில் பாலமுருகனாக நடிக்க சிறுவர்- சிறுமி தேவை என்று, `தினத்தந்தி'யில் விளம்பரம் வந்திருந்தது. என் பெரியப்பா, அந்தப் படத்திற்கு டான்ஸ் மாஸ்டராக இருந்தார். அவர் என்னிடம் "பாலமுருகனாக நடிக்க ஆலு (ஸ்ரீபிரியா) நீ வேணும்னா முயற்சி பண்ணேன்'' என்றார்.
பெரியப்பா இப்படிச் சொன்னதும், எனக்கும் ஆசை வந்துவிட்டது. நடிக்கும் ஆசை அல்ல; சினிமாவில் நடிக்கப்போனால் ஸ்கூலுக்கு லீவு போடலாமே என்ற ஆசைதான்!
முருகனாக நடிப்பதற்காக அம்மா என்னை அழைத்துப்போனார். அங்கே போனால், என் வயதில் சுமார் 200 பேர் வந்திருந்தார்கள். அத்தனை பேருக்கும் `மேக்கப் டெஸ்ட்' நடந்தது. அதில் என்னை மட்டுமே தேர்வு செய்தார்கள். என்னிடம் ஒரு வசனத்தைக் கொடுத்து, படிக்கச் சொன்னார்கள்.
அப்போது எனக்கு சுத்தமாக தமிழ் படிக்கத் தெரியாது! நான் படித்த `சர்ச் பார்க்' கான்வென்டில் ஆங்கிலம்தான் பிரதானம். அதோடு நான் சிறப்புப்பாடமாக இந்தியை எடுத்திருந்தேன்.
எனக்கு, தமிழ் தெரியாவிட்டாலும் வசனத்தை எப்படிப் பேசவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்கள்.
பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு மலைக்குப்போன முருகனை அவ்வையார் சந்தித்து, சாந்தப்படுத்த முயற்சிக்கிற காட்சி அது.
முருகன் தங்கியிருக்கும் மலைக்கு அவ்வையார் சென்று, "முருகா! ஞானபண்டிதா!'' என்று அழைக்க, பதிலுக்கு முருகன், "ஓ அவ்வையா!'' என்று கேட்க வேண்டும்.
இந்தக் காட்சி பற்றி விளக்கி எனக்கான வசனத்தையும் சொல்லிக் கொடுத்து என்னை நடிக்க வைத்தார்கள். அது ஒத்திகை என்று கூட அப்போது எனக்குத் தெரியாது. என் நடிப்பு டைரக்டர் ஏ.பி.நாகராஜனுக்கு பிடித்துப்போக, மறுநாள் வருமாறு சொன்னார்கள். `கார் வரும்' என்றார்கள்.
மறுநாள் காரும் வரவில்லை; அழைப்பும் வரவில்லை. என்ன நடந்தது என்று போய்ப்பார்த்தால், நான் நடிக்க வேண்டிய அந்த பாலமுருகன் வேடத்தில் இன்னொரு பெண் நடித்துக் கொண்டிருந்தாள்! பிறகுதான் அந்த பாலமுருகன் வேடத்துக்கு, சிவாஜி சார் சிபாரிசு செய்த பெண்ணைப் போட்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தது.
பின்னாளில் நான் கதாநாயகியாக நிறைய படங்களில் நடித்தபோது, டைரக்டர் ஏ.பி.நாகராஜன் எம்.ஜி.ஆரை வைத்து "நவரத்தினம்'' என்ற படத்தை இயக்கினார். அதில் 9 கதாநாயகிகளில் நானும் இருந்தேன். இந்தப்படத்தில் நடித்துவிட்டு வரும்போது, ஏ.பி.நாகராஜனிடம் "சார்! நான் படத்தில் நடித்த இந்தக்காட்சி இருக்குமா? அல்லது திருவிளையாடல் படத்தில் `ஓ.கே' பண்ணிய பிறகு என்னை விலக்கியது மாதிரி இதிலும் செய்து விடுவீர்களா?'' என்று விளையாட்டாகக் கேட்டேன். அவரோ, பதறியபடி, "என்னம்மா நீ! சின்ன வயதில் நடந்ததைக் கூடவா இப்படி நினைவில் வைத்திருப்பாய்!'' என்று சொன்னார்.
ஸ்ரீபிரியா எட்டாவது படித்துக் கொண்டிருந்த நேரத்தில், ஸ்ரீபிரியாவின் அக்கா மீனாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது. நடன நிகழ்ச்சிகளை பிரபல `ஸ்டில் போட்டோகிராபர்' நாகராஜராவ் படம் எடுத்தார். விழாவைப் பார்க்க வந்த ஸ்ரீபிரியா நாகராஜராவ் எடுத்த படங்களில் விழுந்திருந்தார்.
படங்களை நாகராஜராவ் பிரிண்ட் போட்டு தயார் நிலையில் வைத்திருந்தபோது, டைரக்டர் பி.மாதவன் அங்கு வந்தார். தற்செயலாக ஸ்ரீபிரியாவின் படத்தைப் பார்த்த மாதவன் `நாம் எடுக்கும் படத்துக்கு இந்தப்பெண்ணும் சரியாக இருப்பாள்' என்று நினைத்தார். அன்று மதியமே ஸ்ரீபிரியா படித்த சர்ச்பார்க் பள்ளிக்கு சினிமா கம்பெனி கார் போயிற்று.
"அப்போது எனக்கு நடிப்பில் எல்லாம் ஆர்வம் கிடையாது. ஏற்கனவே சிறு வயதில் ஏற்பட்ட சினிமா அனுபவம், `அந்தத் திசைக்கு ஒரு கும்பிடு' என்ற நிலைக்கு என்னைக் கொண்டு வந்திருந்தது. அதோடு அப்போது ஸ்கூலில் `த்ரோபால்', `நெட்பால்' என்று விளையாட்டுகளில் `நம்பர் ஒன்'னாக இருந்தேன். என் `ஸ்போர்ட்ஸ்' ஆர்வம் என்னை `கேம்ஸ் டீச்சர்' ஆகவேண்டும் என்ற கனவில் வைத்திருந்தது. இப்படியிருக்கும்போது, தேடி வந்த நடிப்பு வாய்ப்பை ஏற்கத் தயங்கினேன்'' என்று கூறுகிறார், ஸ்ரீபிரியா.
ஆனால் அவர் தாயாரோ, "மாதவன் சார் பெரிய டைரக்டர். நீ நடிக்க வேண்டாம் என்று நினைத்தாலும் அதை நேரில் போய் சொன்னால்தான் மரியாதை'' என்று சொல்ல, அம்மாவுடன் போய் டைரக்டர் மாதவனை பார்த்தார்.
மாதவன் அப்போது கதாசிரியர் பாலமுருகன் தயாரித்த "மாணிக்கத் தொட்டில்'' என்ற படத்தை டைரக்ட் செய்ய இருந்தார். அதில் ஜெமினிகணேசனின் 5 மகள்களில் ஒருவராக ஸ்ரீபிரியாவை நடிக்க வைக்கும் முடிவில்தான் அழைத்திருந்தார். எப்படியாவது நடிக்கும் வாய்ப்பை தட்டிக்கழிக்க விரும்பிய ஸ்ரீபிரியா, "5 பேரில் ஒருவராக நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை'' என்று கூறினார்.
"பொண்ணுக்குத் தங்கமனசு'' என்ற வெற்றிப்படத்தை மாதவன் இயக்கியிருந்த நேரம் அது. அந்தப் படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. "அப்படி ஒரு படத்தை தயாரிக்கும்போது, அழைப்பு அனுப்புகிறேன்'' என்று கூறினார், மாதவன். சொன்னதைச் செய்தார்.
கதாநாயகியாகவே நடித்து வந்த ரோஜா, டைரக்டர் கே.பாக்யராஜின் அழைப்பை தட்ட முடியாமல், "பாரிஜாதம்'' படத்தில் அம்மா வேடத்தில் நடித்தார்.
கதாநாயகியாகவே நடித்து வந்த ரோஜா, டைரக்டர் கே.பாக்யராஜின் அழைப்பை தட்ட முடியாமல், "பாரிஜாதம்'' படத்தில் அம்மா வேடத்தில் நடித்தார்.
டைரக்டர் பாக்யராஜ் தனது மகள் சரண்யாவை நாயகியாக்கி இயக்கிய படம் "பாரிஜாதம்.'' இந்தப் படத்தில் கதாநாயகன் பிருத்விராஜ×க்கு அம்மாவாக நடித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் ரோஜா.
இந்தப்படம் கடந்த ஆண்டு வெளிவந்தபோது, ரோஜாவை அதுவரை நாயகியாக மட்டுமே பார்த்து ரசித்து வந்த ரசிகர்கள் வியப்பும், திகைப்பும் அடைந்தார்கள். தங்கள் இதயத்தில் `நாயகி'யாக குடிகொண்டிருக்கும் ரோஜா, அதற்குள் எப்படி அம்மாவாக நடிக்கலாம் என்று கோபப்பட்ட ரசிகர்கள் ஏராளம்.
சிலர் கடிதங்கள் எழுதி திட்டினார்கள். சிலர் டெலிபோன் மூலம் தங்கள் ஆத்திரத்தைக் கொட்டினார்கள்.
இதுபற்றி ரோஜா கூறும்போது, "எனக்கும் அம்மா கேரக்டரில் நடிப்பதில் உடன்பாடு இல்லைதான். ஹீரோ பிரித்விராஜ×க்கு அம்மா என்பதும் எனக்குத் தெரியாது. செட்டில் பிரிதிவிராஜை பார்த்தபோதுதான் `திக்'கென்றது. ஆனாலும், டைரக்டர் பாக்யராஜ் கேட்டு "முடியாது'' என்று சொல்ல மனம் இடம் தரவில்லை. எனவே, அம்மா கேரக்டரில் நடிக்க வேண்டியதாயிற்று. இதில் ஒரு ஆறுதல் என்னவென்றால், அந்த அம்மா கேரக்டர் படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் வருவது'' என்றார்.
இந்த நட்பு பின்னணியில்தான் டைரக்டர் ராமநாராயணனின் "பாசக்கிளிகள்'' படத்தில் வில்லனின் மனைவியாக நடித்ததையும், விஜய் நடித்த "நெஞ்சினிலே'' படத்தில் ஒரு பாட்டுக்கு மட்டும் ஆட நேர்ந்ததையும் குறிப்பிட்டார்.
ரோஜா அப்போது பிசியாக இருந்த நேரம். ஆனால் விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடித்துவிடவேண்டும் என்ற எண்ணம் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. இந்த நேரத்தில் விஜய்யுடன் ஒரு பாட்டுக்கு மட்டும் ஆடவேண்டும் என்று கேட்டு வந்த "நெஞ்சினிலே'' பட வாய்ப்பை அவரால் நிராகரிக்க முடியவில்லை.
தவிரவும், இந்தப் பாடல் முழுக்க ரோஜாவை புகழ்ந்து எழுதப்பட்டது. அதுவும் விஜய்யே பாடியிருந்தார். "தங்க நிறத்துக்குத்தான் தமிழ்நாட்டை எழுதித்தரட்டுமா'' என்று தொடங்கும் பாடலின் முதல் வரியே ரோஜாவை நடனக் காட்சிக்கு உடனடியாக தயார் செய்து விட்டது.
தமிழ்ப்படங்களில் ரோஜா ஜோடி சேராத ஹீரோ என்று பார்த்தால், அதில் கமல் மட்டுமே இருக்கிறார்.
கமலுடன் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்த போதும், சூழ்நிலை காரணமாக அதை ஏற்கவில்லை.
ஒரு கட்டத்தில் படங்கள் குறையத் தொடங்கியதும் ரோஜா ஆந்திர அரசியலோடு தன்னை இணைத்துக்கொண்டார். முன்னாள் ஆந்திர முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடுவின் அணியில் ரோஜா முன்னணியில் இருக்கிறார். மேடையில் பேச அழைத்தால் போகிறார். தேர்தல் சமயங்களில் ஓட்டுக்கேட்க வீடு வீடாகச் செல்கிறார். மக்களுடன் சரளமாக உரையாடி அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டு தெரிந்து கொள்கிறார்.
"குறுகிய காலத்தில், கட்சியில் முக்கிய இடத்தை பிடித்து விட்டீர்கள். `நடிகை' என்ற தகுதிதான் இதற்குக் காரணமா?'' என்று கேட்டதற்கு ரோஜா கூறினார்:
"ஒரு தனி மனிதர் கட்சியில் சேருகிறார். படிப்படியாக வளருகிறார். கட்சியில் அவர் எல்லோருக்கும் தெரிந்த முகமாகி, முக்கிய பொறுப்புக்கு வருவதற்குள் கிட்டத்தட்ட 10 வருடமாகி விடுகிறது. என் போன்றவர்கள் சினிமா மூலம் ஏற்கனவே மக்களுக்கு தெரிந்தவர்களாகி விடுகிறோம். இதனால் கட்சி எங்களை அதிக அளவில் பயன்படுத்திக் கொள்கிறது. பொறுப்புக்களையும் தருகிறது.
தெலுங்குதேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு எப்போதுமே என் மரியாதைக்குரியவர். என் திருமணம் திருப்பதியில் நடந்தபோது, அவர் ஆந்திர முதல்- மந்திரியாக இருந்தார். திருமணத்துக்கு வந்து வாழ்த்த வேண்டும் என்று கேட்டதும், சந்தோஷமாய் சம்மதித்தார். வந்து வாழ்த்தினார்.''
இப்படிச் சொல்லும் ரோஜா, கட்சியில் சேர்ந்த புதிதில் சிவபிரசாத் என்ற வேட்பாளர் எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிட்டபோது அவருக்காக பிரசாரம் செய்து வெற்றியும் ஈட்டித் தந்தார்.
கடந்த பொதுத்தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டார். 4 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டார். ரோஜாவை எதிர்த்துப் போட்டியிட்டவர் செல்வாக்கு பெற்ற தலைவர்களில் ஒருவர். அவர் குறைந்த ஓட்டில்தான் ஜெயிக்க முடிந்திருக்கிறது.
`அரசியலில் வெற்றி -தோல்வி சகஜம். அரசியலை தேர்ந்தெடுத்த பிறகு எக்காலத்திலும் அதில் இருந்து பின்வாங்குவதாக இல்லை' என்பதை, தனது அரசியல் கொள்கையாகவே வைத்திருக்கிறார், ரோஜா.
அரசியலில் ஈடுபட்டாலும் நல்ல கேரக்டர் வந்தால் நடிப்பது என்று முடிவு எடுத்திருக்கிறார். சமீபத்தில் "மேக சந்தேசம்'' தெலுங்கு சீரியலில் நடிக்க நடிகை ராதிகா அழைத்திருந்தார். 4 பெரிய பையன்களுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும்! மறுத்துவிட்டார், ரோஜா.
"ரோஜா ரோஜாதான் என்று ரசிகர்கள் சொல்கிற மாதிரி கேரக்டர்கள் வரவேண்டும். முகத்தைக் காட்டிவிட்டுப் போகிற மாதிரியெல்லாம் நடிப்பது என்றால், அந்த வாய்ப்பு வேண்டவே வேண்டாம். பணத்தேவைக்காக நடிக்க வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இல்லை''- இப்படி தெளிவுபடுத்தும் ரோஜாவுக்கு அம்சவதனி என்ற 4 வயது மகளும், கிருஷ்ணகவுசிக் என்ற ஒரு வயது மகனும் வாரிசுகள்.
"பிள்ளைகள் எப்படி வரவேண்டும் என்று விரும்புகிறீர்கள்?'' என்று கேட்டதற்கு, "இப்படித்தான் வரவேண்டும் என்ற திட்டமெல்லாம் வாழ்க்கைக்கு சரி வராது. அவர்களின் ஆர்வம் எதுவோ, முன்னேற்றம் எதுவோ அதிலே அவர்கள் நிச்சயம் வெளிப்படுவார்கள். பிள்ளைகளின் விஷயத்தில் எங்கள் ஆர்வத்தை திணிக்கிற பெற்றோராக நானும் செல்வாவும் ஒருபோதும் இருக்க மாட்டோம்'' என்றார், ரோஜா.
டைரக்டர் பாக்யராஜ் தனது மகள் சரண்யாவை நாயகியாக்கி இயக்கிய படம் "பாரிஜாதம்.'' இந்தப் படத்தில் கதாநாயகன் பிருத்விராஜ×க்கு அம்மாவாக நடித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் ரோஜா.
இந்தப்படம் கடந்த ஆண்டு வெளிவந்தபோது, ரோஜாவை அதுவரை நாயகியாக மட்டுமே பார்த்து ரசித்து வந்த ரசிகர்கள் வியப்பும், திகைப்பும் அடைந்தார்கள். தங்கள் இதயத்தில் `நாயகி'யாக குடிகொண்டிருக்கும் ரோஜா, அதற்குள் எப்படி அம்மாவாக நடிக்கலாம் என்று கோபப்பட்ட ரசிகர்கள் ஏராளம்.
சிலர் கடிதங்கள் எழுதி திட்டினார்கள். சிலர் டெலிபோன் மூலம் தங்கள் ஆத்திரத்தைக் கொட்டினார்கள்.
இதுபற்றி ரோஜா கூறும்போது, "எனக்கும் அம்மா கேரக்டரில் நடிப்பதில் உடன்பாடு இல்லைதான். ஹீரோ பிரித்விராஜ×க்கு அம்மா என்பதும் எனக்குத் தெரியாது. செட்டில் பிரிதிவிராஜை பார்த்தபோதுதான் `திக்'கென்றது. ஆனாலும், டைரக்டர் பாக்யராஜ் கேட்டு "முடியாது'' என்று சொல்ல மனம் இடம் தரவில்லை. எனவே, அம்மா கேரக்டரில் நடிக்க வேண்டியதாயிற்று. இதில் ஒரு ஆறுதல் என்னவென்றால், அந்த அம்மா கேரக்டர் படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் வருவது'' என்றார்.
இந்த நட்பு பின்னணியில்தான் டைரக்டர் ராமநாராயணனின் "பாசக்கிளிகள்'' படத்தில் வில்லனின் மனைவியாக நடித்ததையும், விஜய் நடித்த "நெஞ்சினிலே'' படத்தில் ஒரு பாட்டுக்கு மட்டும் ஆட நேர்ந்ததையும் குறிப்பிட்டார்.
ரோஜா அப்போது பிசியாக இருந்த நேரம். ஆனால் விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடித்துவிடவேண்டும் என்ற எண்ணம் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. இந்த நேரத்தில் விஜய்யுடன் ஒரு பாட்டுக்கு மட்டும் ஆடவேண்டும் என்று கேட்டு வந்த "நெஞ்சினிலே'' பட வாய்ப்பை அவரால் நிராகரிக்க முடியவில்லை.
தவிரவும், இந்தப் பாடல் முழுக்க ரோஜாவை புகழ்ந்து எழுதப்பட்டது. அதுவும் விஜய்யே பாடியிருந்தார். "தங்க நிறத்துக்குத்தான் தமிழ்நாட்டை எழுதித்தரட்டுமா'' என்று தொடங்கும் பாடலின் முதல் வரியே ரோஜாவை நடனக் காட்சிக்கு உடனடியாக தயார் செய்து விட்டது.
தமிழ்ப்படங்களில் ரோஜா ஜோடி சேராத ஹீரோ என்று பார்த்தால், அதில் கமல் மட்டுமே இருக்கிறார்.
கமலுடன் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்த போதும், சூழ்நிலை காரணமாக அதை ஏற்கவில்லை.
ஒரு கட்டத்தில் படங்கள் குறையத் தொடங்கியதும் ரோஜா ஆந்திர அரசியலோடு தன்னை இணைத்துக்கொண்டார். முன்னாள் ஆந்திர முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடுவின் அணியில் ரோஜா முன்னணியில் இருக்கிறார். மேடையில் பேச அழைத்தால் போகிறார். தேர்தல் சமயங்களில் ஓட்டுக்கேட்க வீடு வீடாகச் செல்கிறார். மக்களுடன் சரளமாக உரையாடி அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டு தெரிந்து கொள்கிறார்.
"குறுகிய காலத்தில், கட்சியில் முக்கிய இடத்தை பிடித்து விட்டீர்கள். `நடிகை' என்ற தகுதிதான் இதற்குக் காரணமா?'' என்று கேட்டதற்கு ரோஜா கூறினார்:
"ஒரு தனி மனிதர் கட்சியில் சேருகிறார். படிப்படியாக வளருகிறார். கட்சியில் அவர் எல்லோருக்கும் தெரிந்த முகமாகி, முக்கிய பொறுப்புக்கு வருவதற்குள் கிட்டத்தட்ட 10 வருடமாகி விடுகிறது. என் போன்றவர்கள் சினிமா மூலம் ஏற்கனவே மக்களுக்கு தெரிந்தவர்களாகி விடுகிறோம். இதனால் கட்சி எங்களை அதிக அளவில் பயன்படுத்திக் கொள்கிறது. பொறுப்புக்களையும் தருகிறது.
தெலுங்குதேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு எப்போதுமே என் மரியாதைக்குரியவர். என் திருமணம் திருப்பதியில் நடந்தபோது, அவர் ஆந்திர முதல்- மந்திரியாக இருந்தார். திருமணத்துக்கு வந்து வாழ்த்த வேண்டும் என்று கேட்டதும், சந்தோஷமாய் சம்மதித்தார். வந்து வாழ்த்தினார்.''
இப்படிச் சொல்லும் ரோஜா, கட்சியில் சேர்ந்த புதிதில் சிவபிரசாத் என்ற வேட்பாளர் எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிட்டபோது அவருக்காக பிரசாரம் செய்து வெற்றியும் ஈட்டித் தந்தார்.
கடந்த பொதுத்தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டார். 4 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டார். ரோஜாவை எதிர்த்துப் போட்டியிட்டவர் செல்வாக்கு பெற்ற தலைவர்களில் ஒருவர். அவர் குறைந்த ஓட்டில்தான் ஜெயிக்க முடிந்திருக்கிறது.
`அரசியலில் வெற்றி -தோல்வி சகஜம். அரசியலை தேர்ந்தெடுத்த பிறகு எக்காலத்திலும் அதில் இருந்து பின்வாங்குவதாக இல்லை' என்பதை, தனது அரசியல் கொள்கையாகவே வைத்திருக்கிறார், ரோஜா.
அரசியலில் ஈடுபட்டாலும் நல்ல கேரக்டர் வந்தால் நடிப்பது என்று முடிவு எடுத்திருக்கிறார். சமீபத்தில் "மேக சந்தேசம்'' தெலுங்கு சீரியலில் நடிக்க நடிகை ராதிகா அழைத்திருந்தார். 4 பெரிய பையன்களுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும்! மறுத்துவிட்டார், ரோஜா.
"ரோஜா ரோஜாதான் என்று ரசிகர்கள் சொல்கிற மாதிரி கேரக்டர்கள் வரவேண்டும். முகத்தைக் காட்டிவிட்டுப் போகிற மாதிரியெல்லாம் நடிப்பது என்றால், அந்த வாய்ப்பு வேண்டவே வேண்டாம். பணத்தேவைக்காக நடிக்க வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இல்லை''- இப்படி தெளிவுபடுத்தும் ரோஜாவுக்கு அம்சவதனி என்ற 4 வயது மகளும், கிருஷ்ணகவுசிக் என்ற ஒரு வயது மகனும் வாரிசுகள்.
