search icon
என் மலர்tooltip icon

    மிதுனம் - தமிழ் மாத ஜோதிடம்

    மிதுனம்

    பங்குனி மாத ராசிபலன்

    விடா முயற்சியே வெற்றி தரும் என்று கூறும் மிதுன ராசி நேயர்களே!

    பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் நீச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம், நீச்சம் பெறுவது யோகம்தான். எனவே தொட்டது துலங்கும். தொழில் வளம் சிறக்கும். வெற்றிக்குரிய செய்திகள் வீடு வந்துசேரும். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். திடீர் திருப்பங்கள் பலவும் வந்துசேரும். உடல்நலம் சீராகும். வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக் கசப்பு மாறும்.

    செவ்வாய் - சனி சேர்க்கை

    மாதத்தின் முதல் நாளிலேயே கும்ப ராசிக்குச் செல்லும் செவ்வாய், இந்த மாதம் முழுவதும் அங்குள்ள சனியோடு சேர்ந்து சஞ்சரிக்கிறார். இந்த முரண்பாடான கிரகச் சேர்க்கை அவ்வளவு நல்லதல்ல. உங்கள் ராசிக்கு 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அவரோடு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் இணைவதால், உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். சொத்துப்பிரச்சினை மீண்டும் தலைதூக்கும். சொந்தங்களாலும் அடிக்கடி பிரச்சினைகள் வந்து அலை மோதும். சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் இது. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கெடுபிடி மன வருத்தத்தைத் தரும். சிக்கல்களில் இருந்து விடுபடவும், செல்வ வளம் குறையாமல் பார்த்துக்கொள்ளவும், சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாடும், செவ்வாய்க்கிழமை தோறும் அங்காரக வழிபாடும் செய்வது நல்லது.

    புதன் வக்ரம்

    பங்குனி 13-ந் தேதி, மீனத்தில் சஞ்சரிக்கும் புதன் வக்ரம் பெறுகிறார். ஏற்கனவே அங்கு நீச்சம் பெற்று சஞ்சரித்து வரும் புதன், இப்பொழுது வக்ரமும் பெற்று வலிமை இழப்பது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். மருத்துவச் செலவு கூடும். பிறருக்கு நீங்கள் நன்மை செய்தாலும் அது தீமையாகத் தெரியும். விற்பனை செய்த சொத்துக்களால் பிரச்சினைகள் உருவாகும். 4-ம் இடத்திற்கு அதிபதியாக புதன் விளங்குவதால், வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. பயணங்களால் எந்த ஒரு பலனும் கிடைக்காது. தாய்வழி ஆதரவு குறையும்.

    மீனம் - சுக்ரன்

    பங்குனி 19-ந் தேதி, மீன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அது அவருக்கு உச்ச வீடாகும். மேலும் அவர் ஏற்கனவே மீனத்தில் இருக்கும் புதனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தையும், 'நீச்சபங்க ராஜயோக'த்தையும் உருவாக்குகிறார். எனவே இக்காலம், உங்களுக்கு ஒரு பொற்காலமாக இருக்கும். மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். மகிழ்ச்சிக்குரிய தகவல் நிறைய வந்துசேரும். சிக்கல்களும், சிரமங்களும் அகலும். திடீர் வரவு வந்து வளர்ச்சியை அதிகரிக்க வைக்கும். அசையாச் சொத்துகளில் முதலீடு செய்ய முன்வருவீர்கள். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் கைகூடிவரும். பொன், பொருள் சேர்க்கை உண்டு. பொருளாதாரம் உச்சம் பெறும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்கள் மிகுந்த கவனத்தோடு செயல்படுவது நல்லது. மறைமுக எதிர்ப்புகளால் மனக் கலக்கம் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய பாதை புலப்படும். எதிர்பார்த்த லாபம் எளிதில் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மாதக் கடைசியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு. கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ - மாணவிகள், தங்களின் பெற்றோர், ஆசியர்களின் ஆதரவோடு படிப்பில் வெற்றி காண்பர். கலைஞர்கள் போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் அடைவர். பெண்களுக்கு வீடு மாற்றம், இடமாற்றம் வரலாம். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் உண்டு.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    மார்ச்: 14, 20, 24, 25, 26, ஏப்ரல்: 6, 7, 10, 11.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

    மிதுனம்

    மாசிமாத ராசிபலன்

    தன் மேற்பார்வையில் அனைத்தையும் செய்ய விரும்பும் மிதுன ராசி அன்பர்களே!

    மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு சகாய ஸ்தானாதிபதி சூரியனும், பாக்கியாதிபதி சனியும் இணைந்து சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் பலவும் இல்லம் தேடி வரப்போகிறது. நம்பிக்கைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடைபெறும். 'சொன்ன சொல்லை காப்பற்ற முடியவில்லையே' என்று கவலைப்பட்டவர்கள், இனி கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்கள்.

    கும்பம் - புதன்

    மாதத் தொடக்க நாளிலேயே, கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். இதனால் பாக்கிய ஸ்தானம் வலுவடைகிறது. நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்யக்கூடிய வாய்ப்பு உருவாகும். நிகழ்காலத் தேவை பூர்த்தியாகும். மாமன், மைத்துனர் வழியில் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்போடு கூட்டு முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். ஏற்ற இறக்கமான நிலை இனி மாறும். நண்பர்களின் உதவி கிடைக்கும். தொழில் போட்டியில் இருந்தவர்கள், விலகுவர். புதிய திருப்பங்கள் பலவும் ஏற்படும்.

