என் மலர்
சினிமா

யார் பையன் படத்தில் அற்புதமாக நடித்தவர் குழந்தை நட்சத்திரம் டெய்சி இராணி
குழந்தை நட்சத்திரங்களில் அகில இந்தியப் புகழ் பெற்று விளங்கியவர், டெய்சி இராணி. இப்போது 3 குழந்தைகளின் தாயாராக மும்பையில் வசிக்கிறார்
குழந்தை நட்சத்திரங்களில் அகில இந்தியப் புகழ் பெற்று விளங்கியவர், டெய்சி இராணி. இப்போது 3 குழந்தைகளின் தாயாராக மும்பையில் வசிக்கிறார்.
அகில உலகப் புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரத்தின் பெயர் ஷெர்லி டெம்பிள். ஆங்கிலத்தில் பேசும் படங்கள் வரத்தொடங்கியபோது, படங்களில் அற்புதமாக நடித்து "ஆஸ்கார்'' பரிசு பெற்றவர்.
தமிழ்நாட்டில், 1937-ல் வெளிவந்த "தியாகபூமி'' படத்தில் நடித்த பேபி சரோஜா (டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் உறவினர்) மிகப் பிரபலமான குழந்தை நட்சத்திரமாகத் திகழ்ந்தார். அந்தக் காலக்கட்டத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கெல்லாம், "சரோஜா'' என்று பெயர் சூட்டப்பட்டது.
1958-ல் "களத்தூர் கண்ணம்மா'' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமலஹாசன், பெரும் பரபரப்பை உண்டாக்கினார். இளைஞனாக ஆன பிறகு, நடிப்பில் புதிய பரிணாமம் கண்டு, இன்று "உலக நாயகன்'' என்ற பட்டத்துடன் உலகப் புகழ் பெற்ற நடிகராக விளங்குகிறார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா, ஸ்ரீதேவி ஆகியோரும், பின்னர் பிரபல நடிகைகளாக உயர்ந்தார்கள்.
கமலஹாசன் திரை உலகுக்கு அறிமுகமாவதற்கு சுமார் 4 ஆண்டுகளுக்கு முன், அகில இந்திய புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரமாக திகழ்ந்தவர், டெய்சி இராணி.
1954-ல் அசோக்குமார் - மீனா குமாரி நடித்த "பந்திஷ்'' என்ற இந்திப் படத்தில், டெய்சி இராணி அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 4.
அனாதைக் குழந்தையான டெய்சி, அசோக்குமாரை தன் தந்தை என்று நினைத்துக் கொண்டு, "அப்பா - அப்பா!'' என்று சுற்றி வருவதும், கடைசியில் அசோக்குமார் தன் அப்பா அல்ல என்று தெரிந்ததும் மனம் ஒடிந்து போவதும், பார்ப்போர் உள்ளத்தை நெகிழச் செய்தன.
இந்தப்படம், சில ஆண்டுகளுக்குப் பின்னர் "யார் பையன்'' என்ற பெயரில் தமிழில் தயாரிக்கப்பட்டது. திரைக்கதை வசனத்தை ஸ்ரீதர் எழுதினார். ஜெமினிகணேசன் - சாவித்திரியுடன் டெய்சியையும் நடிக்க வைத்தனர்.
டெய்சிக்கு அப்படத்தில் "பூரி'' என்று பெயர். ஜெமினிகணேசனும், சாவித்திரியும் காதலர்கள். டெய்சி இராணி, ஜெமினிகணேசனை "அப்பா'' என்று அழைத்து, அவரை பிரிய மறுப்பதால், ஜெமினி மீது சாவித்திரி சந்தேகப்படுவார்.
