என் மலர்

    தனுசு - தமிழ் மாத ஜோதிடம்

    தனுசு

    புரட்டாசி மாத ராசிபலன்

    18-09-2023 முதல் 17-10-2023 வரை

    எதிர்காலச் சிந்தனையிலேயே எப்பொழுதும் மூழ்கியிருக்கும் தனுசு ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு, ஏழரைச் சனியில் குடும்பச் சனியாக வக்ரம் பெற்றிருக்கிறார். எனவே எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் தாக்குதல்கள் வரலாம். வழக்குகள் தொடரும். வருமானப் பற்றாக்குறையின் காரணமாக ஒருசிலர் கடன்களை வாங்கும் சூழ்நிலையும் ஏற்படும். தொழில், உத்தியோகத்தில் மிகுந்த விழிப்புணர்ச்சி தேவை. எந்தப் புது முயற்சியில் ஈடுபட்டாலும் அனுபவஸ்தர்களையோ, ஆன்மிகப் பெரியவர்களையோ ஆலோசனை கேட்டுச் செய்வது நல்லது.

    புதன் வக்ரம்

    புரட்டாசி 10-ந் தேதி, கன்னி ராசியில் புதன் வக்ரம் பெறுகிறார். அதே நேரத்தில் அந்த வீடு புதனுக்கு உச்ச வீடாகும். உங்கள் ராசிக்குத் தொழில் ஸ்தானாதிபதி புதன் வக்ரம் பெற்றாலும் யோகம்தான். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். புதிய தொழில் தொடங்குவது பற்றிய சிந்தனை செயலாகும். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு திடீரென பொறுப்புகள் மாற்றப்படலாம். வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் திடீர் தாக்குதல்களும், வைத்தியச் செலவுகளும் ஏற்படும். பெற்றோரின் உடல்நலத்திலும் பிரச்சினைகள் ஏற்படலாம். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. இருப்பினும் கடைசி நேரத்தில் காரியங்கள் கைகூடிவிடும். புரட்டாசி 17-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிக்கு விரயாதிபதியான செவ்வாய் லாப ஸ்தானத்திற்கு வருவதால் விரயத்திற்கேற்ற லாபம் வந்து கொண்டேயிருக்கும். எந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டுமே என்று நினைக்க வேண்டாம். காரியத்தை தொடங்கிவிட்டால் பணப்புழக்கம் வந்துசேரும். அதுமட்டுமல்ல கேட்ட இடத்தில் உதவிகளும் கிடைக்கும். சொத்து விற்பனையால் லாபங்களும் உண்டு.

    துலாம் - புதன் புரட்டாசி

    28-ந் தேதி துலாம் ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானாதிபதியான புதன், லாப ஸ்தானத்திற்கு வருவது நல்ல நேரம்தான். தொழில், உத்தியோகத்தில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து அதன் மூலம் உதிரி வருமானமும் வரலாம். பணி ஓய்வுபெற்ற பிறகும் உங்களுக்கு வேலை கிடைத்து வருமானம் வரலாம். வெளிநாட்டில் இருந்து நல்ல அழைப்புகள் வரும். சுபகாரியப் பேச்சு முடிவாகும்.பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு குறுக்கீடு சக்திகளை எதிர்கொள்ளும் சூழல் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பணியாளர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரம் இது. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வருவதில் தாமதம் ஏற்படும். மாணவ-மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கும். எனவே ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக்கொள்வது நல்லது. பெண்களுக்கு நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். நல்ல வாய்ப்பு வந்தாலும் உபயோகப்படுத்திக் கொள்ள இயலாது. குடும்பச் சுமை அதிகரிக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்:

    19, 22, 25, 26, 29, 30, அக்டோபர்: 11, 12, 16, 17. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பொன்னிற மஞ்சள்.

    தனுசு

    தமிழ் மாத ராசிபலன்கள்

    18-08-2023 முதல் 17-09-2023 வரை

    வருபவரை வரவேற்பதில் வல்லவர்களாக விளங்கும் தனுசு ராசி நேயர்களே!

    ஆவணி மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாத தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசியைப் பார்க்கிறார். ஆயினும் அவர் வக்ரம் பெறும் மாதம் இது. அதே நேரத்தில் சனி வக்ர இயக்கத்தில் பின்னோக்கி வந்து, ஏழரை சனியில் பாத சனியாக செயல்படப் போகிறார். எனவே பகைக்கு மத்தியில் வாழ்க்கையும், போட்டிக்கு மத்தியில் முன்னேற்றமும் ஏற்படப்

    போகிறது.

    கடக - சுக்ரன் ஆவணி 1-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, ௧௧ ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 6-ம் இடத்திற்கு வரும்போது 'விபரீத ராஜயோக' அடிப்படையில் எதிர்பாராத விதத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும். பூமி யோகம் முதல் புதிய வாகனம் வாங்கும் யோகம் வரை நடைபெறும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அடகு வைத்த நகைகளை மீட்டுக்கொண்டு வருவீர்கள்.

    பகையான உறவினர்கள் உறவாகி பாசம் காட்டுவர். உத்தியோகத்தில் திடீர் முன்னேற்றமும், சம்பள உயர்வும் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். கன்னி - செவ்வாய் ஆவணி 2-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார்.

    உங்கள் ராசிக்கு பஞ்சம - விரயாதிபதியானசெவ்வாய், 10-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். எனவே புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பிள்ளைகள் வழியில் சில நல்ல தகவல்கள் கிடைக்கும். குறிப்பாக படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும். பூர்வீக சொத்துகளை விற்றுவிட்டு, புதிய சொத்துகள் வாங்கும் யோகம் ஒருசிலருக்கு உண்டு. பயணங்கள் பலன் தருவதாக அமையும்.

