என் மலர்
சினிமா

சிவகுமார் திருமணத்திற்கு நேரில் வந்து சிவாஜி வாழ்த்து
நடிகர் சிவகுமார் திருமணம் நடந்தது கொண்டிருந்த போது நேரில் வந்து சிவாஜி கணேசன் வாழ்த்து தெரிவித்தார்.
நடிகர் சிவகுமார் திருமணம் 1974 ஜுலை 1-ந்தேதி நடைபெற்றது. தான் ஹீரோவாக நடித்து நிலைத்து நிற்க முடியும் என்று நம்பிக்கை ஏற்படும் வரை, திருமணத்துக்கு சிவகுமார் சம்மதிக்காமல் இருந்தார்.
ஒருமுறை சிவாஜி கணேசன், "டேய் சிவா! காலா காலத்தில் கல்யாணம் பண்ணிக்கோ.
30 வயது தாண்டினா, அப்புறம் பெண்டாட்டி மீது பெரிய பிடிப்பு இருக்காது. "பாதி வயது தனியா வாழ்ந்திட்டோம். இவ இல்லாட்டி, மீதி வயசும் இப்படியே வாழ்ந்திட முடியும் என்று தோன்றும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டுமானால், ஒருவர் இல்லாமல், இன்னொருவர் வாழ முடியாதுங்கற எண்ணம் வலுவாக இருக்கணும். சிறு வயதில் கல்யாணம் பண்ணினாத்தான் அப்படிப்பட்ட எண்ணம் தோணும்'' என்றார்.
ஜெமினிகணேசன், சிவகுமாரின் கைரேகையைப் பார்த்துவிட்டு, "மாப்ளே! பொண்ணுங்க கிட்டே ஜாக்கிரதையா இரு!'' என்றார்.
"நீங்க மட்டும் பிருந்தாவனத்து நந்தகுமாரனா ஏகப்பட்ட கோபிகாஸ்திரீகளோடு ஜாலியா இருப்பீங்க. நான் உஷாரா இருக்கணுமா? என்ன நியாயம் இது!'' என்று சிரித்துக்கொண்டே தமாஷாகக் கூறினார், சிவகுமார்.
"அப்படி இல்லேடா! உனக்கு ஒண்ணு தெரியுமா? இப்போ தமிழ் சினிமாவிலே இருக்கிற அத்தனை ஹீரோக்களையும் விட நான்தான் அதிகம் படித்தவன். டிகிரி வாங்கினது மட்டுமில்லாமே நிறைய புத்தகங்கள் வாங்கி படித்துக்கொண்டே இருக்கிறேன். எனக்குத் தெரியாத விஷயமே இல்லை. ஆனால், பெண்கள் விஷயத்தில் பகவான் எனக்கு வீக்னஸ் வச்சுட்டான். நீ அப்படியெல்லாம் மாட்டிக்காதே. புத்திசாலித்தனமா நடந்துக்கோ. காலா காலத்திலே நல்லப் பெண்ணா பார்த்துக் கல்யாணம் செய்துக்கோ!'' என்றார், ஜெமினி.
ஒரு மாணவனுக்கு அனுபவபூர்வமாக எல்லாம் அறிந்த ஆசிரியர் சொன்ன அறிவுரையாக அதை ஏற்றுக்கொண்டார், சிவகுமார்.
"வெள்ளிக்கிழமை விரதம்'', "பொண்ணுக்கு தங்க மனசு'', "சொல்லத்தான் நினைக்கிறேன்'' ஆகிய படங்களில் நடித்தபின், தான் கதாநாயகனாக நìலைத்து நிற்க முடியும் என்ற நம்பிக்கை சிவகுமாருக்கு ஏற்பட்டது. திருமணத்துக்கு சம்மதித்தார்.
ஆனால், தகுந்த பெண் கிடைப்பது சிரமமாக இருந்தது. சிலர், "சினிமாக்காரருக்கு பெண் கொடுக்கமாட்டோம்'' என்று மறுத்துவிட்டார்கள்.