    மகரம் - சுக்ரன்

    மாதத் தொடக்க நாளிலேயே, மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். 12-க்கு அதிபதியான சுக்ரன் 8-ம் இடத்திற்கு வரும்போது 'விபரீத ராஜயோகம்' செயல்படும். வீடு மாற்றம், இட மாற்றம், நாடு மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை திடீர் என ஏற்பட்டாலும், அவை நல்ல மாற்றங்களாகவே இருக்கும். நினைத்த காரியங்களை எளிதில் செய்து முடிப்பீர்கள். இடம், பூமி வாங்குவதில் இருந்த தடை அகலும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. ஒரு சிலருக்கு அதிகாரம் மிகுந்த பதவி வந்துசேரும்.

    மீனம் - புதன்

    மார்ச் 2-ந் தேதி, மீன ராசிக்குச் செல்லும் புதன் அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் நீச்சம் பெறும் இந்த நேரத்தில் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வருமானத்திலும் சிறு சிறு தடைகள் வந்துசேரும். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகலாம். 'மருத்துவச் செலவு அதிகரிக்கின்றதே' என்ற மனக்கலக்கம் ஏற்படும். யோசித்து செயல்பட வேண்டிய நேரம் இது. நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். அனுபவஸ்தர் களின் ஆலோசனை கைகொடுக்கும்.

    கும்பம் - சுக்ரன்

    மார்ச் 8-ந் தேதி, கும்ப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். 5-க்கு அதிபதி 9-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது பணப்புழக்கம் அதிகரிக்கும். பாராட்டும், புகழும் உண்டு. இனத்தார் பகை மாறும். எதிர்காலம் பற்றிய பயம் அகலும். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் நன்மதிப்பை பெறும் வாய்ப்பு உண்டு. உத்தியோகம், தொழிலில் உயர்நிலையை அடைய சந்தர்ப்பங்கள் கைகூடிவரும். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு, தன்னலமற்ற சேவைக்காக பாராட்டு குவியும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு திறமையை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் கிடைக்கும். மாணவ, மாணவிகள் பாராட்டுக்களைப் பெறுவர். பெண்களுக்கு மன நிறைவான வாழ்க்கை அமையும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    பிப்ரவரி: 15, 16, 22, 23, 28, 29,

    மார்ச்: 9, 10.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.

    மிதுனம்

    தை மாத ராசிபலன்

    யாரை எதற்குப் பயன்படுத்தலாம் என்பதை அறிந்துள்ள மிதுன ராசி நேயர்களே!

    தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, மாதத் தொடக்கத்தில் 9-ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கின்றார். ஒளிமயமான வாழ்க்கைக்கு உத்திரவாதம் தரும் இடம் 9-ம் இடமாகும். அங்கு சஞ்சரிக்கும் சனி பகவான் நல்ல பலன்களை அள்ளி வழங்குவார். குரு பலனும் நன்றாக இருக்கின்றது. தொழில் ஸ்தானாதிபதி குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் அதிகரித்து பொருளாதாரத்தை சீர் செய்யும். தேங்கிய பணிகள் இனிமேல் துரிதமாக நடைபெறும்.

    மேஷ-குருவின் சஞ்சாரம்!

    மாதத் தொடக்கத்தில் குரு பகவான் மேஷ ராசியில் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. கேந்திராதிபத்ய தோஷம் பெற்றவர் குரு என்றாலும், அவர் பார்வைக்கு பலன் உண்டு. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே சகோதர ஒத்துழைப்பு கிடைக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். பிள்ளைகளால் பெருமை சேரும். பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் இல்லத்தில் நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும்.

    தனுசு-சுக்ரன்!

    ஜனவரி 19-ந் தேதி தனுசு ராசிக்குச் சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 7-ம் இடத்திற்கு வரும் பொழுது திருமண வயதை அடைந்த பிள்ளைகளுக்கு நீங்கள் செய்த கல்யாண முயற்சி இப்பொழுது கைகூடும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பழைய வாகனங்களின் பழுதுச்செலவை முன்னிட்டு, புதிய வாகனம் வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள். விரயங்கள் அதிகரித்தாலும் நினைத்தது நிறைவேறும் நேரமிது.

    மகர-புதன்!

    ஜனவரி 27-ந் தேதி மகர ராசிக்குப் புதன் வருகின்றார். உங்கள் ராசிநாதனாகவும், 4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் புதன். அங்ஙனம் கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற புதன், மறைவிடத்திற்கு வரும் நேரம் நல்ல நேரம் தான். 'மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும்' என்று சொல்வார்கள். அந்த அடிப்படையில் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். அதிகாரிகளின் ஆளுமைத் திறனால் உங்களுக்கு உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கப் போகின்றது.

    மகர-செவ்வாய் சஞ்சாரம்!

    பிப்ரவரி 4-ந் தேதி மகர ராசிக்குச் செவ்வாய் செல்கின்றார். அங்கு அவர் உச்சம் பெறுகின்றார். அஷ்டமத்தில் செவ்வாய் உச்சம்பெறுவது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். அதிகாலை முதல் இரவு வரை உழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்து சேரும். `பணம் கையில் தங்கவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். கடன் பிரச்சினையின் காரணமாக சிலருக்கு சொத்துக்களை விற்கும் சூழல் உருவாகலாம். திடீர் மாற்றங்கள் அடிக்கடி நிகழும்.

    பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்துசேரும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்அதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு வருமானம் திருப்தி தரும். மாணவ- மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு கணவருடன் ஒற்றுமை பலப்படும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜனவரி: 15, 16, 19, 20, 25, 26, 27, பிப்ரவரி: 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    மிதுனம்

    மார்கழி மாத ராசிபலன்

    சவாலான வேலைகளை எளிதாக முடிக்கும் மிதுன ராசி நேயர்களே

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கிற பொழுது, உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் இம் மாதம் 9-ம் இடத்திற்கு செல்ல இருக்கிறார். எனவே அஷ்டமத்துச் சனி விலகப்போகிறது. இனி அடுக்கடுக்காக நற்பலன்கள் உங்களுக்கு வரப்போகிறது. கொடுத்த பாக்கிகளும் வசூலாகும். கொடுக்க வேண்டிய கடன்களையும் கொடுக்கும் சூழ்நிலை உருவாகும். தொழில் வளர்ச்சி உண்டு. இம்மாதம் யோக பலம் பெற்ற நாளில் சனி பகவானுக்குரிய சிறப்பு தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவது நல்லது.

    கும்ப ராசியில் சனி

    மகர ராசியில் சஞ்சரித்து வரும் சனி பகவான் மார்கழி 4-ந் தேதி கும்ப ராசிக்கு செல்கின்றார். வாக்கிய கணித ரீதியாக நடைபெறும் இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு மிகுந்த நற்பலன்களை வழங்கப் போகிறது. மூடிக்கிடந்த தொழிலுக்கு திறப்பு விழா நடத்துவீர்கள். முன்கோபத்தின் காரணமாக கைநழுவிச் சென்ற வாய்ப்புகள் இப்பொழுது வந்துசேரும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினை அகலும்.

    நல்ல சம்பவங்கள் நாளும் இல்லத்தில் நடைபெறும். அண்ணன், தம்பிகள், அக்கா, தங்கைகள், வாழ்க்கைத் துணை மற்றும் பெற்றோர் வழியில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக அகலும். உங்களுக்கு அனுகூலம் தரும் சிறப்பு தலங்களை தேர்ந்தெடுத்து சனி பகவானை வழிபட்டு வந்தால் முன்னேற்றம் விரைவில் வந்து சேரும்.

    விருச்சிக-சுக்ரன்

    மார்கழி 9-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 6-ம் இடத்திற்கு வரும் பொழுது எதிர்பாராத நற்பலன்கள் நடைபெறும். சமூகத்தில் பெரிய மனிதர்களின் சந்திப்பால் நன்மை கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்புகள் வரும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உருவாகும்.

    தனுசு-செவ்வாய்

    மார்கழி 11-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும்பொழுது உத்தியோகத்தில் சில பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். உங்களை விரும்பாத சிலர் உங்களுக்கு போட்டியாக செயல்படுவர். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்கும் சூழ்நிலை உருவாகும். எதிலும் அகலக்கால் வைத்து அவதிப்படக் கூடாது. இக்காலத்தில் அங்காரக வழிபாடு அவசியம் தேவை.

    தனுசு-புதன்

    மார்கழி 23-ந் தேதி தனுசு ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும் 4-ம் இடம் எனப்படும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியானவர் புதன். அவர் சூரியனோடு இணைந்து புத-ஆதித்ய யோகத்தை உருவாக்கும் இந்த நேரம் நல்லநேரம் தான். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மனதில் இடம்பெறுவீர்கள். பதவி உயர்வு தானாக கிடைக்கும்.

    பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகள் வந்துசேரும். கலைஞர்களுக்கு நழுவி சென்ற ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவ-மாணவியர்களுக்கு படிப்பில் தேர்ச்சியும், பாராட்டும் உண்டு. பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும்.

    பணத்தேவையை பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 19, 20, 22, 23, 29, 30,

    ஜனவரி: 4, 5, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    மிதுனம்

    கார்த்திகை மாத ராசிபலன்

    தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைக்கும் மிதுன ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் அஷ்டமத்து சனி வக்ர நிவர்த்தியாகி இப்பொழுது பலம் பெற்று விட்டார். எனவே மனச்சோர்வு அதிகரிக்கும். எளிதில் முடிக்கக் கூடிய காரியங்கள் கூட மலைப்பாகத் தோன்றும். ஆரோக்கியத்தில் அதிகத் தொல்லைகளும், அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் அதிகப் பிரச்சினைகளும் உருவாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. குருவின் வக்ரத்தால் ஓரளவு நன்மை பெறலாம் என்றாலும், வழிபாடுகள் மூலமே நன்மையை வரவழைத்துக்கொள்ள இயலும்.

    வக்ர குருவின் ஆதிக்கம்

    மாதம் முழுவதும் மேஷ ராசியில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். அவர் வக்ரம் பெறுவது நன்மை தான். கேந் திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகங்கள் வக்ரம் பெறும் பொழுது நன்மைகளையே செய்யும். குறிப்பாக இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும்.

    கல்யாண முயற்சிகள் கை கூடுவதற்கான அறிகுறிகள் தென்படும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிகளில் பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் செல்வது பற்றிச் சிந்திப்பர். பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றிய கவலை அகலும். வாங்கிய கடனைக் கொடுத்தும், கொடுத்த கடனை வசூலித்தும் மகிழும் நேரமிது.

    துலாம்-சுக்ரன்

    உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியாக விளங்கும் சுக்ரன், மாதத் தொடக்கத்தில் நீச்சம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். எனவே பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும். ஆயினும் கார்த்திகை 14-ம் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் வருவதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுவடைகின்றது. எனவே தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

    துணையாக இருக்கும் நண்பர்கள் தோள் கொடுத்து உதவுவர். வெற்றி வாய்ப்புகளைச் சந்திப்பீர்கள். விரும்பிய வண்ணம் பொருளாதார நிலை உயரும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு உத்தியோகத்தில் திருப்தியாக இருக்கும்.

