என் மலர்tooltip icon

    மிதுனம் - தமிழ் மாத ஜோதிடம்

    மிதுனம்

    2026 மாசி மாத ராசிபலன்

    உயர்வான எண்ணம் கொண்ட மிதுன ராசியினரே

    பிறக்கப் போகும் மாசி மாதத்தில் ராசி அதிபதி புதன் ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் கும்ப சஞ்சரிப்பார். மாசி14 (26.2.2026) அன்று கும்ப ராசியில் வக்கிரம் அடைவார். கோட் சார கிரகங்கள் மிகச் சாதகமாக உள்ளதால் சுகமான வாழ்க்கையை நோக்கி அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். புகழின் உச்சிக்கு செல்லப் போகிறீர்கள். ஆன்ம பலம் கூடி புதுப் பொலிவு ஏற்படும். வாழ்வில் மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடக்கும். சிந்தனைகள் பெருகும். எவராலும் சாதிக்க முடியாத செயல்களை செய்து முடிப்பீர்கள். நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். கடந்த காலங்களில் பட்ட கஷ்டத்திற்கு தற்போது பலன் கிடைக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்ப வாழ்க்கையில் நிலவிய பிரச்சினைகள் தடைகள் விலகும். எதிர்பாராத நல்ல திருப்பங்கள் உண்டாகும். வீண் அலைச்சல், துக்கம் விலகும்.

    குடும்ப விசேஷங்களில் முதல் மரியாதை கவுரவப் பதவிகள் கிடைக்கும். காணாமல் போன பொருள்கள், முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். ஞாபக சக்தி கூடும். காதல் திருமண முயற்சி வெற்றி தரும். பிள்ளைகளால் ஏற்பட்ட சங்கடங்கள் சீராகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள். முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். சிலர் முன்னோர்கள் கடைபிடித்த கொள்கைகளிலிருந்து மாறுபட்டு செயல்பட நேரும். வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் சொந்த வீடு வாங்கி குடியேறும் காலம். புதிய சொத்து வாங்கும் போது முக்கிய ஆவணங்களை சரிபார்க்கவும். மாணவர்கள் விளையாட்டை தவிர்த்து எதிர்காலத்திற்கு திட்டமிட்டு படிப்பது அவசியம். எதிர்பாராத சில செலவுகள் வரலாம். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய பய உணர்வு இருந்து கொண்டே இருக்கும். மூட்டு வலி, வயிறு சார்ந்த உபாதைகள் தீரும். பூர்வீக சொத்து தொடர்பான நல்ல தகவல்கள் கிடைக்கும். தந்தை வழி உறவுகளுடன் ஒற்றுமை மேலோங்கும். பெண்களுக்கு நீண்ட காலமாக எதிர்பார்த்த தாய் வழி சீதனம் தேடி வரும்.

    பொருளாதாரம்

    பணவரவு அதிகரிக்கும். சுய சம்பாத்தியம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். ஒரு கடனை வாங்கி மற்றொரு கடனை அடைத்த நிலை மாறும். பழைய பாக்கிகள் வசூலாகும். சுய ஜாதக ரீதியாக தன வரவில் நிலவிய தோஷங்கள் விலகும். பொன், பொருள் சேரும். பற்றாக்குறை வருமானத்தில் வாழ்ந்த குடும்பம் நிறைவான வருமானத்துடன் நடக்கும். தடைபட்ட வாடகை வருமானங்கள் வந்து சேரும். மனதிலிருந்த கவலைகள் மாறும். பல வருடங்களாக தீராத பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புதிய சொத்துக்கள் சேரும். ஸ்திர சொத்துக்களின் மதிப்பு உயரும். சுப நிகழ்விற்கான பேச்சு வார்த்தைகள் நடக்கும். சொத்து, தொழில் மற்றும் சுப செலவிற்காக வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    முதலீட்டாளர்கள்

    உற்பத்தி பெருகி, இலாபம் கூடும். நேரம் காலம் பார்க்காமல் அதிகம் உழைக்க நேரும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். வாழ்க்கையில் சுவாரஸ்யம் கூடும். எதிர்கால வளர்ச்சிக்கு புதிய மார்க்கம் தென்படும். கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். எதிர்க்கருத்து கூறியவர்கள் மனம் மாறுவர்கள். புதிய வழியில் சம்பாதிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். வெளி வட்டார தொடர்புகளால் புதிய தொழில் வாய்ப்பு கிடைக்கும். சிலர் நிலையான நிரந்தரமான தொழில், உத்தியோகத்திற்காக வீடு அல்லது ஊர் மாற்றலாம். புதிய தொழிலுக்கு எடுக்கும் முயற்சிகள் நல்ல மாற்றத்தை தரும். முதலாளி, தொழிலாளிகளிடம் கருத்து ஒற்றுமை மேலோங்கும். கமிஷன் தொழில், தரகு, பங்குச் சந்தை, ஜோதிடம் போன்ற தொழில் இருப்பவர்களுக்கு பெயர், புகழ், அந்தஸ்து அதிகரிக்கும்.

    உத்தியோகஸ்தர்கள்

    திட்டமிட்டு செயல்படுவீர்கள். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். செல்வாக்கு உயரும். உங்களின் ஆளுமைக்கு மதிப்பும், பாராட்டும் கிடைக்கும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு உண்டு. எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வேலையின்மை மற்றும் தொழில் தோல்வியையும் சந்தித்து வந்த உங்கள் மனநிலை மாறும். பேச்சில் பொறுமை மட்டும் தான் உங்களுக்கு கை கொடுக்கும். சிலர் சுய தொழில் துவங்கலாம். தந்தையின் வாரிசு அரசு வேலை கிடைக்கும். இதுவரை எந்த வேலைக்கும் போகாமல் இருந்தவர்கள் கூட கிடைத்த வேலைக்குச் செல்வார்கள். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர உத்தரவு வரும்.

    அரசியல்வாதிகள்

    அரசியல்வாதிகளுக்கு கட்சியில் செல்வாக்கு குறைவது போல் மனம் வேதனை அடையும். பணம் சம்பாதிக்க கடுமையாக உழைப்பீர்கள். வீண் அவமானம் மறைமுக எதிர்ப்பு ஏற்படும். நெருக்கமானவர்களே உங்களுக்கு எதிராக திரும்பும் வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். அரசியல் எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். பதவி மாற்றம், இலாகா மாற்றம் ஏற்படலாம். பொது மக்கள் ஆதரவை பெற வேண்டிய காலம். மேலிடத்தின் அதிகாரத்தால் மன அமைதி குறைவு உண்டாகலாம். உங்கள் பேச்சே உங்களுக்கு எதிரிகளை உருவாக்கலாம். எனவே எதையும் யோசித்து பேசுவது நல்லது. எதிர்பாலினத்திடம் கவனமாக இருக்கவும்.