"பிள்ளைகள் எப்படி வரவேண்டும் என்று விரும்புகிறீர்கள்?'' என்று கேட்டதற்கு, "இப்படித்தான் வரவேண்டும் என்ற திட்டமெல்லாம் வாழ்க்கைக்கு சரி வராது. அவர்களின் ஆர்வம் எதுவோ, முன்னேற்றம் எதுவோ அதிலே அவர்கள் நிச்சயம் வெளிப்படுவார்கள். பிள்ளைகளின் விஷயத்தில் எங்கள் ஆர்வத்தை திணிக்கிற பெற்றோராக நானும் செல்வாவும் ஒருபோதும் இருக்க மாட்டோம்'' என்றார், ரோஜா.
கவர்ச்சிகரமாக நடிப்பதில் புகழ் பெற்ற ரோஜா, "பொட்டு அம்மன்'' என்ற பக்திப் படத்தில் நடித்தார். இது, அவருடைய நூறாவது படம்.
கவர்ச்சிகரமாக நடிப்பதில் புகழ் பெற்ற ரோஜா, "பொட்டு அம்மன்'' என்ற பக்திப் படத்தில் நடித்தார். இது, அவருடைய நூறாவது படம்.
தமிழில் கார்த்திக் -ரம்பா நடித்து பெரும் வெற்றியை எட்டிய படம் "உள்ளத்தை அள்ளித்தா.''
இந்தப் படத்தில் ரம்பா நடித்த கேரக்டரில் முதலில் ரோஜாதான் நடிப்பதாக இருந்தது. அந்த நேரத்தில் பிரபுவுடன் "பரம்பரை'', விஜயகாந்துடன் "தமிழ்ச்செல்வன்'' என்று 2 படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் "உள்ளத்தை அள்ளித்தா'' படத்தில் நடிக்க முடியவில்லை.
ஆனால், இந்த ஏமாற்றத்தை விக்ரமன் இயக்கிய "உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்'' படம் போக்கிவிட்டது. விக்ரமன் தனது புதிய படத்தின் நாயகி ரோஜா என்று அறிவித்ததும், விக்ரமனின் நட்பு வட்டம் அவரிடம் உரிமையுடன் கோபித்துக் கொண்டார்கள். "ரோஜா கிளாமர் நடிகை. உங்கள் படத்தின் கதாநாயகியாக நடிக்க அவர் பொருத்தமாக இருக்கமாட்டார்'' என்று கூறினார்கள். ஆனால் விக்ரமன், "என் படத்தின் கதாநாயகி கேரக்டரை ரோஜா அப்படியே பிரதிபலிப்பார்'' என்று அடித்துச் சொல்லிவிட்டார்.
விக்ரமன் கணிப்புப்படியே, ரோஜாவும் அந்த கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்தார்.
இந்தப்படம் கிராமங்களில் உள்ள தியேட்டர்களில் கூட பிரமாதமாக ஓடியது. தெலுங்கில் வெங்கடேஷ் -சவுந்தர்யா நடிக்க `ரீமேக்' செய்தார்கள். தெலுங்கில் இந்தப்படம் வெற்றிப்பட்டியலில் சேர்ந்தாலும் தமிழ் அளவுக்கு இல்லை.
இந்த வெற்றியில்தான் ரசிகர்களால் ரோஜா ரொம்பவும் கவனிக்கப்பட்டார். ரோஜா எந்தக் கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடிப்பார் என்ற நம்பிக்கையை "உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்'' படம் ஏற்படுத்தியது.
வேலுபிரபாகரன் இயக்கிய "கடவுள்'' படத்தில், ரோஜா மேக்கப் எதுவும் போடாமல் நடித்திருந்தார்.
ரஜினியுடன் ரோஜா நடித்த இரண்டாவது படம் "வீரா.''
இந்தப் படத்தில் காமெடி பிரதானமாக இருந்தது. ரோஜாவுடன் இன்னொரு நாயகியாக மீனாவும் நடித்தார். ரஜினிக்கு இரண்டு பேரை ஜோடிகளாகப் போட்டாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை "வீரா'' நிரூபித்தது.
இந்தப் படத்தில் இன்னொரு விசேஷம். ரோஜா -மீனா இருவருமே, படத்தில் ஒருவரை ஒருவர் "அக்கா'' என்று அழைத்துக்கொண்டார்கள்!
"வீரா'' படத்தில் ரஜினியுடன் காமெடிக் காட்சியிலும் சிறப்பாக ரோஜா நடித்தார்.
ரஜினியுடன் `உழைப்பாளி' படத்தில் நடித்தபோதே அவருடன் நல்ல நட்பு இருந்தது. `வீரா' படத்தில் இந்த நட்பு புதுப்பிக்கப்பட்டு, நகைச்சுவை காட்சிகளில் இயல்பாக நடித்தார், ரோஜா.
இரண்டு நாயகிகள் நடிக்கும் படம் என்றால் அதில் தனது கேரக்டர் பற்றி, முன்னதாகவே முழுமையாக ரோஜா தெரிந்து கொள்வார். இந்தப் படத்தில் கிராமத்துப் பின்னணியில் வரும் காட்சிகளில் மீனாவும், நகரப் பின்னணியில் ரோஜாவும் என ஜோடிகள் சமமாக இருந்ததால், உற்சாகமாக நடித்தார், ரோஜா.
ரோஜாவின் நூறாவது படம் "பொட்டு அம்மன்.''
சினிமா நட்சத்திரங்களுக்கு நூறாவது படம் என்பது, முக்கியமான மைல் கல். "என்னுடைய நூறாவது படம் பக்திப் படமாக அமைந்ததில் மிகவும் மகிழ்ந்தேன். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அந்தப்படம் ரசிகர்களை கவரவில்லை. "உழைப்பது நம் கடமை. பலன் தருவது இறைவன் அல்லவா'' என்று கூறுகிறார், ரோஜா.
சினிமா வாய்ப்புகள் நிறைய வந்த நேரத்திலேயே, சின்னத்திரை வாய்ப்பும் தேடி வந்தது ரோஜாவுக்கு. "நதி எங்கே போகிறது'' என்ற தொடரில் நடிக்க கணிசமான சம்பளமும் பெற்றார் ரோஜா. ஆயினும் அந்த தொடரை ரோஜாவினால் தொடர முடியவில்லை. காரணம், சம்பளம் அதிகம் என்பதால் தினமும் ஏராளமான காட்சிகளை எடுத்துக் குவித்தார்கள். இதனால், மன நிறைவு அளிக்கும் வகையில் நடிக்க முடியாது என்று கருதிய ரோஜா, இடையிலேயே விலகிக்கொண்டார்.
அதன் பிறகு வந்த சின்னத்திரை வாய்ப்புகளையும் அவர் ஏற்கவில்லை.
தமிழில் கார்த்திக் -ரம்பா நடித்து பெரும் வெற்றியை எட்டிய படம் "உள்ளத்தை அள்ளித்தா.''
இந்தப் படத்தில் ரம்பா நடித்த கேரக்டரில் முதலில் ரோஜாதான் நடிப்பதாக இருந்தது. அந்த நேரத்தில் பிரபுவுடன் "பரம்பரை'', விஜயகாந்துடன் "தமிழ்ச்செல்வன்'' என்று 2 படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் "உள்ளத்தை அள்ளித்தா'' படத்தில் நடிக்க முடியவில்லை.
ஆனால், இந்த ஏமாற்றத்தை விக்ரமன் இயக்கிய "உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்'' படம் போக்கிவிட்டது. விக்ரமன் தனது புதிய படத்தின் நாயகி ரோஜா என்று அறிவித்ததும், விக்ரமனின் நட்பு வட்டம் அவரிடம் உரிமையுடன் கோபித்துக் கொண்டார்கள். "ரோஜா கிளாமர் நடிகை. உங்கள் படத்தின் கதாநாயகியாக நடிக்க அவர் பொருத்தமாக இருக்கமாட்டார்'' என்று கூறினார்கள். ஆனால் விக்ரமன், "என் படத்தின் கதாநாயகி கேரக்டரை ரோஜா அப்படியே பிரதிபலிப்பார்'' என்று அடித்துச் சொல்லிவிட்டார்.
விக்ரமன் கணிப்புப்படியே, ரோஜாவும் அந்த கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்தார்.
இந்தப்படம் கிராமங்களில் உள்ள தியேட்டர்களில் கூட பிரமாதமாக ஓடியது. தெலுங்கில் வெங்கடேஷ் -சவுந்தர்யா நடிக்க `ரீமேக்' செய்தார்கள். தெலுங்கில் இந்தப்படம் வெற்றிப்பட்டியலில் சேர்ந்தாலும் தமிழ் அளவுக்கு இல்லை.
இந்த வெற்றியில்தான் ரசிகர்களால் ரோஜா ரொம்பவும் கவனிக்கப்பட்டார். ரோஜா எந்தக் கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடிப்பார் என்ற நம்பிக்கையை "உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்'' படம் ஏற்படுத்தியது.
வேலுபிரபாகரன் இயக்கிய "கடவுள்'' படத்தில், ரோஜா மேக்கப் எதுவும் போடாமல் நடித்திருந்தார்.
ரஜினியுடன் ரோஜா நடித்த இரண்டாவது படம் "வீரா.''
இந்தப் படத்தில் காமெடி பிரதானமாக இருந்தது. ரோஜாவுடன் இன்னொரு நாயகியாக மீனாவும் நடித்தார். ரஜினிக்கு இரண்டு பேரை ஜோடிகளாகப் போட்டாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை "வீரா'' நிரூபித்தது.
இந்தப் படத்தில் இன்னொரு விசேஷம். ரோஜா -மீனா இருவருமே, படத்தில் ஒருவரை ஒருவர் "அக்கா'' என்று அழைத்துக்கொண்டார்கள்!
"வீரா'' படத்தில் ரஜினியுடன் காமெடிக் காட்சியிலும் சிறப்பாக ரோஜா நடித்தார்.
ரஜினியுடன் `உழைப்பாளி' படத்தில் நடித்தபோதே அவருடன் நல்ல நட்பு இருந்தது. `வீரா' படத்தில் இந்த நட்பு புதுப்பிக்கப்பட்டு, நகைச்சுவை காட்சிகளில் இயல்பாக நடித்தார், ரோஜா.
இரண்டு நாயகிகள் நடிக்கும் படம் என்றால் அதில் தனது கேரக்டர் பற்றி, முன்னதாகவே முழுமையாக ரோஜா தெரிந்து கொள்வார். இந்தப் படத்தில் கிராமத்துப் பின்னணியில் வரும் காட்சிகளில் மீனாவும், நகரப் பின்னணியில் ரோஜாவும் என ஜோடிகள் சமமாக இருந்ததால், உற்சாகமாக நடித்தார், ரோஜா.
ரோஜாவின் நூறாவது படம் "பொட்டு அம்மன்.''
சினிமா நட்சத்திரங்களுக்கு நூறாவது படம் என்பது, முக்கியமான மைல் கல். "என்னுடைய நூறாவது படம் பக்திப் படமாக அமைந்ததில் மிகவும் மகிழ்ந்தேன். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அந்தப்படம் ரசிகர்களை கவரவில்லை. "உழைப்பது நம் கடமை. பலன் தருவது இறைவன் அல்லவா'' என்று கூறுகிறார், ரோஜா.
சினிமா வாய்ப்புகள் நிறைய வந்த நேரத்திலேயே, சின்னத்திரை வாய்ப்பும் தேடி வந்தது ரோஜாவுக்கு. "நதி எங்கே போகிறது'' என்ற தொடரில் நடிக்க கணிசமான சம்பளமும் பெற்றார் ரோஜா. ஆயினும் அந்த தொடரை ரோஜாவினால் தொடர முடியவில்லை. காரணம், சம்பளம் அதிகம் என்பதால் தினமும் ஏராளமான காட்சிகளை எடுத்துக் குவித்தார்கள். இதனால், மன நிறைவு அளிக்கும் வகையில் நடிக்க முடியாது என்று கருதிய ரோஜா, இடையிலேயே விலகிக்கொண்டார்.
அதன் பிறகு வந்த சின்னத்திரை வாய்ப்புகளையும் அவர் ஏற்கவில்லை.
புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை ரோஜாவுக்கும், டைரக்டர் செல்வமணிக்கும் காதல் ஏற்பட்டது. அவர்கள் 13 ஆண்டுகள் காத்திருந்து திருமணம் செய்து கொண்டனர்.
புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை ரோஜாவுக்கும், டைரக்டர் செல்வமணிக்கும் காதல் ஏற்பட்டது. அவர்கள் 13 ஆண்டுகள் காத்திருந்து திருமணம் செய்து கொண்டனர்.
காதல் அனுபவங்கள் பற்றி ரோஜா கூறியதாவது:-
"தெலுங்கில் மற்ற டைரக்டர்களுடன் பணியாற்றியதற்கும், செல்வாவுடன் பணியாற்றியதற்கும் ஏகப்பட்ட வித்தியாசம் தெரிந்தது. யாராவது நடிகைகள் கேமிரா முன் நடிப்பதற்காக நின்று கொண்டிருந்தால், கேமிரா முன்னால் செல்வா வரமாட்டார். அத்தனை கூச்ச சுபாவம். கொஞ்சம் தூரத்தில் இருந்தபடியே, காட்சிகளை விவரிப்பார். எப்படி நடித்தால் சரியாக இருக்கும் என்று விளக்குவார்.
செல்வாவின் இந்தப் பண்பு என்னைக் கவர்ந்தது. இதுவே அவர் மீது எனக்கு நன்மதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அப்போதுகூட, `காதல்' ஏற்பட்டுவிடவில்லை'' என்றார், ரோஜா.
ரோஜா பற்றி அவரது அம்மாவிடமும், அண்ணனிடமும் அக்கறையாக பேசி வந்திருக்கிறார் செல்வமணி.
இதனால், அவர்கள் இருவருக்கும் செல்வமணியை ரொம்பவே பிடித்துவிட்டது. `அம்மாவுக்கு செல்வான்னா உயிர்' என்று ரோஜாவே சொல்லும் அளவுக்கு ரோஜாவின் தாயாரிடம் நற்பெயர் பெற்றார், செல்வமணி.
காதலை செல்வமணி வெளிப்படுத்தியது பற்றி ரோஜா கூறுகிறார்: "செல்வா என்னிடம் எப்போதும் போலவே பழகினார். ஆனால் அம்மாவிடம் என் மீதான அவரது தனிப்பட்ட அக்கறையை வெளிப்படுத்தி வந்தார். அவ்வப்போது ஒரு தாய்க்கு உரிய பரிவுடன் என் மீதான அவரது அக்கறையையும் தாண்டிய பிரியம் அம்மாவுக்கு தெரியவர, `நம் மகளுக்கேற்றவர் இவரே' என்ற முடிவுக்கு அம்மா வந்துவிட்டார். இது பற்றி அண்ணன்களிடமும் அம்மா கூற, அண்ணன்கள் தரப்பிலும் செல்வாவின் விருப்பத்துக்கு தடையில்லை.
எங்கள் `ரெட்டி' வம்சத்தில், வேறு ஜாதியில் பெண்ணோ, மாப்பிள்ளையோ பெரும்பாலும் எடுக்கமாட்டார்கள். செல்வா முதலியார் வகுப்பு. கனிவான அணுகுமுறையாலும், பண்பாலும் ஜாதியை மீறி எங்களைக் கவர்ந்துவிட்டார், செல்வா.
ராஜமுந்திரியில் ஒரு படப்பிடிப்பில் இருக்கிறேன். அன்றைக்கு எனது பிறந்த நாளும்கூட. அங்கே வந்த செல்வா, என்னை மணந்துகொள்ள விரும்புவதாகக் கூறினார்.
"உன்னை நன்றாக வைத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இதில் உனக்கும் சம்மதமானால் நான் காத்திருக்கிறேன். நம் திருமணம் உடனடியாக நடந்துவிடவேண்டும் என்பதில்லை. நீ இப்போது பிசியான ஆர்ட்டிஸ்ட். உன் ஆசை தீர நடி. எப்போது `போதும்' என்று தோன்றுகிறதோ, அப்போது நாம் திருமணம் செய்து கொள்வோம்'' என்றார்.
அம்மா மூலம் செல்வாவின் விருப்பம் என் காதுக்கும் ஏற்கனவே வந்திருந்தது. அதுபற்றி எந்த முடிவும் எடுக்காமல் இருந்தபோது, செல்வா இப்படி சொல்ல, `அடடா! எப்படிப்பட்ட மனிதர் இவர்!' என்று எனக்குத் தோன்றியது. நானும் சம்மதம் தெரிவித்து விட்டேன்.
செல்வா எனக்காக 13 வருஷம் காத்திருந்து கைபிடித்தார். நிஜமாகவே இப்படி ஒரு காதல் கணவர் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்'' என்று ரோஜா கூறினார்.
இந்த காத்திருந்த காதலிலும் ரோஜாவுக்கு அவ்வப்போது அட்வைசெல்லாம் கொடுத்து `பூப்போல' பார்த்துக் கொண்டிருக்கிறார், செல்வமணி.
ராத்திரி பகல்னு தொடர்ந்து தூங்காம ரெஸ்ட்டே இல்லாம நடிச்சா கண்ணுக்கு கீழே கருவளையம் வந்திடும். அதனால் `ஓய்வு' எடுக்கிற நேரம் அதிகமா இருக்கணும்' என்கிற மாதிரி செல்வமணி அவ்வப்போது ஆலோசனை கொடுத்துக்கொண்டுதான் இருந்திருக்கிறார்.
காலச்சக்கரம் எப்போதும் ஒரே மாதிரி சுழல்வதில்லை. ரோஜா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நூறு படங்களைத் தாண்டிவிட்டார்.
ரோஜா புகழின் உச்சியில் இருந்தாலும், செல்வமணி இயக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட "குற்றப்பத்திரிகை'' படம் ரிலீசாகாமல் போனதும் செல்வமணியை கவலைக்குள்ளாக்கி விட்டது (முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு பின்னணியில் உருவான படம் என்பதால், அப்போது தடை செய்யப்பட்ட இந்த படம், பல வருடங்கள் கழித்து சமீபத்தில்தான் ரிலீசானது).
இந்த நேரத்தில் ரோஜாவிடம் பலரும் பேசி அவர் மனதை கலைக்கப் பார்த்திருக்கிறார்கள். அது காதலில் உறுதியாயிருந்த ரோஜாவின் மனதை எந்தவிதத்திலும் கலைக்கவில்லை. காதலிக்கத் தொடங்கி 13 வருடங்கள் முடிந்த நிலையில் ரோஜா `திருமதி செல்வமணி' ஆகிவிட்டார்.
அப்போது ஆந்திராவின் முதல்- மந்திரியாக இருந்த சந்திரபாபு நாயுடு இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த காதல் தம்பதிகளுக்கு பெண் ஒன்றும், ஆண் ஒன்றுமாய் இரண்டு குழந்தைகள்.
ஆரம்பத்தில் கிளாமர் கேரக்டர்களில் அதிகம் நடித்து வந்த ரோஜாவுக்கு ரஜினியுடன் `உழைப்பாளி' படத்தில் நடிக்க வந்தபோது ஒரு சின்ன பிரச்சினை ஏற்பட்டது.
ரோஜா ஏராளமான படங்களில் இரவு -பகலாக நடித்துக் கொண்டிருந்த காலக்கட்டம் அது. ஐதராபாத்துக்கும், சென்னைக்குமாக அடிக்கடி விமானத்தில் பறந்தபடி இருந்தார்.
அப்போதுதான் ரஜினிக்கு ஜோடியாக "உழைப்பாளி'' படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.
முதல் நாள் படப்பிடிப்பில், "ரஜினி பெரிய சூப்பர் ஸ்டார். அவருடன் நடிப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்று நிருபர்கள் கேட்கப்போக, இதில் தனக்கு எந்தவித பீலிங்கும் இருப்பதாக தெரியவில்லை என்கிற ரீதியில் ரோஜா பதில் சொன்னார்.
இந்த பதிலால், ரஜினி ரசிகர்கள் வெடித்துவிட்டார்கள். `எங்கள் சூப்பர் ஸ்டார் உங்களுக்கு அவ்வளவு சாதாரணமானவராகத் தெரிகிறாரா?' என்கிற மாதிரி கேள்விக்கணைகளை வீசினார்கள்.
ஆனால், "அவர் ஒரு நடிகை. என்னுடன் நடிப்பது இதுதான் முதல் தடவை. ஒரு நடிகை என்ற கண்ணோட்டத்தில், இது சினிமா என்ற கண்ணோட்டத்தில் அவர் சொன்ன பதில் எப்படி தவறாக இருக்க முடியும்?'' என்று கூறி, ரஜினிதான் ரசிகர்களை சமாளித்திருக்கிறார்.
இதுபற்றி ரோஜா கூறும்போது, "அப்போது நான் எவ்வளவு வெகுளியாக இருந்திருக்கிறேன், பாருங்கள்!'' என்று சிரித்தார்.
காதல் அனுபவங்கள் பற்றி ரோஜா கூறியதாவது:-
"தெலுங்கில் மற்ற டைரக்டர்களுடன் பணியாற்றியதற்கும், செல்வாவுடன் பணியாற்றியதற்கும் ஏகப்பட்ட வித்தியாசம் தெரிந்தது. யாராவது நடிகைகள் கேமிரா முன் நடிப்பதற்காக நின்று கொண்டிருந்தால், கேமிரா முன்னால் செல்வா வரமாட்டார். அத்தனை கூச்ச சுபாவம். கொஞ்சம் தூரத்தில் இருந்தபடியே, காட்சிகளை விவரிப்பார். எப்படி நடித்தால் சரியாக இருக்கும் என்று விளக்குவார்.
செல்வாவின் இந்தப் பண்பு என்னைக் கவர்ந்தது. இதுவே அவர் மீது எனக்கு நன்மதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அப்போதுகூட, `காதல்' ஏற்பட்டுவிடவில்லை'' என்றார், ரோஜா.
ரோஜா பற்றி அவரது அம்மாவிடமும், அண்ணனிடமும் அக்கறையாக பேசி வந்திருக்கிறார் செல்வமணி.
இதனால், அவர்கள் இருவருக்கும் செல்வமணியை ரொம்பவே பிடித்துவிட்டது. `அம்மாவுக்கு செல்வான்னா உயிர்' என்று ரோஜாவே சொல்லும் அளவுக்கு ரோஜாவின் தாயாரிடம் நற்பெயர் பெற்றார், செல்வமணி.
காதலை செல்வமணி வெளிப்படுத்தியது பற்றி ரோஜா கூறுகிறார்: "செல்வா என்னிடம் எப்போதும் போலவே பழகினார். ஆனால் அம்மாவிடம் என் மீதான அவரது தனிப்பட்ட அக்கறையை வெளிப்படுத்தி வந்தார். அவ்வப்போது ஒரு தாய்க்கு உரிய பரிவுடன் என் மீதான அவரது அக்கறையையும் தாண்டிய பிரியம் அம்மாவுக்கு தெரியவர, `நம் மகளுக்கேற்றவர் இவரே' என்ற முடிவுக்கு அம்மா வந்துவிட்டார். இது பற்றி அண்ணன்களிடமும் அம்மா கூற, அண்ணன்கள் தரப்பிலும் செல்வாவின் விருப்பத்துக்கு தடையில்லை.