கடைசியில் உண்மை வெளிப்படும். டெய்சி இராணி வேறொரு காதல் ஜோடிக்கு பிறந்தவர். பெற்றோரை பிரிந்து, தாத்தாவிடம் வளர்வார். தாத்தா, ஜெமினிகணேசனை காட்டி, "அதுதான் உன் அப்பா!'' என்று கூறிவிடுவார். அதனால் ஜெமினியை ஒட்டிக்கொண்டு, சுற்றிச்சுற்றி வருவார். அவர் அப்பா இல்லை என்று அறிந்ததும், அழுது கொண்டே வீட்டை விட்டு ஓடுவார். ஜெமினியும், சாவித்தியும் ஓடிச்சென்று, டெய்சியை தங்கள் குழந்தையாக ஏற்றுக்கொள்வார்கள். டெய்சியின் இயல்பான நடிப்பு, தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.
திலீப்குமார், வைஜயந்திமாலா, டெய்சி இராணி நடித்த "நயாதவுர்'' என்ற படம், "பாட்டாளியின் சபதம்'' என்ற பெயரில் தமிழில் `டப்' செய்யப்பட்டு வெளிவந்தது. அந்தப் படமும், தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடியது.
அசோக்குமார், மீனாகுமாரி, சுனில்தத் நடித்த "ஏக்-ஹி-ரஸ்தா'' என்ற இந்திப்படம், புரட்சிகரமான கதை அமைப்பைக் கொண்டதாகும். அந்தப் படத்தில் டெய்சியின் நடிப்பு கொடிகட்டிப் பறந்தது.
டெய்சி முக்கிய வேடத்தில் நடித்த "ஜெய்லர்'' என்ற இந்திப்படம், "கைதி கண்ணாயிரம்'' என்ற பெயரில், தமிழில்
தயாரிக்கப்பட்டது. தமிழ்ப்படத்தில் டெய்சி நடிக்கவில்லை.
டெய்சி இராணியின் தங்கை ஹனி இராணியும், குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்தார்.
டெய்சி சுமார் 125 படங்களில் நடித்தார். அதன்பின், 1971-ல் அவருக்குத் திருமணம் நடந்தது. கே.கே.சுக்லா என்ற கதை - வசன ஆசிரியரை மணந்தார்.
இந்தத் தம்பதிகளுக்கு 3 குழந்தைகள்.
திருமணம் நடந்து சுமார் 20 ஆண்டுகளுக்குப்பின் சுக்லா இறந்து போனார்.
அகில உலகப் புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரத்தின் பெயர் ஷெர்லி டெம்பிள். ஆங்கிலத்தில் பேசும் படங்கள் வரத்தொடங்கியபோது, படங்களில் அற்புதமாக நடித்து "ஆஸ்கார்'' பரிசு பெற்றவர்.
தமிழ்நாட்டில், 1937-ல் வெளிவந்த "தியாகபூமி'' படத்தில் நடித்த பேபி சரோஜா (டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் உறவினர்) மிகப் பிரபலமான குழந்தை நட்சத்திரமாகத் திகழ்ந்தார். அந்தக் காலக்கட்டத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கெல்லாம், "சரோஜா'' என்று பெயர் சூட்டப்பட்டது.
1958-ல் "களத்தூர் கண்ணம்மா'' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமலஹாசன், பெரும் பரபரப்பை உண்டாக்கினார். இளைஞனாக ஆன பிறகு, நடிப்பில் புதிய பரிணாமம் கண்டு, இன்று "உலக நாயகன்'' என்ற பட்டத்துடன் உலகப் புகழ் பெற்ற நடிகராக விளங்குகிறார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா, ஸ்ரீதேவி ஆகியோரும், பின்னர் பிரபல நடிகைகளாக உயர்ந்தார்கள்.
கமலஹாசன் திரை உலகுக்கு அறிமுகமாவதற்கு சுமார் 4 ஆண்டுகளுக்கு முன், அகில இந்திய புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரமாக திகழ்ந்தவர், டெய்சி இராணி.
