என் மலர்
சினிமா

4 முதல்வர்கள் பணியாற்றிய நிறுவனம் - ஜுபிடர்
ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் படங்களில் பங்கு கொண்ட 4 கலைஞர்கள், பிறகு தமிழக முதல்-அமைச்சர்களாக ஆனார்கள்.
1946-ல் ஜுபிடர் தயாரித்த ஸ்ரீமுருகன் படத்தில், சிவன் வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார்.
அவரும், கே.மாலதியும் ஆடிய சிவ-பார்வதி தாண்டவம் புகழ் பெற்றது. இப்படத்தில் ஹொன்னப்ப பாகவதர் முருகனாக நடித்தார். படத்தை ஜுபிடர் சோமு டைரக்ட் செய்தார். ஏ.காசிலிங்கம், இணை டைரக்டராகப் பணியாற்றினார்.
படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படம் ஜுபிடரின் "ராஜகுமாரி.'' அவருடன் கே.மாலதி இணைந்து நடித்தார்.
மற்றும் டி.எஸ்.பாலையா, இலங்கைக்குயில் தவமணிதேவி ஆகியோரும் நடித்தனர். கத்திச்சண்டை காட்சிகளும், மாயாஜாலக் காட்சிகளும் நிறைந்த படம்.
இந்தப் படத்தை, ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கினார். இந்தப் படத்திற்குத்தான் முதன் முதலாக கலைஞர் மு.கருணாநிதி வசனம் எழுதினார். எனினும், படத்தின் டைட்டிலில் "வசனம்: ஏ.எஸ்.ஏ.சாமி. உதவி: மு.கருணாநிதி'' என்று போடப்பட்டது.
இந்தப் படத்துக்கு பாடல் எழுதியவர் உடுமலை நாராயணகவி. இசை: எஸ்.எம்.சுப்பையா நாயுடு.
11-4-1947-ல் வெளியான "ராஜகுமாரி'', வெற்றிப்படமாக அமைந்தது. எம்.ஜி.ஆரின் வெற்றிப்பயணத்துக்கு வழிவகுத்தது.
ஜுபிடரின் முக்கிய படங்களில் ஒன்றான அபிமன்யூ 6-5-1948-ல் வெளியாயிற்று.
இதில் எஸ்.எம்.குமரேசன் அபிமன்யூவாக நடித்தார். அவருக்கு ஜோடி யூ.ஆர்.ஜீவரத்தினம். எம்.ஜி.ஆர். அர்ஜுனனாக நடித்தார்.
ஜுபிடர் சோமுவும், ஏ.காசிலிங்கமும் இணைந்து டைரக்ட் செய்தனர். திரைக்கதை - வசனம் ஏ.எஸ்.ஏ.சாமி என்று டைட்டில் கார்டு போடப்பட்டது என்றாலும், வசனத்தின் பெரும் பகுதியை எழுதியவர் கருணாநிதிதான். அவர் பெயர் போடப்படவில்லை.
படத்தில் நரசிம்மபாரதி கிருஷ்ணனாக நடித்தார். என்.டி.ராமராவ் பட உலகுக்கு வருவதற்கு முன்பே கிருஷ்ணனாக நடித்து புகழ் பெற்றவர் நரசிம்மபாரதி. அழகிய தோற்றம் கொண்டவர்.
மற்றும் எம்.ஜி.சக்ரபாணி, எஸ்.வி.சுப்பையா, எம்.ஆர்.சந்தானலட்சுமி, கே.மாலதி ஆகியோரும் நடித்தனர்.
வசனமும், இசையும் இந்தப் படத்தின் வெற்றிக்குப் பெரிதும் உதவின.
1948-ல் ஜுபிடர் தயாரித்த மற்றொரு படம் "மோகினி.'' மாயாஜாலங்கள் நிறைந்த படம்.
இதில் எம்.ஜி.ஆர் - வி.என்.ஜானகி இணைந்து நடித்தனர். மற்றும் டி.எஸ்.பாலையா, எம்.என்.நம்பியார், மாதுரிதேவி, மாலதி ஆகியோர் நடித்தனர்.
திரைக்கதையை ஏ.எஸ்.ஏ.சாமி எழுத, எஸ்.டி.சுந்தரம் வசனம் எழுதினார். லங்காசத்யம் டைரக்ட் செய்தார்.
31-10-1948-ல் இப்படம் வெளிவந்தது.
இதன்பின் பேரறிஞர் அண்ணாவின் கதை-வசனத்தில், "வேலைக்காரி''யை ஜுபிடர் தயாரித்தது. இப்படம் 25-2-1949-ல் வெளிவந்தது.
