என் மலர்
சினிமா

இளையராஜா இசை அமைப்பில் ஓ.ஏ.கே. தேவர் நாடகம் திருச்சியில் அரங்கேற்றம்
திரைப்பட நடிகர் ஓ.ஏ.கே. தேவரின் "மாசற்ற மனம்'' என்ற நாடகத்துக்கு இளையராஜா இசை அமைத்தார். இந்த நாடகம் திருச்சியில் அரங்கேறியது
திரைப்பட நடிகர் ஓ.ஏ.கே. தேவரின் "மாசற்ற மனம்'' என்ற நாடகத்துக்கு இளையராஜா இசை அமைத்தார். இந்த நாடகம் திருச்சியில் அரங்கேறியது.
பொன்மலையில் நடந்த தனது கச்சேரியை எம்.எஸ்.விஸ்வநாதன் கேட்டு ரசித்தார், பாராட்டினார் என்ற தகவல், இளையராஜாவுக்கு உற்சாகத்தை அளித்தது.
அவர், எம்.எஸ்.விஸ்வநாதனுக்குக் கடிதம் எழுதினார். "நான் விரைவில் சென்னைக்கு வருகிறேன். அப்போது உங்களை சந்திக்கிறேன். நீங்கள் என்னை உங்கள் பூஜை அறைக்கு அழைத்துச்சென்று, ஆசீர்வதிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.
குறிப்பிட்டபடி ஒருநாள் சென்னை சென்று காலை 8-30 மணிக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் வீட்டுக்குச் சென்றார்.
வீட்டில் இருந்தவர்கள், "புறப்பட்டுக் கொண்டிருக்கிறார். விரைவில் வந்துவிடுவார்கள்'' என்றார்கள்.
எம்.எஸ்.வி. வருகையை எதிர்பார்த்து இளையராஜா காத்துக் கொண்டிருந்தார்.
சரியாக 9 மணிக்கு விஸ்வநாதன் வெளியே வந்தார். நெற்றியில் விபூதி - குங்குமம் பளிச்சிட, புன்சிரிப்புடன் வந்தார்.
அவரை பார்த்த இளையராஜா, கைகூப்பி வணங்கினார். விஸ்வநாதனும் பதிலுக்கு வணங்கினார்.
அதன்பின், என்ன பேசுவது என்று தெரியாமல் தயக்கத்துடன் நின்றார், இளையராஜா. தன் கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததுபோல, எம்.எஸ்.வி. தன்னை பூஜை அறைக்கு அழைத்துச்சென்று ஆசீர்வதிப்பார் என்று நினைத்தார்.
ஆனால், எம்.எஸ்.வி. மிகவும் `பிசி'யாக இருந்த காலக்கட்டம் அது. இளையராஜா எழுதிய கடிதத்தை அவர் பார்த்தாரோ என்னவோ தெரியவில்லை. தயாராக நின்ற காரில் ஏறி புறப்பட்டுப் போய்விட்டார்!
கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த இளையராஜா, இவ்வுலக நினைவுக்குத் திரும்பி வந்தார்.
வீடு சென்றதும் நடந்ததை எல்லாம் பாரதிராஜாவிடமும், பாஸ்கரிடமும் சொன்னார்.
"கடிதம் எழுதியதை அவரிடம் சொன்னாயா? பொன்மலை கச்சேரி பற்றிச் சொல்லியிருக்கலாமே, அவருக்கு நினைவு வந்து பேசி இருப்பாரே'' என்றெல்லாம் பாரதிராஜாவும், பாஸ்கரும் கூறினார்கள்.
"சொல்லியிருக்கலாம்தான். ஆனால் சொல்லவில்லை!'' என்றார், இளையராஜா!
