search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    எம்.ஜி.ஹெக்டார் கார்
    X
    எம்.ஜி.ஹெக்டார் கார்

    புதிய சலுகைக்காக காத்திருக்கும் எம்.ஜி.ஹெக்டார் எஸ்.யு.வி. வாடிக்கையாளர்கள்

    எம்.ஜி.ஹெக்டார் எஸ்.யு.வி காரின் புதிய சலுகைக்காக, இதனை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர்.
    எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் காரான ஹெக்டார் எஸ்.யு.வி. மாடலை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. ஹெக்டார் காருக்கான முன்பதிவு கடந்த ஜூன் மாதம் 4 ஆம் தேதி துவங்கியது. இந்தியாவில் ஹெக்டார் எஸ்.யு.வி. மாடலின் துவக்க விலை ரூ. 12.18 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டது.

    முன்பதிவு துவங்கியது முதல் இதுவரை சுமார் ஆயிரக்கணக்கானோர் ஹெக்டார் காரை வாங்க முன்பதிவு செய்துள்ளனர். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில், எம்.ஜி. மோட்டார் இந்திய சந்தையில் ஹெக்டார் காருக்கான முன்பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உள்ளது.

    இந்த காருக்காக வாடிக்கையாளர்கள் காத்திருப்பு காலம் 3 முதல் 4 மாதங்கள் வரை உள்ளது. இந்நிலையில், ஹெக்டார் நிறுவனம்  ‘வொர்த் வெய்ட்டிங் ஃபார்’ எனும் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தினை ஏற்கனவே இருக்கும் அனைத்து ஹெக்டார் வாடிக்கையாளர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    எம்.ஜி.ஹெக்டார் கார்

    இந்த திட்டத்தின் மூலம், கார் டெலிவரிக்கு வரும் வரை வாடிக்கையாளர்களுக்கு, வாரத்திற்கு 1000 புள்ளிகள் வழங்கப்படும். இந்த புள்ளிகள் பிற்காலத்தில் இலவச கார் பாகங்கள், ப்ரீபெய்ட் பராமரிப்பு தொகுப்பு ஆகியவற்றிற்கு பயன்படும்.

    இதனைத்தொடர்ந்து எம்.ஜி.ஹெக்டார் நிறுவனம் நாட்டில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடனும் இணைந்துள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் ஒவ்வொரு 2 வார காத்திருப்பு காலத்திலும், ஒரு பெண் குழந்தைக்கு இலவச கல்வி வழங்கப்படும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


    Next Story
    ×