இதில் கே.ஆர்.ராமசாமி, டி.எஸ்.பாலையா, எம்.என்.நம்பியார், வி.என்.ஜானகி, எம்.வி.ராஜம்மா ஆகியோர் நடித்தனர். பாடல்களை உடுமலை நாராயணகவி எழுத, சி.ஆர்.சுப்பராமன், எஸ்.எம்.சுப்பையா இசை அமைத்தனர். டைரக்ஷன்: ஏ.எஸ்.ஏ.சாமி.
புரட்சிகரமான வசனங்களைக் கொண்ட "வேலைக்காரி'', மாபெரும் வெற்றிச்சித்திரமாக அமைந்தது. கே.ஆர்.ராமசாமி வக்கீலாக வந்து, "சட்டம் ஒரு இருட்டறை; அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு'' என்று வாதாடிய கட்டம் சிறப்பாக அமைந்தது.
1950 ஜனவரி 14-ந்தேதி பொங்கலுக்கு வந்த படம் ஜுபிடரின் "கிருஷ்ண விஜயம்.''
இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், இந்தப் படத்தில்தான் டி.எம்.சவுந்தரராஜன் பின்னணி பாடகராக அறிமுகம் ஆனார்.
எஸ்.எம்.சுப்பையா நாயுடுவும், சிதம்பரம் ஜெயராமனும் இணைந்து இசை அமைத்தனர். நரசிம்மபாரதி கிருஷ்ணனாகவும், பிரபல பாடகி என்.சி.வசந்தகோகிலம் நாரதராகவும் நடித்தனர்.
1951-ம் ஆண்டு "மர்மயோகி'' படத்தை ஜுபிடர் தயாரித்தது. இந்த படம் மர்மம் நிறைந்த காட்சிகளை கொண்டு தயாரிக்கப்பட்டதால், படத்திற்கு "ஏ'' சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழில் வெளிவந்த முதல் "ஏ'' படம் மர்மயோகிதான். படத்தில் கதாநாயகனாக எம்.ஜி.ஆர். நடித்தார். அவருக்கு ஜோடியாக மாதுரிதேவி நடித்தார். அஞ்சலிதேவி, வில்லியாக நடித்தார்.
"மர்மயோகி'', இந்தியில் "ஏக்தராஜா'' என்ற பெயரில் வெளியானது.
"இது நிஜமா'' என்ற படத்தில் நடிகராக அறிமுகமான எஸ்.பாலசந்தரிடம் (பிற்காலத்தில் "வீணை'' எஸ்.பாலசந்தர்) ஏராளமான திறமைகள் குவிந்திருப்பதை கண்ட சோமு, அவரை ஜுபிடர் படங்களுக்கு பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தார்.
எஸ்.பாலசந்தர் டைரக்ஷனில் "கைதி'' என்ற படம் உருவாகியது. இந்தப் படத்தின் கதை, இசை ஆகிய பொறுப்புகளையும் பாலசந்தர் கவனித்தார். டி.எஸ்.வெங்கடசாமி, கலைமணி, சீதாராமன் ஆகியோர் வசனம் எழுதினர். "சாண்டோ'' சின்னப்பதேவரின் தம்பி எம்.ஏ.திருமுகம் எடிட்டராகப் பணியாற்றினார்.
பாலசந்தருக்கு ஜோடியாக மீனாட்சி, ரேவதி என்ற புதுமுகங்கள் நடித்தனர். மற்றும் எஸ்.ஏ.நடராஜன், எம்.கே.முஸ்தபா, ஜி.எம்.பஷீர் ஆகியோரும் இந்த மர்மப் படத்தில் நடித்தனர்.
23-12-1951-ல் வெளிவந்த "கைதி'', ஓரளவு வெற்றிப்படமே
1953-ம் ஆண்டு ஜுபிடர் பிக்சர்ஸ் "அழகி'', "இன்ஸ்பெக்டர்'', "நாம்'' ஆகிய 3 படங்களை வெளியிட்டது. இதில் `நாம்' படத்தை, மேகலா பிக்சர்சும், ஜுபிடரும் இணைந்து தயாரித்தன. இதில் எம்.ஜி.ஆர்., வி.என்.ஜானகி, பி.எஸ்.வீரப்பா ஆகியோர் நடித்தனர். படத்திற்கு கருணாநிதி கதை, வசனம் எழுதினார். டைரக்ஷன்: ஏ.காசிலிங்கம்.
