என் மலர்

    மிதுனம் - தமிழ் மாத ஜோதிடம்

    மிதுனம்

    புரட்டாசி மாத ராசிபலன்

    18-09-2023 முதல் 17-10-2023 வரை

    பிறருடைய பிரச்சினைகள் தீர வழிசொல்லும் மிதுன ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அதே நேரத்தில் சனி வக்ர இயக்கத்தில் அஷ்டமத்துச் சனியாகவும் வருகிறார். எனவே ஒருசில காரியங்கள் விரைவில் முடியும் என்றாலும், ஒரு சில காரியங்களில் தடைகளும், தாமதங்களும் வரத்தான் செய்யும். 'நினைத்தது நிறைவேறவில்லையே' என்ற கவலை அகல, வழிபாடுகளை அவ்வப்போது மேற்கொள்வது நல்லது.

    புதன் வக்ரம்

    புரட்டாசி 10-ந் தேதி, கன்னி ராசியில் புதன் வக்ரம் பெறுகிறார். அதே நேரத்தில் அந்த வீடு புதனுக்கு உச்ச வீடாகும். உங்கள் ராசியைப் பொறுத்தவரை ராசிநாதன் புதன் உச்சம் பெறுவது யோகம்தான். ஆரோக்கியம் சீராகும். ஆதாயம் தரும் தகவல்கள் அதிகம் கிடைக்கும். எதிர்பாராத விதத்தில் இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். வாடகை கட்டிடத்தில் நடைபெறும் தொழிலாக இருந்தால் அதைச் சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் யோகம் உண்டு. மாமன், மைத்துனர் வழியில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறு வதற்கான அறிகுறிகள் தென்படும். பூமி யோகம் முதல், புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வரும் சூழ்நிலைகள் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும்.

    துலாம் - செவ்வாய்

    புரட்டாசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு செவ்வாய் வருகிறார். 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும்போது, பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். தாய்வழி ஆதரவு உண்டு. புதிய வாகனங்கள் வாங்க வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறும். நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெற வேண்டுமானால் நாம் வழிபாட்டில் கவனம் செலுத்தவேண்டும். அந்த அடிப்படையில் செவ்வாயால் நற்பலன்கள் பெற முருகப்பெருமானை வழிபடுவது நல்லது. பத்திரப் பதிவிலோ, மனை கட்டுவதிலோ தடையாக இருந்தவர்களுக்கு இப்பொழுது காரியங்கள் துரிதமாக நடைபெறும்.

    துலாம் - புதன்

    புரட்டாசி 28-ந் தேதி, துலாம் ராசிக்குப் புதன் வருகிறார். உங்கள் ராசிநாதன் புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும்போது யோகமான நேரம் தான். நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவை பூர்த்தியாகும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். பணப் புழக்கத்திற்கு குறைவு ஏற்படாது. பாதியில் நின்ற பணிகள் ஒவ்வொன்றாக முடிவடையும். பிள்ளைகளின் கல்யாண முயற்சிகளும், கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சிகளும் நிறைவேறும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் புதிய பாதை புலப்படும். வியாபாரம், தொழில் செய்பவர்கள் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து முடிவெடுக்க வேண்டிய நேரம் இது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு முன்னேற்றப் பாதை புலப்படும். மாணவ- மாணவிகளுக்கு பாடுபட்டதற்கேற்ற பலன் உண்டு. பெண்களுக்கு கணவன் - மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தவர்கள் விலகுவர். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    செப்டம்பர்: 27, 28, அக்டோபர்: 1, 2, 8, 9, 14, 15. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    மிதுனம்

    தமிழ் மாத ராசிபலன்கள்

    18-08-2023 முதல் 17-09-2023 வரை

    எல்லாம் அறிந்தும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாத மிதுன ராசி நேயர்களே!

    ஆவணி மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் சகாய ஸ்தானத்தில் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். எனவே ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்ய இயலாது.

    மாத தொடக்கத்தில் 'புத சுக்ர யோகம்', 'புத ஆதித்ய யோகம்', 'குருமங்கல யோகம்' ஆகியவை செயல்பட்டாலும், அவை திருப்தியான பலனை கொடுக்காது. எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. கடக - சுக்ரன் ஆவணி 1-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் வக்ரமாகி செல்கிறார்.

    உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் வக்ரமாக சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகளால் பிரச்சினைகள் ஏற்படலாம். அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. பூர்வீக சொத்து சம்பந்தமாக நடைபெறும்

    பஞ்சாயத்துகள் இழுபறி நிலையிலேயே இருக்கும். பிள்ளைகளின் கல்யாணம் சம்பந்தமாக செய்த முயற்சியில், நல்ல வரன்கள் பலவும் கைநழுவிச் செல்லலாம். மனப் போராட்டமும், பணப் போராட்டமும் அதிகரிக்கும் நேரம் இது.