    பெண்கள்

    சங்கடங்கள் நீங்கி வாழ்வில் வளம் பெறும் மாதம். பெண்களுக்கு விலை உயர்ந்த ஆடை ஆபரண சேர்க்கையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண முயற்சிகள் சித்திக்கும். கடன் தொல்லைகள் அகலும். உழைப்பிற்கான நல்ல பலன் கிடைக்கும். தாயார் உடல்நிலையில் ஏற்பட்ட பிரச்சினைகள் சீராகும். வெளிநாடு சென்றவர்கள் சொந்த மண்ணிற்கு திரும்பும் சந்தர்ப்பம் உருவாகும். நீண்ட கால பரம்பரை நோய்க்கு மாற்று மருத்துவத்தின் மூலம் தீர்வு காண முயல்வீர்கள். உயில் எழுத ஏற்ற காலம். வேலைபளு மற்றும் அலைச்சல் சற்று அதிகமாக இருக்கும். தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்து செயல்படுவதால் மன ஒற்றுமை அதிகரிக்கும். வம்பு, வழக்கிலிருந்து முழுமையாக விடுபடுவார்கள். பிரிந்து வாழ்ந்த குடும்ப உறவுகள் இணைந்து வாழும் யோகமும் ஒற்றுமையும் உண்டாகும்.

    கவனம் தேவை:

    சூரிய கிரகணம்:

    மாசி 5 (17.2.2026)ல் நடக்கப் போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. மிதுன ராசிக்கு 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் ராகு சேர்க்கை ஏற்படுகிறது. இழுபறி நிலைமாறி துரிதமாக காரியங்கள் நடைபெறும். நன்மைகள் நடைபெறும். தொட்டது துலங்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.விலகிச் சென்ற உறவுகள் மீண்டும் இணைவார்கள். மூத்த சகோதரர், தந்தை பக்க பலமாக இருந்து உதவுவார். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வம் குறைப்பது நல்லது. பங்குச்சந்தை, சூதாட்டம், புதிய முதலீடுகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

    சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். ஆன்மீக ஈடுபாடு அதிகமாகும். சுய ஜாதக ரீதியாக பித்ரு தோஷம் இருப்பவர்கள் கிரகணத்தன்று பித்ரு சாந்தி பூஜை செய்வதால் பாக்கிய பலம் அதிகரிக்கும். வெளி உணவுகளைத் தவிர்த்து வீட்டில் சமைத்த சூடான உணவை சாப்பிடவும்.

    சந்திர கிரகணம்:

    மாசி 19ம் தேதி (3.3.2026) அன்று சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இது பகுதி சந்திர கிரகணமாக இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தெரியும். மிதுன ராசிக்கு மூன்றாம் இடமான வெற்றி ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்க உள்ளது. குடும்ப ஸ்தான அதிபதி சந்திரன் கேதுவுடன் இணைவதால் மனப்போராட்டம் அதிகரிக்கும் ஞாபக சக்தி குறையும்.வீடு மாற்றுவது, வேலை மாற்றுவது தொழில் நிறுவனத்தை மாற்றுவது, உத்தியோக மாற்றம், பத்திரப்பதிவு பாகப்பிரிவினை ஆகியவற்றை தவித்தல் நல்லது. முக்கிய பணப்பரிவர்த்தனைக்கு உள்ள ஆவணங்களை பத்திரமாக பராமரிக்க வேண்டும். சிலருக்கு விபரீத ராஜயோகமாக அதிர்ஷ்ட, பணம், பொருள், உயில் சொத்து கிடைக்க வாய்ப்பு உள்ளது. உயிர் காக்கும் முக்கிய அறுவை சிகிச்சை இருந்தால் செய்து கொள்ளலாம். முக்கிய ஆபரணம் மற்றும் ஆவணங்களை கவனமாக கையாள வேண்டும். யாருக்கும் ஜாமீன் போடக்கூடாது.அடமான நகைகள் சொத்துக்களை மீட்கும் முயற்சி வெற்றி தரும்.

    பரிகாரம்

    மாசி மாதம் சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வதால் தேவைகள் நிறைவேறும். உடலில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    2026 தை மாத ராசிபலன்

    மிதுன ராசி நேயர்களே!

    தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் அஷ்டமத்தில் சஞ்சரிக்கிறார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். ஆனால் அஷ்டமத்தில் சூரியன், செவ்வாய், சுக்ரன் ஆகிய மூன்று கிரகங்களும் சஞ்சரித்து வலிமை அடைவதால் திடீர் தாக்கங்கள், மன அமைதிக் குறைவு, ஆரோக்கியத் தொல்லை, கடன் நெருக்கடி, குடும்பச்சுமை அதிகரித்தல் போன்றவை ஏற்பட்டு மன வருத்தத்தை உருவாக்கும். எனவே அமைதியும், நிதானமும் தேவைப்படும் நேரம் இது. அனுபவஸ்தர்களின் ஆலோசனைப்படி நடந்தால் ஓரளவேனும் துன்பங்களில் இருந்து விடுதலை அடைய முடியும்.

    வக்ர குரு

    மிதுன ராசியில் உள்ள குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் குரு என்பதால், அவர் வக்ரம் பெறுவது ஒருவழிக்கு நன்மைதான். ஜென்ம குருவாக இருப்பதால் இடமாற்றம், ஊர் மாற்றம், வீடு மாற்றம் போன்றவை நிகழலாம். வரும் மாற்றங்களை ஏற்றுக்கொள்வது நல்லதுதான். 'உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். சகப் பணியாளர்களால் சில பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். குருவின் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே இந்த இடங்களுக்குரிய ஆதிபத்தியங்கள் எல்லாம் சிறப்பாக நடைபெறும். எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காண, குரு பகவான் பார்வை கைகொடுக்கும். சப்தம ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால் கல்யாண முயற்சிகள் கைகூடும். விட்டுப்போன வரன்கள் கூட மீண்டும் வரலாம். பாக்கிய ஸ்தானத்தைப் பார்க்கும் குருவால் பெற்றோரின் ஆதரவு திருப்தி தரும். உற்றார், உறவினரின் ஆதரவு உண்டு. கற்ற கல்விக்கேற்ற வேலை கிடைக்கும். கடமையைச் செவ்வனே செய்து முடிப்பீர்கள்.