இதன்பின் கம்ïனிஸ்டு தலைவர் பாலதண்டாயுதம், இளையராஜாவின் திறமையைப் பாராட்டி, "எம்.பி. சீனிவாசனுக்கு ஒரு கடிதம் தருகிறேன். அவரைப் பாருங்கள். சினிமா துறையில் நீங்கள் பணியாற்ற அவர் உதவுவார்'' என்று கூறினார்.
எம்.பி.சீனிவாசன், யதார்த்தமாக எடுக்கப்படும் படங்களுக்கும், சிறிய பட்ஜெட் படங்களுக்கும் இசை அமைப்பதில் புகழ் பெற்று விளங்கினார். அவரை இளையராஜாவும், பாஸ்கரும் போய்ப் பார்த்தார்கள். பாலதண்டாயுதத்தின் கடிதத்தையும் கொடுத்தார்கள்.
அதைப் படித்துப் பார்த்த எம்.பி.சீனிவாசன், பின்வருமாறு கூறினார்:-
"உங்கள் எதிர்பார்ப் பையோ, திறமையையோ குறைவாக மதிக்கவில்லை. உங்கள் கனவுகளையும், கற்பனைகளையும் வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் நன்றாக ஹார்மோனியம் வாசிப்பவர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், ஒவ்வொரு இசை அமைப்பாளருக்கும் ஹார்மோனியம் வாசிக்க மூன்று, நான்கு பேர் இருக்கிறார்கள். தபேலா, டோலக், பாங்கோ போன்ற வாத்தியங்களை வாசிப்பவர்களும் நான்கு - ஐந்து பேர் இருக்கிறார்கள். என்னிடம் சண்முகம் என்ற ஹார்மோனிஸ்ட் இருக்கிறார். அவருக்கே வேலை தர இயலாததால் `தில்ருபா' என்ற வாத்தியத்தை வாசிக்கப் பயன்படுத்திக் கொள்கிறேன்.''
இவ்வாறு கூறி நிறுத்திய எம்.பி.சீனிவாசன், "இவ்வளவு இடைஞ்சல்களுக்கு மத்தியில் நீங்கள் சினிமாவில் சேரத்தான் வேண்டுமா? அல்லது சேரமுடியுமா!''
இப்படி எம்.பி.சீனிவாசன் சொன்னது, இளையராஜாவுக்கு ஏமாற்றம் அளித்தபோதிலும், சோர்வடையச் செய்யவில்லை.
இதன்பின் நடந்தது பற்றி இளையராஜா கூறுகிறார்:
"எம்.பி.சீனிவாசன் கூறியதில் நியாயம் இருந்தது. ஆனால், எங்கள் பக்க நியாயத்தை அவர் பக்க நியாயம் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.
சில நாள் கழித்து, சங்கிலி முருகனிடம் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. போய்ப் பார்த்தோம். "ஓ.ஏ.கே. தேவர் அண்ணன் நாடகத்துக்கு இசை அமைக்க உங்களுக்கு சந்தர்ப்பம் வாங்கிவிட்டேன். ஏற்கனவே வாசித்த சிவாஜி பார்ட்டியை விட்டுட்டு, புதுசா வந்த உங்களை கூப்பிட்டு கொடுத்திருக்கிறோம். நன்றாக இசை அமைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு'' என்றார்.
நன்றாக செய்வதாய்ச் சொன் னோம்.
அதன்படி இசை அமைத்தோம். எம்.எஸ்.வி.யிடம் `கோரஸ்' பாடி வந்த கமலா, எங்கள் குழுவில் பாட முன்வந்தார்.
ஓ.ஏ.கே. தேவரின் "மாசற்ற மனம்'' நாடகம் திருச்சியில் அரங்கேறியது. என் இசை உலக வாழ்வு முதன் முதலாகத் தொடங்கிய அதே திருச்சியில், சென்னை சென்று நான் இசைத்த முதல் நாடகமும் அரங்கேறியது. எங்கள் பாடல்கள் பாராட்டுப் பெற்றன.