எங்கள் `ரெட்டி' வம்சத்தில், வேறு ஜாதியில் பெண்ணோ, மாப்பிள்ளையோ பெரும்பாலும் எடுக்கமாட்டார்கள். செல்வா முதலியார் வகுப்பு. கனிவான அணுகுமுறையாலும், பண்பாலும் ஜாதியை மீறி எங்களைக் கவர்ந்துவிட்டார், செல்வா.
ராஜமுந்திரியில் ஒரு படப்பிடிப்பில் இருக்கிறேன். அன்றைக்கு எனது பிறந்த நாளும்கூட. அங்கே வந்த செல்வா, என்னை மணந்துகொள்ள விரும்புவதாகக் கூறினார்.
"உன்னை நன்றாக வைத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இதில் உனக்கும் சம்மதமானால் நான் காத்திருக்கிறேன். நம் திருமணம் உடனடியாக நடந்துவிடவேண்டும் என்பதில்லை. நீ இப்போது பிசியான ஆர்ட்டிஸ்ட். உன் ஆசை தீர நடி. எப்போது `போதும்' என்று தோன்றுகிறதோ, அப்போது நாம் திருமணம் செய்து கொள்வோம்'' என்றார்.
அம்மா மூலம் செல்வாவின் விருப்பம் என் காதுக்கும் ஏற்கனவே வந்திருந்தது. அதுபற்றி எந்த முடிவும் எடுக்காமல் இருந்தபோது, செல்வா இப்படி சொல்ல, `அடடா! எப்படிப்பட்ட மனிதர் இவர்!' என்று எனக்குத் தோன்றியது. நானும் சம்மதம் தெரிவித்து விட்டேன்.
செல்வா எனக்காக 13 வருஷம் காத்திருந்து கைபிடித்தார். நிஜமாகவே இப்படி ஒரு காதல் கணவர் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்'' என்று ரோஜா கூறினார்.
இந்த காத்திருந்த காதலிலும் ரோஜாவுக்கு அவ்வப்போது அட்வைசெல்லாம் கொடுத்து `பூப்போல' பார்த்துக் கொண்டிருக்கிறார், செல்வமணி.
ராத்திரி பகல்னு தொடர்ந்து தூங்காம ரெஸ்ட்டே இல்லாம நடிச்சா கண்ணுக்கு கீழே கருவளையம் வந்திடும். அதனால் `ஓய்வு' எடுக்கிற நேரம் அதிகமா இருக்கணும்' என்கிற மாதிரி செல்வமணி அவ்வப்போது ஆலோசனை கொடுத்துக்கொண்டுதான் இருந்திருக்கிறார்.
காலச்சக்கரம் எப்போதும் ஒரே மாதிரி சுழல்வதில்லை. ரோஜா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நூறு படங்களைத் தாண்டிவிட்டார்.
ரோஜா புகழின் உச்சியில் இருந்தாலும், செல்வமணி இயக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட "குற்றப்பத்திரிகை'' படம் ரிலீசாகாமல் போனதும் செல்வமணியை கவலைக்குள்ளாக்கி விட்டது (முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு பின்னணியில் உருவான படம் என்பதால், அப்போது தடை செய்யப்பட்ட இந்த படம், பல வருடங்கள் கழித்து சமீபத்தில்தான் ரிலீசானது).
இந்த நேரத்தில் ரோஜாவிடம் பலரும் பேசி அவர் மனதை கலைக்கப் பார்த்திருக்கிறார்கள். அது காதலில் உறுதியாயிருந்த ரோஜாவின் மனதை எந்தவிதத்திலும் கலைக்கவில்லை. காதலிக்கத் தொடங்கி 13 வருடங்கள் முடிந்த நிலையில் ரோஜா `திருமதி செல்வமணி' ஆகிவிட்டார்.
அப்போது ஆந்திராவின் முதல்- மந்திரியாக இருந்த சந்திரபாபு நாயுடு இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த காதல் தம்பதிகளுக்கு பெண் ஒன்றும், ஆண் ஒன்றுமாய் இரண்டு குழந்தைகள்.
ஆரம்பத்தில் கிளாமர் கேரக்டர்களில் அதிகம் நடித்து வந்த ரோஜாவுக்கு ரஜினியுடன் `உழைப்பாளி' படத்தில் நடிக்க வந்தபோது ஒரு சின்ன பிரச்சினை ஏற்பட்டது.
ரோஜா ஏராளமான படங்களில் இரவு -பகலாக நடித்துக் கொண்டிருந்த காலக்கட்டம் அது. ஐதராபாத்துக்கும், சென்னைக்குமாக அடிக்கடி விமானத்தில் பறந்தபடி இருந்தார்.
அப்போதுதான் ரஜினிக்கு ஜோடியாக "உழைப்பாளி'' படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.
முதல் நாள் படப்பிடிப்பில், "ரஜினி பெரிய சூப்பர் ஸ்டார். அவருடன் நடிப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்று நிருபர்கள் கேட்கப்போக, இதில் தனக்கு எந்தவித பீலிங்கும் இருப்பதாக தெரியவில்லை என்கிற ரீதியில் ரோஜா பதில் சொன்னார்.
இந்த பதிலால், ரஜினி ரசிகர்கள் வெடித்துவிட்டார்கள். `எங்கள் சூப்பர் ஸ்டார் உங்களுக்கு அவ்வளவு சாதாரணமானவராகத் தெரிகிறாரா?' என்கிற மாதிரி கேள்விக்கணைகளை வீசினார்கள்.
ஆனால், "அவர் ஒரு நடிகை. என்னுடன் நடிப்பது இதுதான் முதல் தடவை. ஒரு நடிகை என்ற கண்ணோட்டத்தில், இது சினிமா என்ற கண்ணோட்டத்தில் அவர் சொன்ன பதில் எப்படி தவறாக இருக்க முடியும்?'' என்று கூறி, ரஜினிதான் ரசிகர்களை சமாளித்திருக்கிறார்.
இதுபற்றி ரோஜா கூறும்போது, "அப்போது நான் எவ்வளவு வெகுளியாக இருந்திருக்கிறேன், பாருங்கள்!'' என்று சிரித்தார்.
"செம்பருத்தி'' படத்தில், கதாநாயகியாக ரோஜா அறிமுகமானார். அதற்குக்காரணமாக இருந்தது ஒரு புகைப்படம். விஜயகாந்த் நடிப்பில் "கேப்டன் பிரபாகரன்'' வெற்றி பெற்றிருந்த நேரம். படத்தை இயக்கிய ஆர்.கே.செல்வமணி, புகழின் உச்சியில் இருந்தார்.
"செம்பருத்தி'' படத்தில், கதாநாயகியாக ரோஜா அறிமுகமானார். அதற்குக்காரணமாக இருந்தது ஒரு புகைப்படம்.
விஜயகாந்த் நடிப்பில் "கேப்டன் பிரபாகரன்'' வெற்றி பெற்றிருந்த நேரம். படத்தை இயக்கிய ஆர்.கே.செல்வமணி, புகழின் உச்சியில் இருந்தார்.
அதிரடிப்படமாக "கேப்டன் பிரபாகரன்'' வந்திருந்ததால், அடுத்து ஒரு காதல் கதையை இயக்க விரும்பினார், செல்வமணி. அப்படி அவர் முடிவு செய்த படம்தான் "செம்பருத்தி.''
படத்தின் நாயகனாக பிரசாந்த். அவரது பாட்டியாக `அஷ்டாவதானி' நடிகை பானுமதி என தேர்வு செய்தவருக்கு, `நாயகி' கிடைப்பதில்தான் சிக்கல் இருந்தது. கதைக்கு புதுமுக நடிகையை போட்டால் சரியாக இருக்கும் என்று கருதினார் அவர். அதற்கேற்ப நாயகி தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டார்.
இதில் ரோஜா எப்படி சிக்கினார்? ரோஜாவே கூறுகிறார்:
"அப்போது என் புகைப்படம் ஒரு சினிமா பத்திரிகையின் அட்டையில் வந்தது. தெலுங்குப் படத்துக்காக அப்பாவின் நண்பர் எடுத்த படங்களில் ஒன்றுதான் இப்படி பத்திரிகையில் வந்துவிட்டது. இதை யாரோ டைரக்டர் செல்வமணியின் கண்களில் காட்டியிருக்கிறார்கள். உடனே அவரும் இப்படியொரு புதுமுகத்தைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்'' என்று கூறியிருக்கிறார்.
உண்மையில், போட்டோவில் பார்த்ததுமே எனது பெரிய கண்களும், புன்னகை முகமும் அவருக்குப் பிடித்து விட்டன. அதனால் என்னை கதாநாயகியாக தேர்வு செய்தார்.''
இவ்வாறு ரோஜா கூறினார்.
புது நாயகியை செல்வமணி முடிவு செய்ததும் திருப்பதியில் அவர் வீட்டுக்கு சினிமா ஆட்கள் போய்த் தேடியிருக்கிறார்கள். ரோஜாவோ (அப்போது ஸ்ரீலதா) தனது பெற்றோருடன் அதே நேரத்தில் சென்னையில் நடந்த உறவினர் திருமணத்திற்கு வந்திருக்கிறார். சென்னை தி.நகரில் உள்ள "ரோகிணி இன்டர் நேஷனல்'' ஓட்டலில்தான் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார்கள். படப்பிடிப்பு ஆட்கள் இதைத் தெரிந்து கொண்டார்கள்.
வேகவேகமாக ரோகிணி இன்டர்நேஷனல் ஓட்டலுக்குப் போனவர்கள், ரோஜாவின் குடும்பம் பத்து நிமிடம் முன்புதான் அறையை காலி செய்துவிட்டு காரில் திருப்பதிக்கு புறப்பட்டார்கள் என்பதை அறிந்து ஏமாற்றம் அடைந்தனர்.
ரோஜாவை தேடி வந்திருந்த செல்வமணியின் நண்பர் ராமநாதன், உடனே செயலில் இறங்கினார். சினிமாவில் `கார் சேஸிங்' காட்சிகள் வருகிற மாதிரி காரை வேகமாக ஓட்டச்செய்து, சென்னை பாரிமுனை சந்திப்பில், ரோஜாவின் காரை மடக்கிவிட்டார். அதன் பிறகு நடந்ததை ரோஜாவே கூறுகிறார்:
"எங்கள் காரை மடக்கிய அதே வேகத்தில் "செம்பருத்தி'' படக்கம்பெனிக்கு அழைத்துப் போனார்கள். அப்போது கேப்டன் பிரபாகரன் படம் `ஓஹோ' என ஓடிக்கொண்டிருந்தது. இவ்வளவு பெரிய டைரக்டர் படத்தில் நடிக்க நமக்கு அழைப்பா என்று எனக்கு திகைப்பாகக்கூட இருந்தது. அப்போது கூட நடிக்க வேண்டும் என்பது என் விருப்பமாக இல்லாதிருந்ததால், நடிக்க வந்த அழைப்பு என்னை பெரிய அளவில் ஆச்சரியப்படுத்தவில்லை.''
இவ்வாறு ரோஜா கூறினார்.
இதன் பிறகு ரோஜாவின் அப்பாவிடம், திரைக்கதையை செல்வமணி சொல்லி, ரோஜாவை நடிக்க வைக்க அனுமதி கேட்டிருக்கிறார். இப்போதும் ரோஜாவின் அப்பா மட்டுமே "ஓ.கே'' சொல்லியிருக்கிறார். ரோஜா தரப்பில் அப்போது மவுனமே பதிலாக இருந்திருக்கிறது.
மறுநாள் அழைத்து வரச்சொல்லி ரோஜாவின் அப்பாவிடம் டைரக்டர் செல்வமணி சொல்ல, மறுநாளே மேக்கப் டெஸ்ட் நடந்திருக்கிறது. அதன் பிறகு ஊருக்கும் வந்துவிட்டார்கள்.
அப்போது நமக்கெல்லாம் எங்கே சான்ஸ் கிடைக்கப்போகிறது என்றே எண்ணியிருக்கிறார் ரோஜா. அதுபற்றி அவர் சொல்லும்போது:
"நானெல்லாம் கறுப்பு. அப்போது படங்களில் நடிக்க வந்த நடிகைகள் எவ்வளவு கலராக இருந்தார்கள். அப்பேர்ப்பட்டவர்கள் நடித்த சினிமாவில் என்னை எங்கே அழைக்கப் போகிறார்கள்? அதுவும், செல்வமணி போன்ற பெரிய டைரக்டர்கள் நிச்சயம் என்னை அழைக்கமாட்டார்கள் என்றே நம்பிக் கொண்டிருந்தேன்.
ஆனால் நான் எதிர்பார்த்தே இராத அந்த தகவல் 10-வது நாளில் வந்துவிட்டது. நடிக்க வருமாறு, தகவல் அனுப்பினார்கள். வீட்டில் மகா சந்தோஷம். இப்போது அப்பா வழியில் அம்மாவும் நான் நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அப்போது கூட நடிப்பில் சாதனை செய்த `அஷ்டாவதானி' பானுமதியம்மாவுடன் நடிக்கப் போகிறோம் என்றதும் எனக்கு பயமாகிவிட்டது'' என்றார், ரோஜா.
தமிழில் நடிக்க வந்து விட்டாரே தவிர, தமிழில் ஒரு வார்த்தை கூட ரோஜாவுக்குத் தெரியாது. டைரக்டர் சொல்லிக் கொடுத்ததை செய்தார். மற்ற நேரங்களில் அண்ணனுடன்தான் தெலுங்கில் `மாட்லாடிக்' கொண்டிருப்பார். படம் ஒரு வருடம் தயாரிப்பில் இருந்ததால் அவ்வப்போது கிடைத்த இடைவெளியில் ரோஜா தெலுங்கில் 3 படங்கள் நடித்து முடித்து விட்டார். முதல் படம் "பிரேம தப்பர்சு'' தோல்விப்படம் என்றாலும், அடுத்தடுத்து வந்த 2 படங்கள் வெற்றி பெற்று ரோஜாவுக்கு தெலுங்குப்பட உலகில் நிலையான மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது.
அதிலும் கூட இரண்டாவது தெலுங்குப்படத்தை விடவும், மூன்றாவது தெலுங்குப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று ரோஜாவை தெலுங்கில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக நிலை நிறுத்தியது.
தயாரிப்பில் ஒரு வருடம் நீடித்த "செம்பருத்தி'' ரிலீஸ் ஆகி அதுவும் வெற்றிப்படமானதில் ரோஜா தமிழிலும் முன்னணி நடிகையானார்.
திரையில் தனது (கறுப்பு) நிறத்துக்கு சம்பந்தமே இல்லாமல் ரோஜாவின் அழகுத்தோற்றம் வெளிப்பட்டதில் ரோஜாவுக்கு நம்ப முடியாத ஆச்சரியம்.
"நல்ல கலராக இருப்பவர்கள்தான் சினிமாவில் ஹீரோயினாக முடியும் என்று நம்பிக்கொண்டிருந்தேன். அதனால்தான் நடிக்க அழைக்கப்பட்ட புதிதில் என் மீதே எனக்கு நம்பிக்கையில்லை. நானும் படத்தில் நடித்து அது திரையிலும் வந்த பிறகுதான், முன்னர் நடித்த பல பிரபல நடிகைகள் கூட மேக்கப் உபயத்தில்தான் கலர் கலராக காட்சியளித்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன். அதன் பிறகு `நிறம்' ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை'' என்கிறார், ரோஜா.
தெலுங்கில்படங்கள் தொடர்ந்து கொண்டிருக்க, தமிழிலோ "செம்பருத்தி'' படத்துக்குப் பிறகு உடனடி வாய்ப்பு வரவில்லை, ரோஜாவுக்கு. கொஞ்சம் இடைவெளி விட்டு அதன் பிறகு வந்த படமே `சூரியன்.' இதில் சரத்குமார் ஜோடியாகி இருந்தார் ரோஜா.
இந்தப்படமும் வெற்றி பெற, தமிழில் ராசியான நடிகை என்ற பெயரும் ரோஜாவுக்கு கிடைத்தது.
"செம்பருத்தி'' படத்திலேயே ரோஜாவின் குழந்தைக் குணமும், யதார்த்தமான போக்கும் டைரக்டர் செல்வமணியை கவர்ந்து இருக்கிறது. ரோஜா மாதிரியான வெள்ளை மனம் கொண்ட பெண்கள் சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியாது என்று எண்ணிய அவர், அடுத்து எடுத்த அஸ்திரம்தான் "ரோஜாவுடன் திருமணம்.''
விஜயகாந்த் நடிப்பில் "கேப்டன் பிரபாகரன்'' வெற்றி பெற்றிருந்த நேரம். படத்தை இயக்கிய ஆர்.கே.செல்வமணி, புகழின் உச்சியில் இருந்தார்.
அதிரடிப்படமாக "கேப்டன் பிரபாகரன்'' வந்திருந்ததால், அடுத்து ஒரு காதல் கதையை இயக்க விரும்பினார், செல்வமணி. அப்படி அவர் முடிவு செய்த படம்தான் "செம்பருத்தி.''
படத்தின் நாயகனாக பிரசாந்த். அவரது பாட்டியாக `அஷ்டாவதானி' நடிகை பானுமதி என தேர்வு செய்தவருக்கு, `நாயகி' கிடைப்பதில்தான் சிக்கல் இருந்தது. கதைக்கு புதுமுக நடிகையை போட்டால் சரியாக இருக்கும் என்று கருதினார் அவர். அதற்கேற்ப நாயகி தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டார்.
இதில் ரோஜா எப்படி சிக்கினார்? ரோஜாவே கூறுகிறார்:
"அப்போது என் புகைப்படம் ஒரு சினிமா பத்திரிகையின் அட்டையில் வந்தது. தெலுங்குப் படத்துக்காக அப்பாவின் நண்பர் எடுத்த படங்களில் ஒன்றுதான் இப்படி பத்திரிகையில் வந்துவிட்டது. இதை யாரோ டைரக்டர் செல்வமணியின் கண்களில் காட்டியிருக்கிறார்கள். உடனே அவரும் இப்படியொரு புதுமுகத்தைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்'' என்று கூறியிருக்கிறார்.
உண்மையில், போட்டோவில் பார்த்ததுமே எனது பெரிய கண்களும், புன்னகை முகமும் அவருக்குப் பிடித்து விட்டன. அதனால் என்னை கதாநாயகியாக தேர்வு செய்தார்.''
இவ்வாறு ரோஜா கூறினார்.
புது நாயகியை செல்வமணி முடிவு செய்ததும் திருப்பதியில் அவர் வீட்டுக்கு சினிமா ஆட்கள் போய்த் தேடியிருக்கிறார்கள். ரோஜாவோ (அப்போது ஸ்ரீலதா) தனது பெற்றோருடன் அதே நேரத்தில் சென்னையில் நடந்த உறவினர் திருமணத்திற்கு வந்திருக்கிறார். சென்னை தி.நகரில் உள்ள "ரோகிணி இன்டர் நேஷனல்'' ஓட்டலில்தான் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார்கள். படப்பிடிப்பு ஆட்கள் இதைத் தெரிந்து கொண்டார்கள்.
வேகவேகமாக ரோகிணி இன்டர்நேஷனல் ஓட்டலுக்குப் போனவர்கள், ரோஜாவின் குடும்பம் பத்து நிமிடம் முன்புதான் அறையை காலி செய்துவிட்டு காரில் திருப்பதிக்கு புறப்பட்டார்கள் என்பதை அறிந்து ஏமாற்றம் அடைந்தனர்.
ரோஜாவை தேடி வந்திருந்த செல்வமணியின் நண்பர் ராமநாதன், உடனே செயலில் இறங்கினார். சினிமாவில் `கார் சேஸிங்' காட்சிகள் வருகிற மாதிரி காரை வேகமாக ஓட்டச்செய்து, சென்னை பாரிமுனை சந்திப்பில், ரோஜாவின் காரை மடக்கிவிட்டார். அதன் பிறகு நடந்ததை ரோஜாவே கூறுகிறார்:
"எங்கள் காரை மடக்கிய அதே வேகத்தில் "செம்பருத்தி'' படக்கம்பெனிக்கு அழைத்துப் போனார்கள். அப்போது கேப்டன் பிரபாகரன் படம் `ஓஹோ' என ஓடிக்கொண்டிருந்தது. இவ்வளவு பெரிய டைரக்டர் படத்தில் நடிக்க நமக்கு அழைப்பா என்று எனக்கு திகைப்பாகக்கூட இருந்தது. அப்போது கூட நடிக்க வேண்டும் என்பது என் விருப்பமாக இல்லாதிருந்ததால், நடிக்க வந்த அழைப்பு என்னை பெரிய அளவில் ஆச்சரியப்படுத்தவில்லை.''
இவ்வாறு ரோஜா கூறினார்.
இதன் பிறகு ரோஜாவின் அப்பாவிடம், திரைக்கதையை செல்வமணி சொல்லி, ரோஜாவை நடிக்க வைக்க அனுமதி கேட்டிருக்கிறார். இப்போதும் ரோஜாவின் அப்பா மட்டுமே "ஓ.கே'' சொல்லியிருக்கிறார். ரோஜா தரப்பில் அப்போது மவுனமே பதிலாக இருந்திருக்கிறது.
மறுநாள் அழைத்து வரச்சொல்லி ரோஜாவின் அப்பாவிடம் டைரக்டர் செல்வமணி சொல்ல, மறுநாளே மேக்கப் டெஸ்ட் நடந்திருக்கிறது. அதன் பிறகு ஊருக்கும் வந்துவிட்டார்கள்.
அப்போது நமக்கெல்லாம் எங்கே சான்ஸ் கிடைக்கப்போகிறது என்றே எண்ணியிருக்கிறார் ரோஜா. அதுபற்றி அவர் சொல்லும்போது:
"நானெல்லாம் கறுப்பு. அப்போது படங்களில் நடிக்க வந்த நடிகைகள் எவ்வளவு கலராக இருந்தார்கள். அப்பேர்ப்பட்டவர்கள் நடித்த சினிமாவில் என்னை எங்கே அழைக்கப் போகிறார்கள்? அதுவும், செல்வமணி போன்ற பெரிய டைரக்டர்கள் நிச்சயம் என்னை அழைக்கமாட்டார்கள் என்றே நம்பிக் கொண்டிருந்தேன்.
ஆனால் நான் எதிர்பார்த்தே இராத அந்த தகவல் 10-வது நாளில் வந்துவிட்டது. நடிக்க வருமாறு, தகவல் அனுப்பினார்கள். வீட்டில் மகா சந்தோஷம். இப்போது அப்பா வழியில் அம்மாவும் நான் நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அப்போது கூட நடிப்பில் சாதனை செய்த `அஷ்டாவதானி' பானுமதியம்மாவுடன் நடிக்கப் போகிறோம் என்றதும் எனக்கு பயமாகிவிட்டது'' என்றார், ரோஜா.