    கும்ப - புதன்

    உங்கள் ராசிநாதனாகவும், 4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் புதன். அவர் 29.1.2026 அன்று கும்ப ராசியில் சஞ்சரிக்கப்போகிறார். எனவே பாக்கிய ஸ்தானம் பலம்பெறுகிறது. கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும். மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்பு மாறும். அவர்களின் இல்லங்களில் நடைபெறும் சுப நிகழ்வுகளை முன்னின்று நடத்துவீர்கள். பெற்றோர் வழியில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக மாறும். அவர்கள் மற்ற சகோதரர்களிடம் காட்டிய பாசத்தை இப்பொழுது உங்களிடமும் காட்டுவர். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் மாறும். கல்விக்காகவும், கலைக்காகவும் எடுத்த முயற்சி கைகூடும். பழைய வாகனத்தை சீர்செய்து உபயோகப்படுத்துவீர்கள்.

    கும்ப - சுக்ரன்

    மகரத்தில் சஞ்சரித்து வரும் சுக்ரன், 7.2.2026 அன்று கும்ப ராசிக்குச் செல்கிறார். இக்காலத்தில் தொழில் மாற்றம், இடமாற்றம் ஏற்படலாம். குரு-சுக்ர பார்வை இருப்பதால் குழப்பம் அதிகரிக்கும். கொடுக்கல் - வாங்கல்களில் திருப்தி ஏற்படாது. 'இதெல்லாம் நடக்குமா?' என்று நினைத்த காரியம் இப்போது நடந்து முடிந்து விடும். பிள்ளைகளின் முன்னேற்றம் திருப்தி தரும். பெண் பிள்ளைகளின் கல்யாணத்தை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்கள் வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள். இக்காலத்தில் குலதெய்வப் பிரார்த்தனை, தடைகளை அகற்றும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மாதத்தின் முற்பகுதி வளர்ச்சியையும், பிற்பகுதி தளர்ச்சியையும் ஏற்படுத்தும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு விறுவிறுப்பான சூழல் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் கவனம் தேவை. கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் வந்தும், உபயோகப்படுத்திக்கொள்ள இயலாது. மாணவ - மாணவிகளுக்கு ஆசிரியரின் ஆதரவு உண்டு. பெண்களுக்கு வீடு மாற்றம் இனிமை தரும். வேற்று இனத்தாரின் ஒத்துழைப்போடு கூட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜனவரி: 22, 23, 26, 27, பிப்ரவரி: 1, 2, 6, 7.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    மிதுனம்

    2025 மார்கழி மாத ராசிபலன்

    மிதுன ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். 'மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் உண்டு' என்பார்கள். எனவே பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும் மாதம் இது. சுக்ரனோடு புதன் இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குவதால், தொழில் மற்றும் உத்தியோகத்தில் கணிசமான லாபம் கைகளில் புரளும் வாய்ப்பு உண்டு. இம்மாதம் ஜென்ம குரு வரப்போவதால் திடீர் இடமாற்றங்கள், ஊர் மாற்றம் வரலாம். உத்தியோகத்தில் கூட ஒரு சிலருக்கு நீண்ட தூரங்களுக்கு மாறுதலாகி செல்லும் வாய்ப்பு உண்டு.

    மிதுன - குரு

    மார்கழி 6-ந் தேதி மிதுன ராசிக்கு குரு செல்கிறார். அங்ஙனம் ஜென்ம குருவாக வரும்பொழுது அவர் வக்ர இயக்கத்திலும் இருக்கிறார். எனவே ஆரோக்கியத் தொல்லைகளும், மருத்துவச் செலவுகளும் அதிகரிக்கும். திடீர் இடமாற்றங்களால் மனக்குழப்பம் ஏற்படும். உத்தியோகத்தில் வரும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளலாமா?, வேண்டாமா? என்பது பற்றி சிந்திப்பீர்கள். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. தனித்து இயங்க முடியாமல் பிறரை சார்ந்திருப்பவர்கள் பொறுமையோடு செயல்பட வேண்டிய நேரம் இது. உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை மற்றவர்களிடம் கொடுப்பதால் ஒரு சில பிரச்சினைகள் உருவாகும்.

    'குரு இருக்கும் இடத்தைக் காட்டிலும் பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகம்' என்பார்கள். அந்த அடிப்படையில் பார்க்கும்பொழுது, அதன் பார்வை பலனால் சில நன்மைகளும் நடக்கும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். பிள்ளைகளால் உருவான பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். பெற்றோரின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு அது கைகூடும். பழைய வாகனங்களை கொடுத்துவிட்டு, புதிய வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். 'சொத்து விற்பனையால் வரும் லாபத்தைக் கொண்டு சுப காரியங்கள் நடத்தலாமா?' என்று யோசிப்பீர்கள்.

    தனுசு - சுக்ரன்

    மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 7-ம் இடத்திற்கு வரும்போது வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். அதேநேரம் கணவன் - மனைவி இருவரும் வேறு வேறு இடத்தில் பணிபுரியக்கூடிய சூழ்நிலை உருவாகும். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் பணிபுரிய ஆசைப்பட்டவர்களுக்கு அது கைகூடும். தனுசு ராசியானது குருவிற்குரிய வீடு என்பதால், அதில் சஞ்சரிக்கும் பகை கிரகமான சுக்ரன் பலவித வழிகளிலும் திடீர் திடீரென மாற்றங்களைக் கொடுப்பார். மன வருத்தங்களும் அதிகரிக்கும்.

    மகர - செவ்வாய்

    மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் உச்சம்பெறும் இந்த நேரத்தில் உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகள் உங்கள் வளர்ச்சிக்கு வழிகாட்டுவர். ஒரு சிலருக்கு கடல் கடந்து செல்லும் வாய்ப்பு கைகூடும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். வருமானம் உயரும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு இதுவரை ஏற்பட்ட வீண் பழிகள் அகலும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். பெண்களுக்கு பிரச்சினைகள் ஒவ்வொன்றாகத் தீரும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 26, 27, 29, ஜனவரி: 5, 6, 9, 10.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.

    மிதுனம்

    2025 கார்த்திகை மாத ராசிபலன்

    மிதுன ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு பலம் பெற்ற சுக்ரன் இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்கும் விதத்தில் இருப்பதால் செல்வ நிலை உயரும். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும். தொழில் வளர்ச்சியில் இருந்த இடையூறு அகலும். குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், குழந்தைகளால் வரும் பிரச்சினைகளை சமாளித்து விடுவீர்கள். நீண்டநாளாக எதிர்பார்த்த ஒரு சில நல்ல காரியங்கள் இப்பொழுது நிறைவேறுவதற்கான அறிகுறி தென்படும்.

