என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பைக்
X
திடிரென இந்த பைக்கின் விற்பனையை நிறுத்திய யமஹா- ஏன் தெரியுமா?
Byமாலை மலர்3 March 2022 10:24 AM GMT (Updated: 3 March 2022 10:24 AM GMT)
கடந்த ஆண்டு மாதம் 5000 யூனிட்டுகள் விற்பனை செய்த ஒரு பைக்கின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
யமஹா நிறுவனம் தனது புதிய எம்டி15 பைக்கை அடுத்த மாதத்தில் அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்நிறுவனம் தற்போது உள்ள எம்.டி15 பைக்கின் விற்பனையை படிப்படியாக நிறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு நாடு முழுவதும் மாதத்திற்கு 5,000 எம்டி15 பைக்குகள் சராசரியாக விற்பனை செய்யப்பட்டன. ஆனால் கடந்த மாதம் ஜனவரியில் வெறும் 17 எம்டி15 பைக்குகள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனால் புதிய எம்டி15 பைக்கை கொண்டு வரும் வகையில் தயாரிக்கும் பணிகளை யமஹா தொடங்கியுள்ளது.
இந்த புதிய பைக்கின் காஸ்மெட்டிக் அப்டேட்களாக புதிய கிராஃபிக்ஸ் மற்றும் பெயிண்ட் தேர்வுகள் தரப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த புதிய பைக்கில் யு.எஸ்.டி ஃபோர்க்ஸ், டூயல் சேனல் ஏபிஎஸ், ப்ளூடூத் காம்பேக்டிபில் கன்சோல் உள்ளிட்ட பலதரப்பட்ட அம்சங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் விலை தற்போதைய மாடலில் இருந்து அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X