தமிழில் நடிக்க வந்து விட்டாரே தவிர, தமிழில் ஒரு வார்த்தை கூட ரோஜாவுக்குத் தெரியாது. டைரக்டர் சொல்லிக் கொடுத்ததை செய்தார். மற்ற நேரங்களில் அண்ணனுடன்தான் தெலுங்கில் `மாட்லாடிக்' கொண்டிருப்பார். படம் ஒரு வருடம் தயாரிப்பில் இருந்ததால் அவ்வப்போது கிடைத்த இடைவெளியில் ரோஜா தெலுங்கில் 3 படங்கள் நடித்து முடித்து விட்டார். முதல் படம் "பிரேம தப்பர்சு'' தோல்விப்படம் என்றாலும், அடுத்தடுத்து வந்த 2 படங்கள் வெற்றி பெற்று ரோஜாவுக்கு தெலுங்குப்பட உலகில் நிலையான மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது.
அதிலும் கூட இரண்டாவது தெலுங்குப்படத்தை விடவும், மூன்றாவது தெலுங்குப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று ரோஜாவை தெலுங்கில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக நிலை நிறுத்தியது.
தயாரிப்பில் ஒரு வருடம் நீடித்த "செம்பருத்தி'' ரிலீஸ் ஆகி அதுவும் வெற்றிப்படமானதில் ரோஜா தமிழிலும் முன்னணி நடிகையானார்.
திரையில் தனது (கறுப்பு) நிறத்துக்கு சம்பந்தமே இல்லாமல் ரோஜாவின் அழகுத்தோற்றம் வெளிப்பட்டதில் ரோஜாவுக்கு நம்ப முடியாத ஆச்சரியம்.
"நல்ல கலராக இருப்பவர்கள்தான் சினிமாவில் ஹீரோயினாக முடியும் என்று நம்பிக்கொண்டிருந்தேன். அதனால்தான் நடிக்க அழைக்கப்பட்ட புதிதில் என் மீதே எனக்கு நம்பிக்கையில்லை. நானும் படத்தில் நடித்து அது திரையிலும் வந்த பிறகுதான், முன்னர் நடித்த பல பிரபல நடிகைகள் கூட மேக்கப் உபயத்தில்தான் கலர் கலராக காட்சியளித்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன். அதன் பிறகு `நிறம்' ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை'' என்கிறார், ரோஜா.
தெலுங்கில்படங்கள் தொடர்ந்து கொண்டிருக்க, தமிழிலோ "செம்பருத்தி'' படத்துக்குப் பிறகு உடனடி வாய்ப்பு வரவில்லை, ரோஜாவுக்கு. கொஞ்சம் இடைவெளி விட்டு அதன் பிறகு வந்த படமே `சூரியன்.' இதில் சரத்குமார் ஜோடியாகி இருந்தார் ரோஜா.
இந்தப்படமும் வெற்றி பெற, தமிழில் ராசியான நடிகை என்ற பெயரும் ரோஜாவுக்கு கிடைத்தது.
"செம்பருத்தி'' படத்திலேயே ரோஜாவின் குழந்தைக் குணமும், யதார்த்தமான போக்கும் டைரக்டர் செல்வமணியை கவர்ந்து இருக்கிறது. ரோஜா மாதிரியான வெள்ளை மனம் கொண்ட பெண்கள் சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியாது என்று எண்ணிய அவர், அடுத்து எடுத்த அஸ்திரம்தான் "ரோஜாவுடன் திருமணம்.''
10 வயதிலேயே கேமரா முன் நின்ற ஸ்ரீலதா, பாரதிராஜாவால் "ரோஜா'' என்று பெயர் சூட்டப்பட்டு, நட்சத்திர நடிகையானார்.
10 வயதிலேயே கேமரா முன் நின்ற ஸ்ரீலதா, பாரதிராஜாவால் "ரோஜா'' என்று பெயர் சூட்டப்பட்டு, நட்சத்திர நடிகையானார்.
தமிழ் சினிமாவில் செம்பருத்தியாக மலர்ந்தவர் நடிகை ரோஜா.
1991-ம் ஆண்டில் டைரக்டர் ஆர்.கே. செல்வமணி இயக்கிய "செம்பருத்தி'' படத்தில் அறிமுகமான ரோஜா, தொடர்ந்து 15 ஆண்டுகள் சினிமாவில் நிலைத்து நின்றவர். தமிழிலும், தெலுங்கிலுமாக 140-க்கு மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.
திருப்பதியைச் சேர்ந்த ஸ்ரீலதா தான் சினிமாவுக்கு வந்த பிறகு `ரோஜா'வாகியிருக்கிறார். அப்பா ஒய்.என். ரெட்டி. அம்மா லலிதா.
உடன் பிறந்தோர் 2 அண்ணன்கள் மட்டும். மூத்த அண்ணன் குமாரசாமி ரெட்டி. அடுத்த அண்ணன் ராம்பிரசாத் ரெட்டி.
ஒரே பெண் என்பதால் செல்லம் அதிகம் கிடைக்கும் என்பார்கள். ரோஜாவை பொறுத்தவரையில் ரொம்ப ரொம்ப செல்லம். அதற்குக் காரணம் ரோஜாவே சொல்கிறார்:
"அப்பாவுக்கு அக்கா, தங்கை யாரும் கிடையாது. தாத்தாவுக்கும் அக்கா -தங்கை கிடையாது. இதனால் குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை என்பதால் ஆளாளுக்கு என்னை கொண்டாடினார்கள். பாசம் கொட்டினார்கள். ஆனாலும் நான் பையன் மாதிரிதான் வளர்ந்தேன். எப்போதும் யாரையாவது சீண்டியபடி ஜாலி ஜாலி ஜாலிதான். தாத்தா ஒருத்தருக்கு மட்டும்தான் கொஞ்சம் பயப்படுவேன்.'' சொல்லிச் சிரிக்கிறார் ரோஜா.
பள்ளிப் பருவத்தில் கூட ரோஜாவுக்குள் நடிப்பு வாசனை வீசவில்லை. நடிகையாக வேண்டும் என்று கனவு கூட கண்டதில்லை. ஆனால், நம்பர் ஒன் சினிமா ரசிகையாக இருந்திருக்கிறார். அதுபற்றி ரோஜா கூறுகிறார்:
"பள்ளி நாட்களில் எல்லாம் ஒரு சினிமா விடமாட்டேன். ஸ்கூலுக்கு `கட்' அடித்து விட்டு தோழிகளுடன் போய் விடுவேன். ஆனால் அப்போதுகூட சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் துளிர்த்ததே இல்லை.''
இப்படிச் சொல்லும் ரோஜாவுக்கு `நடிகை அந்தஸ்து' எப்போதுதான் வந்தது?
"அப்பா, சாரதி ஸ்டூடியோவில் சவுண்டு என்ஜினீயராக இருந்தார். சினிமா இயக்கும் ஆசை அவருக்கு இருந்தது. இதனால் வேலையை விட்டு விட்டு முதலில் `கொத்தடி பொம்மா பூர்ணமா' என்ற டாகுமெண்டரி படத்தை இயக்கினார்.
இதில் தெலுங்கில் பிரபல இயக்குனராக இருந்த கோடி.ராமகிருஷ்ணாவின் மனைவியை நாயகியாக நடிக்க வைத்தார். அவரது மகளாக நடிக்க 10 வயதுப்பெண் தேவைப்பட்டபோது அப்பாவின் பார்வை என் மீது. அப்போது நான் ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தேன். மாலையில் வீட்டுக்கு வந்த என்னிடம், "நாளை நீ பள்ளிக்குப் போகவேண்டாம்'' என்றார், அப்பா.
"ஏன்?'' என்று கேட்டேன்.
"நான் ஒரு டாகுமெண்டரி படம் இயக்குகிறேன் அல்லவா? அதில் உன் வயதுப்பெண் நடிக்க தேவைப்படுகிறாள். அது ஏன் நீயாக இருக்கக்கூடாது?'' என்று கேட்டார் அப்பா.
"நடிப்பதா? நானா? எனக்கு என்ன தெரியும் டாடி?'' என்று திருப்பிக் கேட்டேன்.
"இதுவும் பாடம் மாதிரிதான். நான் சொல்லித் தருவதை அப்படியே செய்தால் போதும்'' என்றார் அப்பா. படப்பிடிப்பில் அப்பா சொன்னதைச் செய்தேன். அவ்வளவுதான். அத்தோடு நடித்ததைக்கூட மறந்து மறுபடியும் மாணவியாகிவிட்டேன்.''
இவ்வாறு கூறினார், ரோஜா.
ரோஜாவுக்கு சினிமா வாய்ப்பு மறுபடியும் தேடி வந்தது கல்லூரிப் பருவத்தில்தான். திருப்பதியில் உள்ள ஸ்ரீபத்மாவதி பெண்கள் கல்லூரியில் முதலாண்டு மாணவியாக இருந்த நேரத்தில் `நடிப்பு' தேடிவந்து அழைத்திருக்கிறது. அதுபற்றி ரோஜா கூறுகிறார்:
"அப்பாவின் நண்பர் எங்கள் கல்லூரியில் நடந்த விழா ஒன்றுக்கு வந்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு என்னைப்பார்த்த அவருக்குள் என்னை நடிக்க வைக்கும் எண்ணம் வெளிப்பட்டிருக்கிறது. இதை அவர் எங்கள் வீட்டில் சொன்னபோது அம்மா, அண்ணன்கள் பயங்கர எதிர்ப்பு. அப்பாதான், "நடித்தால்தான் என்ன?'' என்று கேட்டு, நடிப்பதற்கு கிரீன் சிக்னல் கொடுத்தார்.
அப்பாவின் நண்பர் என்னை நிறைய படங்கள் எடுத்தார். அப்போது எனக்கு சிரிப்பு வந்தது. "ஏன் சிரிக்கிறாய்?'' என்று கேட்டார். நான் "ஒன்றுமில்லை'' என்று கூறி சமாளித்து விட்டேன். ஆனால் அந்தப் படங்களில் ஒன்று, ஒரு தெலுங்கு சினிமா பத்திரிகையின் அட்டையில் வர, அதுதான் தமிழில் என்னை நாயகியாக்கியது.
அதுகூட உடனடியாக இல்லை. தெலுங்குப் படம் எடுக்க முன்னேற்பாடுகளை செய்த அப்பாவின் நண்பர், தமிழில் பிரபலமாக இருந்த டைரக்டர் பாரதிராஜாவுக்கும் நண்பராக இருந்திருக்கிறார். அவரை தனது படப்பிடிப்புக்கு அழைத்த அப்பாவின் நண்பர் எனக்கு ஒரு சினிமா பெயரை சூட்டும்படி பாரதிராஜாவை கேட்டிருக்கிறார். என்னைப் பார்த்தது ஒரு நொடிதான். உடனே, "ரோஜா'' என்று பெயர் வைத்துவிட்டார்.
எனக்குப் பெயர் வைத்ததையே பாரதிராஜா மறந்து விட்டார். இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரையில் அவருக்கு சம்பவம். எனக்கு சரித்திரம் அல்லவா! பின்னாளில் அவரது டைரக்ஷனில் தமிழ்ச்செல்வன் படத்தில் நடித்தபோது நான் இந்த பெயர் சூட்டிய சம்பவத்தை சொன்னேன். "அடடா! எனக்கு நினைவில்லையே?'' என்று ஆச்சரியப்பட்டார் அவர்.
இவ்வாறு ரோஜா கூறினார்.
தமிழ் சினிமாவில் செம்பருத்தியாக மலர்ந்தவர் நடிகை ரோஜா.
1991-ம் ஆண்டில் டைரக்டர் ஆர்.கே. செல்வமணி இயக்கிய "செம்பருத்தி'' படத்தில் அறிமுகமான ரோஜா, தொடர்ந்து 15 ஆண்டுகள் சினிமாவில் நிலைத்து நின்றவர். தமிழிலும், தெலுங்கிலுமாக 140-க்கு மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.
திருப்பதியைச் சேர்ந்த ஸ்ரீலதா தான் சினிமாவுக்கு வந்த பிறகு `ரோஜா'வாகியிருக்கிறார். அப்பா ஒய்.என். ரெட்டி. அம்மா லலிதா.
உடன் பிறந்தோர் 2 அண்ணன்கள் மட்டும். மூத்த அண்ணன் குமாரசாமி ரெட்டி. அடுத்த அண்ணன் ராம்பிரசாத் ரெட்டி.
ஒரே பெண் என்பதால் செல்லம் அதிகம் கிடைக்கும் என்பார்கள். ரோஜாவை பொறுத்தவரையில் ரொம்ப ரொம்ப செல்லம். அதற்குக் காரணம் ரோஜாவே சொல்கிறார்:
"அப்பாவுக்கு அக்கா, தங்கை யாரும் கிடையாது. தாத்தாவுக்கும் அக்கா -தங்கை கிடையாது. இதனால் குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை என்பதால் ஆளாளுக்கு என்னை கொண்டாடினார்கள். பாசம் கொட்டினார்கள். ஆனாலும் நான் பையன் மாதிரிதான் வளர்ந்தேன். எப்போதும் யாரையாவது சீண்டியபடி ஜாலி ஜாலி ஜாலிதான். தாத்தா ஒருத்தருக்கு மட்டும்தான் கொஞ்சம் பயப்படுவேன்.'' சொல்லிச் சிரிக்கிறார் ரோஜா.
பள்ளிப் பருவத்தில் கூட ரோஜாவுக்குள் நடிப்பு வாசனை வீசவில்லை. நடிகையாக வேண்டும் என்று கனவு கூட கண்டதில்லை. ஆனால், நம்பர் ஒன் சினிமா ரசிகையாக இருந்திருக்கிறார். அதுபற்றி ரோஜா கூறுகிறார்:
"பள்ளி நாட்களில் எல்லாம் ஒரு சினிமா விடமாட்டேன். ஸ்கூலுக்கு `கட்' அடித்து விட்டு தோழிகளுடன் போய் விடுவேன். ஆனால் அப்போதுகூட சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் துளிர்த்ததே இல்லை.''
இப்படிச் சொல்லும் ரோஜாவுக்கு `நடிகை அந்தஸ்து' எப்போதுதான் வந்தது?
"அப்பா, சாரதி ஸ்டூடியோவில் சவுண்டு என்ஜினீயராக இருந்தார். சினிமா இயக்கும் ஆசை அவருக்கு இருந்தது. இதனால் வேலையை விட்டு விட்டு முதலில் `கொத்தடி பொம்மா பூர்ணமா' என்ற டாகுமெண்டரி படத்தை இயக்கினார்.
இதில் தெலுங்கில் பிரபல இயக்குனராக இருந்த கோடி.ராமகிருஷ்ணாவின் மனைவியை நாயகியாக நடிக்க வைத்தார். அவரது மகளாக நடிக்க 10 வயதுப்பெண் தேவைப்பட்டபோது அப்பாவின் பார்வை என் மீது. அப்போது நான் ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தேன். மாலையில் வீட்டுக்கு வந்த என்னிடம், "நாளை நீ பள்ளிக்குப் போகவேண்டாம்'' என்றார், அப்பா.
"ஏன்?'' என்று கேட்டேன்.
"நான் ஒரு டாகுமெண்டரி படம் இயக்குகிறேன் அல்லவா? அதில் உன் வயதுப்பெண் நடிக்க தேவைப்படுகிறாள். அது ஏன் நீயாக இருக்கக்கூடாது?'' என்று கேட்டார் அப்பா.
"நடிப்பதா? நானா? எனக்கு என்ன தெரியும் டாடி?'' என்று திருப்பிக் கேட்டேன்.
"இதுவும் பாடம் மாதிரிதான். நான் சொல்லித் தருவதை அப்படியே செய்தால் போதும்'' என்றார் அப்பா. படப்பிடிப்பில் அப்பா சொன்னதைச் செய்தேன். அவ்வளவுதான். அத்தோடு நடித்ததைக்கூட மறந்து மறுபடியும் மாணவியாகிவிட்டேன்.''
இவ்வாறு கூறினார், ரோஜா.
ரோஜாவுக்கு சினிமா வாய்ப்பு மறுபடியும் தேடி வந்தது கல்லூரிப் பருவத்தில்தான். திருப்பதியில் உள்ள ஸ்ரீபத்மாவதி பெண்கள் கல்லூரியில் முதலாண்டு மாணவியாக இருந்த நேரத்தில் `நடிப்பு' தேடிவந்து அழைத்திருக்கிறது. அதுபற்றி ரோஜா கூறுகிறார்:
"அப்பாவின் நண்பர் எங்கள் கல்லூரியில் நடந்த விழா ஒன்றுக்கு வந்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு என்னைப்பார்த்த அவருக்குள் என்னை நடிக்க வைக்கும் எண்ணம் வெளிப்பட்டிருக்கிறது. இதை அவர் எங்கள் வீட்டில் சொன்னபோது அம்மா, அண்ணன்கள் பயங்கர எதிர்ப்பு. அப்பாதான், "நடித்தால்தான் என்ன?'' என்று கேட்டு, நடிப்பதற்கு கிரீன் சிக்னல் கொடுத்தார்.
அப்பாவின் நண்பர் என்னை நிறைய படங்கள் எடுத்தார். அப்போது எனக்கு சிரிப்பு வந்தது. "ஏன் சிரிக்கிறாய்?'' என்று கேட்டார். நான் "ஒன்றுமில்லை'' என்று கூறி சமாளித்து விட்டேன். ஆனால் அந்தப் படங்களில் ஒன்று, ஒரு தெலுங்கு சினிமா பத்திரிகையின் அட்டையில் வர, அதுதான் தமிழில் என்னை நாயகியாக்கியது.
அதுகூட உடனடியாக இல்லை. தெலுங்குப் படம் எடுக்க முன்னேற்பாடுகளை செய்த அப்பாவின் நண்பர், தமிழில் பிரபலமாக இருந்த டைரக்டர் பாரதிராஜாவுக்கும் நண்பராக இருந்திருக்கிறார். அவரை தனது படப்பிடிப்புக்கு அழைத்த அப்பாவின் நண்பர் எனக்கு ஒரு சினிமா பெயரை சூட்டும்படி பாரதிராஜாவை கேட்டிருக்கிறார். என்னைப் பார்த்தது ஒரு நொடிதான். உடனே, "ரோஜா'' என்று பெயர் வைத்துவிட்டார்.
எனக்குப் பெயர் வைத்ததையே பாரதிராஜா மறந்து விட்டார். இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரையில் அவருக்கு சம்பவம். எனக்கு சரித்திரம் அல்லவா! பின்னாளில் அவரது டைரக்ஷனில் தமிழ்ச்செல்வன் படத்தில் நடித்தபோது நான் இந்த பெயர் சூட்டிய சம்பவத்தை சொன்னேன். "அடடா! எனக்கு நினைவில்லையே?'' என்று ஆச்சரியப்பட்டார் அவர்.
இவ்வாறு ரோஜா கூறினார்.
இளையராஜா சில படங்களுக்கு இசை அமைக்க மறுத்தார்.
இளையராஜா சில படங்களுக்கு இசை அமைக்க மறுத்தார்.
அதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:-
"எனக்கொரு கெட்ட குணம். என்னிடம் யாராவது வந்து, "நீங்கள் இசை அமைக்கவில்லை என்றால், இந்தப் படத்தை எடுக்கமாட்டேன், இப்படியே விட்டு விடுவேன்'' என்று சொன்னால், கண்டிப்பாக இசை அமைக்க ஒத்துக்கொள்ள மாட்டேன்! காரணம், "இவர்கள் எப்படி படம் எடுக்காமல் இருக்கிறார்கள், பார்ப்போமே!'' என்ற எண்ணம்தான்.
இரண்டு மூன்று மாதம் காத்திருப்பார்கள். நான் இறங்கி வரமாட்டேன்.
அப்புறம், வேறு ஒருவரின் இசையில் படம் வெளிவந்து விடும்!
அப்படி வந்ததுதான் கே.பாக்யராஜின் முதல் படம் "ஒரு கை ஓசை'' (இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்)
இப்படி, "நீங்கள் இசை அமைக்கவில்லை என்றால் இந்தப் படத்தை நான் எடுக்கப்போவதில்லை'' என்று சொல்லி, நான் இசை அமைக்க மாட்டேன் என்று மறுத்து, வேறு ஒருவர் இசை அமைப்பில் படத்தை தயாரித்து வெளியிட்ட இருவர்:- நடிகர் பார்த்திபன் (படம் "புதிய பாதை''); அனந்த் (கே.பாலசந்தரின் உதவியாளர்). படம்: "சிகரம்.''
சாருசித்ரா சீனுவாசன், "தீஸ்ரி மஞ்ஜில்'' என்ற இந்திப்படத்தை தமிழில் எடுக்க முடிவு செய்து, கமல் - ஸ்ரீதேவியை ஒப்பந்தம் செய்துவிட்டு என்னிடம் வந்தார். எனக்குப் படத்தைப் போட்டுக்காட்டினார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் நான் கச்சேரி நடத்திய காலத்திலேயே, இந்தப் படத்தின் பாடல்கள் அத்தனையும் மனப்பாடம். ஆர்.டி.பர்மன் அற்புதமாக இசை அமைத்திருந்தார்.
படம் முடிந்ததும், "இந்தப் பாடல்களைப்போல் என்னால் கம்போஸ் செய்ய முடியாது. வேறு யாரையாவது ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்'' என்று சொல்லிவிட்டேன்.
சில பாடல்களுக்கு இணை கிடையாது. அதுபோல் இசை அமைக்க முயற்சி செய்யக்கூடாது. ஆர்.டி.பர்மன் இசை அமைத்த அந்தப் படத்தின் பாடல்களும் அந்த வகையைச் சேர்ந்தவை.
சினிமாவுக்கு கதை சொல்வது ஒரு தனி கலை. சிலர், கதையை சொல்லத் தெரியாமல் மூன்று - நான்கு மணி நேரம் சொல்வார்கள். சிலர், கதையைப் பிரமாதமாகச் சொல்லிவிட்டு, உப்புச் சப்பு இல்லாமல் படமாக்குவார்கள்.
என்னிடம், சொல்லியதை சொல்லியவாறே படம் எடுத்த டைரக்டர்கள் இரண்டே பேர்: பாலுமகேந்திரா, மணிரத்னம்.
கதையை மிகவும் சுருக்கமாகச் சொல்லும் இயக்குனர்களில் ஸ்ரீதர் அவர்களும், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களும் தனி ரகம். இருவரும் 15 நிமிடங்களுக்குள் கதை சொல்லிவிடுவார்கள்.
பாரதிராஜா அவரது "காதல் ஓவியம்'' படத்தின் மீது ரொம்ப நம்பிக்கை வைத்திருந்தார்.
நான் மூகாம்பிகையின் தீவிர பக்தன் என்பதால், "படத்தின் நாயகன் அம்பாளின் பக்தன் என்று சொன்னால், இளையராஜா நல்ல டிïன்களை எலலாம் போட்டுத்தருவார்'' என்று பாரதியிடம் உதவியாளர்களாக இருந்த மணிவண்ணனும், கலைமணியும் சொல்லியிருப்பார்கள் போலும்.
நான் அப்படத்துக்கு இசை அமைத்தேன். ஒருநாள் மாலை நேரத்தில் ஆரம்பித்த பாடல் `கம்போசிங்' அன்றே முடிந்துவிட்டது. படத்துக்கான எட்டுப்பாடல்களும் தயாராகிவிட்டன.