    குரு வக்ரம்

    மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் உச்சம்பெற்று சஞ்சரிக்கிறார். எனவே தன ஸ்தானம் வலுவடைகின்றது. ஆனால் அவர் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகிறார். எனவே வருமானம் தட்டுப்பாடுகளும் வரலாம். திசாபுத்தி பலம் இழந்திருப்பவர்களுக்கு கடன், கைமாற்று வாங்கும் சூழல் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நல்ல பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு சாதாரணப் பொறுப்பிற்கு மாற்றப்படலாம். குடும்பத்தில் பல பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

    விருச்சிக - சுக்ரன்

    கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். 12-க்கு அதிபதி 6-ம் இடத்திற்கு வரும் பொழுது சில நல்ல சம்பவங்கள் நடைபெறும். குறிப்பாக உத்தியோகத்தில் மாற்றங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு அது நடைபெறும். புகழ்பெற்ற ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வரவேண்டும் என்று சிந்தித்தவர்களுக்கு அது கைகூடும். வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அரசு வழி ஆதரவு உண்டு.

    தனுசு - செவ்வாய்

    கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் இடமாற்றம், ஊர் மாற்றம் வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். கொடுக்கல் - வாங்கல்களில் இருந்த பிரச்சினைகள் ஒவ்வொன்றாக அகலும். இளைய சகோதரத்துடன் இணக்கம் ஏற்படும். கல்யாண முயற்சிகளில் இருந்த தடை அகலும். பூமி விற்பனையில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    விருச்சிக - புதன்

    கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கும், 4-ம் இடத்திற்கும் அதிபதியானவர் புதன். அவர் 6-ம் இடத்திற்கு வருவது யோகம்தான். நிறைந்த தன லாபம் தரக்கூடிய விதத்தில் சில வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். பிரபலமானவர்களின் பின்னணியில் சுபகாரியங்கள் நடைபெறும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். கல்விக்காகவும், கலை சம்பந்தமாகவும் எடுத்த முயற்சி கைகூடும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கணிசமான தொகை கைகளில் புரளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவி உண்டு. கலைஞர்களுக்கு நம்பிக்கைகள் நடைபெறும். மாணவ - மாணவி களுக்கு பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு உண்டு. பெண்களின் எண்ணங்கள் ஈடேறும். வருமானம் திருப்தி தரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    நவம்பர்: 17, 27, 28, டிசம்பர்: 2, 3, 8, 9.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    மிதுனம்

    2025 ஐப்பசி மாத ராசிபலன்

    மிதுன ராசி நேயர்களே!

    ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். அதேநேரம் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான சுக்ரன் நீச்சம் பெற்றிருக்கிறார். எனவே ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். மருத்துவச் செலவு கூடும். இல்லத்திலும் பிரச்சனை, இடம் பூமியாலும் பிரச்சனை என்ற நிலை உருவாகும். 'நல்ல காரியங்கள் நடைபெற தாமதமாகின்றதே' என்று கவலைப்படுவீர்கள். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு குறையும்.

    உச்சம் பெற்ற குரு

    மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை பலத்தால் பலவித நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக உத்தியோக மாற்றம் உறுதியாகும். ஊா் மாற்றம், இடமாற்றம் அமையும் பொழுது சுய ஜாதகத்தின் அடிப்படையில் அதை ஆராய்ந்து ஏற்றுக்கொள்வது நல்லது. ஜென்ம குரு விலகு வதால் இனி பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. என்றாலும் பஞ்சமாதிபதியும், பாக்கிய ஸ்தானாதிபதியும் நீச்சம் பெறுகிறார். எனவே எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. தைரியமும், தன்னம்பிக்கையும் குறையும். தடைகளை மீறி முன்னேற்றம் காண முயற்சி எடுப்பீர்கள்.

    சனி - ராகு சேர்க்கை

    மாதம் முழுவதும் பாக்கிய ஸ்தானத்தில் சனியும், ராகுவும் சேர்க்கை பெற்று சஞ்சரிக்கிறார்கள். பாக்கிய ஸ்தானாதிபதி வக்ரம் பெற்றிருப்பதால் ஒரு வழியில் வருமானம் வந்தால் மறுவழியில் செலவு இருமடங்காகும். குடும்ப உறுப்பினர்களால் பிரச்சனைகளும், மனக்கசப்புகளும் ஏற்படலாம். நம்பி எதையும் செய்ய இயலாது. பெற்றோர் வழியில் பெரும் செலவு ஏற்படும். 'கற்ற கல்விக்கு நல்ல வேலை கிடைக்கவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பகையை வளர்த்துக்கொள்ள வேண்டாம்.

    விருச்சிக - செவ்வாய்

    ஐப்பசி 10-ந் தேதி, விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் 6-ம் இடத்திற்கு வரும் இந்த நேரம் கொஞ்சம் கவனமாக செயல்பட வேண்டும். எதிர்ப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத விதத்தில் இலாகா மாற்றம் வந்து மன வருத்தத்தை உருவாக்கும். வளர்ச்சியில் ஏற்படும் குறுக்கீடுகளை சமாளிக்க கைமாற்று வாங்கும் சூழ்நிலை கூட ஏற்படலாம். வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு அதில் தடைகளும், தாமதங்களும் ஏற்படலாம். எதிலும் சிந்தித்துச் செயல்படுவதே நல்லது.

    துலாம்-சுக்ரன்

    ஐப்பசி 17-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. இதுவரை நீச்சம் பெற்ற சுக்ரன், இப்பொழுது சொந்த வீட்டிற்கு வருவதால் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடிவரப் போகிறது. நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு புதிய முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும். அரசு வழிகளில் எதிர்பார்த்த சலுகைகள் உண்டு. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பிரச்சனைகளில் இருந்து விடுபடும் வாய்ப்பு உண்டு. உடல்நலத்தில் மட்டும் கவனம் தேவை. பொதுவாழ்வில் உள்ளவர்கள் வீண் பழிக்கு ஆளாக நேரிடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு பணநெருக்கடி அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. கலைஞர்களுக்கு அதிக முயற்சியின் பேரில் ஒப்பந்தங்கள் வரலாம். மாணவ - மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு வருமானத்தை விட செலவு கூடும். பக்கத்தில் உள்ளவர்களிடம் பகையை வளர்த்துக்கொள்ள வேண்டாம்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    அக்டோபர்: 20, 21, நவம்பர்: 2, 5, 6, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

    மிதுனம்

    2025 புரட்டாசி மாத ராசிபலன்

    மிதுன ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியில் குருவும், சந்திரனும் இணைந்து 'குரு சந்திர யோக'த்தை உருவாக்கு கிறார்கள். உங்கள் ராசிநாதன் புதன் உச்சம்பெற்று சஞ்சரிக்கிறார். எனவே சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் சிறப்பாகவே இருக்கும். சிறுசிறு பிரச்சினைகள் வந்தாலும் அதை சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. வளர்ச்சிப் பாதைக்கு நண்பர்கள் வழிகாட்டுவர். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புனிதப் பயணம் அதிகரிக்கும். தொழில் ஸ்தானாதிபதியான குரு, உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் இந்த நேரம் தொழில் வளர்ச்சியும், கூடுதல் லாபமும் வந்துசேரும்.