    தனுசு-புதன்

    உங்கள் ராசிக்கும், 4-ம் இடத்திற்கும் அதிபதியான புதன் சப்தம ஸ்தானத்திற்கு கார்த்திகை 14-ம் தேதி வருகின்றார். அங்கிருந்து கொண்டு உங்கள் ராசியைப் பார்க்கின்றார். எனவே மிகுந்த நற்பலன்கள் கிடைக்கும். தொழிலில் மித மிஞ்சிய லாபம் வந்து சேரும்.

    உறவினர்களும், நண்பர்களும் போட்டி போட்டுக்கொண்டு உதவுவர். வரன்கள் வாசல் தேடி வரும். வருங்கால நலன்கருதி சேமிக்க முற்படுவீர்கள்.

    மிதுனம்

    ஐப்பசி மாத ராசிபலன்

    18.10.2023 முதல் 16.11.2023 வரை

    தடைக்கற்களை படிக்கற்களாக மாற்ற வழிசொல்லும் மிதுன ராசி நேயர்களே!

    ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் சனி சஞ்சரிக்கின்றார். அவர் வக்ர நிவர்த்தியான பின்னால் அஷ்டம ஸ்தானம் வலுவடைகின்றது. எனவே எதையும் திட்டமிட்டுச்செய்ய இயலாது. திடீர் விரயங்கள் அதிகரிக்கும். ஆரோக்கியத் தொல்லையாலும் அவதி, அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியிலும் குழப்பம் உருவாகும். சேமிப்புகள் கரைந்து மனதை வாட வைக்கும்.

    சனி வக்ர நிவர்த்தி!

    ஐப்பசி 6-ந் தேதி மகர ராசியில் சஞ்சரிக்கும் சனி வக்ர நிவர்த்தியாகின்றார். அஷ்டமத்துச் சனி வக்ர நிவர்த்தியாகி வலுப்பெறுவதால் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும். 'அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துச் சனி' என்பது பழமொழி. எனவே எந்த வழிகளிலும் சிக்கல் களும், சிரமங்களும் வரலாம். முன்னெச்சரிக்கையோடு செயல்படுவது நல்லது. குடும்ப ஒற்றுமை குறையும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைப்பது அரிது. கூட்டாளிகள் உங்களை விட்டு விலகலாம். குடியிருக்கும் வீட்டாலும் பிரச்சினை, கொடுக்கல்-வாங்கல்களிலும் பிரச்சினை என்ற நிலை உருவாகும். உற்றார், உறவினர்களிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். ஊா் மாற்றம், இட மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். யோக பலம் பெற்ற நாளில் சனிக்குரிய வழிபாடுகளை மேற்கொள்வது உகந்தது.

    குரு வக்ரம்!

    மாதம் முழுவதும் குரு பகவான் மேஷ ராசியிலேயே வக்ரம் பெற்றிருக்கின்றார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் அடைவது நன்மை தான். கல்யாண முயற்சி கைகூடும். கடமையில் இருந்த தொய்வு அகலும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ெவளிநாட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் வரலாம்.

    நீச்சம் பெறும் சுக்ரன்!

    ஐப்பசி 16-ந் தேதி கன்னி ராசிக்கு சுக்ரன் வருகின்றார். அங்கு அவர் வலிமை இழந்து நீச்சம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு அதிபதி சுக்ரன் நீச்சம் பெறுவது யோகம் தான். ஆனால் 5-ம் இடத்திற்கும் அதிபதியாக சுக்ரன் விளங்குவதால் பிள்ளைகளால் பிரச்சினைகள் உருவாகலாம். பூர்வீக சொத்துத் தகராறுகள் வரலாம். வம்பு வழக்குகள் வீடு தேடிவரும். தெம்பும், உற்சாகமும் குறையும். திடீர், திடீர் என வரும் விரயங்கள் மனதை வாடவைக்கும். செய்யும் முயற்சிகளில் பலன் கிடைப்பது அரிது.

    விருச்சிக புதன்!

    ஐப்பசி 17-ந் தேதி விருச்சிக ராசிக்கு புதன் வருகின்றார். இக்காலம் உங்களுக்கு ஓர் இனிய காலமாகும். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். உங்கள் திறமைக்கு வெற்றி உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வர். பாராட்டும், புகழும் கூடும். பல நாட்களாக நடைபெறாத காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டுவந்து சேர்ப்பர்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு இடையூறு சக்திகள் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு குறுக்கீடுகளும், நெருக்கடி நிலையும் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்கள் சக கலைஞர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரமிது. மாணவ-மாணவியர்களுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்பச்சுமை கூடும். விரயங்கள் உண்டு. விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலமே ஒற்றுமை பலப்படும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: அக்டோபர் 25, 26, 29, 30, நவம்பர் 5, 6, 10, 11

    மகிழ்ச்சி தரும் வண்ணம்: பச்சை.

    மிதுனம்

    புரட்டாசி மாத ராசிபலன்

    18-09-2023 முதல் 17-10-2023 வரை

    பிறருடைய பிரச்சினைகள் தீர வழிசொல்லும் மிதுன ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அதே நேரத்தில் சனி வக்ர இயக்கத்தில் அஷ்டமத்துச் சனியாகவும் வருகிறார். எனவே ஒருசில காரியங்கள் விரைவில் முடியும் என்றாலும், ஒரு சில காரியங்களில் தடைகளும், தாமதங்களும் வரத்தான் செய்யும். 'நினைத்தது நிறைவேறவில்லையே' என்ற கவலை அகல, வழிபாடுகளை அவ்வப்போது மேற்கொள்வது நல்லது.