1954-ம் ஆண்டு டி.கே.எஸ்.சகோதரர்களின் அவ்வை புரொடக்ஷன்ஸ், ஜுபிடருடன் இணைந்து "ரத்தபாசம்'' படத்தை தயாரித்தது. இந்த படத்தின் மூலமாகத்தான் கதை-வசன கர்த்தாவாக பட உலகில் ஸ்ரீதர் அடியெடுத்து வைத்தார். படத்தை ஆர்.எஸ்.மணி டைரக்ட்
செய்தார்.தொடர்ந்து ஜுபிடர் - லாவண்யா கூட்டு தயாரிப்பில் டி.கே.எஸ்.சகோ தரர்களின் பிரபல நாடகமான "மனிதன்'' திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. இதில் டி.கே.சண்முகம், கிருஷ்ணகுமாரி நடித்தனர். கேமராமேதை கே.ராம்நாத் டைரக்ட் செய்தார்.
வழுக்கி விழுந்த மனைவியை கணவன் ஏற்றுக்கொள்வதுபோல் அமைந்த கதையை (மூலம்: மலையாளம்) ரசிகர்கள் ஏற்காததால், படம் தோல்வி அடைந்தது.
பம்மல் சம்பந்த முதலியாரின் கதையான "மனோகரா''வை 1954-ல் திரைப்படமாக ஜுபிடர் தயாரித்தது.
கலைஞர் மு.கருணாநிதியின் வசனம், சிவாஜியின் உணர்ச்சிமயமான நடிப்பு, எல்.வி.பிரசாத்தின் இயக்கம் - இவை ஒன்று சேர்ந்து, மனோகராவை மகத்தான திரைக்காவியமாக்கின.
கண்ணாம்பா, டி.ஆர்.ராஜகுமாரி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், கிரிஜா, ஜாவர் சீதாராமன், காக்கா ராதாகிருஷ்ணன், எஸ்.ஏ.நடராஜன், பண்டரிபாய் ஆகியோரும் சிறப்பாக நடித்தனர்.
இந்தப்படம் இந்தியிலும் "டப்'' செய்யப்பட்டது. சிவாஜியின் நடிப்பாற்றலைக் கண்டு வடஇந்திய திரை உலகம் பிரமித்தது.
"மனோகரா'' வெளிவந்த சில நாட்களில், ஜுபிடர் நிறுவனத்துக்கு ஒரு சோதனை ஏற்பட்டது. அதன் அதிபர்களில் ஒருவரான மொகிதீன் காலமானார்.
அவரும், கே.மாலதியும் ஆடிய சிவ-பார்வதி தாண்டவம் புகழ் பெற்றது. இப்படத்தில் ஹொன்னப்ப பாகவதர் முருகனாக நடித்தார். படத்தை ஜுபிடர் சோமு டைரக்ட் செய்தார். ஏ.காசிலிங்கம், இணை டைரக்டராகப் பணியாற்றினார்.
படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படம் ஜுபிடரின் "ராஜகுமாரி.'' அவருடன் கே.மாலதி இணைந்து நடித்தார்.
மற்றும் டி.எஸ்.பாலையா, இலங்கைக்குயில் தவமணிதேவி ஆகியோரும் நடித்தனர். கத்திச்சண்டை காட்சிகளும், மாயாஜாலக் காட்சிகளும் நிறைந்த படம்.
இந்தப் படத்தை, ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கினார். இந்தப் படத்திற்குத்தான் முதன் முதலாக கலைஞர் மு.கருணாநிதி வசனம் எழுதினார். எனினும், படத்தின் டைட்டிலில் "வசனம்: ஏ.எஸ்.ஏ.சாமி. உதவி: மு.கருணாநிதி'' என்று போடப்பட்டது.
இந்தப் படத்துக்கு பாடல் எழுதியவர் உடுமலை நாராயணகவி. இசை: எஸ்.எம்.சுப்பையா நாயுடு.
11-4-1947-ல் வெளியான "ராஜகுமாரி'', வெற்றிப்படமாக அமைந்தது. எம்.ஜி.ஆரின் வெற்றிப்பயணத்துக்கு வழிவகுத்தது.
ஜுபிடரின் முக்கிய படங்களில் ஒன்றான அபிமன்யூ 6-5-1948-ல் வெளியாயிற்று.
இதில் எஸ்.எம்.குமரேசன் அபிமன்யூவாக நடித்தார். அவருக்கு ஜோடி யூ.ஆர்.ஜீவரத்தினம். எம்.ஜி.ஆர். அர்ஜுனனாக நடித்தார்.