    துலாம் - புதன்

    புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கும், சுக ஸ்தானத்திற்கும் அதிபதியானவர் புதன். அவர் பஞ்சம ஸ்தானத்திற்கு வருவது யோகம்தான். பிள்ளைகளின் கல்வி நலன் கருதியும், எதிர்கால முன்னேற்றம் கருதியும் எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாமன், மைத்துனர் வழியில் தடைப்பட்ட மங்கல நிகழ்வுகள், இப்பொழுது நடைபெறும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். இடம் வாங்குவது, வீடு கட்டுவது போன்றவற்றில் ஆர்வம் கூடும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து சில நல்ல காரியங்களை முடித்துக்கொடுப்பர்.

    கடக - குரு

    புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு செல்கிறார். அதிசார கதியில் அங்கு செல்லும் குரு பகவான் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் உச்சம் பெறும் இந்த நேரத்தில் கல்யாணக் கனவுகள் நனவாகும். கடமையில் இருந்த தொய்வு அகலும். குருவின் பார்வைக்கு பலன் அதிகம் என்பதால் எதிர்பார்ப்புகள் இக்காலத்தில் எளிதில் நிறைவேறும். இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வந்துசேரும். இதுவரை அடிக்கடி ஆரோக்கிய குறைபாட்டால் அவதிப்பட்ட நீங்கள், இப்போது உற்சாகத்தோடு செயல் படுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பர். கொடுக்கல் - வாங்கல்களில் தாராளம் காட்டுவீர்கள். வளர்ச்சிக்கு உறுதுணையாக பிற இனத்தார்களின் அறிமுகம் கிடைக்கும். மூடிக்கிடந்த தொழிலுக்கு திறப்பு விழாக்களை நடத்துவீர்கள். வாடகைக் கட்டிடத்தில் நடைபெறும் தொழிலை, சொந்த கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.

    சனி வக்ரம்

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இந்த மாதம் முழுதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அஷ்டமாதிபதியான அவர் வக்ரம் பெறுவது நன்மைதான் என்றாலும், பாக்யாதிபதியாகவும் சனி விளங்குவதால் தொழிலில் சில குறுக்கீடுகள் வரத்தான் செய்யும். தொல்லை தரும் எதிரிகளின் பலம் கூடும். உற்றார் - உறவினர்களில் ஒருசிலர் உங்களை விட்டு விலக நேரிடும். கடமையைச் செவ்வனே செய்ய இயலாது. புதிய முயற்சிகளை பலமுறை செய்த பிறகுதான் வெற்றி காண முடியும். பணத் தட்டுப்பாடு அதிகரிக்கும் நேரம் இது.

    பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. கலைஞர்களுக்கு முன்னேற்றப் பாதையில் சில குறுக்கீடுகள் வரலாம். மாணவ - மாணவி களுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்பச்சுமை கூடினாலும் அதை சமாளிப்பீர்கள். தேவையான நேரத்தில் உங்கள் தேவைக்குரிய பணம் கைகளில் வந்துசேரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 18, 19, 22, 23, அக்டோபர்: 4, 5, 8, 9, 15, 16.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    மிதுனம்

    2025 ஆவணி மாத ராசிபலன்

    மிதுன ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு 2-ம் இடமான தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே பணப்புழக்கம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் படிப்படியாக நடைபெறும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். ராசியிலேயே குரு சுக்ர சேர்க்கை இருப்பதால் திடீரென சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். பஞ்சாயத்துக்கள் சாதகமாகும். சனி வக்ர இயக்கத்தில் இருப்பதாலும், அதை குரு பார்ப்பதாலும் தாமதப்பட்ட காரியங்கள் தடையின்றி நடைபெறும். பயணங்கள் பலன்தரும்.

    கடக - சுக்ரன்

    ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். புத்திர ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்ரன், தன ஸ்தானத்திற்கு வருவதால் பிள்ளைகளால் விரயங்கள் ஏற்படலாம். அவர்களின் எதிர்கால நலன்கருதி திட்டமிட்டு செயல்படுவது நல்லது. 'புத சுக்ர யோகம்' இருப்பதால் பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாகவோ அல்லது வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டுமென்ற அவர்களின் எண்ணத்தைப் பூர்த்தி செய்வதற்காக எடுத்த முயற்சி கைகூடும். மாமன், மைத்துனர் வழியில் மனதிற்கினிய சம்பவம் நடைபெறும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சம்பள உயர்வு உண்டு. அதே நேரத்தில் இடமாற்றம் அல்லது இலாகா மாற்றம் பற்றி சிந்தித்தவர்களுக்கு அதுவும் கைகூடும்.

    சிம்ம - புதன்

    ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் இருப்பவர் புதன். சுக ஸ்தானாதிபதி, சகாய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் எல்லாவிதமான சவுகரியங்களும் உங்களுக்கு கிடைக்கும். குறிப்பாக ஆரோக்கிய பாதிப்புகள் அகலும். அடுத்தடுத்து நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். 'புத ஆதித்ய யோகம்' இருப்பதால் பொருளாதாரத்தில் உச்ச நிலையை அடைவீர்கள். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை பங்கிட்டுக் கொள்வதில் இருந்த பிரச்சினைகள் அகலும். பெற்றோர் வழியில் சில நல்ல காரியங்கள் நடைபெறும்.

    துலாம் - செவ்வாய்

    ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் புதிய திருப்பங்கள் ஏற்படும். குறிப்பாக என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப்போட்ட இடம் இப்பொழுது அதிக விலைக்கு விற்று லாபத்தைக் கொடுக்கும். தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். 'குரு மங்கள யோகம்' இருப்பதால் இல்லத்தில் மங்கல ஓசை கேட்க வழிபிறக்கும்.

    சிம்ம - சுக்ரன்

    ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சகாய ஸ்தானத்திற்கு வரும் பொழுது பிள்ளைகளால் பெருமை சேரும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும். வெளிநாடு சென்று படிக்க வேண்டும், அங்கு வேலை பார்க்க வேண்டும், கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்று கனவு கண்டவர்களுக்கு இப்பொழுது கனவுகள் நனவாகும் நேரமாகும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மாதத்தின் மையப் பகுதி மகிழ்ச்சி தரும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு துணிந்து எடுத்த முடிவுகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவி உண்டு. கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ- மாணவிகளுக்கு மறதி விலகும். மதிப்பெண் கூடும். பெண்களுக்கு விரயங்கள் ஏற்படும் நேரம் என்பதால், சுப விரயமாக மாற்ற முயற்சிப்பது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஆகஸ்டு: 21, 22, 26, 27, 28, செப்டம்பர்: 7, 8, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

    மிதுனம்

    2025 ஆடி மாத ராசிபலன்

    மிதுன ராசி நேயர்களே!

    ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். ஆனால் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்பட்டு அகலும். 'நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்ய முடியவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். உங்கள் ராசியில் குருவின் ஆதிக்கமும் இருப்பதால், தொழில் வளம் சிறப்பாக இருக்கும். அதேநேரம் மன பயமும், நிம்மதி குறைவும் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். இடமாற்ற சிந்தனை அதிகரிக்கும். தொடங்கிய காரியத்தை முடிக்க முடியாமல் போகலாம்.

    மிதுன - சுக்ரன்

    ஆடி 10-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். விரயாதிபதியான சுக்ரன் உங்கள் ராசிக்கு வரும் பொழுது விரயங்கள் அதிகரிக்கத்தான் செய்யும். 'கட்டுக்கடங்காத செலவுகள் ஏற்படுகிறதே' என்று கவலைப்படுவீர்கள். திட்டமிட்ட காரியங்களை அதிகச் செலவு செய்தே முடிக்க நேரிடும். பிள்ளைகளால் சில பிரச்சினைகள் வந்து அலைமோதும். மனக்குழப்பம் அகலவும், புதிய முயற்சிகளில் வெற்றி பெறவும், அனுபவஸ்தர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கைகொடுக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். பயணங்கள் பலன் தருவதாக அமையும்.

    கன்னி - செவ்வாய்

    ஆடி 13-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சுக ஸ்தானத்திற்கு வரும்போது, பொருளாதார நிலை மகிழ்ச்சி தரும். என்றாலும் மேலதிகாரிகள் உங்கள் திறமைக்கு சரியான அங்கீகாரம் கொடுக்கமாட்டார்கள். கடன் சுமை அதிகரிக்கும். பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் வாங்கும் சூழல் ஏற்படும். சமுதாயத்தில் உயர்ந்த மனிதர்களின் பகையை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதே நேரம் ஆரோக்கியத்திலும் அக்கறை தேவை. மருத்துவச் செலவுகள் உண்டு.

    கடக - புதன்

    ஆடி 18-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் புதன். அவர் தன ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் தனவரவு தாராளமாக வந்துசேரும். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான வழிபிறக்கும். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வரலாம். வீடு கட்டும் முயற்சி பலன்தரும். பெற்றோரின் ஆதரவு பெரிதும் உதவிகரமாக இருக்கும். வீடு கட்டுவது அல்லது கட்டிய வீட்டை விலைக்கு வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். உடல்நலக் குறைபாடு அகலும். வெளிநாடு செல்லும் முயற்சிக்கு அஸ்திவாரம் அமைத்துக்கொள்வீர்கள். வருமான உயர்விற்கு நண்பர்கள் மூலம் வழிபிறக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். பங்குச்சந்தை மூலம் பலன்பெறும் நேரம் இது. விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர்.

    பொதுவாழ்வில் உள்ளவர்கள் நிதானத்தோடு செயல்பட வேண்டிய நேரம் இது. வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய கூட்டாளிகளால் பிரச்சினைகள் வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் மகிழ்ச்சி நிலவும். கலைஞர்களுக்கு போட்டிகளுக்கு மத்தியில் வெற்றி கிடைக்கும். மாணவ- மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை தேவை. பெண்களுக்கு குடும்பச் சுமை கூடும். பணியாளர்களின் பிரச்சினையை சமாளிக்க நேரிடும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜூலை: 18, 19, 29, 30, ஆகஸ்டு: 1, 11, 15, 16.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    மிதுனம்

    2025 ஆனி மாத ராசிபலன்

    எதையும் திட்டமிட்டு செய்யும் மிதுன ராசி நேயர்களே!

    ஆனிமாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசியிலேயே பலம்பெற்று சஞ்சரிக்கிறார். அவரோடு சகாய ஸ்தானாதிபதி சூரியனும், தொழில் ஸ்தானாதிபதி குருவும் இணைந்து சஞ்சரிப்பதால் தொழில் முன்னேற்றம் எதிர்பார்த்ததை காட்டிலும் கூடுதலாக இருக்கும். கிளைத் தொழில் தொடங்கும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். ஜென்ம குருவின் ஆதிக்கத்தால் இடமாற்றங்கள் இனிமை தரும்விதம் அமையும்.

    கடக - புதன்

    ஆனி 8-ந் தேதி கடக ராசிக்கு புதன் வருகிறார். புதன் உங்கள் ராசிநாதனாகவும், சுக ஸ்தானாதிபதியாகவும் விளங்குபவர். அவர் 2-ம் இடத்திற்கு வரும் இந்த நேரம் இனிய பலன்கள் ஏராளமாக நடைபெறும். கொடுக்கல் - வாங்கல்கள் லாபம் தரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். அடுத்தடுத்து நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். சுபசெலவுகள் உண்டு. குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளுக்கு மேல்படிப்பு சம்பந்தமாக ஏதேனும் ஏற்பாடு செய்திருந்தால் அது கைகூடும். உத்தியோகத்தில் உங்களுக்கு இடையூறு செய்த மேலதிகாரிகள் மாற்றப்படுவர். அயல்நாடு சென்று பணிபுரிய வேண்டும் என்று விரும்பியவர்களுக்கு அது கைகூடும். நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.

    ரிஷப - சுக்ரன்

    ஆனி 15-ந் தேதி ரிஷப ராசிக்கு சுக்ரன் வருகிறார். விரயாதிபதி சுக்ரன் விரய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் கொஞ்சம் விரயங்கள் கூடுதலாகத்தான் இருக்கும். ஒரு சிலர் கடன் சுமையின் காரணமாக ஆபரணங்களை அடகு வைப்பதற்கோ, விற்பதற்கோ முயற்சிப்பர். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள்.