    மகர - சனி சனி பகவான் ஆவணி 7-ந் தேதி, மகர ராசிக்கு வக்ர இயக்கத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திற்கு வரும் சனி, குடும்ப சனியாக சஞ்சரிக்கப் போகிறார். எனவே குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

    பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் வந்துசேரும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நடைபெறாத ஒருசில காரியங்கள் இப்பொழுது நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். பொருளாதாரத்தில் இருந்த பற்றாக்குறை அகலும். சனி வழிபாடு நன்மைகளை வழங்கும்.

    புதன் வக்ர நிவர்த்தி சிம்மத்தில் சஞ்சரிக்கும் புதன், ஆவணி 15-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்து வக்ர நிவர்த்தி பெறுகிறார். எனவே தொட்டது துலங்கும். தொழில் வளம் சிறக்கும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து மகிழ்ச்சி காண்பீர்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும். வெளிநாட்டில் இருந்து அனுகூலத் தகவல் வந்து சேரும்.

    புதிய ஒப்பந்தங்கள், பொருளாதார விருத்திக்கு அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் பொறுப்புகள் திடீரென மாற்றப்படலாம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு, பணியாளர்களின் தொல்லை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகளும், அதனால் பிரச்சினைகளும் உருவாகும். கலைஞர்கள், சகக் கலைஞர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரம் இது.

    மாணவ- மாணவிகளுக்கு கவனச் சிதறல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பெண்களுக்கு மனவருத்தம் அதிகரிக்கும். மகிழ்ச்சி குறையாமல் இருக்க தெய்வ வழிபாடுகள் கைகொடுக்கும். பணிபுரியும் பெண்களுக்கு அருகில் இருப்பவர்களால் பிரச்சினை ஏற்படலாம்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஆகஸ்டு: 18, 19, 21, 22, 29, 30, செப்டம்பர்: 2, 3, 11, 14, 17.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

    தனுசு

    தமிழ் மாத ராசிப்பலன்

    17.7.23 முதல் 17.8.23 வரை

    திட்டம் போட்டுச் செயலாற்றும் தனுசு ராசி நேயர்களே!

    ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசியைப் பார்க்கிறார். சகாய ஸ்தானாதிபதி சனி வக்ரம் பெற்றிருக்கிறார். பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் ஒன்று கூடி 'சுக்ர மங்கல யோக'த்தை உருவாக்குகிறார்கள். பொதுவாக குரு பகவான் ராசியைப் பார்க்கும் பொழுது, எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கும். எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றியாகும். நல்லது நடக்க நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். நாட்டுப்பற்று மிக்கவர்களுக்கு நல்ல பொறுப்புகள் வந்துசேரும். கூட்டு முயற்சியில் இருந்து விலகித் தனித்து இயங்க வாய்ப்புகள் கைகூடிவரும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும்.

    மேஷ - குரு சஞ்சாரம்

    நவக்கிரகத்தில் சுபகிரகமான குரு பகவான் இப்பொழுது மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். குரு உங்கள் ராசிக்கு அதிபதி என்பதால், அவரது பார்வை சிறப்பு வாய்ந்ததாகும். உங்கள் ராசியையும், 9, 11 ஆகிய இடங்களையும் பாா்ப்பதால், எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கப் போகிறது. தேக்க நிலை மாறித் தெளிவு பிறக்கும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். பார்க்கும் தொழில் எதுவாக இருந்தாலும் அதில் பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்ப ஒற்றுமை பலப்படும்.

    குருவின் பார்வை 9,11 ஆகிய இடங்களில் பதிவதால் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அன்பு நண்பர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவர். ஆதாயம் தரும் தகவல் அதிகமாகவே கிடைக்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். லாப ஸ்தானம் புனிதமடைவதால் தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெறும் தொழிலை சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.

    சிம்ம - புதன்

    ஆடி 7-ந் தேதி, சிம்ம ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். எனவே படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் வாழ்க்கைத் துணைக்கு நல்ல வேலை கிடைக்கும். அதன் மூலம் உதிரி வருமானங்கள் வந்து உள்ளத்தை மகிழ்விக்கும். இடம் வாங்குவது, வாங்கிய இடத்தில் மனை கட்டத் தொடங்குவது பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்து ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்குப் பணியாளர்களால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், உடன் பணிபுரிபவர்களிடம் உங்கள் முன்னேற்றம் பற்றித் தெரிவிக்க வேண்டாம். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகள், ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு நல்ல முன்னேற்றம் காண்பர். பெண்களுக்கு குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும். கணவன் - மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜூலை: 21, 22, 25, 26, ஆகஸ்டு: 2, 3, 6, 7, 17.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.

    தனுசு

    தமிழ் மாத ராசிப்பலன்

    எப்போதும் எதையாவது சிந்தித்துக் கொண்டிருக்கும் தனுசு ராசி நேயர்களே!

    ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசியைப் பார்க்கிறார். சகாய ஸ்தானத்தில் சனி பகவான் உலா வருகிறார். எனவே மனப்போர் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பணப்புழக்கம் திருப்தி தரும். குரு பார்வையால் குடும்பத்தில் இதுவரை நடைபெறாதிருந்த காரியம் ஒவ்வொன்றாக நடைபெறத் தொடங்கும். உத்தியோகத்தில் உயர்மட்ட அதிகாரிகள் உங்கள் திறமையைக் கண்டு ஆச்சரியப்படுவதோடு, அதற்கேற்ற விதத்தில் கூடுதல் பொறுப்புகளையும் கொடுக்கலாம்.