    புதன் வக்ரம்

    புரட்டாசி 10-ந் தேதி, கன்னி ராசியில் புதன் வக்ரம் பெறுகிறார். அதே நேரத்தில் அந்த வீடு புதனுக்கு உச்ச வீடாகும். உங்கள் ராசியைப் பொறுத்தவரை ராசிநாதன் புதன் உச்சம் பெறுவது யோகம்தான். ஆரோக்கியம் சீராகும். ஆதாயம் தரும் தகவல்கள் அதிகம் கிடைக்கும். எதிர்பாராத விதத்தில் இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். வாடகை கட்டிடத்தில் நடைபெறும் தொழிலாக இருந்தால் அதைச் சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் யோகம் உண்டு. மாமன், மைத்துனர் வழியில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறு வதற்கான அறிகுறிகள் தென்படும். பூமி யோகம் முதல், புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வரும் சூழ்நிலைகள் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும்.

    துலாம் - செவ்வாய்

    புரட்டாசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு செவ்வாய் வருகிறார். 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும்போது, பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். தாய்வழி ஆதரவு உண்டு. புதிய வாகனங்கள் வாங்க வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறும். நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெற வேண்டுமானால் நாம் வழிபாட்டில் கவனம் செலுத்தவேண்டும். அந்த அடிப்படையில் செவ்வாயால் நற்பலன்கள் பெற முருகப்பெருமானை வழிபடுவது நல்லது. பத்திரப் பதிவிலோ, மனை கட்டுவதிலோ தடையாக இருந்தவர்களுக்கு இப்பொழுது காரியங்கள் துரிதமாக நடைபெறும்.

    துலாம் - புதன்

    புரட்டாசி 28-ந் தேதி, துலாம் ராசிக்குப் புதன் வருகிறார். உங்கள் ராசிநாதன் புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும்போது யோகமான நேரம் தான். நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவை பூர்த்தியாகும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். பணப் புழக்கத்திற்கு குறைவு ஏற்படாது. பாதியில் நின்ற பணிகள் ஒவ்வொன்றாக முடிவடையும். பிள்ளைகளின் கல்யாண முயற்சிகளும், கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சிகளும் நிறைவேறும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் புதிய பாதை புலப்படும். வியாபாரம், தொழில் செய்பவர்கள் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து முடிவெடுக்க வேண்டிய நேரம் இது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு முன்னேற்றப் பாதை புலப்படும். மாணவ- மாணவிகளுக்கு பாடுபட்டதற்கேற்ற பலன் உண்டு. பெண்களுக்கு கணவன் - மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தவர்கள் விலகுவர். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    செப்டம்பர்: 27, 28, அக்டோபர்: 1, 2, 8, 9, 14, 15. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    மிதுனம்

    தமிழ் மாத ராசிபலன்கள்

    18-08-2023 முதல் 17-09-2023 வரை

    எல்லாம் அறிந்தும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாத மிதுன ராசி நேயர்களே!

    ஆவணி மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் சகாய ஸ்தானத்தில் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். எனவே ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்ய இயலாது.

    மாத தொடக்கத்தில் 'புத சுக்ர யோகம்', 'புத ஆதித்ய யோகம்', 'குருமங்கல யோகம்' ஆகியவை செயல்பட்டாலும், அவை திருப்தியான பலனை கொடுக்காது. எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. கடக - சுக்ரன் ஆவணி 1-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் வக்ரமாகி செல்கிறார்.

    உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் வக்ரமாக சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகளால் பிரச்சினைகள் ஏற்படலாம். அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. பூர்வீக சொத்து சம்பந்தமாக நடைபெறும்

    பஞ்சாயத்துகள் இழுபறி நிலையிலேயே இருக்கும். பிள்ளைகளின் கல்யாணம் சம்பந்தமாக செய்த முயற்சியில், நல்ல வரன்கள் பலவும் கைநழுவிச் செல்லலாம். மனப் போராட்டமும், பணப் போராட்டமும் அதிகரிக்கும் நேரம் இது.

    கன்னி -செவ்வாய் ஆவணி 2-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், இடம், பூமி விற்பனையும், அதன் மூலம் லாபமும் கிடைக்கும். கடன் சுமை குறைய வழிபிறக்கும்.

    ஆரோக்கியத் தொல்லை அகலும். உற்சாகத்துடன் செயல்பட்டு, உன்னத வாழ்வமைய வழி அமைத்துக் கொள்வீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும். மகர - சனி சனி பகவான் ஆவணி 7-ந் தேதி, மகர ராசிக்கு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அங்கு சுமார் 4 மாத காலம் சஞ்சரித்த பின்னர், மீண்டும் கும்ப ராசிக்கு செல்லப் போகிறார்.

    வாக்கிய கணித ரீதியாக வரும் இந்த மாற்றம் உங்கள் வாழ்க்கையில் மீண்டும் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கத்தை உருவாக்குகிறது. விலகிய சனி மீண்டும் வருவதால் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வேலை ஆட்களால் பிரச்சினைகள் உருவாகும். வாழ்க்கைத் துணையாலும், வாரிசுகளாலும் மனக்கவலை ஏற்படும். தேக்க நிலை உருவாகி பல பணிகள் செய்ய இயலாமல் போகலாம்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களால் வீண் பழிகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களிடம் கூடுதல் பொறுப்பை ஒப்படைத்து மனக்கலக்கம் அடையச் செய்வர். இக்காலத்தில் முறையான வழிபாடுகள் முன்னேற்றம் தரும். புதன் வக்ர நிவர்த்தி சிம்மத்தில் சஞ்சாித்து வரும் புதன், ஆவணி 15-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார்.