இந்த நாடகத்தில் தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன் ஆகியோர் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்கள். கவுண்டமணியும், செந்திலும் ஒன்றிரண்டு சீன்களில் வந்து போனார்கள். பிற்காலத்தில் மிகவும் பிரபலமாவார்கள் என்று அப்போது யாருக்கும் தெரியாது!''
இவ்வாறு இளையராஜா கூறினார்.
பொன்மலையில் நடந்த தனது கச்சேரியை எம்.எஸ்.விஸ்வநாதன் கேட்டு ரசித்தார், பாராட்டினார் என்ற தகவல், இளையராஜாவுக்கு உற்சாகத்தை அளித்தது.
அவர், எம்.எஸ்.விஸ்வநாதனுக்குக் கடிதம் எழுதினார். "நான் விரைவில் சென்னைக்கு வருகிறேன். அப்போது உங்களை சந்திக்கிறேன். நீங்கள் என்னை உங்கள் பூஜை அறைக்கு அழைத்துச்சென்று, ஆசீர்வதிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.
குறிப்பிட்டபடி ஒருநாள் சென்னை சென்று காலை 8-30 மணிக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் வீட்டுக்குச் சென்றார்.
வீட்டில் இருந்தவர்கள், "புறப்பட்டுக் கொண்டிருக்கிறார். விரைவில் வந்துவிடுவார்கள்'' என்றார்கள்.
எம்.எஸ்.வி. வருகையை எதிர்பார்த்து இளையராஜா காத்துக் கொண்டிருந்தார்.
சரியாக 9 மணிக்கு விஸ்வநாதன் வெளியே வந்தார். நெற்றியில் விபூதி - குங்குமம் பளிச்சிட, புன்சிரிப்புடன் வந்தார்.
அவரை பார்த்த இளையராஜா, கைகூப்பி வணங்கினார். விஸ்வநாதனும் பதிலுக்கு வணங்கினார்.
அதன்பின், என்ன பேசுவது என்று தெரியாமல் தயக்கத்துடன் நின்றார், இளையராஜா. தன் கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததுபோல, எம்.எஸ்.வி. தன்னை பூஜை அறைக்கு அழைத்துச்சென்று ஆசீர்வதிப்பார் என்று நினைத்தார்.
ஆனால், எம்.எஸ்.வி. மிகவும் `பிசி'யாக இருந்த காலக்கட்டம் அது. இளையராஜா எழுதிய கடிதத்தை அவர் பார்த்தாரோ என்னவோ தெரியவில்லை. தயாராக நின்ற காரில் ஏறி புறப்பட்டுப் போய்விட்டார்!
கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த இளையராஜா, இவ்வுலக நினைவுக்குத் திரும்பி வந்தார்.
வீடு சென்றதும் நடந்ததை எல்லாம் பாரதிராஜாவிடமும், பாஸ்கரிடமும் சொன்னார்.
"கடிதம் எழுதியதை அவரிடம் சொன்னாயா? பொன்மலை கச்சேரி பற்றிச் சொல்லியிருக்கலாமே, அவருக்கு நினைவு வந்து பேசி இருப்பாரே'' என்றெல்லாம் பாரதிராஜாவும், பாஸ்கரும் கூறினார்கள்.
"சொல்லியிருக்கலாம்தான். ஆனால் சொல்லவில்லை!'' என்றார், இளையராஜா!
இதன்பின் கம்ïனிஸ்டு தலைவர் பாலதண்டாயுதம், இளையராஜாவின் திறமையைப் பாராட்டி, "எம்.பி. சீனிவாசனுக்கு ஒரு கடிதம் தருகிறேன். அவரைப் பாருங்கள். சினிமா துறையில் நீங்கள் பணியாற்ற அவர் உதவுவார்'' என்று கூறினார்.