    மிதுன - புதன்

    ஆனி 3-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். அது அவருக்கு சொந்த வீடாகும். உங்கள் ராசிக்கு 7-ம் இடத்திற்கு அதிபதியான புதன், அங்குள்ள சூரியனோடு சேர்ந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். எனவே நல்ல நிகழ்ச்சிகள் பலவும் இல்லத்தில் நடைபெறும். குறிப்பாக கல்யாணம், காதுகுத்து, மணிவிழா, முத்துவிழா, பவளவிழா போன்ற விழாக்கள் தாமதமின்றி நடைபெற வழிபிறக்கும். புதன் தொழில் ஸ்தானாதிபதியாகவும் விளங்குவதால் அரசு வழி ஆதரவோடு புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும்.

    சிம்ம - செவ்வாய்

    ஆனி 17-ந் தேதி, சிம்ம ராசிக்கு செவ்வாய் செல்கிறார். அவர் உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். குரு பகவான் பார்வை செவ்வாய் மீது பதிந்து 'குரு மங்கல யோகம்' உருவாகின்றது. இக்காலத்தில் முன்னோர் சொத்துக்களில் முறையான பங்கீடு கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். தொழிலில் இருந்த ஏற்ற இறக்க நிலை மாறும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.

    சிம்ம - சுக்ரன்

    ஆனி 18-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்குள்ள செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கல யோக'த்தை உருவாக்குகிறார். இதன் விளைவாகப் பெண்களால் பெருமைசேரும். வெளிநாட்டில் பணிபுரிய முயற்சித்தவர்களுக்கு அழைப்பு வரலாம். குருவின் பார்வை பதிந்த செவ்வாயின் பார்வை, சனி மீது பதிவதால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் தொழில் சம்பந்தமாக எடுத்த புது முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படலாம். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காமல் போகலாம். உறவினர் வழியில் மன ஸ்தாபங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

    கடக - புதன்

    ஆனி 19-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல்கிறார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 7, 10-க்கு அதிபதியான புதன் 8-ல் வரும்பொழுது, வாழ்க்கைத் துணைக்கு உத்தியோகம் கிடைத்து வருமானம் வரலாம். செய்தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வரலாம். கடன்சுமை படிப்படியாகக் குறையும். சென்ற மாதத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த புது முயற்சி வெற்றிதரும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்காலம் இனிமையாக அமைய எடுத்த முயற்சி வெற்றிதரும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு புதிய துறைகளைத் தேர்ந்தெடுத்து அதில் முதலீடு செய்ய முன்வருவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவோடு முன்னேற்றம் காண்பர். கலைஞர்களுக்கு சகக் கலைஞர்களின் மூலம் நன்மை வந்துசேரும். மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி படிப்பு சிறப்பாக அமையும். பெண்களுக்கு குடும்ப நலன்கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். தங்கள் பெயரிலேயே சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு பாராட்டு கிடைக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 23, 24, 25, 28, 29, ஜூலை: 5, 6, 10.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

    தனுசு

    தமிழ் மாத ராசிப்பலன்

    15.5.23 முதல் 15.6.23 வரை

    இரக்க குணத்தால் பிறர் மனதில் இடம்பிடிக்கும் தனுசு ராசி நேயர்களே!

    வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, உங்கள் ராசிநாதன் குரு பகவான் உங்கள் ராசியைப் பார்க்கிறார். 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கேற்ப நல்ல சந்தர்ப்பங்கள் உங்களை நாடிவரப்போகிறது. தொழில் முன்னேற்றம் உண்டு. தொலை தூரத்தில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் வரும் தகவல்கள் ஆதாயம் தருவதாக அமையும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பாராத விதத்தில் தலைமைப் பதவிகள் தேடிவரலாம். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேருவர். மனவலிமையும், பணவலிமையும் பெற்றுள்ள உங்களுக்கு இம்மாதம் இனிய பலன்கள் ஏராளம் நடைபெறும்.

    ராகு-கேது சஞ்சாரம்

    பின்னோக்கி நகரும் கிரகமான ராகு பகவான் 5-ம் இடத்திலும், கேது பகவான் லாப ஸ்தானத்திலும் வீற்றிருக்கிறார்கள். பஞ்சம ராகுவின் பலத்தால் பூர்வீகச் சொத்துப் பிரச்சினை தலைதூக்கும். உங்களுக்கு கிடைத்த பங்கை விலைக்கு வாங்கிக் கொள்ள பலரும் காத்திருப்பர். பூர்வீக சொத்துகளை விற்றுவிட்டுப் புதிய சொத்துகளை வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் சுபகாரியம் நடைபெறும். ஆதாயம் இல்லாத அலைச்சல் ஏற்படலாம். வெளிநாடு செல்லும் வாய்ப்பில் தடைகள் உருவாகும். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். என்றாலும் குரு பார்வை இருப்பதால் அவ்வப்போது உடல்நலம் சீராக வழி வகுத்துக்கொள்வீர்கள். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.

    கடக - சுக்ரன்

    வைகாசி 16-ந் தேதி கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்குள்ள நீச்சம்பெற்ற செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கள யோக'த்தை உருவாக்குகிறார். உங்கள் ராசிநாதன் குருவிற்கு, சுக்ரன் பகைக்கிரகம் ஆவார். 6-க்கு அதிபதியான சுக்ரன் 12-க்கு அதிபதியான செவ்வாயோடு இணைவதால் மறைமுக எதிர்ப்புகள் மாறும். மகத்தான காரியங்கள் மகிழ்ச்சி தரும் வகையில் நடைபெறும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு வழக்குகள், பஞ்சாயத்துகள் சாதகமாக அமையும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு மனக்குழப்பத்தை ஏற்படுத்திய பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். தொழிலில் வாடிக்கையாளர்களின் ஆதரவு திருப்தி தரும். எதிர்பார்த்த லாபம் எளிதில் கிடைக்கும்.