    உங்கள் ராசிநாதன் வக்ர நிவர்த்தியாவது யோகம்தான். உடல்நலம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். சவாலான பணிகளைக் கூட சாதாரணமாக முடித்து விடுவீர்கள். கவலை என்ற மூன்றெழுத்து அகன்றோடும் நேரம் இது. பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும்.

    பொதுவாழ்வில் இருப்பவர்கள், வீண்பழிக்கு ஆளாகாமல் கவனமாக செயல்படுங்கள். தொழில் செய்பவர்கள், வேலை ஆட்களுடன் போராட வேண்டிய சூழல் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களால் தொல்லை வரலாம். கலைஞர்களுக்கு வாய்ப்புகள், கைநழுவிச் செல்லக்கூடும்.

    மாணவர்களுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றாக ஏற்படலாம். எதையும் யோசித்துச் செய்வது நல்லது.

    பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு கூடும். சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஆகஸ்டு: 20, 21, 31, செப்டம்பர்: 4, 5, 10, 11, 12, 17. மகிழ்ச்சி தரும்

    வண்ணம்:- ரோஸ்.

    மிதுனம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    17.7.23 முதல் 17.8.23 வரை

    எதையும் மனநிறைவோடு செய்ய வேண்டும் என்று சொல்லும் மிதுன ராசி நேயர்களே!

    ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் தன ஸ்தானத்தில் சகாய ஸ்தானாதிபதி சூரியனோடு இணைந்து சஞ்சரிப்பதால் ஆரோக்கியத் தொல்லை அகலும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பாக்கிய ஸ்தானத்தில் சனி வக்ரம் பெற்றிருப்பதால் பிள்ளைகளால் சில பிரச்சினைகள் உருவாகலாம். பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட பஞ்சாயத்துக்கள் தாமதப்படும். திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடு கைகொடுக்கும்.

    மேஷ - குரு சஞ்சாரம்

    நவக்கிரகங்களில் சுபகிரகம் என்று சொல்லப்படும் குரு பகவான், உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானாதிபதியாக இருப்பவர். அவர் ராகுவோடு இணைந்து லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே சில நல்ல மாற்றங்களும் வரலாம். பாகப்பிரிவினைகளில் இருந்த தேக்கநிலை மாறும். தெளிந்த சிந்தனையோடு செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். உடன்பிறப்புகளால் ஒருசில நல்ல காரியம் நடைபெறும்.

    குருவின் பார்வை பலத்தால் பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தானம் புனிதமடைகின்றன. எனவே இல்லத்தில் கல்யாணம் போன்ற சுபநிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் படிப்படியாக விலகும். பெற்றோரின் மணிவிழாக்கள் போன்றவை நடைபெறும். உறவினர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும். பூர்வீகச் சொத்துக்களை விற்றுவிட்டு புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆபரண சேர்க்கை உண்டு.

    சிம்ம - புதன்

    ஆடி 7-ந் தேதி, சிம்ம ராசிக்குப் புதன் வருகின்றார். உங்கள் ராசி மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியான புதன், சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் நல்ல நேரமாகும். எல்லா வழிகளிலும் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவிகள் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகி உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். வாகனம் வாங்கி மகிழ்வதுடன் வீடு, இடம் வாங்குவதிலும் அக்கறை காட்டுவீர்கள். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம். மாமன் - மைத்துனர் வழியில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சியை முன்னின்று நடத்துவீர்கள். சேமிப்பு அதிகரிக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் புதிய திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். கலைஞர்களுக்கு விட்டுப்போன வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு கவனச் சிதறல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பெண்களுக்கு பக்கத்து வீட்டாரின் பகை மாறும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-ஜூலை: 19, 20, 24, 25, ஆகஸ்டு: 3, 4, 5, 8, 9, 10, 15. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

    மிதுனம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    பார்த்ததுமே மற்றவர்களை எடைபோட்டு விடும் மிதுன ராசி நேயர்களே!

    ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் விரய ஸ்தானத்தில் தனாதிபதி சந்திரனோடு இணைந்திருக் கிறார். எனவே தன விரயம் ஏற்படும். அதேநேரத்தில் தொழில் ஸ்தானாதிபதி குரு லாப ஸ்தானத்தில் இருப்பதால், வருமானம் திருப்திகரமாகவே இருக்கும். அதற்கேற்ப செலவுகளும் வந்துகொண்டே இருக்கும். சேமிப்பிற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென்றே சொல்லலாம். அதேநேரத்தில் அடுத்தவருடைய உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய அவசியமும் இருக்காது. உடன்பிறப்புகளின் ஒத்துழைப்போடு முன்னேற்றம் காண்பீர்கள்.

    மிதுன - புதன்

    ஆனி மாதம் 3-ந் தேதி, உங்கள் ராசியான மிதுனத்திற்கு புதன் வருகிறார். ராசிநாதன் ராசியில் சஞ்சரிப்பது யோகமான நேரம் தான். பொருளாதாரத்தில் ஓரளவு நிறைவு ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். 'புத ஆதித்ய யோகம்' செயல்படுவதால் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும். ஒரு சிலருக்கு கடல் தாண்டிச் செல்லும் யோகம் வாய்க்கலாம். வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.