    கன்னி -செவ்வாய் ஆவணி 2-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், இடம், பூமி விற்பனையும், அதன் மூலம் லாபமும் கிடைக்கும். கடன் சுமை குறைய வழிபிறக்கும்.

    ஆரோக்கியத் தொல்லை அகலும். உற்சாகத்துடன் செயல்பட்டு, உன்னத வாழ்வமைய வழி அமைத்துக் கொள்வீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும். மகர - சனி சனி பகவான் ஆவணி 7-ந் தேதி, மகர ராசிக்கு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அங்கு சுமார் 4 மாத காலம் சஞ்சரித்த பின்னர், மீண்டும் கும்ப ராசிக்கு செல்லப் போகிறார்.

    வாக்கிய கணித ரீதியாக வரும் இந்த மாற்றம் உங்கள் வாழ்க்கையில் மீண்டும் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கத்தை உருவாக்குகிறது. விலகிய சனி மீண்டும் வருவதால் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வேலை ஆட்களால் பிரச்சினைகள் உருவாகும். வாழ்க்கைத் துணையாலும், வாரிசுகளாலும் மனக்கவலை ஏற்படும். தேக்க நிலை உருவாகி பல பணிகள் செய்ய இயலாமல் போகலாம்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களால் வீண் பழிகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களிடம் கூடுதல் பொறுப்பை ஒப்படைத்து மனக்கலக்கம் அடையச் செய்வர். இக்காலத்தில் முறையான வழிபாடுகள் முன்னேற்றம் தரும். புதன் வக்ர நிவர்த்தி சிம்மத்தில் சஞ்சாித்து வரும் புதன், ஆவணி 15-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார்.

    உங்கள் ராசிநாதன் வக்ர நிவர்த்தியாவது யோகம்தான். உடல்நலம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். சவாலான பணிகளைக் கூட சாதாரணமாக முடித்து விடுவீர்கள். கவலை என்ற மூன்றெழுத்து அகன்றோடும் நேரம் இது. பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும்.

    பொதுவாழ்வில் இருப்பவர்கள், வீண்பழிக்கு ஆளாகாமல் கவனமாக செயல்படுங்கள். தொழில் செய்பவர்கள், வேலை ஆட்களுடன் போராட வேண்டிய சூழல் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களால் தொல்லை வரலாம். கலைஞர்களுக்கு வாய்ப்புகள், கைநழுவிச் செல்லக்கூடும்.

    மாணவர்களுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றாக ஏற்படலாம். எதையும் யோசித்துச் செய்வது நல்லது.

    பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு கூடும். சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஆகஸ்டு: 20, 21, 31, செப்டம்பர்: 4, 5, 10, 11, 12, 17. மகிழ்ச்சி தரும்

    வண்ணம்:- ரோஸ்.

    மிதுனம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    17.7.23 முதல் 17.8.23 வரை

    எதையும் மனநிறைவோடு செய்ய வேண்டும் என்று சொல்லும் மிதுன ராசி நேயர்களே!

    ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் தன ஸ்தானத்தில் சகாய ஸ்தானாதிபதி சூரியனோடு இணைந்து சஞ்சரிப்பதால் ஆரோக்கியத் தொல்லை அகலும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பாக்கிய ஸ்தானத்தில் சனி வக்ரம் பெற்றிருப்பதால் பிள்ளைகளால் சில பிரச்சினைகள் உருவாகலாம். பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட பஞ்சாயத்துக்கள் தாமதப்படும். திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடு கைகொடுக்கும்.

    மேஷ - குரு சஞ்சாரம்

    நவக்கிரகங்களில் சுபகிரகம் என்று சொல்லப்படும் குரு பகவான், உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானாதிபதியாக இருப்பவர். அவர் ராகுவோடு இணைந்து லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே சில நல்ல மாற்றங்களும் வரலாம். பாகப்பிரிவினைகளில் இருந்த தேக்கநிலை மாறும். தெளிந்த சிந்தனையோடு செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். உடன்பிறப்புகளால் ஒருசில நல்ல காரியம் நடைபெறும்.

    குருவின் பார்வை பலத்தால் பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தானம் புனிதமடைகின்றன. எனவே இல்லத்தில் கல்யாணம் போன்ற சுபநிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் படிப்படியாக விலகும். பெற்றோரின் மணிவிழாக்கள் போன்றவை நடைபெறும். உறவினர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும். பூர்வீகச் சொத்துக்களை விற்றுவிட்டு புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆபரண சேர்க்கை உண்டு.