    ரிஷப - புதன்

    வைகாசி 18-ந் தேதி ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 10-க்கு அதிபதியான புதன், சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். அதோடு 'தர்ம கர்மாதிபதி யோக'மும் செயல்படுவதால், தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். தொழில் வளம் சிறப்பாக அமையும். அரசியல் களத்தில் உள்ளவர்களுக்கு அற்புதமான நேரம் இது. மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். கூடுதல் பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கலாம். ஆரோக்கியம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். காரியங்களை உடனடியாக செய்து முடிக்கும் ஆற்றல் பிறக்கும். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் புகழ் கூடும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடையூறாக இருந்த மேலதிகாரிகள் விலகிச் செல்வர். கலைஞர்களுக்கு யோகமான நேரம் இது. பெண்களுக்கு குடும்பத்தில் மங்கல ஓசை கேட்க வழிபிறக்கும். கணவன் - மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு இலாகா மாற்றம் வரலாம்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 16, 17, 27, 28, 31, ஜூன்: 1, 8, 9, 12, 13.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிளிப்பச்சை.

    தனுசு

    தமிழ் மாத ராசிப்பலன்

    14.4.2023 முதல் 14.5.2023

    மற்றவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கும் தனுசு ராசி நேயர்களே!

    சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு சுக ஸ்தானத்தில் பலம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். ஏழரைச் சனி விலகி விட்டது. இனி உங்களுக்கு யோகம்தான். படிப்படியாக நல்ல பலன்கள் உங்களைத் தேடி வரப்போகின்றது. இதுவரை எவ்வளவு முயற்சித்தும் நடைபெறாத காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும். முக்கியப் புள்ளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர். சிக்கல்களும், சிரமங்களும் அகலும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். குருப்பெயர்ச்சிக்குப் பின்னால் அதிகளவு நன்மை கிடைக்கப்போகின்றது. வாய்ப்புகள் தேடிவரும். வாயுதாக்கள் ஓயும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.

    சனியின் சஞ்சாரம்

    மாதத் தொடக்கத்தில் சனி பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். இப்பொழுது ஏழரைச்சனி விலகிவிட்டது. தற்சமயம் ஒருசில மாதங்கள் மட்டுமே கும்பத்தில் சனி இருந்தாலும், அது நற்பலன்களை வழங்கும். கடந்த காலத்தில் இருந்த வம்பு, வழக்குகள் எல்லாம் முடிவுக்கு வரும். நல்ல காரியங்கள் இல்லத்தில் ஒவ்வொன்றாக நடைபெறும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். தெய்வ வழிபாடுகள் திருப்தியான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும் நேரம் இது. புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். ஏழரைச்சனி விலகிய இந்த நேரத்தில் வாழ்வை வளமாக்கிக் கொள்ள வழிபிறக்கும்.

    மேஷ - குரு

    சித்திரை 9-ந் தேதி மேஷ ராசிக்கு குரு வருகின்றார். உங்கள் ராசிக்கு 5-ம் இடத்திற்கு வரும் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது. மேலும் 9, 11 ஆகிய ஸ்தானங்களிலும் பதிகின்றது. எனவே ஆரோக்கியம் சிறப்பாக அமையும். அதிக உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும். பெரிய மனிதர்களின் ஆதரவோடு பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். உயர்ந்து வரும் பொருளாதாரம் மனதை மகிழ்விக்கும். மங்களகரமான சுபநிகழ்வுகள் இல்லத்தில் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறப் போகின்றது. முன்னோர் வழி சொத்துக்களில் முறையான பங்கீடுகளும் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு மாறுதல்களும் உண்டு.

    மிதுன - சுக்ரன்

    சித்திரை 20-ந் தேதி மிதுன ராசிக்கு சுக்ரன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். உங்கள் ராசிநாதன் குருவிற்கு பகைக் கிரகமாகவும் விளங்குபவர் சுக்ரன். அவர் சப்தம ஸ்தானத்தில் இருந்து ராசியைப் பார்ப்பது அவ்வளவு நல்லதல்ல. திடீர் தாக்கங்களும், வளர்ச்சிக்கு இடையூறுகளும் வரலாம். நாணயப் பாதிப்புகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை கூட உருவாகலாம். குடும்பத்தில் பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். அதிக விலைக்கு வாங்கிய பொருளைக் குறைந்த விலைக்கு விற்க நேரிடும்.

    இம்மாதம் ஆதியந்தப் பிரபு வழிபாடு ஆனந்தம் வழங்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஏப்ரல்: 15, 18, 19, 30, மே: 1, 5, 6, 12, 13.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பொன்னிற மஞ்சள்.

    தனுசு

    தமிழ் மாத ராசிப்பலன்

    15.3.2023 முதல் 13.4.23 வரை

    எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றிபெறும் தனுசு ராசி நேயர்களே!

    பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு, சூரியன் மற்றும் புதனுடன் இணைந்து சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். தொழிலில் கூடுதல் வளர்ச்சி ஏற்படும். கடுமையாக உழைத்தும் பலன் கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டவர்கள், இப்பொழுது மகிழ்ச்சிக் கடலில் மிதக்கப் போகிறார்கள். கூர்ந்த மதி கொண்டு குறிக்கோளை அடையும் உங்களுக்கு, தீர்த்த யாத்திரைகளிலும், தெய்வ தரிசனங்களிலும் கவனத்தைச் செலுத்த வாய்ப்பு உருவாகும்.