    உங்கள் ராசியைபொறுத்தவரை சுக்ரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் அதிபதியானவர். எனவே அவர் தனது சொந்த வீட்டில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகளை முடித்து வைப்பார். பஞ்சாயத்துக்கள் சாதகமாக அமையும். பாகப்பிரிவினைகள் உங்கள் விருப்பம் போல் நடைபெறும். தேக நலமும் சிறப்பாக இருக்கும். செய்தொழிலை விரிவுசெய்யும் முயற்சிக்கு கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

    செவ்வாய் - சனி பார்வை

    மாதம் முழுவதும் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனியை சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய் பார்க்கிறார். இது அவ்வளவு நல்லதல்ல. உடன்பிறப்புகளாலும், உடன் இருப்பவர்களாலும் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் இணக்கம் குறையும். வேலையை விட்டு விடலாமா? என்ற சிந்தனை அதிகரிக்கும். பாகப்பிரிவினைகள் முடிவடையாமல் இழுபறி நிலையில் இருக்கும். கைக்கு கிடைத்தது வாய்க்கு கிட்டவில்லையே என்ற சூழ்நிலை அமையும். சொத்துப் பிரச்சினையும், சொந்தங்களின் பிரச்சினையும் அதிகரிக்கும் நேரமிது. வரவு வருவதற்கு முன்னதாகவே செலவு காத்திருக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு குறுக்கீடுகள் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு பங்குதாரர்களால் தொல்லை உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வந்தாலும் உபயோகப்படுத்திக் கொள்ள இயலாது. மாணவ - மாணவியர்களுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்பச்சுமை கூடும். விரயங்கள் எதிர்பாராத விதம் வந்துசேரும்.

    இம்மாதம் பெருமாள் - லட்சுமி வழிபாடு பெருமை சேர்க்கும்.

    மிதுனம்

    2025 சித்திரை மாத ராசிபலன்

    சமயோசித புத்தியால் தடைகளைத் தகர்த்தெறியும் மிதுன ராசி நேயர்களே!

    விசுவாவசு வருடம் சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் நீச்சம்பெற்று, உச்சம்பெற்ற சுக்ரனோடு இணைந்து 'நீச்சபங்க ராஜயோக' அமைப்பை உருவாக்குகிறார். எனவே இம்மாதம் முற்பாதியைக் காட்டிலும் பிற்பாதி சிறப்பாக இருக்கும்.

    மாத தொடக்கத்தில் விரயங்கள் ஏற்பட்டாலும், பிறகு வருமானம் வந்து கொண்டேயிருக்கும். தொழில் வளர்ச்சியில் மாற்று இனத்தவர்களின் பங்கு அதிகரிக்கும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெற வழிபிறக்கும். ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்தி ஆரோக்கியத்தை சீராக வைத்துக்கொள்வது நல்லது.

    குரு- சுக்ர பரிவர்த்தனை

    சித்திரை முதல் தேதி முதல் 27-ந் தேதி வரை குரு - சுக்ர பரிவர்த்தனை இருக்கிறது. உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சுக்ரன், களத்திர ஸ்தானாதிபதி குரு இவை இரண்டின் பரிவர்த்தனைக் காலத்தில் நல்ல பலன்கள் நிறைய நடைபெறும். குறிப்பாக பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள். தொழில் மற்றும் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக வரவேண்டிய பதவி உயர்வு இப்பொழுது கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைந்து, பொருளாதார நிலை உயர வழிவகுத்துக் கொடுப்பர்.

    கும்ப - ராகு, சிம்ம- கேது

    சித்திரை 13-ந் தேதி கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிக்கும் கேதுவால் முன்னேற்றப் பாதையில் சில சறுக்கல்கள் வரலாம். அண்ணன், தம்பிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

    பொதுவாழ்வில் இருப்பவர்கள் வீண்பழிக்கு ஆளாக நேரிடும். ராகுவின் சஞ்சாரத்தால் பொன், பொருள் சேர்க்கை உண்டு. புதிய ஒப்பந்தங்கள் உண்டு. பூர்வீக சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டு. தொழில் கூட்டாளிகள் உங்களை விட்டு விலகினாலும் புதியவர்கள் வந்திணைவர். இக்காலத்தில் சர்ப்பக் கிரகங்களுக்குரிய சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வதன் மூலம் தனவரவை பெருக்கிக் கொள்ள இயலும்.

    மேஷ- புதன் சஞ்சாரம்

    சித்திரை 17-ந் தேதி மேஷ ராசிக்கு புதன் வருகிறார். அங்குள்ள சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். உங்கள் ராசிநாதன் புதன், லாப ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கணிசமான தொகை கைகளில் புரளும். பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து சிலருக்கு அழைப்புகள் வரலாம்.

    மிதுன - குரு சஞ்சாரம்

    சித்திரை 28-ந் தேதி மிதுன ராசிக்கு குரு வருகிறார். இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக அவரது பார்வை பதியும் இடங்களெல்லாம் புனிதமடைகின்றன. எனவே பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிரச்சினைகள் ஒவ்வொன்றாக நல்ல முடிவிற்கு வரும். உங்களுக்கோ, உங்கள் உடன்பிறப்புகளுக்கோ வரன்கள் வந்து முடிவாகாமல் இருந்தால் இப்பொழுது முடிவாகி மகிழ்ச்சியை வழங்கும். பூர்வீக சொத்துக்களை பங்கிட்டுக் கொள்வதில் இருந்த பிரச்சினை நீங்கும்.

    தொழில் வெற்றிநடை போடும்.பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு ஆதாயம் தரும் தகவல்கள் அதிகம் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் இனிமை தரும் விதம் அமையும். கலைஞர் களுக்கு புகழ் கூடும். மாணவ - மாணவிகளுக்கு நினைவாற்றல் பளிச்சிடும். பெண்களுக்கு சேமிப்பு உயரும். பயணம் பலன்தரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஏப்ரல்: 23, 24, 27, 28, மே: 4, 5, 8, 9.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.

    மிதுனம்

    2025 பங்குனி மாத ராசிபலன்

    எடுத்த காரியத்தை எப்பாடுபட்டாவது முடிக்கும் மிதுன ராசி நேயர்களே!

    பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் வக்ரம் பெற்றும், நீச்சம் பெற்றும் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு உச்சம் பெற்ற சுக்ரனும் இணைவதால் 'நீச்ச பங்க ராஜயோக'மும், 'புத சுக்ர யோக'மும் ஏற்படுகிறது.

    எனவே பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தொழிலில் லாபம் ஏற்படும். சென்ற மாதத்தில் நடைபெறாத காரியங்கள், இப்போது தானாகவே நடைபெறும். உங்கள் ராசியிலேயே செவ்வாய் பலம்பெற்று விளங்குவதால், தைரியத்தோடு செயல்பட்டு சாதனை நிகழ்த்துவீர்கள்.

    மீன - புதன் சஞ்சாரம்

    மாதத் தொடக்கத்தில் மீன ராசியில் புதன் நீச்சம் பெற்றும், வக்ரம் பெற்றும் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிநாதன் புதன் என்பதால், அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. ஆதாயம் தரும் தகவல்களைக் காட்டிலும், விரயங்களை எடுத்துரைக்கும் தகவல்களே அதிகம் கிடைக்கும்.