    சிம்ம - புதன்

    ஆடி 7-ந் தேதி, சிம்ம ராசிக்குப் புதன் வருகின்றார். உங்கள் ராசி மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியான புதன், சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் நல்ல நேரமாகும். எல்லா வழிகளிலும் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவிகள் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகி உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். வாகனம் வாங்கி மகிழ்வதுடன் வீடு, இடம் வாங்குவதிலும் அக்கறை காட்டுவீர்கள். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம். மாமன் - மைத்துனர் வழியில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சியை முன்னின்று நடத்துவீர்கள். சேமிப்பு அதிகரிக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் புதிய திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். கலைஞர்களுக்கு விட்டுப்போன வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு கவனச் சிதறல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பெண்களுக்கு பக்கத்து வீட்டாரின் பகை மாறும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-ஜூலை: 19, 20, 24, 25, ஆகஸ்டு: 3, 4, 5, 8, 9, 10, 15. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

    மிதுனம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    பார்த்ததுமே மற்றவர்களை எடைபோட்டு விடும் மிதுன ராசி நேயர்களே!

    ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் விரய ஸ்தானத்தில் தனாதிபதி சந்திரனோடு இணைந்திருக் கிறார். எனவே தன விரயம் ஏற்படும். அதேநேரத்தில் தொழில் ஸ்தானாதிபதி குரு லாப ஸ்தானத்தில் இருப்பதால், வருமானம் திருப்திகரமாகவே இருக்கும். அதற்கேற்ப செலவுகளும் வந்துகொண்டே இருக்கும். சேமிப்பிற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென்றே சொல்லலாம். அதேநேரத்தில் அடுத்தவருடைய உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய அவசியமும் இருக்காது. உடன்பிறப்புகளின் ஒத்துழைப்போடு முன்னேற்றம் காண்பீர்கள்.

    மிதுன - புதன்

    ஆனி மாதம் 3-ந் தேதி, உங்கள் ராசியான மிதுனத்திற்கு புதன் வருகிறார். ராசிநாதன் ராசியில் சஞ்சரிப்பது யோகமான நேரம் தான். பொருளாதாரத்தில் ஓரளவு நிறைவு ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். 'புத ஆதித்ய யோகம்' செயல்படுவதால் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும். ஒரு சிலருக்கு கடல் தாண்டிச் செல்லும் யோகம் வாய்க்கலாம். வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.

    சிம்ம - செவ்வாய்

    ஆனி 17-ந் தேதி, சிம்ம ராசிக்கு செவ்வாய் செல்கிறார். அப்பொழுது குருவின் பார்வை செவ்வாய் மீது பதிகிறது. எனவே 'குரு மங்கல யோகம்' ஏற்படுகிறது. இதனால் கல்யாணக் கனவுகள் நனவாகும். கடமையில் இருந்த தொய்வு அகலும். அதேநேரத்தில் குருவின் பார்வை பதிந்த செவ்வாயின் பார்வை, சனி மீது விழுவதால் பெற்றோருடன் இணக்கமான சூழல் ஏற்படும். சொத்துப் பங்கீடுகள் சுலபமாக முடியும். சவாலான காரியங்களைக் கூட சாதாரணமாக முடித்துக்காட்டி பாராட்டுக்களைப் பெறுவீர்கள். வெளியூர் பயணங்கள் நன்மை தரும் விதம் அமையும்.

    சிம்ம - சுக்ரன்

    ஆனி 18-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம - விரயாதிபதியான சுக்ரன், சிம்மத்திற்கு செல்வது யோகம்தான். இருப்பினும் உடன்பிறப்புகளின் வழியில் ஒருசில பிரச்சினைகளும், விரயங்களும் ஏற்படலாம். பிள்ளைகளின் கல்யாணம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். வெளிநாட்டு வணிகம் லாபம் தரும். உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து பணிபுரிய அழைப்புகள் வரலாம். தொழில் கூட்டாளிகளின் கருத்து வேறுபாடுகள் அகலும். நிதி நிறுவனங்களில் ஏற்பட்ட பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும்.