எனினும் உறவினர்கள் சிரமப்பட்டு, சிவகுமாருக்கு தகுந்த மணமகளை தேடிக் கண்டுபிடித்து திருமணத்துக்கு நிச்சயம் செய்தனர்.
மணமகள் பெயர் லட்சுமி. கோவை மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தை அடுத்த கவுண்டன்பாளையத்தை சேர்ந்த முத்துசாமி கவுண்டரின் மகள். கோவை அவிநாசி ஹோம் சயின்ஸ் கல்லூரியில் "பி.ஏ'' பொருளாதாரம் படித்துப் பட்டம் பெற்றவர்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், அவர் சிவகுமார் நடித்த சினிமா எதையும் பார்த்தது இல்லை!
தாயார் கீறிய கோட்டை தாண்டாத சிவகுமார், "பெண்ணை நீங்களே பார்த்து முடிவு செய்து விடுங்கள். திருமணத்துக்கு முன் நான் பெண்ணைப் பார்க்கமாட்டேன்'' என்று ஏற்கனவே திட்ட வட்டமாகக் கூறிவிட்டார்.
அதன்படி, அவர் பெண்ணைப் போய்ப் பார்க்கவில்லை. பெண்ணின் போட்டோவை மட்டும் பார்த்தார்.
சிவகுமார் - லட்சுமி திருமணம், தண்டுக்காரன்பாளையம் சீத்தம்மா கோவில் கல்யாண மண்டபத்தில் 1974 ஜுலை 1-ந்தேதி காலை நடந்தது.
சிவாஜி கணேசன், மனைவி கமலா அம்மாளுடன் வந்து மணமக்களை வாழ்த்தினார்.
பட அதிபர்கள் சின்னப்பா தேவர், என்.வி.ராமசாமி, டைரக்டர்கள் ஏ.பி.நாகராஜன், எஸ்.பி.முத்துராமன், நடிகர் மேஜர் சுந்தரராஜன் மற்றும் பல பிரமுகர்கள் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.
திருமணத்துக்கு 6 நாட்கள் கழித்து, சென்னையில் ராஜேசுவரி திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. திரை உலகமே திரண்டு வந்து வாழ்த்தியது.
எம்.ஜி.ஆர். தன் மனைவி ஜானகி அம்மாளுடன் வந்து வாழ்த்தினார். சிவாஜிகணேசனும் மனைவி கமலா அம்மாளுடன் வந்திருந்தார்.
அன்றிரவு மணமக்கள் தனிமையில் சந்தித்தபோது, அறை முழுவதும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பரிசுகளையும், வெள்ளிப் பாத்திரங்களையும் கண்டு மணமகள் லட்சுமி பிரமித்துப் போய்விட்டார்.
"நீங்கள் பெரிய ஆள். சமூகத்தில் பெரும் அந்தஸ்தில் இருக்கிறீர்கள். வரவேற்புக்கு வந்திருந்த கூட்டத்தைப் பார்த்தபோதே இதைத் தெரிந்து கொண்டேன். உங்களுக்கு நான் ஏற்றவளா என்று சந்தேகப்படுகிறேன்'' என்றார்.
"நான் திரைப்படத் துறையில் இருந்தாலும், குடும்பத்துக்கு ஏற்ற பெண்ணை மணந்து கொள்ளவே விரும்பினேன். அதன்படியே நீ அமைந்திருக்கிறாய்'' என்று கூறினார், சிவகுமார்.
திருமணம் முடிந்தபின், மனைவியை சிவகுமார் எங்கும் தனியே கூட்டிப்போக முடியவில்லை. ஓயாமல் படப்பிடிப்பு இருந்தது.
சிவகுமார் வெளிïர் செல்லும்போது மனைவியை அழைத்துச் செல்வார். ஆயினும், படப்பிடிப்பு நடைபெறும் இடத்துக்கு கூட்டிப்போவதில்லை.