1954-ல் அசோக்குமார் - மீனா குமாரி நடித்த "பந்திஷ்'' என்ற இந்திப் படத்தில், டெய்சி இராணி அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 4.
அனாதைக் குழந்தையான டெய்சி, அசோக்குமாரை தன் தந்தை என்று நினைத்துக் கொண்டு, "அப்பா - அப்பா!'' என்று சுற்றி வருவதும், கடைசியில் அசோக்குமார் தன் அப்பா அல்ல என்று தெரிந்ததும் மனம் ஒடிந்து போவதும், பார்ப்போர் உள்ளத்தை நெகிழச் செய்தன.
இந்தப்படம், சில ஆண்டுகளுக்குப் பின்னர் "யார் பையன்'' என்ற பெயரில் தமிழில் தயாரிக்கப்பட்டது. திரைக்கதை வசனத்தை ஸ்ரீதர் எழுதினார். ஜெமினிகணேசன் - சாவித்திரியுடன் டெய்சியையும் நடிக்க வைத்தனர்.
டெய்சிக்கு அப்படத்தில் "பூரி'' என்று பெயர். ஜெமினிகணேசனும், சாவித்திரியும் காதலர்கள். டெய்சி இராணி, ஜெமினிகணேசனை "அப்பா'' என்று அழைத்து, அவரை பிரிய மறுப்பதால், ஜெமினி மீது சாவித்திரி சந்தேகப்படுவார்.
கடைசியில் உண்மை வெளிப்படும். டெய்சி இராணி வேறொரு காதல் ஜோடிக்கு பிறந்தவர். பெற்றோரை பிரிந்து, தாத்தாவிடம் வளர்வார். தாத்தா, ஜெமினிகணேசனை காட்டி, "அதுதான் உன் அப்பா!'' என்று கூறிவிடுவார். அதனால் ஜெமினியை ஒட்டிக்கொண்டு, சுற்றிச்சுற்றி வருவார். அவர் அப்பா இல்லை என்று அறிந்ததும், அழுது கொண்டே வீட்டை விட்டு ஓடுவார். ஜெமினியும், சாவித்தியும் ஓடிச்சென்று, டெய்சியை தங்கள் குழந்தையாக ஏற்றுக்கொள்வார்கள். டெய்சியின் இயல்பான நடிப்பு, தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.
திலீப்குமார், வைஜயந்திமாலா, டெய்சி இராணி நடித்த "நயாதவுர்'' என்ற படம், "பாட்டாளியின் சபதம்'' என்ற பெயரில் தமிழில் `டப்' செய்யப்பட்டு வெளிவந்தது. அந்தப் படமும், தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடியது.
அசோக்குமார், மீனாகுமாரி, சுனில்தத் நடித்த "ஏக்-ஹி-ரஸ்தா'' என்ற இந்திப்படம், புரட்சிகரமான கதை அமைப்பைக் கொண்டதாகும். அந்தப் படத்தில் டெய்சியின் நடிப்பு கொடிகட்டிப் பறந்தது.
டெய்சி முக்கிய வேடத்தில் நடித்த "ஜெய்லர்'' என்ற இந்திப்படம், "கைதி கண்ணாயிரம்'' என்ற பெயரில், தமிழில்
தயாரிக்கப்பட்டது. தமிழ்ப்படத்தில் டெய்சி நடிக்கவில்லை.
டெய்சி இராணியின் தங்கை ஹனி இராணியும், குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்தார்.
டெய்சி சுமார் 125 படங்களில் நடித்தார். அதன்பின், 1971-ல் அவருக்குத் திருமணம் நடந்தது. கே.கே.சுக்லா என்ற கதை - வசன ஆசிரியரை மணந்தார்.
இந்தத் தம்பதிகளுக்கு 3 குழந்தைகள்.
திருமணம் நடந்து சுமார் 20 ஆண்டுகளுக்குப்பின் சுக்லா இறந்து போனார்.
Next Story






