என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோ டிப்ஸ்
X
இப்போ மட்டுமில்லை, எதிர்காலத்திலேயும் வெடிக்கும் - பாவிஷ் அகர்வால் கருத்தால் சர்ச்சை!
Byமாலை மலர்12 May 2022 11:31 AM GMT (Updated: 12 May 2022 11:31 AM GMT)
எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடிப்பது பற்றி ஓலா எலெக்ட்ரிக் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.
எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ஓலா எலெக்ட்ரிக் மட்டும் தான். மற்ற நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அடிக்கடி வெடித்து சிதறும் நிலையில், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது ஸ்கூட்டரை அறிமுகம் செய்வதற்கு முன்பே அதிக பிரிபலம் அடைந்து விட்டது.
சமீப காலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களில் தீ பிடிக்கும் நிகழ்வுகள் அதிகளவில் அரங்கேறி வருகின்றன. எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுக்கும் வகையில், இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில், எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடிப்பது பற்றி ஓலா எலெக்ட்ரிக் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.
அதன்படி, “புதிய ஆட்டோமொபைல் பிரிவில் எலெக்ட்ரிக் வாகன தீ விபத்துக்கள் மிக எளிதில் பலரின் கவனத்தை ஈர்த்து விடுகிறது,” என்று பாவிஷ் அகர்வால் தெரிவித்து இருக்கிறார். எலெக்ட்ரிக் வாகன தீ விபத்துக்களை அடுத்து தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் பேசி இருந்தார் என தகவல் வெளியாகி உள்ளது.
“எதிர்காலத்திலும் இதே போன்று நடக்கும், ஒரு வேளை நடக்கலாம். ஆனால் வாகனத்தின் அனைத்து பிரச்சினையையும் கவனித்து சரி செய்வது தான் எங்கள் குறிக்கோள். ஏதேனும் பிரச்சினை இருந்தால், அதனை உடனே சரி செய்து விடுவோம். சிறு பிரச்சினைகள் காரணமாக எதிர்காலத்திலும் இ ஸ்கூட்டர்களில் தீ விபத்து ஏற்படும். சாலைகளில் வலம் வரும் 50 ஆயிரம் ஓலா இ ஸ்கூட்டர்களில் ஒன்று தான் வெடித்து இருக்கிறது,” என ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X