எம்.பி.சீனிவாசன், யதார்த்தமாக எடுக்கப்படும் படங்களுக்கும், சிறிய பட்ஜெட் படங்களுக்கும் இசை அமைப்பதில் புகழ் பெற்று விளங்கினார். அவரை இளையராஜாவும், பாஸ்கரும் போய்ப் பார்த்தார்கள். பாலதண்டாயுதத்தின் கடிதத்தையும் கொடுத்தார்கள்.
அதைப் படித்துப் பார்த்த எம்.பி.சீனிவாசன், பின்வருமாறு கூறினார்:-
"உங்கள் எதிர்பார்ப் பையோ, திறமையையோ குறைவாக மதிக்கவில்லை. உங்கள் கனவுகளையும், கற்பனைகளையும் வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் நன்றாக ஹார்மோனியம் வாசிப்பவர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், ஒவ்வொரு இசை அமைப்பாளருக்கும் ஹார்மோனியம் வாசிக்க மூன்று, நான்கு பேர் இருக்கிறார்கள். தபேலா, டோலக், பாங்கோ போன்ற வாத்தியங்களை வாசிப்பவர்களும் நான்கு - ஐந்து பேர் இருக்கிறார்கள். என்னிடம் சண்முகம் என்ற ஹார்மோனிஸ்ட் இருக்கிறார். அவருக்கே வேலை தர இயலாததால் `தில்ருபா' என்ற வாத்தியத்தை வாசிக்கப் பயன்படுத்திக் கொள்கிறேன்.''
இவ்வாறு கூறி நிறுத்திய எம்.பி.சீனிவாசன், "இவ்வளவு இடைஞ்சல்களுக்கு மத்தியில் நீங்கள் சினிமாவில் சேரத்தான் வேண்டுமா? அல்லது சேரமுடியுமா!''
இப்படி எம்.பி.சீனிவாசன் சொன்னது, இளையராஜாவுக்கு ஏமாற்றம் அளித்தபோதிலும், சோர்வடையச் செய்யவில்லை.
இதன்பின் நடந்தது பற்றி இளையராஜா கூறுகிறார்:
"எம்.பி.சீனிவாசன் கூறியதில் நியாயம் இருந்தது. ஆனால், எங்கள் பக்க நியாயத்தை அவர் பக்க நியாயம் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.
சில நாள் கழித்து, சங்கிலி முருகனிடம் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. போய்ப் பார்த்தோம். "ஓ.ஏ.கே. தேவர் அண்ணன் நாடகத்துக்கு இசை அமைக்க உங்களுக்கு சந்தர்ப்பம் வாங்கிவிட்டேன். ஏற்கனவே வாசித்த சிவாஜி பார்ட்டியை விட்டுட்டு, புதுசா வந்த உங்களை கூப்பிட்டு கொடுத்திருக்கிறோம். நன்றாக இசை அமைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு'' என்றார்.
நன்றாக செய்வதாய்ச் சொன் னோம்.
அதன்படி இசை அமைத்தோம். எம்.எஸ்.வி.யிடம் `கோரஸ்' பாடி வந்த கமலா, எங்கள் குழுவில் பாட முன்வந்தார்.
ஓ.ஏ.கே. தேவரின் "மாசற்ற மனம்'' நாடகம் திருச்சியில் அரங்கேறியது. என் இசை உலக வாழ்வு முதன் முதலாகத் தொடங்கிய அதே திருச்சியில், சென்னை சென்று நான் இசைத்த முதல் நாடகமும் அரங்கேறியது. எங்கள் பாடல்கள் பாராட்டுப் பெற்றன.
இந்த நாடகத்தில் தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன் ஆகியோர் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்கள். கவுண்டமணியும், செந்திலும் ஒன்றிரண்டு சீன்களில் வந்து போனார்கள். பிற்காலத்தில் மிகவும் பிரபலமாவார்கள் என்று அப்போது யாருக்கும் தெரியாது!''
இவ்வாறு இளையராஜா கூறினார்.
Next Story