படம், பின்னணி இசை சேர்ப்புக்காக வந்தபோது, அந்த படத்தின் மீது எனக்கு நம்பிக்கை வரவில்லை. பாரதியிடம், "படம் ரிலீஸ் ஆவதற்குள் நாம் இருவரும் குருவாïர் போய் வரலாம்'' என்றேன். "சரி'' என்றார். வேலை சரியாக இருந்ததால், நகர முடியவில்லை.
திடீரென்று ஒருநாள் கலைமணியை பாரதி கூப்பிட்டு, "ஏய்யா! படத்திலே ஏதோ ஒன்னு குறையுதே. உனக்குத் தெரியாதா? தெரிந்தா சொல்லு!'' என்றார்.
"அது ஒன்றும் இல்லே சார். கதைதான் குறையுது!'' என்று கலைமணி கூற, எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம். கலைமணியை பாரதி அடிக்கப்போக, அவர் தப்பி ஓடிவிட்டார்.
படம் ரிலீஸ் ஆகியது. ஒரு வாரத்தில், படப்பெட்டிகள் எல்லாம் திரும்பி வந்துவிட்டன.
பாரதி என்னிடம் வந்து, "வா, குருவாïர் போய் வரலாம்'' என்றார். "படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பல்லவா போயிருக்க வேண்டும். இப்போது வேண்டாமே!'' என்று கூறிவிட்டேன்.
"காதல் ஓவியம்'' படம் சரியாகப் போகாததால், பாரதி மனம் சங்கடப்பட்டார். ரசிகர்கள் மீது கோபப்பட்டார்.
"பாரதி! ரசிகர்களை குறை கூறவேண்டாம். அவர்கள் எப்போதும் சரியாகவே இருப்பார்கள்'' என்றேன்.
"உனக்குத் தெரியாது. இவர்களுக்கு எது வேணும் என்று எனக்குத் தெரியாதா? இவர்களுக்காக ஒரு மூன்று படி கீழே இறங்கி வந்து ஒரு படம் எடுத்துக் காட்டுகிறேன் பார்!'' என்றார்.
அதற்கு நான், "யோசித்துப் பாருங்கள். 16 வயதினிலே படம் நன்றாக ஓடிக்கொண்டிருந்த அதே நேரத்தில், அதற்கு இணையாக விட்டலாச்சாரியாவின் "ஜெகன்மோகினி'' படம் ஓடியதல்லவா? அதற்காக, பாரதிராஜா, ஜெகன்மோகினி போல படம் எடுக்கவேண்டும் என்று அர்த்தம் இல்லை. உங்களிடம் மக்கள் எதிர்பார்ப்பது வேறு. அதைவிட்டு எங்கும் போகவேண்டாம்'' என்றேன்.
ஆனால் பாரதி தன் கருத்தில் உறுதியாக இருந்தார்.
ரசிகர்களுக்காகவே கீழே இறங்கி வந்து அவர் எடுத்த "வாலிபமே வா வா.'' படம் ஓடவில்லை.
"அலைகள் ஓய்வதில்லை'' படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆன பாஸ்கர், அடுத்து ஏதாவது படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் என்னிடம் வந்தார். பஞ்சு சாரின் வீட்டில் இருதேன். அப்போது, அங்கே அமர் (கங்கை அமரன்) இருந்ததைப் பார்த்து, "அமர் டைரக்ஷனில் படத்தை எடு. படத்தின் பெயர் கோழி கூவுது'' என்றேன். மதுரையில் நாங்கள் நடத்திய நாடகத்தின் பெயர் அது.
நான் சொன்னதை அமர் ஏற்றுக்கொண்டு, ஒரு கதையை உருவாக்கி, பிரபுவை ஹீரோவாகப் போட்டு படம் எடுத்தான். அவன் எனக்குப் போட்டியாக இசை அமைப்பாளராக வந்துவிடக்கூடாது என்பதற்காக டைரக்ட் செய்யச் சொன்னேன் என்று டெலிவிஷன் பேட்டிகளில் அமர் சொல்வது வழக்கம்.
அவன் எனக்குப் போட்டியா, இல்லையா என்பது அவனுக்கே தெரியும்!''
இவ்வாறு இளையராஜா கூறியுள்ளார்.
அதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:-
"எனக்கொரு கெட்ட குணம். என்னிடம் யாராவது வந்து, "நீங்கள் இசை அமைக்கவில்லை என்றால், இந்தப் படத்தை எடுக்கமாட்டேன், இப்படியே விட்டு விடுவேன்'' என்று சொன்னால், கண்டிப்பாக இசை அமைக்க ஒத்துக்கொள்ள மாட்டேன்! காரணம், "இவர்கள் எப்படி படம் எடுக்காமல் இருக்கிறார்கள், பார்ப்போமே!'' என்ற எண்ணம்தான்.
இரண்டு மூன்று மாதம் காத்திருப்பார்கள். நான் இறங்கி வரமாட்டேன்.
அப்புறம், வேறு ஒருவரின் இசையில் படம் வெளிவந்து விடும்!
அப்படி வந்ததுதான் கே.பாக்யராஜின் முதல் படம் "ஒரு கை ஓசை'' (இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்)
இப்படி, "நீங்கள் இசை அமைக்கவில்லை என்றால் இந்தப் படத்தை நான் எடுக்கப்போவதில்லை'' என்று சொல்லி, நான் இசை அமைக்க மாட்டேன் என்று மறுத்து, வேறு ஒருவர் இசை அமைப்பில் படத்தை தயாரித்து வெளியிட்ட இருவர்:- நடிகர் பார்த்திபன் (படம் "புதிய பாதை''); அனந்த் (கே.பாலசந்தரின் உதவியாளர்). படம்: "சிகரம்.''
சாருசித்ரா சீனுவாசன், "தீஸ்ரி மஞ்ஜில்'' என்ற இந்திப்படத்தை தமிழில் எடுக்க முடிவு செய்து, கமல் - ஸ்ரீதேவியை ஒப்பந்தம் செய்துவிட்டு என்னிடம் வந்தார். எனக்குப் படத்தைப் போட்டுக்காட்டினார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் நான் கச்சேரி நடத்திய காலத்திலேயே, இந்தப் படத்தின் பாடல்கள் அத்தனையும் மனப்பாடம். ஆர்.டி.பர்மன் அற்புதமாக இசை அமைத்திருந்தார்.
படம் முடிந்ததும், "இந்தப் பாடல்களைப்போல் என்னால் கம்போஸ் செய்ய முடியாது. வேறு யாரையாவது ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்'' என்று சொல்லிவிட்டேன்.
சில பாடல்களுக்கு இணை கிடையாது. அதுபோல் இசை அமைக்க முயற்சி செய்யக்கூடாது. ஆர்.டி.பர்மன் இசை அமைத்த அந்தப் படத்தின் பாடல்களும் அந்த வகையைச் சேர்ந்தவை.
சினிமாவுக்கு கதை சொல்வது ஒரு தனி கலை. சிலர், கதையை சொல்லத் தெரியாமல் மூன்று - நான்கு மணி நேரம் சொல்வார்கள். சிலர், கதையைப் பிரமாதமாகச் சொல்லிவிட்டு, உப்புச் சப்பு இல்லாமல் படமாக்குவார்கள்.
என்னிடம், சொல்லியதை சொல்லியவாறே படம் எடுத்த டைரக்டர்கள் இரண்டே பேர்: பாலுமகேந்திரா, மணிரத்னம்.
கதையை மிகவும் சுருக்கமாகச் சொல்லும் இயக்குனர்களில் ஸ்ரீதர் அவர்களும், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களும் தனி ரகம். இருவரும் 15 நிமிடங்களுக்குள் கதை சொல்லிவிடுவார்கள்.
பாரதிராஜா அவரது "காதல் ஓவியம்'' படத்தின் மீது ரொம்ப நம்பிக்கை வைத்திருந்தார்.
நான் மூகாம்பிகையின் தீவிர பக்தன் என்பதால், "படத்தின் நாயகன் அம்பாளின் பக்தன் என்று சொன்னால், இளையராஜா நல்ல டிïன்களை எலலாம் போட்டுத்தருவார்'' என்று பாரதியிடம் உதவியாளர்களாக இருந்த மணிவண்ணனும், கலைமணியும் சொல்லியிருப்பார்கள் போலும்.
நான் அப்படத்துக்கு இசை அமைத்தேன். ஒருநாள் மாலை நேரத்தில் ஆரம்பித்த பாடல் `கம்போசிங்' அன்றே முடிந்துவிட்டது. படத்துக்கான எட்டுப்பாடல்களும் தயாராகிவிட்டன.
படம், பின்னணி இசை சேர்ப்புக்காக வந்தபோது, அந்த படத்தின் மீது எனக்கு நம்பிக்கை வரவில்லை. பாரதியிடம், "படம் ரிலீஸ் ஆவதற்குள் நாம் இருவரும் குருவாïர் போய் வரலாம்'' என்றேன். "சரி'' என்றார். வேலை சரியாக இருந்ததால், நகர முடியவில்லை.
திடீரென்று ஒருநாள் கலைமணியை பாரதி கூப்பிட்டு, "ஏய்யா! படத்திலே ஏதோ ஒன்னு குறையுதே. உனக்குத் தெரியாதா? தெரிந்தா சொல்லு!'' என்றார்.
"அது ஒன்றும் இல்லே சார். கதைதான் குறையுது!'' என்று கலைமணி கூற, எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம். கலைமணியை பாரதி அடிக்கப்போக, அவர் தப்பி ஓடிவிட்டார்.
படம் ரிலீஸ் ஆகியது. ஒரு வாரத்தில், படப்பெட்டிகள் எல்லாம் திரும்பி வந்துவிட்டன.
பாரதி என்னிடம் வந்து, "வா, குருவாïர் போய் வரலாம்'' என்றார். "படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பல்லவா போயிருக்க வேண்டும். இப்போது வேண்டாமே!'' என்று கூறிவிட்டேன்.
"காதல் ஓவியம்'' படம் சரியாகப் போகாததால், பாரதி மனம் சங்கடப்பட்டார். ரசிகர்கள் மீது கோபப்பட்டார்.
"பாரதி! ரசிகர்களை குறை கூறவேண்டாம். அவர்கள் எப்போதும் சரியாகவே இருப்பார்கள்'' என்றேன்.
"உனக்குத் தெரியாது. இவர்களுக்கு எது வேணும் என்று எனக்குத் தெரியாதா? இவர்களுக்காக ஒரு மூன்று படி கீழே இறங்கி வந்து ஒரு படம் எடுத்துக் காட்டுகிறேன் பார்!'' என்றார்.
அதற்கு நான், "யோசித்துப் பாருங்கள். 16 வயதினிலே படம் நன்றாக ஓடிக்கொண்டிருந்த அதே நேரத்தில், அதற்கு இணையாக விட்டலாச்சாரியாவின் "ஜெகன்மோகினி'' படம் ஓடியதல்லவா? அதற்காக, பாரதிராஜா, ஜெகன்மோகினி போல படம் எடுக்கவேண்டும் என்று அர்த்தம் இல்லை. உங்களிடம் மக்கள் எதிர்பார்ப்பது வேறு. அதைவிட்டு எங்கும் போகவேண்டாம்'' என்றேன்.
ஆனால் பாரதி தன் கருத்தில் உறுதியாக இருந்தார்.
ரசிகர்களுக்காகவே கீழே இறங்கி வந்து அவர் எடுத்த "வாலிபமே வா வா.'' படம் ஓடவில்லை.
"அலைகள் ஓய்வதில்லை'' படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆன பாஸ்கர், அடுத்து ஏதாவது படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் என்னிடம் வந்தார். பஞ்சு சாரின் வீட்டில் இருதேன். அப்போது, அங்கே அமர் (கங்கை அமரன்) இருந்ததைப் பார்த்து, "அமர் டைரக்ஷனில் படத்தை எடு. படத்தின் பெயர் கோழி கூவுது'' என்றேன். மதுரையில் நாங்கள் நடத்திய நாடகத்தின் பெயர் அது.
நான் சொன்னதை அமர் ஏற்றுக்கொண்டு, ஒரு கதையை உருவாக்கி, பிரபுவை ஹீரோவாகப் போட்டு படம் எடுத்தான். அவன் எனக்குப் போட்டியாக இசை அமைப்பாளராக வந்துவிடக்கூடாது என்பதற்காக டைரக்ட் செய்யச் சொன்னேன் என்று டெலிவிஷன் பேட்டிகளில் அமர் சொல்வது வழக்கம்.
அவன் எனக்குப் போட்டியா, இல்லையா என்பது அவனுக்கே தெரியும்!''
இவ்வாறு இளையராஜா கூறியுள்ளார்.
இரண்டு இசை மேதைகள் சேர்ந்து இசை அமைப்பது என்பது ஆச்சரியமான விஷயம். ஏவி.எம். தயாரித்த "மெல்லத் திறந்தது கதவு'' படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதனும், இளையராஜாவும் சேர்ந்து இசை அமைத்தார்கள்.
இரண்டு இசை மேதைகள் சேர்ந்து இசை அமைப்பது என்பது ஆச்சரியமான விஷயம். ஏவி.எம். தயாரித்த "மெல்லத் திறந்தது கதவு'' படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதனும், இளையராஜாவும் சேர்ந்து இசை அமைத்தார்கள்.
"மெல்லத் திறந்தது கதவு'' படம் 1986 செப்டம்பர் 12-ந்தேதி வெளியாயிற்று. இதை ஆர்.சுந்தரராஜன் இயக்கினார். மோகன், ராதா, அமலா ஆகியோர் நடித்தனர்.
இதில் இடம் பெற்ற முக்கிய பாடல்கள்:-
1. "ஊரு சனம் தூங்கிருச்சு... ஊதக்காத்தும் அடிச்சிருச்சு!''
2. "குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேக்குதா?''
3. "தேடும் கண் பார்வை தவிக்க...''
4. "வா வெண்ணிலா... உன்னைத்தானே வானம் தேடுது!''
5. "தில் தில் தில்... மனதில் ஒரு தல் தல் தல் காதல்''
"மெல்லத் திறந்தது கதவு'' படத்தை ஏவி.எம். தயாரிக்க நேர்ந்ததே ஒரு சுவையான கதை.
அதுபற்றி ஏவி.எம். சரவணன் ஒரு கட்டுரையில் கூறியிருப்பதாவது:-
"1985-ம் ஆண்டு ஒரு நாள் எனக்கு திடீரென்று பாரதிராஜா டெலிபோன் செய்தார். "சார்... நானும் இளையராஜாவும் உங்களைப் பார்க்க வீட்டுக்கு வரலாம் என்றிருக்கிறோம்'' என்றார்.
"எம்.எஸ்.விஸ்வநாதன் இப்போது கொஞ்சம் சிரமத்தில் இருக்கிறார். அவருக்கு ஒரு படம் எடுத்து உதவி செய்தால் நன்றாக இருக்கும்'' என்று யோசனை சொன்னார்கள். அப்போது நாங்கள் நிறையப் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தோம். அந்த யோசனையை நான் உடனே ஏற்றுக்கொண்டேன்.
என் தந்தையாருக்கு மெல்லிசை மன்னரின் பாட்டுகள் மட்டுமல்ல, அவரது பண்புகளும் மிகவும் பிடிக்கும். அவரது மனதில் நிறைந்திருந்த மனிதர்களில் எம்.எஸ்.வியும் ஒருவர்.
ஒருமுறை அப்பச்சி (ஏவி.எம்) என்னை அழைத்து "விஸ்வநாதனை மட்டும் என்றைக்கும் விட்டு விடாதே. அவருக்கு எப்போது எந்தச் சிரமம் ஏற்பட்டு அது உனக்குத் தெரிய வந்தாலும் அவருக்கு உதவி செய்யத் தயங்காதே'' என்று சொன்னார். மெல்லிசை மன்னரை எனக்கும் பிடிக்கும். அவர் மீது எனக்கு என்றும் மரியாதை உண்டு.
பாரதிராஜாவும், இளையராஜாவும் சொன்னதும், எம்.எஸ்.வி.க்கு உதவ வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட படம்தான் "மெல்லத்திறந்தது கதவு.''
இளையராஜாதான் அந்தப் படத்துக்கு இசையமைப்பதாக இருந்தது. "நானும் எம்.எஸ்.வி.யும் சேர்ந்து இப்படத்துக்கு மிïசிக் பண்றோமே'' என்று ராஜா கேட்டபோது எனக்கு அந்த ஐடியா பிடித்திருந்தது. இரண்டு இசை மேதைகளும் இணைந்து அந்தப் படத்தில் பணியாற்றினார்கள் என்பது ஒரு தனிச்சிறப்பாக அமைந்தது.
பாடல்களுக்கான டிïனை எம்.எஸ்.வி. அவர்கள் போட்டார். ஆர்க்கெஸ்ட்ராவை இளையராஜா நடத்தினார்.
பாடல்கள் மிக இனிமையாக அமைந்தன. அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் மதித்துப் பணியாற்றிய விதமும் இனிமையாக இருந்தது.
படம் வெளியானதும் முதலில் சுமாராகத்தான் போயிற்று. நாட்கள் ஆக ஆகத்தான் பிக் அப் ஆயிற்று.
நடுவில் ஒரு தமாஷ் நடந்தது.
மதுரையில் எங்கள் வினியோகஸ்தர் நாகராஜ ராஜா என்பவர் அங்கே சினிப்ரியா தியேட்டரில் அந்தப் படத்தை, இடைவேளைக்கு பிந்தைய பகுதியை முன்னதாகவும், முந்தைய பகுதியை பின்னாலும் போட்டால் நன்றாக இருக்கும் போலிருக்கிறதே என்று கருதி அப்படியே மாற்றிப்போட ஏற்பாடு செய்தார். ஆனால் இப்படி மாற்றிப் போட்டது ரசிகர்கள் யாருக்கும் தெரியாது. அப்படிப்போட்டபோது அது ஒரிஜினல் படத்தைவிட அதிகமாக ரசிக்கப்பட்டதாகத் தெரிந்தது. எங்களுக்கே இது ஆச்சரியமாக இருந்தது.
மதுரையில் இப்படி படத்தை முன்னும் பின்னுமாக மாற்றிப்போட்டு அது வரவேற்பைப் பெற்றது என்ற விவரம் தியேட்டர் வட்டாரங்களில் வேகமாக கசிந்து, மற்ற தியேட்டர்காரர்களும் அப்படியே செய்யத் தொடங்கி விட்டார்கள்.
இதனால் பின்னர் பிரச்சினை ஏதும் வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் தியேட்டரில் காண்பித்துக் கொண்டிருந்த மாதிரியே மாற்றிப்போட்டு படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பினோம்.
"இது தேவைதானா'' என்று அதிகாரிகளே கேட்டார்கள்.
"படத்துக்குத்தான் சர்டிபிகேட் ஏற்கனவே கொடுத்தாயிற்றே. எப்படிக் காட்டினால் என்ன?'' என்று அவர்கள்
அபிப்பிராயப்பட்டார்கள்.நாங்கள்தான் வற்புறுத்தி மீண்டும் ஒரு சர்டிபிகேட் வாங்கினோம்.
அப்போது குறும்புக்கார அதிகாரி ஒருவர், "தலைப்பு எப்படி? `மெல்லத் திறந்தது கதவு' என்றுதான் இருக்கப் போகிறதா? இல்லை, `கதவு திறந்தது மெல்ல' என்று மாற்றப் போகிறீர்களா?'' என்று கிண்டலடித்தார்.''
இவ்வாறு சரவணன் குறிப்பிட்டுள்ளார்.
"மெல்லத் திறந்தது கதவு'' படம் 1986 செப்டம்பர் 12-ந்தேதி வெளியாயிற்று. இதை ஆர்.சுந்தரராஜன் இயக்கினார். மோகன், ராதா, அமலா ஆகியோர் நடித்தனர்.
இதில் இடம் பெற்ற முக்கிய பாடல்கள்:-
1. "ஊரு சனம் தூங்கிருச்சு... ஊதக்காத்தும் அடிச்சிருச்சு!''
2. "குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேக்குதா?''
3. "தேடும் கண் பார்வை தவிக்க...''
4. "வா வெண்ணிலா... உன்னைத்தானே வானம் தேடுது!''
5. "தில் தில் தில்... மனதில் ஒரு தல் தல் தல் காதல்''
"மெல்லத் திறந்தது கதவு'' படத்தை ஏவி.எம். தயாரிக்க நேர்ந்ததே ஒரு சுவையான கதை.
அதுபற்றி ஏவி.எம். சரவணன் ஒரு கட்டுரையில் கூறியிருப்பதாவது:-
"1985-ம் ஆண்டு ஒரு நாள் எனக்கு திடீரென்று பாரதிராஜா டெலிபோன் செய்தார். "சார்... நானும் இளையராஜாவும் உங்களைப் பார்க்க வீட்டுக்கு வரலாம் என்றிருக்கிறோம்'' என்றார்.
"எம்.எஸ்.விஸ்வநாதன் இப்போது கொஞ்சம் சிரமத்தில் இருக்கிறார். அவருக்கு ஒரு படம் எடுத்து உதவி செய்தால் நன்றாக இருக்கும்'' என்று யோசனை சொன்னார்கள். அப்போது நாங்கள் நிறையப் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தோம். அந்த யோசனையை நான் உடனே ஏற்றுக்கொண்டேன்.
என் தந்தையாருக்கு மெல்லிசை மன்னரின் பாட்டுகள் மட்டுமல்ல, அவரது பண்புகளும் மிகவும் பிடிக்கும். அவரது மனதில் நிறைந்திருந்த மனிதர்களில் எம்.எஸ்.வியும் ஒருவர்.
ஒருமுறை அப்பச்சி (ஏவி.எம்) என்னை அழைத்து "விஸ்வநாதனை மட்டும் என்றைக்கும் விட்டு விடாதே. அவருக்கு எப்போது எந்தச் சிரமம் ஏற்பட்டு அது உனக்குத் தெரிய வந்தாலும் அவருக்கு உதவி செய்யத் தயங்காதே'' என்று சொன்னார். மெல்லிசை மன்னரை எனக்கும் பிடிக்கும். அவர் மீது எனக்கு என்றும் மரியாதை உண்டு.
பாரதிராஜாவும், இளையராஜாவும் சொன்னதும், எம்.எஸ்.வி.க்கு உதவ வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட படம்தான் "மெல்லத்திறந்தது கதவு.''
இளையராஜாதான் அந்தப் படத்துக்கு இசையமைப்பதாக இருந்தது. "நானும் எம்.எஸ்.வி.யும் சேர்ந்து இப்படத்துக்கு மிïசிக் பண்றோமே'' என்று ராஜா கேட்டபோது எனக்கு அந்த ஐடியா பிடித்திருந்தது. இரண்டு இசை மேதைகளும் இணைந்து அந்தப் படத்தில் பணியாற்றினார்கள் என்பது ஒரு தனிச்சிறப்பாக அமைந்தது.
பாடல்களுக்கான டிïனை எம்.எஸ்.வி. அவர்கள் போட்டார். ஆர்க்கெஸ்ட்ராவை இளையராஜா நடத்தினார்.
பாடல்கள் மிக இனிமையாக அமைந்தன. அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் மதித்துப் பணியாற்றிய விதமும் இனிமையாக இருந்தது.
படம் வெளியானதும் முதலில் சுமாராகத்தான் போயிற்று. நாட்கள் ஆக ஆகத்தான் பிக் அப் ஆயிற்று.
