என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
மிக குறைந்த விலையில் எலெக்ட்ரிக் மொபெட் இந்தியாவில் அறிமுகம்
Byமாலை மலர்21 March 2021 4:15 AM GMT (Updated: 20 March 2021 11:20 AM GMT)
டீடெல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மொபெட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
இந்திய எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான டீடெல், இந்திய சந்தையில் குறைந்த வேகத்தில் செல்லும் புது ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. டீடெல் ஈசி பிளஸ் என அழைக்கப்படும் புது ஸ்கூட்டர் டெலிவரி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்.
புதிய ஈசி பிளஸ் ஸ்கூட்டரை டீடெல் வலைதளத்தில் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு கட்டணம் ரூ. 1,999 ஆகும். இந்த ஸ்கூட்டர் பற்றிய விவரங்களை ரைடு ஆசியா எக்ஸ்போ நிகழ்வில் டீடெல் வெளியிட்டது. குறைந்த வேகத்தில் செல்லும் இந்த ஸ்கூட்டரில் 20ஏஹெச் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
டீடெல் ஈசி பிளஸ் ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய 4 முதல் 5 மணி நேரங்கள் ஆகும். இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
குறைந்த அளவு பாடி பேனல்களை கொண்டுள்ள ஈசி பிளஸ் ஸ்கூட்டரில் ஒற்றை இருக்கை அமைப்பில் இருவர் அமரும் வகையில் உள்ளது. மேலும் இதில் வட்ட வடிவ ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X