ஜுபிடர் சோமுவும், ஏ.காசிலிங்கமும் இணைந்து டைரக்ட் செய்தனர். திரைக்கதை - வசனம் ஏ.எஸ்.ஏ.சாமி என்று டைட்டில் கார்டு போடப்பட்டது என்றாலும், வசனத்தின் பெரும் பகுதியை எழுதியவர் கருணாநிதிதான். அவர் பெயர் போடப்படவில்லை.
படத்தில் நரசிம்மபாரதி கிருஷ்ணனாக நடித்தார். என்.டி.ராமராவ் பட உலகுக்கு வருவதற்கு முன்பே கிருஷ்ணனாக நடித்து புகழ் பெற்றவர் நரசிம்மபாரதி. அழகிய தோற்றம் கொண்டவர்.
மற்றும் எம்.ஜி.சக்ரபாணி, எஸ்.வி.சுப்பையா, எம்.ஆர்.சந்தானலட்சுமி, கே.மாலதி ஆகியோரும் நடித்தனர்.
வசனமும், இசையும் இந்தப் படத்தின் வெற்றிக்குப் பெரிதும் உதவின.
1948-ல் ஜுபிடர் தயாரித்த மற்றொரு படம் "மோகினி.'' மாயாஜாலங்கள் நிறைந்த படம்.
இதில் எம்.ஜி.ஆர் - வி.என்.ஜானகி இணைந்து நடித்தனர். மற்றும் டி.எஸ்.பாலையா, எம்.என்.நம்பியார், மாதுரிதேவி, மாலதி ஆகியோர் நடித்தனர்.
திரைக்கதையை ஏ.எஸ்.ஏ.சாமி எழுத, எஸ்.டி.சுந்தரம் வசனம் எழுதினார். லங்காசத்யம் டைரக்ட் செய்தார்.
31-10-1948-ல் இப்படம் வெளிவந்தது.
இதன்பின் பேரறிஞர் அண்ணாவின் கதை-வசனத்தில், "வேலைக்காரி''யை ஜுபிடர் தயாரித்தது. இப்படம் 25-2-1949-ல் வெளிவந்தது.
இதில் கே.ஆர்.ராமசாமி, டி.எஸ்.பாலையா, எம்.என்.நம்பியார், வி.என்.ஜானகி, எம்.வி.ராஜம்மா ஆகியோர் நடித்தனர். பாடல்களை உடுமலை நாராயணகவி எழுத, சி.ஆர்.சுப்பராமன், எஸ்.எம்.சுப்பையா இசை அமைத்தனர். டைரக்ஷன்: ஏ.எஸ்.ஏ.சாமி.
புரட்சிகரமான வசனங்களைக் கொண்ட "வேலைக்காரி'', மாபெரும் வெற்றிச்சித்திரமாக அமைந்தது. கே.ஆர்.ராமசாமி வக்கீலாக வந்து, "சட்டம் ஒரு இருட்டறை; அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு'' என்று வாதாடிய கட்டம் சிறப்பாக அமைந்தது.
1950 ஜனவரி 14-ந்தேதி பொங்கலுக்கு வந்த படம் ஜுபிடரின் "கிருஷ்ண விஜயம்.''
இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், இந்தப் படத்தில்தான் டி.எம்.சவுந்தரராஜன் பின்னணி பாடகராக அறிமுகம் ஆனார்.
எஸ்.எம்.சுப்பையா நாயுடுவும், சிதம்பரம் ஜெயராமனும் இணைந்து இசை அமைத்தனர். நரசிம்மபாரதி கிருஷ்ணனாகவும், பிரபல பாடகி என்.சி.வசந்தகோகிலம் நாரதராகவும் நடித்தனர்.
1951-ம் ஆண்டு "மர்மயோகி'' படத்தை ஜுபிடர் தயாரித்தது. இந்த படம் மர்மம் நிறைந்த காட்சிகளை கொண்டு தயாரிக்கப்பட்டதால், படத்திற்கு "ஏ'' சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழில் வெளிவந்த முதல் "ஏ'' படம் மர்மயோகிதான். படத்தில் கதாநாயகனாக எம்.ஜி.ஆர். நடித்தார். அவருக்கு ஜோடியாக மாதுரிதேவி நடித்தார். அஞ்சலிதேவி, வில்லியாக நடித்தார்.
"மர்மயோகி'', இந்தியில் "ஏக்தராஜா'' என்ற பெயரில் வெளியானது.