    உடல் ஆரோக்கியத்தில் மிகமிக கவனம் தேவை. கை வலி, கால் வலி, மூட்டு வலி என்று ஏதாவது ஒரு தொல்லை வந்து கொண்டேயிருக்கும். விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் வந்து சேரும். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம்.

    கும்ப - புதன் சஞ்சாரம்

    மீனத்தில் உள்ள புதன் பங்குனி 4-ந் தேதி, வக்ர இயக்கத்தில் கும்ப ராசிக்கு வருகிறார். உங்கள் ராசிக்கு அதிபதியான புதன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் நல்ல வாய்ப்புகள் பல இல்லம் தேடி வரப்போகிறது. தந்தை வழி உறவில் இருந்த விரிசல் அகலும். தாய்வழி ஆதரவும் அதிகரிக்கும். முட்டலும் மோதலுமாக இருந்த அண்ணன் - தம்பிகளின் உறவு, இப்பொழுது ஒற்றுமையாகும்.

    அதோடு பாகப்பிரிவினைக்கும் ஏற்பாடு செய்வர். முன்னோர் சொத்துக்களில் முறையான பங்கீடு கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்புகள் தேடிவரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், அதிகாரம் மிகுந்த பதவிக்கு உயர்த்தப்படுவர்.

    மீன - சுக்ரன் வக்ரம்

    மீனத்தில் உள்ள சுக்ரன், இந்த மாதம் முழுவதும் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் வக்ரம் பெறும் இந்த நேரத்தில் நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். பிள்ளைகளால் பிரச்சினைகள் வரலாம். இடமாற்றம் இனிமை தரும் விதம் அமையாது. கல்யாண காரியங்கள் கைநழுவிச் செல்லலாம். பொருளாதாரத்தில் பற்றாக்குறை அதிகரிக்கும். வரவு ஒருமடங்கு வந்தால் செலவு இருமடங்காகும்.

    கடக - செவ்வாய்

    உங்கள் ராசிக்கு 6, 11-க்கு அதிபதியானவர் செவ்வாய். பங்குனி 24-ந் தேதி கடக ராசிக்குச் செல்லும் அவர், அங்கு நீச்சம் பெறுகிறார். எனவே கடன் சுமை குறையும். கவலைகள் தீரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும். 'வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக் கொள்ளலாமா?' என்று சிந்திப்பீர்கள். போட்டிக் கடை வைத்தவர்கள் விலகுவர். புதிய கிளைத் தொழில்கள் தொடங்கும் முயற்சி கைகூடும். இதுவரை வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி வெற்றிபெறும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு பங்குதாரர்களால் பிரச்சினைகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விருதுகள் வாங்கும் சூழல் உண்டு. கலைஞர்களுக்கு விருதுகள் கூட கிடைக்கலாம். மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் அக்கறை கூடும். பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை பலப்படும். வேலைக்காக எடுத்த முயற்சி கைகூடும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    மார்ச்: 15, 16, 26, 27, 31, ஏப்ரல்: 1, 7, 8.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.

    மிதுனம்

    2025 மாசி மாத ராசிபலன்

    உதவும் குணத்தால் மற்றவர்கள் மனதில் இடம்பிடிக்கும் மிதுன ராசி நேயர்களே!

    மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் மாதத் தொடக்கத்தில் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சுக்ரன் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். எனவே இம்மாதம் குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும்.

    கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். தடைபட்டு வந்த காரியங்கள் தானாக நடைபெறும். தொழில் வளர்ச்சி மகிழ்ச்சி தரும். பிள்ளை களால் வந்த பிரச்சினைகள் அகலும். ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் அக்கறை செலுத்துவது நல்லது. சர்ப்பக் கிரக வழிபாடு மகிழ்ச்சியை வழங்கும்.

    சூரியன் - சனி சேர்க்கை

    இந்த மாதம் முழுவதும் கும்ப ராசியில் சூரியன்-சனி சேர்க்கை ஏற்பட்டுள்ளது. பாக்கிய ஸ்தானத்தில் முரண்பாடான கிரகங்களின் சேர்க்கை ஏற்பட்டாலும், ஒரு சில வழிகளில் நன்மைகளும் ஏற்படும். பிதுரார்ஜித சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக அகலும். பலமுறை பாகப்பிரிவினைக்கு முயற்சி செய்தும், அது நடைபெறாமல் இருந்த நிலை இப்பொழுது மாறும்.

    அரசல் புரசலாக இருந்த அண்ணன் - தம்பிகள் குணம் மாறி ஒத்துவருவர். நீண்ட நாட்களாக நாகரிகமான வாகனங்கள் வாங்கி, அதில் பயணிக்க வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு திடீரென பொறுப்புகள் மாற்றப்பட்டு மனக்கவலையை அளிக்கலாம்.

    செவ்வாய் வக்ர நிவர்த்தி

    உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், மாசி 9-ந் தேதி வக்ர நிவர்த்தியாகி பலம்பெறுகிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பலம்பெறும் இந்த நேரம் உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். மனத்தெளிவோடு முடிவெடுப்பீர்கள். வாடகைக் கட்டிடத்தில் நடைபெறும் தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.

    'வாங்கிய இடத்தை விற்று விட்டோமே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது இடம் அல்லது வீடு வாங்கும் யோகம் உண்டு. 'வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களில் இருந்து வரும் அழைப்பை ஏற்றுக்கொள்ளலாமா?' என்று சிந்திப்பீர்கள்.

    மீன - புதன் சஞ்சாரம்

    மாசி 14-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் வலிமை இழக்கும் இந்த நேரம் அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். மருத்துவச் செலவு உண்டு. உறவினர் வழியில் மனக்கலக்கம் தரும் தகவல் வரலாம். குலதெய்வப் பிரார்த்தனையும், இஷ்ட தெய்வப் பிரார்த்தனையும் தக்க சமயத்தில் கைகொடுக்கும்.

    நிதிப் பற்றாக்குறையால் நிம்மதி இழப்பீர்கள். புதிய வாகனம் வாங்குவதில் தடை ஏற்படும். பெற்றோரின் ஆதரவு குறையும். எந்தக் காரியமாக இருந்தாலும் போராட்டம் அதிகரிக்கும் நேரம் இது. குறிப்பாக யாருக்கும் பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பிரச்சினைகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர் களுக்கு கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பணியாளர்களால் பிரச்சினை ஏற்படும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கை நழுவிச் செல்லலாம். மாணவ - மாணவிகளுக்கு மறதிகள் அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்பச்சுமை கூடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    பிப்ரவரி: 16, 17, 28, மார்ச்: 2, 3, 4, 5, 10, 11.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    ×