    இம்மாதம் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியைப் பார்ப்பதால், பங்குனி 14-ந் ேததி வரை 2-ம் இடம் வலுவிழக்கின்றது. எனவே கொடுத்த வாக்கைக் காப்பாற்ற பெரும் முயற்சி எடுக்கும் சூழ்நிலை உருவாகும். குடும்ப ரகசியங்களை மூன்றாம் நபரிடம் சொல்வதன் மூலம், அமைதி குறையலாம். பிள்ளைகளின் எதிர்பார்ப்பு கள் அதிகரிக்கும். செய்தொழிலில் வரும் லாபம் ஏட்டில் இடம் பெற்றிருக்கும். ஆனால் எளிதில் கைக்கு கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

    மேஷ - புதன்

    பங்குனி 15-ந் தேதி உங்கள் ராசிக்கு 7, 19 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு செல்கிறார். இக்காலம் ஒரு பொற்காலமாகும். இல்லற வாழ்க்கை இனிதாக நடைபெறும். வாசல் தேடி வந்த வரன்கள் வந்த வழியே திரும்பாமல் நல்லபடியாக முடியும் விதத்தில் நம்பிக்கை அளிக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் இருந்த தொல்லைகள் அகலும். வழிகாட்டும் நல்லவர்கள் மூலம் வருமானம் குவியும். சிந்தனைகளைச் செயல்படுத்தி சிறப்பான வாழ்வை அமைத்துக்கொள்வீர்கள். பிள்ளைகளின் மேற்படிப்பு மற்றும் கல்யாணக் கனவுகளை நனவாக்க நல்லவிதமாக எடுத்த முயற்சி கைகூடும்.

    ரிஷப - சுக்ரன்

    பங்குனி 24-ந் தேதி ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதி சுக்ரன் ஆவார். சுக்ர பலம் நன்றாக இருந்தால் அக்கறை செலுத்தாத காரியங்களில் கூட ஆதாயம் கிடைக்கும் என்பார்கள். அந்த அடிப்படையில் எடுத்த காரியங்கள் கச்சிதமாய் முடியும். பொய் வைத்த நெஞ்சினரை புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். துன்பங்கள் தூளாகும். விரும்பிய வேலை கிடைக்கும். தொழில் புரிய நினைப்பவர்களுக்கு பங்குதாரர்கள் வந்திணைந்து பக்குவமாகச் செயல்படுவர்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ்கொடி பறக்கும் நேரம் இது. மக்கள் மனதில் மகத்தான இடம்பிடிப்பீர்கள். வியாபாரம், தொழிலில் உள்ளவர்கள் அரசாங்க அனுகூலத்தோடு ஆதாயம் பெறுவர். கலைஞர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் உண்டு. மாணவ - மாணவி களுக்கு கல்வி மேம்பாடு அதிகரிக்கும். கச்சிதமாகப் படித்து பிறர் மெச்சும் அளவிற்கு உயர்வர். பெண்களுக்கு மணமாலை சூடும் வாய்ப்பு உருவாகும். மழலை இல்லாத தம்பதியர்களுக்கு, அதற்காக எடுத்த மருத்துவம் கைகொடுக்கும். உறவினர் பகை மாறும். உதிரி வருமானம் வந்து சேரும்.

    இம்மாதம் நவக்கிரக வழிபாடு நன்மையை வழங்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    மார்ச்: 18, 19, 22, 23, ஏப்ரல்: 2, 3, 4, 7, 8.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

    தனுசு

    தமிழ் மாத ராசிப்பலன்

    13.2.2023 முதல் 14.3.2023 வரை

    எதிலும் உண்மையை அறிந்து ெசயல்படும் தனுசு ராசி நேயர்களே!

    மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு சுக ஸ்தானத்தில் பலம்பெற்றுச் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசியைக் கேது பார்க்கிறார். தொழில் ஸ்தானாதிபதி புதன், சனியோடு தன ஸ்தானத்தில் கூடியிருக்கிறார். எனவே தொழில் முன்னேற்றம் உண்டு. உங்கள் ராசிநாதன் குருவின் பார்வை, உங்கள் ராசிக்கு 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிவாகின்றது. எனவே சென்ற மாதத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வந்துசேரும். ஏழரைச் சனியில் பாதச் சனியின் ஆதிக்கம் நடக்கிறது. எனவே பொருளாதார நிலை உயரும்.

    உச்ச சுக்ரன் சஞ்சாரம்

    மாசி 4-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் சுக்ரனுக்கு, அது உச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 6, 11-க்கு அதிபதியான சுக்ரன், உச்சம் பெற்று குருவோடு இணையும் போது எதிர்பார்த்த இனிய மாற்றங்கள் வரலாம். குறிப்பாக மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களுக்கு ஆதரவு தருவர். உத்தியோகத்தில் கூடுதல் சம்பளம் தருவதாக சொல்லி, வெளிமாநிலங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். அதை உங்கள் வசதியைக் கருத்தில் கொண்டு பயன்படுத்திக்கொள்வது நல்லது.

    கும்ப - புதன் சஞ்சாரம்

    மாசி 9-ந் தேதி, கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது திருமண முயற்சிகள் கைகூடும். கடமையைச் செவ்வனே செய்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். தொழிலில் பங்குதாரர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். மாமன், மைத்துனர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிநாட்டு வணிகம் லாபம் தரும்.

    மீன - புதன் சஞ்சாரம்

    மாசி 25-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு சப்தமாதிபதி நீச்சம் பெறும் பொழுது, வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. மருத்துவச் செலவுகள் கூடும். தொழில் மந்த நிலையில் இருக்கும். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மறுப்பர். வேறு வேலைக்குச் செல்லலாமா? என்று சிந்திப்பீர்கள்.