"இது நிஜமா'' என்ற படத்தில் நடிகராக அறிமுகமான எஸ்.பாலசந்தரிடம் (பிற்காலத்தில் "வீணை'' எஸ்.பாலசந்தர்) ஏராளமான திறமைகள் குவிந்திருப்பதை கண்ட சோமு, அவரை ஜுபிடர் படங்களுக்கு பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தார்.
எஸ்.பாலசந்தர் டைரக்ஷனில் "கைதி'' என்ற படம் உருவாகியது. இந்தப் படத்தின் கதை, இசை ஆகிய பொறுப்புகளையும் பாலசந்தர் கவனித்தார். டி.எஸ்.வெங்கடசாமி, கலைமணி, சீதாராமன் ஆகியோர் வசனம் எழுதினர். "சாண்டோ'' சின்னப்பதேவரின் தம்பி எம்.ஏ.திருமுகம் எடிட்டராகப் பணியாற்றினார்.
பாலசந்தருக்கு ஜோடியாக மீனாட்சி, ரேவதி என்ற புதுமுகங்கள் நடித்தனர். மற்றும் எஸ்.ஏ.நடராஜன், எம்.கே.முஸ்தபா, ஜி.எம்.பஷீர் ஆகியோரும் இந்த மர்மப் படத்தில் நடித்தனர்.
23-12-1951-ல் வெளிவந்த "கைதி'', ஓரளவு வெற்றிப்படமே
1953-ம் ஆண்டு ஜுபிடர் பிக்சர்ஸ் "அழகி'', "இன்ஸ்பெக்டர்'', "நாம்'' ஆகிய 3 படங்களை வெளியிட்டது. இதில் `நாம்' படத்தை, மேகலா பிக்சர்சும், ஜுபிடரும் இணைந்து தயாரித்தன. இதில் எம்.ஜி.ஆர்., வி.என்.ஜானகி, பி.எஸ்.வீரப்பா ஆகியோர் நடித்தனர். படத்திற்கு கருணாநிதி கதை, வசனம் எழுதினார். டைரக்ஷன்: ஏ.காசிலிங்கம்.
1954-ம் ஆண்டு டி.கே.எஸ்.சகோதரர்களின் அவ்வை புரொடக்ஷன்ஸ், ஜுபிடருடன் இணைந்து "ரத்தபாசம்'' படத்தை தயாரித்தது. இந்த படத்தின் மூலமாகத்தான் கதை-வசன கர்த்தாவாக பட உலகில் ஸ்ரீதர் அடியெடுத்து வைத்தார். படத்தை ஆர்.எஸ்.மணி டைரக்ட்
செய்தார்.தொடர்ந்து ஜுபிடர் - லாவண்யா கூட்டு தயாரிப்பில் டி.கே.எஸ்.சகோ தரர்களின் பிரபல நாடகமான "மனிதன்'' திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. இதில் டி.கே.சண்முகம், கிருஷ்ணகுமாரி நடித்தனர். கேமராமேதை கே.ராம்நாத் டைரக்ட் செய்தார்.
வழுக்கி விழுந்த மனைவியை கணவன் ஏற்றுக்கொள்வதுபோல் அமைந்த கதையை (மூலம்: மலையாளம்) ரசிகர்கள் ஏற்காததால், படம் தோல்வி அடைந்தது.
பம்மல் சம்பந்த முதலியாரின் கதையான "மனோகரா''வை 1954-ல் திரைப்படமாக ஜுபிடர் தயாரித்தது.
கலைஞர் மு.கருணாநிதியின் வசனம், சிவாஜியின் உணர்ச்சிமயமான நடிப்பு, எல்.வி.பிரசாத்தின் இயக்கம் - இவை ஒன்று சேர்ந்து, மனோகராவை மகத்தான திரைக்காவியமாக்கின.
கண்ணாம்பா, டி.ஆர்.ராஜகுமாரி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், கிரிஜா, ஜாவர் சீதாராமன், காக்கா ராதாகிருஷ்ணன், எஸ்.ஏ.நடராஜன், பண்டரிபாய் ஆகியோரும் சிறப்பாக நடித்தனர்.
இந்தப்படம் இந்தியிலும் "டப்'' செய்யப்பட்டது. சிவாஜியின் நடிப்பாற்றலைக் கண்டு வடஇந்திய திரை உலகம் பிரமித்தது.
"மனோகரா'' வெளிவந்த சில நாட்களில், ஜுபிடர் நிறுவனத்துக்கு ஒரு சோதனை ஏற்பட்டது. அதன் அதிபர்களில் ஒருவரான மொகிதீன் காலமானார்.
Next Story