நடுவில் ஒரு தமாஷ் நடந்தது.
மதுரையில் எங்கள் வினியோகஸ்தர் நாகராஜ ராஜா என்பவர் அங்கே சினிப்ரியா தியேட்டரில் அந்தப் படத்தை, இடைவேளைக்கு பிந்தைய பகுதியை முன்னதாகவும், முந்தைய பகுதியை பின்னாலும் போட்டால் நன்றாக இருக்கும் போலிருக்கிறதே என்று கருதி அப்படியே மாற்றிப்போட ஏற்பாடு செய்தார். ஆனால் இப்படி மாற்றிப் போட்டது ரசிகர்கள் யாருக்கும் தெரியாது. அப்படிப்போட்டபோது அது ஒரிஜினல் படத்தைவிட அதிகமாக ரசிக்கப்பட்டதாகத் தெரிந்தது. எங்களுக்கே இது ஆச்சரியமாக இருந்தது.
மதுரையில் இப்படி படத்தை முன்னும் பின்னுமாக மாற்றிப்போட்டு அது வரவேற்பைப் பெற்றது என்ற விவரம் தியேட்டர் வட்டாரங்களில் வேகமாக கசிந்து, மற்ற தியேட்டர்காரர்களும் அப்படியே செய்யத் தொடங்கி விட்டார்கள்.
இதனால் பின்னர் பிரச்சினை ஏதும் வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் தியேட்டரில் காண்பித்துக் கொண்டிருந்த மாதிரியே மாற்றிப்போட்டு படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பினோம்.
"இது தேவைதானா'' என்று அதிகாரிகளே கேட்டார்கள்.
"படத்துக்குத்தான் சர்டிபிகேட் ஏற்கனவே கொடுத்தாயிற்றே. எப்படிக் காட்டினால் என்ன?'' என்று அவர்கள்
அபிப்பிராயப்பட்டார்கள்.நாங்கள்தான் வற்புறுத்தி மீண்டும் ஒரு சர்டிபிகேட் வாங்கினோம்.
அப்போது குறும்புக்கார அதிகாரி ஒருவர், "தலைப்பு எப்படி? `மெல்லத் திறந்தது கதவு' என்றுதான் இருக்கப் போகிறதா? இல்லை, `கதவு திறந்தது மெல்ல' என்று மாற்றப் போகிறீர்களா?'' என்று கிண்டலடித்தார்.''
இவ்வாறு சரவணன் குறிப்பிட்டுள்ளார்.
சிறந்த இசை அமைப்பாளருக்கான மத்திய அரசின் தேசிய விருதை, இளையராஜா பெற்றார்.
சிறந்த இசை அமைப்பாளருக்கான மத்திய அரசின் தேசிய விருதை, இளையராஜா பெற்றார்.
அவருக்கு இந்த விருதைப் பெற்றுத்தந்த படங்கள்:-
1. சிந்து பைரவி
2. சாகர சங்கமம் ("சலங்கை ஒலி'')
3. ருத்ரவீணை.
இதில், "சிந்து பைரவி'' 11-11-1985-ல் வெளியானது. கே.பாலசந்தர் இயக்கியிருந்தார். சங்கீதத்தையே உயிர் மூச்சாகக் கொண்ட ஒரு இசைக்கலைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் காதல் திருப்பம் அவன் வாழ்வையே புரட்டிப்போட்டு விடுகிறது. `இசை' பற்றி பாலபாடம் கூட தெரியாத அன்பே வடிவான மனைவி, இசை மூலம் ஈர்க்கப்பட்டு, இசைக் கலைஞராலும் ஈர்க்கப்படும் இளம் பெண் என இந்த மூவர் பின்னணியில் பாலசந்தர் காட்சிகளை உருவாக்கியிருந்தார். 25 வாரம் ஓடி `இசை'க்கு மரியாதை ஏற்படுத்திக் கொடுத்த படம்.
இதில் "ஜே.கே.பி'' என்ற இசைக் கலைஞராக சிவகுமார் வாழ்ந்து காட்டியிருந்தார். பாசத்தைக் கொட்டும் அப்பாவி மனைவியாக வந்து, கணவரின் இன்னொரு காதலில் வெந்து, அப்புறமாய் தன்னைத்தானே ஜீரணித்துக் கொள்ளும் அப்பாவிப் பெண் கேரக்டரில் சுலக்ஷனா வெளுத்துக் கட்டியிருந்தார்.
ஜே.கே.பி.யின் இசையை நேசித்து பிறகு அவரையும் நேசிக்கும் கேரக்டரில் சுஹாசினி நடிப்பில் சிகரம் தொட்டிருந்தார். இந்த நடிப்புக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது அவரைத் தேடிவந்தது என்பது படத்துக்கு கிடைத்த இன்னொரு சிறப்பு.
இந்தப் படத்தில்தான் பின்னணி பாடகியாக சித்ராவை இளையராஜா அறிமுகம் செய்தார்.
சித்ரா பாடிய "பாடறியேன், படிப்பறியேன், பள்ளிக்கூடம் தானறியேன்'' பாடல் அவருக்கு பெரும் புகழ் தேடிக்கொடுத்து, மத்திய அரசின் தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. அதோடு தமிழில் நிலையான பாடகியாகவும் நிலை நிறுத்தியது.
தெலுங்கில் புகழ் பெற்ற இயக்குனர் கே.விஸ்வநாத், பரத நாட்டிய கலைஞரின் வாழ்க்கைப் பின்னணியை மையமாக வைத்து உருவாக்கிய படம் "சாகர சங்கமம்.'' "சங்கராபரணம்'' என்ற தெலுங்குப்படம் மூலம் மிகப்பிரபலமான இந்த இயக்குனரின் சாகர சங்கமமும் வெற்றிப்படமே. நடனக் கலைஞராக, நடிப்பின் சிகரத்தைத் தொட்டார், கமலஹாசன். அவருடன் இணைந்து நடித்தார், ஜெயப்பிரதா.
தெலுங்கில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து தமிழிலும் இந்தப்படம் "சலங்கை ஒலி'' என்ற பெயரில் மொழி மாற்று செய்து வெளியிடப்பட்டது. `மவுனமான நேரம்', `ஓம் நமச்சிவாய', `ததித ததித தந்தானா' போன்றவை, இளையராஜா இசையில் மிகவும் பிரபலமான
பாடல்கள்."ருத்ரவீணை'' இளையராஜாவின் இசைக்கு தேசிய விருது பெற்றுத்தந்த மூன்றாவது படம். கே.பாலசந்தர் இயக்கினார்.
தேசிய விருது பெற்றது குறித்து இளையராஜா கூறியதாவது:-
"ஒரு படத்துக்கு எந்த மாதிரி தேவையோ அதை சரியாக கொடுப்பது ஒரு இசையமைப்பாளரின் கடமை. நானும் அதைத்தான் செய்தேன். சில பாடல்கள் ரெக்கார்டிங்கின்போதே அதன் தனித்தன்மை தெரிந்து விடும். "சிந்து பைரவி'' படத்தில் "பாடறியேன் படிப்பறியேன்'' பாடல் பதிவாகும்போது, என்னுடன் இருந்த டைரக்டர் கே.பாலசந்தரிடம், "இந்தப் பாடல் மட்டும் உரிய வரவேற்பைப் பெறாவிட்டால் நான் இசையமைப்பாளரே அல்ல'' என்றேன். விருது கொடுத்தது, இசை மீதான என் நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.''
இவ்வாறு இளையராஜா கூறினார்.
அவருக்கு இந்த விருதைப் பெற்றுத்தந்த படங்கள்:-
1. சிந்து பைரவி
2. சாகர சங்கமம் ("சலங்கை ஒலி'')
3. ருத்ரவீணை.
இதில், "சிந்து பைரவி'' 11-11-1985-ல் வெளியானது. கே.பாலசந்தர் இயக்கியிருந்தார். சங்கீதத்தையே உயிர் மூச்சாகக் கொண்ட ஒரு இசைக்கலைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் காதல் திருப்பம் அவன் வாழ்வையே புரட்டிப்போட்டு விடுகிறது. `இசை' பற்றி பாலபாடம் கூட தெரியாத அன்பே வடிவான மனைவி, இசை மூலம் ஈர்க்கப்பட்டு, இசைக் கலைஞராலும் ஈர்க்கப்படும் இளம் பெண் என இந்த மூவர் பின்னணியில் பாலசந்தர் காட்சிகளை உருவாக்கியிருந்தார். 25 வாரம் ஓடி `இசை'க்கு மரியாதை ஏற்படுத்திக் கொடுத்த படம்.
இதில் "ஜே.கே.பி'' என்ற இசைக் கலைஞராக சிவகுமார் வாழ்ந்து காட்டியிருந்தார். பாசத்தைக் கொட்டும் அப்பாவி மனைவியாக வந்து, கணவரின் இன்னொரு காதலில் வெந்து, அப்புறமாய் தன்னைத்தானே ஜீரணித்துக் கொள்ளும் அப்பாவிப் பெண் கேரக்டரில் சுலக்ஷனா வெளுத்துக் கட்டியிருந்தார்.
ஜே.கே.பி.யின் இசையை நேசித்து பிறகு அவரையும் நேசிக்கும் கேரக்டரில் சுஹாசினி நடிப்பில் சிகரம் தொட்டிருந்தார். இந்த நடிப்புக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது அவரைத் தேடிவந்தது என்பது படத்துக்கு கிடைத்த இன்னொரு சிறப்பு.
இந்தப் படத்தில்தான் பின்னணி பாடகியாக சித்ராவை இளையராஜா அறிமுகம் செய்தார்.
சித்ரா பாடிய "பாடறியேன், படிப்பறியேன், பள்ளிக்கூடம் தானறியேன்'' பாடல் அவருக்கு பெரும் புகழ் தேடிக்கொடுத்து, மத்திய அரசின் தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. அதோடு தமிழில் நிலையான பாடகியாகவும் நிலை நிறுத்தியது.
தெலுங்கில் புகழ் பெற்ற இயக்குனர் கே.விஸ்வநாத், பரத நாட்டிய கலைஞரின் வாழ்க்கைப் பின்னணியை மையமாக வைத்து உருவாக்கிய படம் "சாகர சங்கமம்.'' "சங்கராபரணம்'' என்ற தெலுங்குப்படம் மூலம் மிகப்பிரபலமான இந்த இயக்குனரின் சாகர சங்கமமும் வெற்றிப்படமே. நடனக் கலைஞராக, நடிப்பின் சிகரத்தைத் தொட்டார், கமலஹாசன். அவருடன் இணைந்து நடித்தார், ஜெயப்பிரதா.
தெலுங்கில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து தமிழிலும் இந்தப்படம் "சலங்கை ஒலி'' என்ற பெயரில் மொழி மாற்று செய்து வெளியிடப்பட்டது. `மவுனமான நேரம்', `ஓம் நமச்சிவாய', `ததித ததித தந்தானா' போன்றவை, இளையராஜா இசையில் மிகவும் பிரபலமான
பாடல்கள்."ருத்ரவீணை'' இளையராஜாவின் இசைக்கு தேசிய விருது பெற்றுத்தந்த மூன்றாவது படம். கே.பாலசந்தர் இயக்கினார்.
தேசிய விருது பெற்றது குறித்து இளையராஜா கூறியதாவது:-
"ஒரு படத்துக்கு எந்த மாதிரி தேவையோ அதை சரியாக கொடுப்பது ஒரு இசையமைப்பாளரின் கடமை. நானும் அதைத்தான் செய்தேன். சில பாடல்கள் ரெக்கார்டிங்கின்போதே அதன் தனித்தன்மை தெரிந்து விடும். "சிந்து பைரவி'' படத்தில் "பாடறியேன் படிப்பறியேன்'' பாடல் பதிவாகும்போது, என்னுடன் இருந்த டைரக்டர் கே.பாலசந்தரிடம், "இந்தப் பாடல் மட்டும் உரிய வரவேற்பைப் பெறாவிட்டால் நான் இசையமைப்பாளரே அல்ல'' என்றேன். விருது கொடுத்தது, இசை மீதான என் நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.''
இவ்வாறு இளையராஜா கூறினார்.
சிறந்த இசை அமைப்பாளருக்கான மத்திய அரசின் தேசிய விருதை, இளையராஜா பெற்றார்.
சிறந்த இசை அமைப்பாளருக்கான மத்திய அரசின் தேசிய விருதை, இளையராஜா பெற்றார்.
அவருக்கு இந்த விருதைப் பெற்றுத்தந்த படங்கள்:-
1. சிந்து பைரவி
2. சாகர சங்கமம் ("சலங்கை ஒலி'')
3. ருத்ரவீணை.
இதில், "சிந்து பைரவி'' 11-11-1985-ல் வெளியானது. கே.பாலசந்தர் இயக்கியிருந்தார். சங்கீதத்தையே உயிர் மூச்சாகக் கொண்ட ஒரு இசைக்கலைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் காதல் திருப்பம் அவன் வாழ்வையே புரட்டிப்போட்டு விடுகிறது. `இசை' பற்றி பாலபாடம் கூட தெரியாத அன்பே வடிவான மனைவி, இசை மூலம் ஈர்க்கப்பட்டு, இசைக் கலைஞராலும் ஈர்க்கப்படும் இளம் பெண் என இந்த மூவர் பின்னணியில் பாலசந்தர் காட்சிகளை உருவாக்கியிருந்தார். 25 வாரம் ஓடி `இசை'க்கு மரியாதை ஏற்படுத்திக் கொடுத்த படம்.
இதில் "ஜே.கே.பி'' என்ற இசைக் கலைஞராக சிவகுமார் வாழ்ந்து காட்டியிருந்தார். பாசத்தைக் கொட்டும் அப்பாவி மனைவியாக வந்து, கணவரின் இன்னொரு காதலில் வெந்து, அப்புறமாய் தன்னைத்தானே ஜீரணித்துக் கொள்ளும் அப்பாவிப் பெண் கேரக்டரில் சுலக்ஷனா வெளுத்துக் கட்டியிருந்தார்.
ஜே.கே.பி.யின் இசையை நேசித்து பிறகு அவரையும் நேசிக்கும் கேரக்டரில் சுஹாசினி நடிப்பில் சிகரம் தொட்டிருந்தார். இந்த நடிப்புக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது அவரைத் தேடிவந்தது என்பது படத்துக்கு கிடைத்த இன்னொரு சிறப்பு.
இந்தப் படத்தில்தான் பின்னணி பாடகியாக சித்ராவை இளையராஜா அறிமுகம் செய்தார்.
சித்ரா பாடிய "பாடறியேன், படிப்பறியேன், பள்ளிக்கூடம் தானறியேன்'' பாடல் அவருக்கு பெரும் புகழ் தேடிக்கொடுத்து, மத்திய அரசின் தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. அதோடு தமிழில் நிலையான பாடகியாகவும் நிலை நிறுத்தியது.
தெலுங்கில் புகழ் பெற்ற இயக்குனர் கே.விஸ்வநாத், பரத நாட்டிய கலைஞரின் வாழ்க்கைப் பின்னணியை மையமாக வைத்து உருவாக்கிய படம் "சாகர சங்கமம்.'' "சங்கராபரணம்'' என்ற தெலுங்குப்படம் மூலம் மிகப்பிரபலமான இந்த இயக்குனரின் சாகர சங்கமமும் வெற்றிப்படமே. நடனக் கலைஞராக, நடிப்பின் சிகரத்தைத் தொட்டார், கமலஹாசன். அவருடன் இணைந்து நடித்தார், ஜெயப்பிரதா.
தெலுங்கில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து தமிழிலும் இந்தப்படம் "சலங்கை ஒலி'' என்ற பெயரில் மொழி மாற்று செய்து வெளியிடப்பட்டது. `மவுனமான நேரம்', `ஓம் நமச்சிவாய', `ததித ததித தந்தானா' போன்றவை, இளையராஜா இசையில் மிகவும் பிரபலமான
பாடல்கள்."ருத்ரவீணை'' இளையராஜாவின் இசைக்கு தேசிய விருது பெற்றுத்தந்த மூன்றாவது படம். கே.பாலசந்தர் இயக்கினார்.
தேசிய விருது பெற்றது குறித்து இளையராஜா கூறியதாவது:-
"ஒரு படத்துக்கு எந்த மாதிரி தேவையோ அதை சரியாக கொடுப்பது ஒரு இசையமைப்பாளரின் கடமை. நானும் அதைத்தான் செய்தேன். சில பாடல்கள் ரெக்கார்டிங்கின்போதே அதன் தனித்தன்மை தெரிந்து விடும். "சிந்து பைரவி'' படத்தில் "பாடறியேன் படிப்பறியேன்'' பாடல் பதிவாகும்போது, என்னுடன் இருந்த டைரக்டர் கே.பாலசந்தரிடம், "இந்தப் பாடல் மட்டும் உரிய வரவேற்பைப் பெறாவிட்டால் நான் இசையமைப்பாளரே அல்ல'' என்றேன். விருது கொடுத்தது, இசை மீதான என் நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.''
இவ்வாறு இளையராஜா கூறினார்.
அவருக்கு இந்த விருதைப் பெற்றுத்தந்த படங்கள்:-
1. சிந்து பைரவி
2. சாகர சங்கமம் ("சலங்கை ஒலி'')
3. ருத்ரவீணை.
இதில், "சிந்து பைரவி'' 11-11-1985-ல் வெளியானது. கே.பாலசந்தர் இயக்கியிருந்தார். சங்கீதத்தையே உயிர் மூச்சாகக் கொண்ட ஒரு இசைக்கலைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் காதல் திருப்பம் அவன் வாழ்வையே புரட்டிப்போட்டு விடுகிறது. `இசை' பற்றி பாலபாடம் கூட தெரியாத அன்பே வடிவான மனைவி, இசை மூலம் ஈர்க்கப்பட்டு, இசைக் கலைஞராலும் ஈர்க்கப்படும் இளம் பெண் என இந்த மூவர் பின்னணியில் பாலசந்தர் காட்சிகளை உருவாக்கியிருந்தார். 25 வாரம் ஓடி `இசை'க்கு மரியாதை ஏற்படுத்திக் கொடுத்த படம்.
இதில் "ஜே.கே.பி'' என்ற இசைக் கலைஞராக சிவகுமார் வாழ்ந்து காட்டியிருந்தார். பாசத்தைக் கொட்டும் அப்பாவி மனைவியாக வந்து, கணவரின் இன்னொரு காதலில் வெந்து, அப்புறமாய் தன்னைத்தானே ஜீரணித்துக் கொள்ளும் அப்பாவிப் பெண் கேரக்டரில் சுலக்ஷனா வெளுத்துக் கட்டியிருந்தார்.
ஜே.கே.பி.யின் இசையை நேசித்து பிறகு அவரையும் நேசிக்கும் கேரக்டரில் சுஹாசினி நடிப்பில் சிகரம் தொட்டிருந்தார். இந்த நடிப்புக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது அவரைத் தேடிவந்தது என்பது படத்துக்கு கிடைத்த இன்னொரு சிறப்பு.
இந்தப் படத்தில்தான் பின்னணி பாடகியாக சித்ராவை இளையராஜா அறிமுகம் செய்தார்.
சித்ரா பாடிய "பாடறியேன், படிப்பறியேன், பள்ளிக்கூடம் தானறியேன்'' பாடல் அவருக்கு பெரும் புகழ் தேடிக்கொடுத்து, மத்திய அரசின் தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. அதோடு தமிழில் நிலையான பாடகியாகவும் நிலை நிறுத்தியது.
தெலுங்கில் புகழ் பெற்ற இயக்குனர் கே.விஸ்வநாத், பரத நாட்டிய கலைஞரின் வாழ்க்கைப் பின்னணியை மையமாக வைத்து உருவாக்கிய படம் "சாகர சங்கமம்.'' "சங்கராபரணம்'' என்ற தெலுங்குப்படம் மூலம் மிகப்பிரபலமான இந்த இயக்குனரின் சாகர சங்கமமும் வெற்றிப்படமே. நடனக் கலைஞராக, நடிப்பின் சிகரத்தைத் தொட்டார், கமலஹாசன். அவருடன் இணைந்து நடித்தார், ஜெயப்பிரதா.
தெலுங்கில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து தமிழிலும் இந்தப்படம் "சலங்கை ஒலி'' என்ற பெயரில் மொழி மாற்று செய்து வெளியிடப்பட்டது. `மவுனமான நேரம்', `ஓம் நமச்சிவாய', `ததித ததித தந்தானா' போன்றவை, இளையராஜா இசையில் மிகவும் பிரபலமான
பாடல்கள்."ருத்ரவீணை'' இளையராஜாவின் இசைக்கு தேசிய விருது பெற்றுத்தந்த மூன்றாவது படம். கே.பாலசந்தர் இயக்கினார்.
தேசிய விருது பெற்றது குறித்து இளையராஜா கூறியதாவது:-
"ஒரு படத்துக்கு எந்த மாதிரி தேவையோ அதை சரியாக கொடுப்பது ஒரு இசையமைப்பாளரின் கடமை. நானும் அதைத்தான் செய்தேன். சில பாடல்கள் ரெக்கார்டிங்கின்போதே அதன் தனித்தன்மை தெரிந்து விடும். "சிந்து பைரவி'' படத்தில் "பாடறியேன் படிப்பறியேன்'' பாடல் பதிவாகும்போது, என்னுடன் இருந்த டைரக்டர் கே.பாலசந்தரிடம், "இந்தப் பாடல் மட்டும் உரிய வரவேற்பைப் பெறாவிட்டால் நான் இசையமைப்பாளரே அல்ல'' என்றேன். விருது கொடுத்தது, இசை மீதான என் நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.''
இவ்வாறு இளையராஜா கூறினார்.
பாரதிராஜா இயக்கத்தில் கே. பாக்யராஜ் -ரதி நடித்த "புதிய வார்ப்புகள்'' படத்துக்கு, புதுப்புது உத்திகளில் இளையராஜா இசை அமைத்தார்.
பாரதிராஜா இயக்கத்தில் கே. பாக்யராஜ் -ரதி நடித்த "புதிய வார்ப்புகள்'' படத்துக்கு, புதுப்புது உத்திகளில் இளையராஜா இசை அமைத்தார்.
தனது இசைப்பயணம் பற்றி இளையராஜா கூறியதாவது:-
"தேவராஜ் -மோகன் இயக்கிய "பூந்தளிர்'' படத்தில் ஒரு மலையாளப்பாடல் இடம் பெற்றது.
"ஞான் ஞான் பாடணும் ஊஞ்ஞால் ஆடணும்''- என்ற இந்தப்பாடலை எம்.ஜி.வல்லபன் எழுதியிருந்தார். இந்த பாடலில், ஒரு புதிய பாடகி பாடியிருப்பதும் எதிர்பாராமல் நடந்த விஷயம்.
முந்தின நாள் எனது இசையில் ஒரு பாட்டுக்கு பாட வந்த ஜேசுதாஸ், அவருடன் ஒரு பெண்ணையும் அழைத்து வந்திருந்தார். `இந்தப் பெண்ணை பாட வைத்து கேட்டுப்பாருங்கள்' என்று கேட்டுக்கொண்டார். கேட்டேன். குரல் பிடித்துப் போயிற்று. அடுத்த நாளே ரெக்கார்டிங்கில், அந்தப் பெண்ணை இந்த மலையாளப்பாடலை பாட வைத்தேன். அந்தப் பாடகிதான் ஜென்சி.