    மேஷ - சுக்ரன் சஞ்சாரம்

    மாசி 29-ந் தேதி, மேஷ ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு அதிபதி, 5-ம் இடத்தில் சஞ்சரிக்கும் போது, பிள்ளைகளின் வேலைக்காக எடுத்த முயற்சி பலன் தரும். பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும். உடன் பிறந்தவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர். பொதுவாழ்வில் இருப்பவர்கள் இழந்த பதவியை மீண்டும் பெறுவர்.

    மிதுன - செவ்வாய் சஞ்சாரம்

    மார்ச் 30-ந் தேதி, மிதுன ராசிக்குச் செவ்வாய் செல்கிறார். அங்கிருந்து மகரத்தில் உள்ள சனியைப் பார்க்கப் போவதால் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. குடும்பச் சுமை கூடும். மற்றவர்களுக்காக நீங்கள் நன்மை செய்தாலும் அது தீமையாகத் தெரியும். உத்தியோகத்தில் திடீர் மாற்றங்கள் வரலாம்.

    இம்மாதம் பைரவர் வழிபாடு வளர்ச்சியைக் கூட்டும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    பிப்ரவரி: 19, 20, மார்ச்: 6, 7, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.

    தனுசு

    தமிழ் மாத ராசிப்பலன்

    16.12.22 முதல் 14.1.23 வரை

    சந்தர்ப்பங்களை உபயோகப்படுத்திக் கொண்டு சாதிக்கும் தனுசு ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு சுக ஸ்தானத்தில் பலம் பெற்றிருக்கிறார். தனாதிபதியான சனி தன ஸ்தானத்தில் வலிமையுடன் இருக்கிறார். எனவே இந்த மாதம் இனிய மாதமாக அமையும்.

    புதன் வக்ர இயக்கம்

    உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், மார்கழி 3-ந் தேதி உங்கள் ராசியிலேயே வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். களத்திர ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான புதன் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. வாழ்க்கைத் துணை வழியேயும், வாரிசுகளாலும் பிரச்சினைகள் உருவாகும். தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். திடீர் திருப்பங்கள் பலவும் வந்து சேரும். வாசல் தேடி வந்த வரன்கள் திரும்பிச் செல்லலாம். வழிபாட்டில் கூட கவனச் சிதறல் அதிகரிக்கும். தொழிலில் நண்பர்களை நம்பி ஏமாறும் சூழ்நிலை உண்டு.

    மகர - சுக்ரன் சஞ்சாரம்

    உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், மார்கழி 15-ந் தேதி மகர ராசிக்கு செல்கிறார். 11-க்கு அதிபதி 2-ல் வரும் இந்த நேரம் பெரியளவில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். உங்கள் தொழில் வெற்றிநடை போடும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும். 6-க்கு அதிபதியாகவும் சுக்ரன் விளங்குவதால், பெயரளவில் விரயங்களும் ஏற்படும். அதை சுபவிரயங்களாக மாற்றிக்கொள்வது நல்லது. பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று, நீண்ட தூரங்களில் பணிபுரிய வேண்டியதிருக்கும். வெளிநாட்டு முயற்சி அனுகூலம் தரும். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும். தொழில் வணிகம் சார்ந்த முயற்சிகளுக்கு மாற்று இனத்தவர் உறுதுணையாக இருப்பர்.

    புதன் வக்ர நிவர்த்தி

    மார்கழி 24-ந் தேதி, தனுசு ராசியில் சஞ்சரிக்கும் புதன் வக்ர நிவர்த்தியாவதால் நன்மைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். களத்திர ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான புதன் பலம்பெறும் பொழுது தொழில் வெற்றி நடைபோடும். லாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வு தானாக வந்து சேரும். 7-ம் இடத்திற்கு அதிபதியாகவும் புதன் இருப்பதால் இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான வாய்ப்பு கைகூடிவரும். 'இதுவரை வந்த வரன்கள் ஒன்றும் பொருத்தமாக இல்லையே' என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தவர்கள், நல்ல தகவல் கிடைத்து மகிழ்ச்சியடையப் போகிறார்கள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர்.

    செவ்வாய் வக்ர நிவர்த்தி

    மார்கழி 29-ந் தேதி, ரிஷபத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி வக்ர நிவர்த்தியாவது யோகம்தான். அண்ணன் - தம்பிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மாறும். எண்ணியபடியே பாகப்பிரிவினைகள் சிறப்பாக நடைபெறும். பிள்ளைகளின் கல்வி மற்றும் கல்யாணம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பங்காளிப் பகை மாறும்.

    12-க்கு அதிபதியாகவும் செவ்வாய் விளங்குவதால் விரயங்கள் ஏற்படத்தான் செய்யும். என்றாலும் சுபவிரயமாகவே இருக்கும். குடும்ப முன்னேற்றம் கருதி செலவிடுவீர்கள். குடியிருக்கும் வீட்டை விலைக்கு வாங்குவது அல்லது பிள்ளைகளின் கல்யாண முயற்சியில் சீர்வரிசைப் பொருட்கள் வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படும்.

    இம்மாதம் ஞாயிற்றுக்கிழமை தோறும் சூரிய வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- டிசம்பர்: 18, 19, 26, 27, 30, 31, ஜனவரி: 11, 12. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.