சிவகுமார் - லட்சுமி இல்லற வாழ்க்கையில், மூன்று குழந்தைகள் பிறந்தன.
23-7-1975-ல் சூர்யாவும், 25-5-1977-ல் கார்த்தியும், 3-3-1980-ல் பிருந்தாவும் பிறந்தனர்.
ஒருமுறை சிவாஜி கணேசன், "டேய் சிவா! காலா காலத்தில் கல்யாணம் பண்ணிக்கோ.
30 வயது தாண்டினா, அப்புறம் பெண்டாட்டி மீது பெரிய பிடிப்பு இருக்காது. "பாதி வயது தனியா வாழ்ந்திட்டோம். இவ இல்லாட்டி, மீதி வயசும் இப்படியே வாழ்ந்திட முடியும் என்று தோன்றும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டுமானால், ஒருவர் இல்லாமல், இன்னொருவர் வாழ முடியாதுங்கற எண்ணம் வலுவாக இருக்கணும். சிறு வயதில் கல்யாணம் பண்ணினாத்தான் அப்படிப்பட்ட எண்ணம் தோணும்'' என்றார்.
ஜெமினிகணேசன், சிவகுமாரின் கைரேகையைப் பார்த்துவிட்டு, "மாப்ளே! பொண்ணுங்க கிட்டே ஜாக்கிரதையா இரு!'' என்றார்.
"நீங்க மட்டும் பிருந்தாவனத்து நந்தகுமாரனா ஏகப்பட்ட கோபிகாஸ்திரீகளோடு ஜாலியா இருப்பீங்க. நான் உஷாரா இருக்கணுமா? என்ன நியாயம் இது!'' என்று சிரித்துக்கொண்டே தமாஷாகக் கூறினார், சிவகுமார்.
"அப்படி இல்லேடா! உனக்கு ஒண்ணு தெரியுமா? இப்போ தமிழ் சினிமாவிலே இருக்கிற அத்தனை ஹீரோக்களையும் விட நான்தான் அதிகம் படித்தவன். டிகிரி வாங்கினது மட்டுமில்லாமே நிறைய புத்தகங்கள் வாங்கி படித்துக்கொண்டே இருக்கிறேன். எனக்குத் தெரியாத விஷயமே இல்லை. ஆனால், பெண்கள் விஷயத்தில் பகவான் எனக்கு வீக்னஸ் வச்சுட்டான். நீ அப்படியெல்லாம் மாட்டிக்காதே. புத்திசாலித்தனமா நடந்துக்கோ. காலா காலத்திலே நல்லப் பெண்ணா பார்த்துக் கல்யாணம் செய்துக்கோ!'' என்றார், ஜெமினி.
ஒரு மாணவனுக்கு அனுபவபூர்வமாக எல்லாம் அறிந்த ஆசிரியர் சொன்ன அறிவுரையாக அதை ஏற்றுக்கொண்டார், சிவகுமார்.
"வெள்ளிக்கிழமை விரதம்'', "பொண்ணுக்கு தங்க மனசு'', "சொல்லத்தான் நினைக்கிறேன்'' ஆகிய படங்களில் நடித்தபின், தான் கதாநாயகனாக நìலைத்து நிற்க முடியும் என்ற நம்பிக்கை சிவகுமாருக்கு ஏற்பட்டது. திருமணத்துக்கு சம்மதித்தார்.
ஆனால், தகுந்த பெண் கிடைப்பது சிரமமாக இருந்தது. சிலர், "சினிமாக்காரருக்கு பெண் கொடுக்கமாட்டோம்'' என்று மறுத்துவிட்டார்கள்.
எனினும் உறவினர்கள் சிரமப்பட்டு, சிவகுமாருக்கு தகுந்த மணமகளை தேடிக் கண்டுபிடித்து திருமணத்துக்கு நிச்சயம் செய்தனர்.