தேவராஜ் - மோகனின் "ரோசாப்பூ ரவிக்கைக்காரி'' நல்ல கதையம்சம், பாடல்களுடன்அமைந்த படம். கவிஞர் புலமைப்பித்தனின் அருமையான தமிழும் அழகும் கிராமியப் பாடலிலும் கொஞ்சி வந்து மெட்டுக்களில் விளையாடிய படம்.
"உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வெச்ச கிளி'', "என்ன பாட்டுப்பாட'', "வெத்தல வெத்தல வெத்தலயோ கொழுந்து வெத்தலயோ'', "என்னுள்ளில் எங்கோ'' முதலான பாடல்கள் ரசிகர்களின் விருப்பப்பாடல்களாக அமைந்தன.
பாரதிராஜா "புதிய வார்ப்புகள்'' என்று ஒரு படத்துக்கு பெயர் சூட்டினார். நான், பாரதி எல்லாம் ஜெயகாந்தனின் ரசிகர்கள் என்பதால் அவரது ஒரு கதைத் தலைப்பை இந்த படத்துக்கு வைத்து, படத்தின் கடைசி பிரேமில் தலைப்பிற்கு ஒரு அழுத்தம் கொடுக்கும் வகையில் கதையை உருவாக்கிருந்தார்.
இந்தப் படத்தின் கம்போசிங் பிரசிடெண்ட் ஓட்டலில் நடந்தது. ஒரே மூச்சில் படத்தை முடிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், பாடல்கள் எல்லாவற்றையும் முதலிலேயே பதிவு செய்து எடுத்துப்போனால்தான் அது சாத்தியம் என்றும் பாரதி சொன்னார்.
முதலில் பூஜைக்கு ஒரு பாடலை மட்டும் ரெக்கார்டு செய்வதற்காக இரவு பின்னணி இசை வேலை முடிந்து 9 மணிக்கு "ட்ïன்'' கம்போஸ் செய்தேன். கவியரசர் வந்து பாடலை எழுதிக்கொடுத்துவிட்டுப் போய்விட்டார். 10 1/2 மணிக்கு வீட்டுக்குப் போய்விட்டேன்.
அப்போது பாரதியிடம் இருந்து போன் வந்தது. "இந்தப் பாட்டை நாளைக்கு பதிவு செய்யவேண்டாம். ஒரு நல்ல டூயட் பாட்டுக்கு டிïன் போட்டு, அதை பதிவு செய்தால் நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன்'' என்றார்.
நான் பாரதியிடம், "யோவ்! என்ன விளையாடறியா? கவிஞர் வந்து பாட்டெல்லாம் எழுதிட்டுப் போயிட்டார். அவருகிட்ட புதுசா பாட்டு வேணாம்னு எப்படிய்யா கேட்கமுடியும்?'' என்றேன்.
பாரதியும் விடவில்லை. "அதெல்லாம் நான் சொல்லிக்கிறேன். வேறு பாட்டை நாளைக்கு காலையில் பூஜை ரெக்கார்டிங்கில் எடுக்கிறோம். சரியா?'' என்று கேட்டார்.
"சரி காலையில் பார்க்கலாம்'' என்று சொல்லி போனை வைத்தேன்.
மறுநாள் காலையில் ஜேசுதாசின் தரங்கிணி ஸ்டூடியோவில் காலை 7 மணிக்கு ஒரு டிïனை பாடினேன். அது நன்றாக இருக்கிறது என்று பாரதி `ஓ.கே' சொல்ல, அப்படியே இசைக்குழுவுக்கு அதற்கான இசையை கம்போஸ்செய்து எழுதிக்கொடுத்து விட்டேன்.
டிபன் முடித்துவிட்டு 9 மணிக்கு இசைக்குழுவுடன் பாடலுக்கான ஒத்திகையும் முடித்தேன்.
கவியரசர் கண்ணதாசன் சரியாக 10 மணிக்கு வந்தார். ஒரு ஹாலில் அமர்ந்தோம். சுற்றிலும் இசைக்குழுவினர் ஆங்காங்கே நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள். அவர்கள் கண்ணதாசன் பாடல் எழுதுவதை பார்த்திருக்க வாய்ப்பு இல்லை அல்லவா? அதனால்தான் அத்தனை ஆர்வம்.
கவியரசர் முதல் நாளே கதையை கேட்டுவிட்டதால் "டூயட்தானே?'' என்று மட்டும் என்னிடம் கேட்டார்.
"ஆமாண்ணே'' என்றேன்.
"டிïனை பாடு'' என்றார்.
"இன்னொரு முறை பாடு'' என்றார்.
மீண்டும் பாடினேன்.
உடனே கவியரசரிடம் இருந்து டிïனுக்கேற்ற வார்த்தைகள் வந்து விழுந்தன.
"வான் மேகங்களே! வாழ்த்துங்கள்! பாடுங்கள்! நான் இன்று கண்டுகொண்டேன் ராமனை'' என்று அவர் உடனே சொல்ல சுற்றி நின்ற இசைக்குழுவினர் ஆச்சரியத்தில் திறந்த வாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருந்தனர்.
அவர் சொன்னதை நான் டிïனோடு பாடிக்காட்டினேன். "கண்டுகொண்டேன் ராமனை'' என்று நான் பாடி முடித்தவுடன், இசையில் இருந்து இம்மியும் பிசகாது வார்த்தைகள் கவியரசரிடம் இருந்து விழுவதைக் கண்டு கைதட்டினார்கள்.
கவிஞருக்கோ ரசிகர்களை மொத்தமாக கூட்டி வைத்து அவர்கள் முன் பாடல் எழுதுவது போன்ற உணர்வு ஏற்பட்டது போலும். உற்சாகமாக அடுத்தடுத்த வார்த்தைகள் வெளிவந்தன.
மொத்தப்பாடலும் 20 நிமிடத்தில் முடிய அதை ஒரு 10 நிமிடத்தில் நகல் எடுத்துக்காட்ட, கவியரசர் சரி பார்த்தார். பாரதி "ஓ.கே'' சொன்னார்.
ஜானகியும், மலேசியா வாசுதேவனும் வந்தார்கள். பாடலை எழுதி, டிïனை கற்றுக்கொண்டு ஒத்திகை முடிந்து பாடல் பதிவானது.
அங்கேயே அப்போதே சுடச்சுட எடுத்த பாடல்தான். ஆனால் `பாஸ்ட் புட்' ரகம் அல்ல.
மற்ற பாடல்களை கம்போஸ் செய்ய ஓட்டலில் உட்கார்ந்தோம்.
ஊருக்குப் புதிதாய் வந்த ஆசிரியருக்கும், நாயகிக்கும் காதல் அரும்புகிறது. இப்போது பாடல் காட்சி. இந்தப்பாடல் எனக்கு வித்தியாசமாக வேண்டும் என பாரதி கேட்டார்.
பல மெட்டுக்கள் போட்டேன். ஒன்றும் பிடிக்கவில்லை. எனக்கே புதிதாக ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றிக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் வந்த மெட்டுக்களை எல்லாம் வாசித்தபடி பாடிக்கொண்டிருந்தேன். எனக்கும் எதுவும் புதிதாகத் தெரியவில்லை.
ஆர்மோனியத்தை மூடிவிட்டு "சரி வாய்யா! அப்படி பீச் பக்கம் போய் வரலாம்'' என்றார் பாரதி. பிரசிடென்ட் ஓட்டலில் இருந்து கொஞ்ச தூர நடையில் கடற்கரையை அடைந்தோம்.
கூட்டம் அவ்வளவாக இல்லை. வழக்கமாக நாங்கள் மாலை நேரங்களில் பொழுது போக்கிய அதே கடற்கரை.
சுண்டல் வாங்கி கொறித்தபடி கடற்கரையில் நடந்தோம். கடல் அலைகளில் கால்கள் நனைய நனைய நின்றோம். இப்படியே சிறிது நேரம் பீச்சில் பொழுது போக்கிவிட்டு திரும்பவும் ரூமுக்கு வந்தோம். அதுவரை பாடலைப் பற்றி பேசவும் இல்லை. அதுபற்றி சிந்திக்கவும் இல்லை.
இந்த இடைவெளியில் என்ன நடந்ததோ தெரியவில்லை. வந்து ஆர்மோனியத்தை தொட்டேன். அவ்வளவுதான். ஆரம்பம் முதல் கடைசி வரை `தம் தனனம்' என்று தொடங்கி முடியும் வரை அதே `தம்தனன'வில் பாடலின் முழு டிïனும் வந்துவிட்டது.
பாரதியைப் பார்க்கணுமே "சூப்பர்! பிரமாதம்'' என்றவர், ஆடாத குறைதான். அத்தனை உற்சாகம் அவருக்கு!
பாக்யராஜ் ஹீரோ ஆனது எப்படி?
"புதிய வார்ப்புகள்'' படத்திற்கு சரியான ஹீரோ கிடைக்கவில்லை. படப்பிடிப்புக்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. பாடல்கள் முடிந்ததும் ஷூட்டிங் போக ஏற்பாடாகி இருந்தது.
"ஹீரோ கிடைக்காவிட்டால் ஷூட்டிங் கிடையாதா?'' கேட்டேன், பாரதியிடம்.
"நாளை ஒருநாள் கடைசி. எப்படியாவது யாரையாவது நடிக்க வைப்பேன். படப்பிடிப்பு ஏற்கனவே முடிவு செய்த தேதியில் தொடங்கும்'' உறுதியாகவே சொன்னார், பாரதி.
மறுநாள் என்னைப் பார்த்தவர், "என் உதவி டைரக்டர் பாக்யராஜ்தான் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கப்போகிறார்'' என்றார்.
கொஞ்ச நேரத்தில் பாக்யராஜ் வந்தார். நான் அவரிடம், "என்ன பாக்யராஜ்! நீங்கள் நடித்தால் நாங்கள் என்ன செய்வோம்? எங்களைப் பார்த்தால் உங்களுக்கு பாவமாக இல்லையா?'' என்று கிண்டல் செய்தேன்.
அவரோ, "இல்லே சார்! டைரக்டர் சொல்லிவிட்டார். அதுக்கு மேல பேச முடியாது சார்'' என்று யதார்த்தமாக சொன்னார்.
அந்தப்படம் வெற்றி பெற்று பாக்யராஜ×ம் ஹீரோ - இயக்குனர் என்று வளர்ந்து விட்டார். பிற்காலத்தில் பாக்யராஜின் திறமை கண்டு, அன்றைக்கு நான் சொன்ன முட்டாள்தனமான கிண்டல் பேச்சை எண்ணி பலமுறை வருந்தியிருக்கிறேன். "ஒருவரின் தகுதியை எடைபோட நீ யார்? உனக்கென்ன தகுதி இருக்கிறது?'' என்று பலமுறை எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்.
தனது இசைப்பயணம் பற்றி இளையராஜா கூறியதாவது:-
"தேவராஜ் -மோகன் இயக்கிய "பூந்தளிர்'' படத்தில் ஒரு மலையாளப்பாடல் இடம் பெற்றது.
"ஞான் ஞான் பாடணும் ஊஞ்ஞால் ஆடணும்''- என்ற இந்தப்பாடலை எம்.ஜி.வல்லபன் எழுதியிருந்தார். இந்த பாடலில், ஒரு புதிய பாடகி பாடியிருப்பதும் எதிர்பாராமல் நடந்த விஷயம்.
முந்தின நாள் எனது இசையில் ஒரு பாட்டுக்கு பாட வந்த ஜேசுதாஸ், அவருடன் ஒரு பெண்ணையும் அழைத்து வந்திருந்தார். `இந்தப் பெண்ணை பாட வைத்து கேட்டுப்பாருங்கள்' என்று கேட்டுக்கொண்டார். கேட்டேன். குரல் பிடித்துப் போயிற்று. அடுத்த நாளே ரெக்கார்டிங்கில், அந்தப் பெண்ணை இந்த மலையாளப்பாடலை பாட வைத்தேன். அந்தப் பாடகிதான் ஜென்சி.
தேவராஜ் - மோகனின் "ரோசாப்பூ ரவிக்கைக்காரி'' நல்ல கதையம்சம், பாடல்களுடன்அமைந்த படம். கவிஞர் புலமைப்பித்தனின் அருமையான தமிழும் அழகும் கிராமியப் பாடலிலும் கொஞ்சி வந்து மெட்டுக்களில் விளையாடிய படம்.
"உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வெச்ச கிளி'', "என்ன பாட்டுப்பாட'', "வெத்தல வெத்தல வெத்தலயோ கொழுந்து வெத்தலயோ'', "என்னுள்ளில் எங்கோ'' முதலான பாடல்கள் ரசிகர்களின் விருப்பப்பாடல்களாக அமைந்தன.
பாரதிராஜா "புதிய வார்ப்புகள்'' என்று ஒரு படத்துக்கு பெயர் சூட்டினார். நான், பாரதி எல்லாம் ஜெயகாந்தனின் ரசிகர்கள் என்பதால் அவரது ஒரு கதைத் தலைப்பை இந்த படத்துக்கு வைத்து, படத்தின் கடைசி பிரேமில் தலைப்பிற்கு ஒரு அழுத்தம் கொடுக்கும் வகையில் கதையை உருவாக்கிருந்தார்.
இந்தப் படத்தின் கம்போசிங் பிரசிடெண்ட் ஓட்டலில் நடந்தது. ஒரே மூச்சில் படத்தை முடிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், பாடல்கள் எல்லாவற்றையும் முதலிலேயே பதிவு செய்து எடுத்துப்போனால்தான் அது சாத்தியம் என்றும் பாரதி சொன்னார்.
முதலில் பூஜைக்கு ஒரு பாடலை மட்டும் ரெக்கார்டு செய்வதற்காக இரவு பின்னணி இசை வேலை முடிந்து 9 மணிக்கு "ட்ïன்'' கம்போஸ் செய்தேன். கவியரசர் வந்து பாடலை எழுதிக்கொடுத்துவிட்டுப் போய்விட்டார். 10 1/2 மணிக்கு வீட்டுக்குப் போய்விட்டேன்.
அப்போது பாரதியிடம் இருந்து போன் வந்தது. "இந்தப் பாட்டை நாளைக்கு பதிவு செய்யவேண்டாம். ஒரு நல்ல டூயட் பாட்டுக்கு டிïன் போட்டு, அதை பதிவு செய்தால் நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன்'' என்றார்.
நான் பாரதியிடம், "யோவ்! என்ன விளையாடறியா? கவிஞர் வந்து பாட்டெல்லாம் எழுதிட்டுப் போயிட்டார். அவருகிட்ட புதுசா பாட்டு வேணாம்னு எப்படிய்யா கேட்கமுடியும்?'' என்றேன்.
பாரதியும் விடவில்லை. "அதெல்லாம் நான் சொல்லிக்கிறேன். வேறு பாட்டை நாளைக்கு காலையில் பூஜை ரெக்கார்டிங்கில் எடுக்கிறோம். சரியா?'' என்று கேட்டார்.
"சரி காலையில் பார்க்கலாம்'' என்று சொல்லி போனை வைத்தேன்.
மறுநாள் காலையில் ஜேசுதாசின் தரங்கிணி ஸ்டூடியோவில் காலை 7 மணிக்கு ஒரு டிïனை பாடினேன். அது நன்றாக இருக்கிறது என்று பாரதி `ஓ.கே' சொல்ல, அப்படியே இசைக்குழுவுக்கு அதற்கான இசையை கம்போஸ்செய்து எழுதிக்கொடுத்து விட்டேன்.
டிபன் முடித்துவிட்டு 9 மணிக்கு இசைக்குழுவுடன் பாடலுக்கான ஒத்திகையும் முடித்தேன்.
கவியரசர் கண்ணதாசன் சரியாக 10 மணிக்கு வந்தார். ஒரு ஹாலில் அமர்ந்தோம். சுற்றிலும் இசைக்குழுவினர் ஆங்காங்கே நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள். அவர்கள் கண்ணதாசன் பாடல் எழுதுவதை பார்த்திருக்க வாய்ப்பு இல்லை அல்லவா? அதனால்தான் அத்தனை ஆர்வம்.
கவியரசர் முதல் நாளே கதையை கேட்டுவிட்டதால் "டூயட்தானே?'' என்று மட்டும் என்னிடம் கேட்டார்.
"ஆமாண்ணே'' என்றேன்.
"டிïனை பாடு'' என்றார்.
"இன்னொரு முறை பாடு'' என்றார்.
மீண்டும் பாடினேன்.
உடனே கவியரசரிடம் இருந்து டிïனுக்கேற்ற வார்த்தைகள் வந்து விழுந்தன.
"வான் மேகங்களே! வாழ்த்துங்கள்! பாடுங்கள்! நான் இன்று கண்டுகொண்டேன் ராமனை'' என்று அவர் உடனே சொல்ல சுற்றி நின்ற இசைக்குழுவினர் ஆச்சரியத்தில் திறந்த வாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருந்தனர்.
அவர் சொன்னதை நான் டிïனோடு பாடிக்காட்டினேன். "கண்டுகொண்டேன் ராமனை'' என்று நான் பாடி முடித்தவுடன், இசையில் இருந்து இம்மியும் பிசகாது வார்த்தைகள் கவியரசரிடம் இருந்து விழுவதைக் கண்டு கைதட்டினார்கள்.
கவிஞருக்கோ ரசிகர்களை மொத்தமாக கூட்டி வைத்து அவர்கள் முன் பாடல் எழுதுவது போன்ற உணர்வு ஏற்பட்டது போலும். உற்சாகமாக அடுத்தடுத்த வார்த்தைகள் வெளிவந்தன.
மொத்தப்பாடலும் 20 நிமிடத்தில் முடிய அதை ஒரு 10 நிமிடத்தில் நகல் எடுத்துக்காட்ட, கவியரசர் சரி பார்த்தார். பாரதி "ஓ.கே'' சொன்னார்.
ஜானகியும், மலேசியா வாசுதேவனும் வந்தார்கள். பாடலை எழுதி, டிïனை கற்றுக்கொண்டு ஒத்திகை முடிந்து பாடல் பதிவானது.
அங்கேயே அப்போதே சுடச்சுட எடுத்த பாடல்தான். ஆனால் `பாஸ்ட் புட்' ரகம் அல்ல.
மற்ற பாடல்களை கம்போஸ் செய்ய ஓட்டலில் உட்கார்ந்தோம்.
ஊருக்குப் புதிதாய் வந்த ஆசிரியருக்கும், நாயகிக்கும் காதல் அரும்புகிறது. இப்போது பாடல் காட்சி. இந்தப்பாடல் எனக்கு வித்தியாசமாக வேண்டும் என பாரதி கேட்டார்.
பல மெட்டுக்கள் போட்டேன். ஒன்றும் பிடிக்கவில்லை. எனக்கே புதிதாக ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றிக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் வந்த மெட்டுக்களை எல்லாம் வாசித்தபடி பாடிக்கொண்டிருந்தேன். எனக்கும் எதுவும் புதிதாகத் தெரியவில்லை.
ஆர்மோனியத்தை மூடிவிட்டு "சரி வாய்யா! அப்படி பீச் பக்கம் போய் வரலாம்'' என்றார் பாரதி. பிரசிடென்ட் ஓட்டலில் இருந்து கொஞ்ச தூர நடையில் கடற்கரையை அடைந்தோம்.
கூட்டம் அவ்வளவாக இல்லை. வழக்கமாக நாங்கள் மாலை நேரங்களில் பொழுது போக்கிய அதே கடற்கரை.
சுண்டல் வாங்கி கொறித்தபடி கடற்கரையில் நடந்தோம். கடல் அலைகளில் கால்கள் நனைய நனைய நின்றோம். இப்படியே சிறிது நேரம் பீச்சில் பொழுது போக்கிவிட்டு திரும்பவும் ரூமுக்கு வந்தோம். அதுவரை பாடலைப் பற்றி பேசவும் இல்லை. அதுபற்றி சிந்திக்கவும் இல்லை.
இந்த இடைவெளியில் என்ன நடந்ததோ தெரியவில்லை. வந்து ஆர்மோனியத்தை தொட்டேன். அவ்வளவுதான். ஆரம்பம் முதல் கடைசி வரை `தம் தனனம்' என்று தொடங்கி முடியும் வரை அதே `தம்தனன'வில் பாடலின் முழு டிïனும் வந்துவிட்டது.
பாரதியைப் பார்க்கணுமே "சூப்பர்! பிரமாதம்'' என்றவர், ஆடாத குறைதான். அத்தனை உற்சாகம் அவருக்கு!
பாக்யராஜ் ஹீரோ ஆனது எப்படி?
"புதிய வார்ப்புகள்'' படத்திற்கு சரியான ஹீரோ கிடைக்கவில்லை. படப்பிடிப்புக்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. பாடல்கள் முடிந்ததும் ஷூட்டிங் போக ஏற்பாடாகி இருந்தது.
"ஹீரோ கிடைக்காவிட்டால் ஷூட்டிங் கிடையாதா?'' கேட்டேன், பாரதியிடம்.
"நாளை ஒருநாள் கடைசி. எப்படியாவது யாரையாவது நடிக்க வைப்பேன். படப்பிடிப்பு ஏற்கனவே முடிவு செய்த தேதியில் தொடங்கும்'' உறுதியாகவே சொன்னார், பாரதி.
மறுநாள் என்னைப் பார்த்தவர், "என் உதவி டைரக்டர் பாக்யராஜ்தான் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கப்போகிறார்'' என்றார்.
கொஞ்ச நேரத்தில் பாக்யராஜ் வந்தார். நான் அவரிடம், "என்ன பாக்யராஜ்! நீங்கள் நடித்தால் நாங்கள் என்ன செய்வோம்? எங்களைப் பார்த்தால் உங்களுக்கு பாவமாக இல்லையா?'' என்று கிண்டல் செய்தேன்.
அவரோ, "இல்லே சார்! டைரக்டர் சொல்லிவிட்டார். அதுக்கு மேல பேச முடியாது சார்'' என்று யதார்த்தமாக சொன்னார்.
அந்தப்படம் வெற்றி பெற்று பாக்யராஜ×ம் ஹீரோ - இயக்குனர் என்று வளர்ந்து விட்டார். பிற்காலத்தில் பாக்யராஜின் திறமை கண்டு, அன்றைக்கு நான் சொன்ன முட்டாள்தனமான கிண்டல் பேச்சை எண்ணி பலமுறை வருந்தியிருக்கிறேன். "ஒருவரின் தகுதியை எடைபோட நீ யார்? உனக்கென்ன தகுதி இருக்கிறது?'' என்று பலமுறை எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்.
"கவரிமான்'' படத்தில், கீர்த்தனை ஒன்றுக்கு புதிய முறையில் இசை அமைத்தார், இளையராஜா. பாடுவதற்கு கடினமான அந்தப்பாடலுக்கு மிகப் பொருத்தமாக வாயசைத்தார், சிவாஜிகணேசன். அதைக்கண்டு இளையராஜா வியந்து போனார்.
"கவரிமான்'' படத்தில், கீர்த்தனை ஒன்றுக்கு புதிய முறையில் இசை அமைத்தார், இளையராஜா. பாடுவதற்கு கடினமான அந்தப்பாடலுக்கு மிகப் பொருத்தமாக வாயசைத்தார், சிவாஜிகணேசன். அதைக்கண்டு இளையராஜா வியந்து போனார்.
