என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
நாடு முழுக்க ஒரு லட்சம் சார்ஜிங் மையங்கள் - தனியார் நிறுவனம் அதிரடி
Byமாலை மலர்1 Oct 2021 9:20 AM GMT (Updated: 1 Oct 2021 9:20 AM GMT)
இ-பைக்-கோ நிறுவனம் நாடு முழுக்க சுமார் ஒரு லட்சம் சார்ஜிங் மையங்களை கட்டமைக்க திட்டமிட்டுள்ளது.
ஐ.ஓ.டி. எனப்படும் இண்டர்நெட் ஆப் திங்ஸ் சார்ந்து இயங்கும் சார்ஜிங் மையங்களை கட்டமைக்கும் பணிகளை துவங்க இ-பைக்-கோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நாடு முழுக்க சுமார் ஒரு லட்சம் சார்ஜிங் மையங்களை கட்டமைக்க இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சார்ஜிங் மையங்கள் இ-பைக்-கோ சார்ஜ் எனும் பெயரில் இயங்க இருக்கின்றன.
இ-பைக்-கோ நிறுவனம் நாட்டின் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பிளாட்பார்ம் ஆகும். குறைந்த விலையில் ஐ.ஓ.டி. சார்ந்த சார்ஜிங் மையங்களை உருவாக்க இருப்பதாக இ-பைக்-கோ தெரிவித்துள்ளது. இவற்றை பயனர்கள் ஸ்மார்ட்போன் செயலி மூலம் பயன்படுத்தலாம். வைபை வசதி இருப்பதால், சார்ஜிங் விவரங்களை மிக துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.
புதிய ஐ.ஓ.டி. சார்ந்த சார்ஜிங் மையங்களை ஒவ்வொரு 500 மீட்டர்களில் கட்டமைக்க இ-பைக்-கோ திட்டமிட்டுள்ளது. மேலும் வாகனத்தில் முழு சார்ஜ் ஆனதும், சார்ஜிங் தானாக நிறுத்தப்பட்டு விடும். சார்ஜிங் செய்வதற்கான கட்டண முறைகளிலும் இ-பைக்-கோ ரீசார்ஜ் திட்டங்களை வழங்க இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X