    சிம்ம - செவ்வாய்

    ஆனி 17-ந் தேதி, சிம்ம ராசிக்கு செவ்வாய் செல்கிறார். அப்பொழுது குருவின் பார்வை செவ்வாய் மீது பதிகிறது. எனவே 'குரு மங்கல யோகம்' ஏற்படுகிறது. இதனால் கல்யாணக் கனவுகள் நனவாகும். கடமையில் இருந்த தொய்வு அகலும். அதேநேரத்தில் குருவின் பார்வை பதிந்த செவ்வாயின் பார்வை, சனி மீது விழுவதால் பெற்றோருடன் இணக்கமான சூழல் ஏற்படும். சொத்துப் பங்கீடுகள் சுலபமாக முடியும். சவாலான காரியங்களைக் கூட சாதாரணமாக முடித்துக்காட்டி பாராட்டுக்களைப் பெறுவீர்கள். வெளியூர் பயணங்கள் நன்மை தரும் விதம் அமையும்.

    சிம்ம - சுக்ரன்

    ஆனி 18-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம - விரயாதிபதியான சுக்ரன், சிம்மத்திற்கு செல்வது யோகம்தான். இருப்பினும் உடன்பிறப்புகளின் வழியில் ஒருசில பிரச்சினைகளும், விரயங்களும் ஏற்படலாம். பிள்ளைகளின் கல்யாணம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். வெளிநாட்டு வணிகம் லாபம் தரும். உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து பணிபுரிய அழைப்புகள் வரலாம். தொழில் கூட்டாளிகளின் கருத்து வேறுபாடுகள் அகலும். நிதி நிறுவனங்களில் ஏற்பட்ட பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும்.

    கடக - புதன்

    ஆனி 19-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியான புதன் தன ஸ்தானத்திற்கு செல்வது யோகம் தான். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. நினைத்தது நிறைவேறும். வருமானப் பற்றாக்குறை அகலும். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். ஆடம்பரச் செலவுகள் அதிகரித்தாலும் அதற்கேற்ப வருமானம் வந்துசேரும். இல்லம் கட்டிக் குடியேறுவது அல்லது கட்டிய வீட்டைப் பராமரிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி உண்டு. தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய முதலீடுகளைச் செய்து விருத்தியடைய முன்வருவர். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் கெடுபிடிகளை சமாளித்து முன்னேற்றம் காண்பர். கலைஞர்களுக்கு நிதி உதவி கிடைக்கும். மாணவ- மாணவிகளுக்கு கட்டுப்பாடுடன் கூடிய கல்வியில் நாட்டம் செல்லும். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை. கட்டுங்கடங்காத செலவுகளால் கவலைகள் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் அனுசரித்துச் செல்வது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 20, 21, 27, 28, ஜூலை: 7, 8, 11, 12. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.

    மிதுனம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    15.5.23 முதல் 15.6.23 வரை

    மனதில் பட்டதை மறைக்காமல் பேசும் மிதுன ராசி நேயர்களே!

    வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியிலேயே விரயாதிபதி சுக்ரன் வீற்றிருக்கிறார். எனவே தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. கூட்டுத் தொழில் செய்வோர் தனித்து இயங்கும் நேரம் இது. சனி பகவான் 9-ம் இடத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பக்கபலமாக இருக்கும் நண்பர்களின் ஒத்துழைப்போடு புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி காணப்போகிறீர்கள்.

    ராகு-கேது சஞ்சாரம்

    பின்னோக்கிச் செல்லும் கிரகங்களான ராகு பகவான் லாப ஸ்தானத்திலும், கேது பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் சஞ்சரிக்கின்றனர். அங்ஙனம் சஞ்சரிக்கும் கேதுவை குரு பார்ப்பதால், பிள்ளைகள் வழியில் சுப நிகழ்ச்சிகள் திடீரென நடைபெறலாம். பூர்வீக சொத்துகளை பிரித்துக் கொள்வதில் இருந்த தடைகள் அகலும். பூர்வீக சொத்தைக் கொடுத்து விட்டு, புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியிலும் ஆர்வம் காட்டுவீர்கள். இதுவரை உங்கள் கருத்துக்கு ஒத்துவராத பிள்ளைகள், தற்போது உங்கள் கருத்துக்கு இணங்குவர். பாகப் பிரிவினையின் காரணமாக பணவிரயமும் ஏற்படலாம். உத்தியோகத்தில் கூடுதல் சம்பளம் தருவதாக வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரலாம். ராகுவின் பலத்தால் அந்த வாய்ப்பு கைகூடலாம்.

    கடக - சுக்ரன்

    வைகாசி 16-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்கு நீச்சம் பெற்றுச் சஞ்சரிக்கும் செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கள யோக'த்தை உருவாக்குகிறார். எனவே உடன்பிறப்புகளுக்கு திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடை அகலும். உடன்பிறப்புகளின் வேலைவாய்ப்பு கருதி எடுத்த முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். கடன்சுமை பாதிக்கு மேல் குறையும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். எனவே பெண் குழந்தைகளின் சீர்வரிசைப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