இசைப்பயணம் பற்றி இளையராஜா கூறியதாவது:-
"இளமை ஊஞ்சலாடுகிறது'' படத்தைத் தொடர்ந்து மீண்டும் டைரக்டர் ஸ்ரீதரின் "அழகே உன்னை ஆராதிக்கிறேன்'' படத்துக்கும் இசை வாய்ப்பு வந்தது. இந்தப் படமும் ஹிட்டாகி பாடல்களும் ஹிட்டானதில் மகிழ்ச்சி.
எஸ்.பி.முத்துராமன் இயக்கிய "கடவுள் அமைத்த மேடை''படத்தில்தான், ஒரு பரிசோதனை முயற்சி செய்யவேண்டும் என்று தோன்றியது.
அதாவது கர்நாடக சங்கீத ராகங்களை எடுத்துக்கொண்டு, அதன் ஆழம் குறையாமல் கிராமியப் பாணியின் சந்தங்களை மெட் டாக அமைத்து, பாடும்போது அதன் இரண்டு வேறுபட்ட தனிப்பட்ட தன்மைகளை இணைத்துப் பாடவைக்கலாமே என்று தோன்றியது.
அதை உடனே செய்யலாம் என்ற எண்ணத்தில் டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் சொன்ன ஒரு டூயட்டிற்கு ஹம்சத்வனி ராகத்தில் கிராமியத்தனமான மெட்டமைத்தேன். பாடலை வாலி எழுதினார். "மயிலே மயிலே உன் தோகை எங்கே?'' என்ற அந்தப் பாடல்தான் இந்தப் பரிசோதனை முயற்சியில் உருவான பாடல்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், ஜென்சியும் இந்தப் பாடலை பாடியிருந்தார்கள்.
இதே படத்தில்தான், பி.பி.சீனிவாசும் முதன் முதலாக என் இசைக்கு பாடினார். அதுவும் ஒரு சிறிய கஜல் போன்ற பாடல். "தென்றலே நீ பேசு'' என்பது அதன் பல்லவி.
பஞ்சு சார் கமல், ரஜினி இரண்டு பேரையும் தனித்தனியாக போட்டு படம் எடுக்க முடிவு செய்தார். அப்போது கமல் - ரஜினி இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை என்று முடிவெடுத்திருந்த நேரம்.
கமலை வைத்து "கல்யாணராமன்'', ரஜினியை வைத்து "ஆறில் இருந்து அறுபதுவரை'' ஆகிய படங்களை எடுத்தார்.
இரண்டுமே வெற்றி பெற்றன.
கல்யாணராமன் படத்தில் `ஆஹா வந்துருச்சு' பாடலும், அதற்கு கமல் ஆடிய வித்தியாசமான நடனமும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தன.
பஞ்சு சார் அடுத்து "கவரிமான்'' என்ற படத்தில் நடிக்க சிவாஜியை ஒப்பந்தம் செய்தார். நடிகர் திலகத்தின் பாத்திரப் படைப்பை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. (மனைவி சோரம் போகிற காட்சியை பார்க்கும் கணவனின் கேரக்டர்)
என் இசையில் முதன் முதலில் ஒரு தியாகராஜ கீர்த்தனை இடம் பெற்றது இந்தப் படத்தில்தான். "ப்ரோவ பாரமா?'' என்ற கீர்த்தனையை ஜேசுதாஸ் பாட, டி.வி.கிருஷ்ணன் அவர்களின் வயலினும், டி.வி.கோபாலகிருஷ்ணனின் மிருதங்கமும் இணைந்தன.
சிவாஜி இந்தப் பாட்டுக்கு வாயசைத்ததை கண்டு வியந்து போனேன்.
ஆரம்பத்தில் ஜேசுதாஸ் ராகம்பாடி, தாளம் ஏதும் இல்லாமல் திடீரென்று `ப்ரோவபாரமா' என்று தொடங்குமாறு பதிவு ஆகியிருந்தது.
ராகம்பாடி, `ப்ரோவ பாரமா' தொடங்குவதற்கு இடையில் தாளத்தில் ஏதாவது வாசித்திருந்தால் நடிப்பவர்களுக்கு பாடல் தொடங்கும் இடம் சரியாகத் தெரிந்து வாயசைக்கலாம்.
ராகம்பாட, வெறும் தம்புரா மட்டும் போய்க்கொண்டிருக்க, அது எவ்வளவு நேரம் போகிறது என்று கண்டுபிடித்து, பாடல் ஜேசுதாஸ் குரலில் வரும் அந்த நொடியை எப்படியோ கண்டுபிடித்து சரியாக வாயசைத்தார்.
இதைப் பாராட்டி, அண்ணன் சிவாஜியிடம், "எப்படிச் செய்கிறீர்கள்?'' என்று கேட்டேன்.
"என்னை என்னடா நினைச்சிட்டே? சும்மா ஏனோதானோன்னு சினிமாவுக்கு வந்தவன்னு நினைச்சியா? இதெல்லாம் முடியாட்டா ஏண்டா ஒருத்தன் நடிகனா இருக்கணும்?'' என்று கேட்டார் சிவாஜி.
"நடிகர் திலகம்'' என்று சும்மாவா பட்டம் கொடுத்தார்கள்?
"லட்சுமி'' படத்தில் கிராமிய சந்தத்தை வேகமாக அமைத்துப் பாடிய பாடல் "தென்ன மரத்துல தென்றலடிக்குது நந்தவனக் கிளியே.''
நானும் பி.சுசீலாவும் பாடினோம். இந்த வகையில் இது சுசீலா அவர்களுடன் நான் சேர்ந்து பாடிய முதல் பாடல்.
பண்ணைபுரத்தில் உள்ள எங்கள் வீட்டில், தம்புராவுடன் சுசீலா இருக்கும் படத்தை பிரேம் போட்டு நான் மாட்டி வைத்திருந்தது, இந்தப் பாடலை அவருடன் பாடும்போது நினைவுக்கு வந்தது.
கோவை செழியன் தயாரிப்பில் வந்த "முதல் இரவு'' படத்தில், "மஞ்சள் நிலாவுக்கு இன்று முதல் இரவு'' என்ற பாடல் பிரபலமானது. டைரக்டர் ஸ்ரீதர் இந்தப் பாடலை கேட்டு என்னை மிகவும் பாராட்டினார்.
பாரதிராஜா டைரக்ஷனில் "நிறம் மாறாத பூக்கள்'' படத்துக்கு பாடல் பதிவுடன் பூஜை.
ஒரு ஓட்டலில் கதையை பாக்யராஜை சொல்லச் சொன்னார், பாரதி. கோர்வையாக,அதே நேரம் நகைச்சுவை கலந்து நன்றா கவே கதை சொன்ன பாக்யராஜை பாராட்டினேன். பாரதியும், "அதனால்தான் அவனையே சொல்லச்சொன் னேன். நல்ல திறமைசாலி'' என்று பாராட்டினார்.
இடைவேளைக்குப்பிறகு சில மாற்றங்கள் இருக்கலாம்.
பூஜைக்கு இரு நாயகியரும் கதாநாயகனும் பாடுகிற மாதிரி ஒரு பாடலை எடுத்துக் கொள்ளலாம் என்பதை சொல்லிவிட்டார்கள்.
தயாரிப்பாளர் வீட்டிலேயே கம்போசிங் நடந்தது. அப்போது அவர் தயாரிப்பில் வெளிவந்த "வருவான் வடிவேலன்'' படம் நன்றாக ஓடிக்கொண்டிருந்தது.
கவியரசர் கண்ணதாசன் அதுவரை காலை 10 மணிக்கு முன்னதாக பாட்டெழுத வந்தது கிடையாது. எனக்கு 9 மணிக்கு பின்னணி இசை வேலை இருந்ததால் கவியரசர் முதன் முதலாக எனக்காக காலை 71/2 மணிக்கு பாட்டெழுத வந்துவிட்டார்.
கதையைச் சொல்லி டிïனை வாசித்த உடனே,
"ஆயிரம் மலர்களே மலருங்கள்!
அமுத கீதம் பாடுங்கள் பாடுங்கள்''
என்று எழுதினார். பாரதி உள்பட அனைவருக்கும் பிடித்திருந்தது. பாரதிராஜா இயக்கிய இந்த நான்காவது படமும் நன்றாக ஓடியது.
"ஊர்வசி நீனே நன்ன ப்ரேயசி'' என்ற கன்னடப்படம் தெலுங்கிலுமாக இரு மொழிப்படமாக வந்தது. இதன் மலையாளம் டைரக்டர் ஐ.வி.சசி இயக்கிய "பகலில் ஓர் இரவு'' படம். ஸ்ரீதேவி நடித்திருந்தார்.
பாம்குரோவ் ஓட்டலில் கம்போசிங் நடந்தது கவியரசர் "இளமையெனும் பூங்காற்று'' என்று எழுதினார்.
இங்கே ஒன்றைச் சொல்லவேண்டும். கவியரசர் - எம்.எஸ்.விஸ்வநாதன் இணைந்து செய்த பாடல்கள் எல்லாம் மிகவும் நல்ல லட்சண அமைப்புடன் இருக்கும்.
முதல் வரி தொடங்க, அதே சந்தத்தில் குறைந்தது நான்கு அடிகளாவது வரும்.
உதாரணமாக,
"எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டுச் சென்றானடி
வேறு பட்டு நின்றானடி''
"கண்ணன் என்னும் மன்னன்
பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய்
மாறும் மெல்ல மெல்ல''
- இப்படி எந்தப் பாடலை எடுத்தாலும் ஒரு ஒத்த அழகுடன் இருக்கும்.
மாற்றம்
இதை நான் மாற்ற எண்ணினேன்
ஒரு அடிபோல் இன்னொரு அடி வராமல் போனாலும், அழகு கெடாமல் இருக்க வேண்டும் என்றும், `இங்கே நான் நிறுத்த வேண்டும் - இங்கே நீட்ட வேண்டும்' என்ற வரைமுறைகளைத் தாண்ட வேண்டுமென்றும் என்னுடைய மெட்டுக்களை அமைத்தேன். அதிலும் ஒரு அழகு இழையோடும் விதமாக கவியரசர் எழுதிவிட்டார்.
"இளமை எனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே நாதம்''
இசையோடு இந்த வரிகள் கொஞ்சிக் குழையும் என்பது அவருக்கும் தெரிந்தே இருந்தது.
இதில் இன்னும் ஒரு பாடல் பரிசோதனை முயற்சியாக, "தாம்த தீம்த'' என்று தொடங்கும் பாடலில், ஆண் - பெண் கோரசை வைத்தே, இசைக்குழு இல்லாமல், பாடலுக்கு இடையில் வரும் இசையை கோரசே இசைப்பது போல அமைத்திருந்தேன்.
நன்றாக இருந்தாலும் வெளியே தெரியாமல் போன காரணம் தெரியவில்லை.
`பஞ்ச பூதாலு' என்ற தெலுங்குப்படம் தமிழில் சிவாஜி நடிக்க "பட்டாக்கத்தி பைரவன்' ஆனது. இந்தப் படத்தை நினைத்தாலே "எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் பாடல்தான் மனதில் ஓடிவரும்.
என் முதல் படமான "அன்னக்கிளி''யின் கதையை எழுதிய செல்வராஜ், முதன் முதலில் "பொண்ணு ஊருக்குப் புதுசு'' என்ற படத்தை டைரக்ட் செய்தார். இதில் எல்லாப் பாடல்களுமே என்றைக்கும் கேட்க சுகமானவை.
"ஓரம்போ''
"சாமக்கோழி கூவுதம்மா''
"ஒனக்கெனத்தானே இந்நேரமா''
- போன்ற படத்தின் எல்லாப் பாடல்களையும் அமர்தான் எழுதினான்.
இசைப்பயணம் பற்றி இளையராஜா கூறியதாவது:-
"இளமை ஊஞ்சலாடுகிறது'' படத்தைத் தொடர்ந்து மீண்டும் டைரக்டர் ஸ்ரீதரின் "அழகே உன்னை ஆராதிக்கிறேன்'' படத்துக்கும் இசை வாய்ப்பு வந்தது. இந்தப் படமும் ஹிட்டாகி பாடல்களும் ஹிட்டானதில் மகிழ்ச்சி.
எஸ்.பி.முத்துராமன் இயக்கிய "கடவுள் அமைத்த மேடை''படத்தில்தான், ஒரு பரிசோதனை முயற்சி செய்யவேண்டும் என்று தோன்றியது.
அதாவது கர்நாடக சங்கீத ராகங்களை எடுத்துக்கொண்டு, அதன் ஆழம் குறையாமல் கிராமியப் பாணியின் சந்தங்களை மெட் டாக அமைத்து, பாடும்போது அதன் இரண்டு வேறுபட்ட தனிப்பட்ட தன்மைகளை இணைத்துப் பாடவைக்கலாமே என்று தோன்றியது.
அதை உடனே செய்யலாம் என்ற எண்ணத்தில் டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் சொன்ன ஒரு டூயட்டிற்கு ஹம்சத்வனி ராகத்தில் கிராமியத்தனமான மெட்டமைத்தேன். பாடலை வாலி எழுதினார். "மயிலே மயிலே உன் தோகை எங்கே?'' என்ற அந்தப் பாடல்தான் இந்தப் பரிசோதனை முயற்சியில் உருவான பாடல்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், ஜென்சியும் இந்தப் பாடலை பாடியிருந்தார்கள்.
இதே படத்தில்தான், பி.பி.சீனிவாசும் முதன் முதலாக என் இசைக்கு பாடினார். அதுவும் ஒரு சிறிய கஜல் போன்ற பாடல். "தென்றலே நீ பேசு'' என்பது அதன் பல்லவி.
பஞ்சு சார் கமல், ரஜினி இரண்டு பேரையும் தனித்தனியாக போட்டு படம் எடுக்க முடிவு செய்தார். அப்போது கமல் - ரஜினி இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை என்று முடிவெடுத்திருந்த நேரம்.
கமலை வைத்து "கல்யாணராமன்'', ரஜினியை வைத்து "ஆறில் இருந்து அறுபதுவரை'' ஆகிய படங்களை எடுத்தார்.
இரண்டுமே வெற்றி பெற்றன.
கல்யாணராமன் படத்தில் `ஆஹா வந்துருச்சு' பாடலும், அதற்கு கமல் ஆடிய வித்தியாசமான நடனமும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தன.
பஞ்சு சார் அடுத்து "கவரிமான்'' என்ற படத்தில் நடிக்க சிவாஜியை ஒப்பந்தம் செய்தார். நடிகர் திலகத்தின் பாத்திரப் படைப்பை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. (மனைவி சோரம் போகிற காட்சியை பார்க்கும் கணவனின் கேரக்டர்)
என் இசையில் முதன் முதலில் ஒரு தியாகராஜ கீர்த்தனை இடம் பெற்றது இந்தப் படத்தில்தான். "ப்ரோவ பாரமா?'' என்ற கீர்த்தனையை ஜேசுதாஸ் பாட, டி.வி.கிருஷ்ணன் அவர்களின் வயலினும், டி.வி.கோபாலகிருஷ்ணனின் மிருதங்கமும் இணைந்தன.
சிவாஜி இந்தப் பாட்டுக்கு வாயசைத்ததை கண்டு வியந்து போனேன்.
ஆரம்பத்தில் ஜேசுதாஸ் ராகம்பாடி, தாளம் ஏதும் இல்லாமல் திடீரென்று `ப்ரோவபாரமா' என்று தொடங்குமாறு பதிவு ஆகியிருந்தது.
ராகம்பாடி, `ப்ரோவ பாரமா' தொடங்குவதற்கு இடையில் தாளத்தில் ஏதாவது வாசித்திருந்தால் நடிப்பவர்களுக்கு பாடல் தொடங்கும் இடம் சரியாகத் தெரிந்து வாயசைக்கலாம்.
ராகம்பாட, வெறும் தம்புரா மட்டும் போய்க்கொண்டிருக்க, அது எவ்வளவு நேரம் போகிறது என்று கண்டுபிடித்து, பாடல் ஜேசுதாஸ் குரலில் வரும் அந்த நொடியை எப்படியோ கண்டுபிடித்து சரியாக வாயசைத்தார்.
இதைப் பாராட்டி, அண்ணன் சிவாஜியிடம், "எப்படிச் செய்கிறீர்கள்?'' என்று கேட்டேன்.
"என்னை என்னடா நினைச்சிட்டே? சும்மா ஏனோதானோன்னு சினிமாவுக்கு வந்தவன்னு நினைச்சியா? இதெல்லாம் முடியாட்டா ஏண்டா ஒருத்தன் நடிகனா இருக்கணும்?'' என்று கேட்டார் சிவாஜி.
"நடிகர் திலகம்'' என்று சும்மாவா பட்டம் கொடுத்தார்கள்?
"லட்சுமி'' படத்தில் கிராமிய சந்தத்தை வேகமாக அமைத்துப் பாடிய பாடல் "தென்ன மரத்துல தென்றலடிக்குது நந்தவனக் கிளியே.''
நானும் பி.சுசீலாவும் பாடினோம். இந்த வகையில் இது சுசீலா அவர்களுடன் நான் சேர்ந்து பாடிய முதல் பாடல்.
பண்ணைபுரத்தில் உள்ள எங்கள் வீட்டில், தம்புராவுடன் சுசீலா இருக்கும் படத்தை பிரேம் போட்டு நான் மாட்டி வைத்திருந்தது, இந்தப் பாடலை அவருடன் பாடும்போது நினைவுக்கு வந்தது.
கோவை செழியன் தயாரிப்பில் வந்த "முதல் இரவு'' படத்தில், "மஞ்சள் நிலாவுக்கு இன்று முதல் இரவு'' என்ற பாடல் பிரபலமானது. டைரக்டர் ஸ்ரீதர் இந்தப் பாடலை கேட்டு என்னை மிகவும் பாராட்டினார்.
பாரதிராஜா டைரக்ஷனில் "நிறம் மாறாத பூக்கள்'' படத்துக்கு பாடல் பதிவுடன் பூஜை.
ஒரு ஓட்டலில் கதையை பாக்யராஜை சொல்லச் சொன்னார், பாரதி. கோர்வையாக,அதே நேரம் நகைச்சுவை கலந்து நன்றா கவே கதை சொன்ன பாக்யராஜை பாராட்டினேன். பாரதியும், "அதனால்தான் அவனையே சொல்லச்சொன் னேன். நல்ல திறமைசாலி'' என்று பாராட்டினார்.
இடைவேளைக்குப்பிறகு சில மாற்றங்கள் இருக்கலாம்.
பூஜைக்கு இரு நாயகியரும் கதாநாயகனும் பாடுகிற மாதிரி ஒரு பாடலை எடுத்துக் கொள்ளலாம் என்பதை சொல்லிவிட்டார்கள்.
தயாரிப்பாளர் வீட்டிலேயே கம்போசிங் நடந்தது. அப்போது அவர் தயாரிப்பில் வெளிவந்த "வருவான் வடிவேலன்'' படம் நன்றாக ஓடிக்கொண்டிருந்தது.
கவியரசர் கண்ணதாசன் அதுவரை காலை 10 மணிக்கு முன்னதாக பாட்டெழுத வந்தது கிடையாது. எனக்கு 9 மணிக்கு பின்னணி இசை வேலை இருந்ததால் கவியரசர் முதன் முதலாக எனக்காக காலை 71/2 மணிக்கு பாட்டெழுத வந்துவிட்டார்.
கதையைச் சொல்லி டிïனை வாசித்த உடனே,
"ஆயிரம் மலர்களே மலருங்கள்!
அமுத கீதம் பாடுங்கள் பாடுங்கள்''
என்று எழுதினார். பாரதி உள்பட அனைவருக்கும் பிடித்திருந்தது. பாரதிராஜா இயக்கிய இந்த நான்காவது படமும் நன்றாக ஓடியது.
"ஊர்வசி நீனே நன்ன ப்ரேயசி'' என்ற கன்னடப்படம் தெலுங்கிலுமாக இரு மொழிப்படமாக வந்தது. இதன் மலையாளம் டைரக்டர் ஐ.வி.சசி இயக்கிய "பகலில் ஓர் இரவு'' படம். ஸ்ரீதேவி நடித்திருந்தார்.
பாம்குரோவ் ஓட்டலில் கம்போசிங் நடந்தது கவியரசர் "இளமையெனும் பூங்காற்று'' என்று எழுதினார்.
இங்கே ஒன்றைச் சொல்லவேண்டும். கவியரசர் - எம்.எஸ்.விஸ்வநாதன் இணைந்து செய்த பாடல்கள் எல்லாம் மிகவும் நல்ல லட்சண அமைப்புடன் இருக்கும்.
முதல் வரி தொடங்க, அதே சந்தத்தில் குறைந்தது நான்கு அடிகளாவது வரும்.
உதாரணமாக,
"எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டுச் சென்றானடி
வேறு பட்டு நின்றானடி''
"கண்ணன் என்னும் மன்னன்
பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய்
மாறும் மெல்ல மெல்ல''
- இப்படி எந்தப் பாடலை எடுத்தாலும் ஒரு ஒத்த அழகுடன் இருக்கும்.
மாற்றம்
இதை நான் மாற்ற எண்ணினேன்
ஒரு அடிபோல் இன்னொரு அடி வராமல் போனாலும், அழகு கெடாமல் இருக்க வேண்டும் என்றும், `இங்கே நான் நிறுத்த வேண்டும் - இங்கே நீட்ட வேண்டும்' என்ற வரைமுறைகளைத் தாண்ட வேண்டுமென்றும் என்னுடைய மெட்டுக்களை அமைத்தேன். அதிலும் ஒரு அழகு இழையோடும் விதமாக கவியரசர் எழுதிவிட்டார்.
"இளமை எனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே நாதம்''
இசையோடு இந்த வரிகள் கொஞ்சிக் குழையும் என்பது அவருக்கும் தெரிந்தே இருந்தது.
இதில் இன்னும் ஒரு பாடல் பரிசோதனை முயற்சியாக, "தாம்த தீம்த'' என்று தொடங்கும் பாடலில், ஆண் - பெண் கோரசை வைத்தே, இசைக்குழு இல்லாமல், பாடலுக்கு இடையில் வரும் இசையை கோரசே இசைப்பது போல அமைத்திருந்தேன்.
நன்றாக இருந்தாலும் வெளியே தெரியாமல் போன காரணம் தெரியவில்லை.
`பஞ்ச பூதாலு' என்ற தெலுங்குப்படம் தமிழில் சிவாஜி நடிக்க "பட்டாக்கத்தி பைரவன்' ஆனது. இந்தப் படத்தை நினைத்தாலே "எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் பாடல்தான் மனதில் ஓடிவரும்.
என் முதல் படமான "அன்னக்கிளி''யின் கதையை எழுதிய செல்வராஜ், முதன் முதலில் "பொண்ணு ஊருக்குப் புதுசு'' என்ற படத்தை டைரக்ட் செய்தார். இதில் எல்லாப் பாடல்களுமே என்றைக்கும் கேட்க சுகமானவை.
"ஓரம்போ''
"சாமக்கோழி கூவுதம்மா''
"ஒனக்கெனத்தானே இந்நேரமா''
- போன்ற படத்தின் எல்லாப் பாடல்களையும் அமர்தான் எழுதினான்.