    தனுசு

    இந்த வார ராசிப்பலன்

    17.11.21 முதல் 15.12.21 வரை

    சவாலான காரியங்களைக் கூட சாதாரணமாக முடித்துக் காட்டும் தனுசு ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் குரு சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். ஏழரைச் சனியில் குடும்பச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகின்றது. எனவே குடும்பச்சுமை கொஞ்சம் கூடுதலாக இருக்கும். 6-க்கு அதிபதி சுக்ரனும் உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பதால் பணிபுரியும் இடத்தில் சில பிரச்சினை களைச் சந்திக்க நேரிடும்.

    செவ்வாய்-சனி பார்வைக் காலம்

    மாதத் தொடக்கத்தில் இருந்து கார்த்திகை 20-ந் தேதி வரை செவ்வாய்-சனியின் பார்வை இருக்கின்றது. மகரத்தில் உள்ள சனியை துலாத்தில் உள்ள செவ்வாய் பார்க்கின்றது. செவ்வாய் மகரத்திலுள்ள சனியைப் பார்க்கின்றார். எனவே எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. ஒருசிலர் வீண் பழிகளுக்கு ஆளாக நேரிடலாம். குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகலாம். பிள்ளைகளை நெறிப்படுத்த வேண்டிய நேரமிது.

    விருச்சிக புதனின் சஞ்சாரம்

    கார்த்திகை முதல் நாளே விருச்சிக ராசிக்குப் புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும்பொழுது தொழில் மாற்றங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதி குறைவாகவே இருக்கும். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடன் பணிபுரிபவர்களால் பிரச்சினைகள் ஏற்படும். வாழ்க்கைத் துணை வழியே உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும்.

    தனுசு புதனின் சஞ்சாரம்

    கார்த்திகை 18-ந் தேதி தனுசு ராசிக்கு புதன் செல்கின்றார். அங்குள்ள சுக்ரனோடு சேர்ந்து புத-சுக்ர யோகத்தை உருவாக்குகின்றார். உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கும் புதனால் சில நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். எதிரிகள் விலகுவர். பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். வாடகைக்கு கட்டிய கட்டிடங்கள் இப்பொழுது செயல்படத் தொடங்கி உதிரி வருமானங்களைக் கொடுக்கும். ஆரோக்கியத் தொல்லைகள் அகலும்.

    மகர சுக்ரனின் சஞ்சாரம்

    கார்த்திகை 19-ந் தேதி மகர ராசிக்குச் சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிநாதன் குருவிற்கு சுக்ரன் பகை கிரகமாவார். மேலும் எதிரிகள் ஸ்தானத்திற்கும் அதிபதியானவர். எனவே பகை அதிகரிக்கும். ஊர் மாற்றங்களும், வீடு மாற்றங்களும் ஒருசிலருக்கு வந்து சேரும். பிறரிடம் கொடுத்த பெரும் தொகை திரும்ப வராமல் போராடும் நிலையையே உருவாக்கும். பணிபுரியும் இடத்தில் ஒருசிலருக்கு வேலையில் நெருக்கடி ஏற்படலாம்.

    விருச்சிக செவ்வாயின் சஞ்சாரம்

    கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கின்றார். உங்கள் ராசிக்கு விரயாதிபதி விரய ஸ்தானத்தில் வரும் இந்த நேரம் மிகமிக விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டும். வரவைக் காட்டிலும் செலவு கூடும். குடும்பத்தில் உள்ளவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். தொழில் போட்டிகள் அதிகரிக்கும். வராஹி வழிபாடு வளர்ச்சியைக் கூட்டும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- நவம்பர்: 27, 28, டிசம்பர்: 1, 2, 8, 9, 12, 13 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    தனுசு

    தமிழ் மாத ராசிப்பலன்

    பிறருக்கு உதவ வேண்டுமென்று எண்ணும் தனுசு ராசி நேயர்களே!

    ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, தனாதிபதி சனி வக்ர நிவர்த்தியானதாலும், லாப ஸ்தானம் பலம் பெறுவதாலும் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

    துலாம் - சுக்ரன் சஞ்சாரம்

    உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், ஐப்பசி 2-ந் தேதி துலாம் ராசிக்கு செல்கிறார். லாபாதிபதி சுக்ரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் உங்கள் ராசிநாதன் குருவிற்கு சுக்ரன் பகை கிரகம் என்பதால், லாபம் அனைத்தும் விரயமாகும் சூழல் உருவாகும். எனவே பணத்தை சேமிக்க இயலாது. அதே நேரத்தில் ஜீவன ஸ்தானத்திற்கு சுக்ரன் அதிபதியாக விளங்குவதால், 'பலநாட்கள் வேலை பார்த்தும் பணி நிரந்தரமாகவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது அனுகூலத் தகவல் வந்துசேரும். அதோடு சம்பள உயர்வும் கிடைக்கலாம்.

    துலாம் - புதன் சஞ்சாரம்

    உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும்போது, லாபம் திருப்திகரமாக இருக்கும். தொட்டது துலங்கும். உங்களின் தொழில் முன்னேற்றத்திற்கு, உடன் இருப்பவர்களும், அதிகாரப் பதவியில் உள்ளவர்களும் உதவிகரமாக இருப்பார்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வெளிநாட்டில் உள்ள பிரபல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.

    மிதுன - செவ்வாய் வக்ரம்

    ஐப்பசி 18-ந் தேதி, மிதுனத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ரம் பெறுகிறார். அதுமட்டுமின்றி செவ்வாயின் பார்வை மகரத்தில் உள்ள சனி மீது பதிகிறது. எனவே மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டிய நேரம் இது. எதிர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. கொள்கைப் பிடிப்புடன் செயல்படவும் முடியாது. பெரிய பொறுப்புகளில் இருந்து திடீரென மாறுதல் கிடைக்கலாம். அனுபவஸ்தர்கள் மற்றும் அருளாளர்களின் ஆலோசனை கேட்டு செயல்படுவதன் மூலம் இனிமையான வாழ்வை அமைத்துக்கொள்ள இயலும்.

