என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
மூன்றாம் தலைமுறை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெறும் ஸ்கோடா கார்
Byமாலை மலர்23 Jun 2020 12:21 PM GMT (Updated: 23 Jun 2020 12:21 PM GMT)
ஸ்கோடா நிறுவனத்தின் ஆக்டேவியா காருக்கு மூன்றாம் தலைமுறை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
புத்தம் புதிய ஸ்கோடா ஆக்டேவியா காருக்கு புதிய தலைமுறை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இது 10 இன்ச் டிஸ்ப்ளே ஆகும். இந்த சிஸ்டம் காரின் செட்டிங்களை தொடுதிரை, ஜெஸ்ட்யூர் மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை கொண்டு இயக்க முடியும்.
புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொலம்பஸ், ஸ்விங் மற்றும் பொலிரோ என மூன்று வகைகளில் கிடைக்கிறது. மூன்று சிஸ்டம்களும் 10 இன்ச் டிஸ்ப்ளே ஸ்கிரீன் கொண்டிருக்கின்றன. இதில் உள்ள ஐகான்ளை ஸ்மார்ட்போனில் மாற்றுவதை போன்றே மிக எளிமையாக மாற்ற முடியும்.
காரினுள் வால்யூம் மாற்றுவதற்கான கண்ட்ரோல் பட்டன்கள் ஸ்டீரிங் வீல் மற்றும் புதிய டச் ஸ்லைடர் உள்ளிட்டவற்றில் வழங்கப்பட்டு இருக்கிறது. ஒற்றை விரல் கொண்டு வால்யூம் மாற்ற முடியும். இரு விரல்களை கொண்டு நேவிகேஷன் மேப் அளவினை மாற்றிக் கொள்ளலாம்.
புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்கள் வயர்லெஸ் ஸ்மார்ட்லின்க் தொழில்நுட்பம் கொண்டு ஆப்பிள் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுடன் இணைந்து கொள்கிறது. ஒருமுறை இணைக்கப்பட்டு விட்டால், அடுத்தமுறை காரினுள் சென்றதும் ஸ்மார்ட்போன் தானாக காருடன் இணைந்து கொள்ளும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X