    ரிஷப - புதன்

    வைகாசி 18-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். அங்குள்ள சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். உங்கள் ராசிக்கு 12-ம் இடமான விரய ஸ்தானத்திற்கு புதன் வருவதால், வரவைக் காட்டிலும் செலவு கூடும். வளர்ச்சி கருதி செலவிட்டாலும், கையில் பணம் தங்குவது அரிது. மாமன், மைத்துனர் வழியில் சில நல்ல காரியங்கள் நடைபெறும். மனை கட்டிக் குடியேறும் யோகமும் உண்டு. அரசியல் மற்றும் பொதுநலத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து சில காரியங்களை முடித்துக் கொடுப்பர். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு, லாபம் திருப்தியாக அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, கேட்ட இடத்திற்கு மாறுதலும், சம்பள உயர்வும் கிடைக்கலாம். கலைஞர்களுக்கு கைநழுவிச் சென்ற வாய்ப்புகள் மீண்டும் வரலாம். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான முயற்சி வெற்றியாகும். பெண்களுக்கு சுபச்செலவுகள் அதிகரிக்கும். பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் பெருமை சேர்க்கும் விதம் நடந்துகொள்வீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-மே: 18, 19, 24, 25, 26, 30, 31, ஜூன்: 10, 11, 14, 15.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    மிதுனம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    14.4.2023 முதல் 14.5.2023

    பிறருடைய பிரச்சினைக்கு வழி சொல்லும் மிதுன ராசி நேயர்களே!

    சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் லாப ஸ்தானத்தில் சகாய ஸ்தானாதிபதி சூரியனோடு இணைந்து சஞ்சரிக்கின்றார். மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 2-ம் இடமான தன ஸ்தானத்தில் குருவின் பார்வை பதிகின்றது. இதனால் பல நன்மைகள் கிடைக்கப்போகின்றது. சித்திரை 9-ல் லாப ஸ்தானத்திற்கு குரு வரப்போகின்றார். அஷ்டமத்துச் சனி வாக்கிய கணித ரீதியாக தற்சமயம் விலகி உள்ளது.

    எனவே, குடும்பத்தில் சுபிட்சங்கள் அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல்கள் சரளமாக இருக்கும். அடுத்தடுத்து நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். கூட்டுக் குடும் பத்தில் இருந்த பிரச்சினை ஒவ்வொன்றாக அகன்று, உறவுகள் ஒன்றுசேரும். வாட்டி வதைத்த நோய் விலகி, உடல் ஆரோக்கியம் பெறுவீர்கள்.

    சனியின் சஞ்சாரம்

    மாதத் தொடக்கத்தில் சனி பகவான் உங்கள் ராசிக்கு 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். அஷ்டமத்துச் சனி விலகி விட்டது. சனி பகவான் இப்பொழுது அடியெடுத்து வைத்திருக்கும் இடம் பாக்கிய ஸ்தானமாகும். சில மாதங்கள் மட்டும் கும்பத்தில் சனி பகவான் வாசம் செய்தாலும், அதற்குள் உங்கள் முன்னேற்றத்திற்கு அஸ்திவாரம் அமைத்துக் கொடுத்துவிடுவார். எனவே நம்பிக்கை யோடு காரியங் களை செய்ய முற்படுங்கள். தந்தை வழி உறவில் இருந்த விரிசல் அகலும். முறையான பாகப்பிரிவினை நடைபெற இப்பொழுது வழிபிறக்கும். குடும்பத்தை விட்டுப் பிரிந்து பணிபுரிந்தவர்கள் இப்பொழுது குடும்பத்துடன் வந்திணையும் வாய்ப்பு கைகூடும். இதயம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும்.

    மேஷ - குரு

    சித்திரை 9-ந் தேதி மேஷ ராசிக்கு குரு பகவான் செல்கிறார். இந்தக் குருப்பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு லாப ஸ்தானத்திற்கு வரும் குரு சேமிப்பை உயர்த்தும். எதிர்பாராத நன்மைகளையும் செய்யப் போகின்றார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு, 11-ல் சஞ்சரிக்கும் பொழுது திடீர் திருப்பங்களை உருவாக்குவார். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிவதால் அந்த இடங்களுக்குரிய ஆதிபத்யங்கள் எல்லாம் சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும்.

    சகோதர ஒற்றுமை பலப்படும். தடைப்பட்ட சில காரியங்கள் தன்னிச்சையாக நடைபெறும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். 'பல காலமாக பிள்ளைகளுக்குத் திருமணம் பேசியும் முடிவாகவில்லையே' என்று ஆதங்கப் பட்டவர்களுக்கு, விரைவில் நல்ல செய்தி வரும். வெளிநாட்டில் உள்ள பிரபல நிறுவனங்களில் இருந்து அதிக சம்பளம் தருவதாகச் சொல்லி அழைப்புகள் வரலாம்.

    மிதுன - சுக்ரன்

    உங்கள் ராசிக்கு பஞ்சம - விரயாதிபதியான சுக்ரன், சித்திரை 20-ந் தேதி உங்கள் ராசிக்கு வரப்போகின்றார். இதன் விளைவாகத் தொழில் மாற்றம், இடமாற்றம், வீடு மாற்றம் உள்ளிட்ட நன்மைக்குரிய சில மாற்றங்கள் உருவாகும். வாங்கிய இடத்தை விற்று விட்டு, புதிதாக இடம் வாங்கும் யோகமும் உண்டு. ஒரு சிலருக்கு வாகன யோகமும் வாய்க்கும். இல்லத்தில் சுப காரியங்கள் நடைபெற வழி ஏற்படும். பிள்ளைகளுக்கான கல்யாண காரியங்கள் சிறப்பாக நடைபெறும். பணவரவிற்கு குறைவு ஏற்படாது. கொடுத்த வாக்குறுதியை குறிப்பிட்ட நேரத்தில் காப்பாற்றி விடுவீர்கள்.

    இம்மாதம் முருகப்பெருமான் வழிபாடு முன்னேற்றத்தை வழங்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஏப்ரல்: 16, 17, 20, 21, 28, 29, மே: 3, 4, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    ×