மணமகள் பெயர் லட்சுமி. கோவை மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தை அடுத்த கவுண்டன்பாளையத்தை சேர்ந்த முத்துசாமி கவுண்டரின் மகள். கோவை அவிநாசி ஹோம் சயின்ஸ் கல்லூரியில் "பி.ஏ'' பொருளாதாரம் படித்துப் பட்டம் பெற்றவர்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், அவர் சிவகுமார் நடித்த சினிமா எதையும் பார்த்தது இல்லை!
தாயார் கீறிய கோட்டை தாண்டாத சிவகுமார், "பெண்ணை நீங்களே பார்த்து முடிவு செய்து விடுங்கள். திருமணத்துக்கு முன் நான் பெண்ணைப் பார்க்கமாட்டேன்'' என்று ஏற்கனவே திட்ட வட்டமாகக் கூறிவிட்டார்.
அதன்படி, அவர் பெண்ணைப் போய்ப் பார்க்கவில்லை. பெண்ணின் போட்டோவை மட்டும் பார்த்தார்.
சிவகுமார் - லட்சுமி திருமணம், தண்டுக்காரன்பாளையம் சீத்தம்மா கோவில் கல்யாண மண்டபத்தில் 1974 ஜுலை 1-ந்தேதி காலை நடந்தது.
சிவாஜி கணேசன், மனைவி கமலா அம்மாளுடன் வந்து மணமக்களை வாழ்த்தினார்.
பட அதிபர்கள் சின்னப்பா தேவர், என்.வி.ராமசாமி, டைரக்டர்கள் ஏ.பி.நாகராஜன், எஸ்.பி.முத்துராமன், நடிகர் மேஜர் சுந்தரராஜன் மற்றும் பல பிரமுகர்கள் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.
திருமணத்துக்கு 6 நாட்கள் கழித்து, சென்னையில் ராஜேசுவரி திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. திரை உலகமே திரண்டு வந்து வாழ்த்தியது.
எம்.ஜி.ஆர். தன் மனைவி ஜானகி அம்மாளுடன் வந்து வாழ்த்தினார். சிவாஜிகணேசனும் மனைவி கமலா அம்மாளுடன் வந்திருந்தார்.
அன்றிரவு மணமக்கள் தனிமையில் சந்தித்தபோது, அறை முழுவதும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பரிசுகளையும், வெள்ளிப் பாத்திரங்களையும் கண்டு மணமகள் லட்சுமி பிரமித்துப் போய்விட்டார்.
"நீங்கள் பெரிய ஆள். சமூகத்தில் பெரும் அந்தஸ்தில் இருக்கிறீர்கள். வரவேற்புக்கு வந்திருந்த கூட்டத்தைப் பார்த்தபோதே இதைத் தெரிந்து கொண்டேன். உங்களுக்கு நான் ஏற்றவளா என்று சந்தேகப்படுகிறேன்'' என்றார்.
"நான் திரைப்படத் துறையில் இருந்தாலும், குடும்பத்துக்கு ஏற்ற பெண்ணை மணந்து கொள்ளவே விரும்பினேன். அதன்படியே நீ அமைந்திருக்கிறாய்'' என்று கூறினார், சிவகுமார்.
திருமணம் முடிந்தபின், மனைவியை சிவகுமார் எங்கும் தனியே கூட்டிப்போக முடியவில்லை. ஓயாமல் படப்பிடிப்பு இருந்தது.
சிவகுமார் வெளிïர் செல்லும்போது மனைவியை அழைத்துச் செல்வார். ஆயினும், படப்பிடிப்பு நடைபெறும் இடத்துக்கு கூட்டிப்போவதில்லை.
சிவகுமார் - லட்சுமி இல்லற வாழ்க்கையில், மூன்று குழந்தைகள் பிறந்தன.
23-7-1975-ல் சூர்யாவும், 25-5-1977-ல் கார்த்தியும், 3-3-1980-ல் பிருந்தாவும் பிறந்தனர்.
Next Story






