என் மலர்
ஆட்டோமொபைல்

பென்லிங் ஆரா
இந்தியாவில் பென்லிங் ஆரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்
பென்லிங் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் ஆரா என்ற பெயரில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.
2019 இ.வி. எக்ஸ்போ விழாவில் பென்லிங் இந்தியா நிறுவனம் ஆரா என்ற பெயரில் புதிதாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது அந்நிறுவனத்தின் முதல் அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இதன் விலை அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிவிக்கப்பட இருக்கிறது.
ரெட்ரோ ஸ்டைலிங் கொண்ட ஆரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிநவீன அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் ரிமோட் கீலெஸ் சிஸ்டம், யு.எஸ்.பி. சார்ஜிங் வசதி, ஆண்டி-தெஃப்ட் அலாரம், பின்புறம் ஒருங்கிணைக்கப்பட்ட லாக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.

இத்துடன் பிரேக்டவுன் ஸ்மார்ட் அசிஸ்டண்ஸ் சிஸ்டம் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இது வாகனம் நடுவழியில் பிரேக்டவுன் ஆனாலும் தொடர்ந்து இயங்க வழி வகுக்கும். புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2500 BLDC எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் 72V/40Ah லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 60 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
Next Story