    விருச்சிக - புதன் சஞ்சாரம்

    ஐப்பசி 23-ந் தேதி, விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் மறைவிடத்தில் சஞ்சரிக்கும் பொழுது யோகம் செய்யும். அந்த அடிப்படையில் 12-ல் புதன் வரும்பொழுது பயணங்கள் அதிகரிக்கும். இடமாற்றம், ஊர்மாற்றம், வீடுமாற்றம் உருவாகலாம். பிள்ளைகளுக்காக ஏற்பாடு செய்த சுபகாரியங்கள் நல்ல முடிவிற்கு வரும்.

    விருச்சிக - சுக்ரன் சஞ்சாரம்

    ஐப்பசி 26-ந் தேதி, விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது விரயங்கள் அதிகரிக்கும். கடன் சுமை காரணமாக இடம், பூமியை விற்க நேரிடலாம். உத்தியோகத்தில் நீண்ட தூரத்திற்கு மாறுதல்கள் ஏற்படும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு நீடிக்கும். சேமிப்பு கரைகின்ற இந்த நேரத்தில் சுபவிரயங்களை மேற்கொள்வது நல்லது.

    குரு வக்ர நிவர்த்தி

    உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். ஐப்பசி 30-ந் தேதி அவர் வக்ர நிவர்த்தி ஆவதால் பலம் பெறுகிறார். எனவே உடலும், உள்ளமும் நலமாகும். தொழில் வளம் சிறப்பாகும். வருமானப் பற்றாக்குறை அகலும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, எதிர்பார்த்தபடியே உயர் பதவிகளும், அதற்கேற்ற சம்பள உயர்வும் கிடைக்கும். உற்சாகத்தோடு பணிபுரியும் நேரம் இது. எதைச் செய்வதாக இருந்தாலும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்யுங்கள்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    அக்டோபர்: 21, 22, 25, 26, நவம்பர்: 2, 3, 5, 6.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

    தனுசு

    தமிழ் மாத ராசிப்பலன்

    18.9.22 முதல் 17.10.22 வரை

    யாரையும் சந்தித்த உடனேயே நண்பர்களாக ஆக்கிக் கொள்ளும் தனுசு ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குருவும், தனாதிபதி சனியும் வக்ரத்தில் இருக்கிறார்கள். இதனால் பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்படும்.

    கன்னி - சுக்ரன் சஞ்சாரம்

    புரட்டாசி 8-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் குருவிற்கு பகைக் கிரகமாக விளங்கும் சுக்ரன், நீச்சம் பெறுவது யோகம்தான். எதிர்பாராத நல்ல திருப்பங்களை சந்திப்பீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். அக்கறை செலுத்தாத காரியங்களில் கூட ஆதாயம் உண்டு. பெண் வழிப் பிரச்சினைகள் அகலும். 'உத்தியோக மாற்றம் செய்யலாமா?' என்று சிந்தித்தவர்களுக்கு, புதிய நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.

    கன்னி - புதன் சஞ்சாரம்

    புரட்டாசி 16-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் புதன், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், உச்சம் பெறும் இந்த நேரம் யோகமான காலமாகும். திருமண வாய்ப்புகள் கைகூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். புதன் கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகமாக இருந்தாலும், தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறும் பொழுது தொழில் வளம் சிறப்பாக இருக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும்.

    மிதுன - செவ்வாய் சஞ்சாரம்

    புரட்டாசி 22-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், சப்தம ஸ்தானத்திற்கு செல்லும்பொழுது பிள்ளைகள் வழியில் சுபச்செலவு ஏற்படும். இடம், பூமியால் லாபம் உண்டு.

    இக்காலத்தில் செவ்வாய் பார்வை சனி மீது பதிவதால் திடீர் பிரச்சினைகள் பலவும் தலைதூக்கும். உடல்நலத் தொல்லை ஏற்படும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. சொத்துக்களால் சில பிரச்சினை வரலாம். துணிந்து எந்த முடிவும் எடுக்க இயலாது.

    சனி வக்ர நிவர்த்தி

    புரட்டாசி 23-ந் தேதி, சனி வக்ர நிவர்த்தியாகிறார். இது ஒரு இனிய காலமாகும். தட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்து தனவரவு தாராளமாக வந்து சேரும் நேரம் இது. தனாதிபதி சனி பலம் பெறுகிறார். சகாய ஸ்தானாதிபதியாகவும் விளங்கும் சனி, வக்ர நிவர்த்தியாகும் நேரத்தில் நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். வெளிநாட்டில் இருந்து ஆதாயம் தரும் தகவல்கள் வரலாம். குடும்பத்தில் அமைதி கூடும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்போடு ஒரு நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும்.

    இம்மாதம் வெள்ளிக்கிழமை தோறும் விநாயகரை வழிபட்டால் விருப்பங்கள் நிறைவேறும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-செப்டம்பர்: 23, 24, 29, 30, அக்டோபர்: 5, 6, 9, 10.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்பட்டாலும், மனநிம்மதி குறைவாகவே இருக்கும். ஆரோக்கியத் தொல்லைகளும் உண்டு. குருவின் வக்ர நிவர்த்தி காலம் வரை பொறுமையாக செயல்படுங்கள். கணவன் - மனைவிக்குள் கனிவும், பாசமும் கூடும். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றிபெறும். பணிபுரியும் பெண்களுக்கு அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். திறமைக்கேற்ற அங்கீகாரம் உண்டு.

    ×