    கடக - புதன்

    ஆனி 19-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியான புதன் தன ஸ்தானத்திற்கு செல்வது யோகம் தான். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. நினைத்தது நிறைவேறும். வருமானப் பற்றாக்குறை அகலும். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். ஆடம்பரச் செலவுகள் அதிகரித்தாலும் அதற்கேற்ப வருமானம் வந்துசேரும். இல்லம் கட்டிக் குடியேறுவது அல்லது கட்டிய வீட்டைப் பராமரிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி உண்டு. தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய முதலீடுகளைச் செய்து விருத்தியடைய முன்வருவர். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் கெடுபிடிகளை சமாளித்து முன்னேற்றம் காண்பர். கலைஞர்களுக்கு நிதி உதவி கிடைக்கும். மாணவ- மாணவிகளுக்கு கட்டுப்பாடுடன் கூடிய கல்வியில் நாட்டம் செல்லும். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை. கட்டுங்கடங்காத செலவுகளால் கவலைகள் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் அனுசரித்துச் செல்வது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 20, 21, 27, 28, ஜூலை: 7, 8, 11, 12. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.

    மிதுனம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    15.5.23 முதல் 15.6.23 வரை

    மனதில் பட்டதை மறைக்காமல் பேசும் மிதுன ராசி நேயர்களே!

    வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியிலேயே விரயாதிபதி சுக்ரன் வீற்றிருக்கிறார். எனவே தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. கூட்டுத் தொழில் செய்வோர் தனித்து இயங்கும் நேரம் இது. சனி பகவான் 9-ம் இடத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பக்கபலமாக இருக்கும் நண்பர்களின் ஒத்துழைப்போடு புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி காணப்போகிறீர்கள்.

    ராகு-கேது சஞ்சாரம்

    பின்னோக்கிச் செல்லும் கிரகங்களான ராகு பகவான் லாப ஸ்தானத்திலும், கேது பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் சஞ்சரிக்கின்றனர். அங்ஙனம் சஞ்சரிக்கும் கேதுவை குரு பார்ப்பதால், பிள்ளைகள் வழியில் சுப நிகழ்ச்சிகள் திடீரென நடைபெறலாம். பூர்வீக சொத்துகளை பிரித்துக் கொள்வதில் இருந்த தடைகள் அகலும். பூர்வீக சொத்தைக் கொடுத்து விட்டு, புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியிலும் ஆர்வம் காட்டுவீர்கள். இதுவரை உங்கள் கருத்துக்கு ஒத்துவராத பிள்ளைகள், தற்போது உங்கள் கருத்துக்கு இணங்குவர். பாகப் பிரிவினையின் காரணமாக பணவிரயமும் ஏற்படலாம். உத்தியோகத்தில் கூடுதல் சம்பளம் தருவதாக வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரலாம். ராகுவின் பலத்தால் அந்த வாய்ப்பு கைகூடலாம்.

    கடக - சுக்ரன்

    வைகாசி 16-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்கு நீச்சம் பெற்றுச் சஞ்சரிக்கும் செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கள யோக'த்தை உருவாக்குகிறார். எனவே உடன்பிறப்புகளுக்கு திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடை அகலும். உடன்பிறப்புகளின் வேலைவாய்ப்பு கருதி எடுத்த முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். கடன்சுமை பாதிக்கு மேல் குறையும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். எனவே பெண் குழந்தைகளின் சீர்வரிசைப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

    ரிஷப - புதன்

    வைகாசி 18-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். அங்குள்ள சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். உங்கள் ராசிக்கு 12-ம் இடமான விரய ஸ்தானத்திற்கு புதன் வருவதால், வரவைக் காட்டிலும் செலவு கூடும். வளர்ச்சி கருதி செலவிட்டாலும், கையில் பணம் தங்குவது அரிது. மாமன், மைத்துனர் வழியில் சில நல்ல காரியங்கள் நடைபெறும். மனை கட்டிக் குடியேறும் யோகமும் உண்டு. அரசியல் மற்றும் பொதுநலத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து சில காரியங்களை முடித்துக் கொடுப்பர். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு, லாபம் திருப்தியாக அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, கேட்ட இடத்திற்கு மாறுதலும், சம்பள உயர்வும் கிடைக்கலாம். கலைஞர்களுக்கு கைநழுவிச் சென்ற வாய்ப்புகள் மீண்டும் வரலாம். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான முயற்சி வெற்றியாகும். பெண்களுக்கு சுபச்செலவுகள் அதிகரிக்கும். பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் பெருமை சேர்க்கும் விதம் நடந்துகொள்வீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-மே: 18, 19, 24, 25, 26, 30, 31, ஜூன்: 10, 11, 14, 15.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    மிதுனம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    14.4.2023 முதல் 14.5.2023

    பிறருடைய பிரச்சினைக்கு வழி சொல்லும் மிதுன ராசி நேயர்களே!

    சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் லாப ஸ்தானத்தில் சகாய ஸ்தானாதிபதி சூரியனோடு இணைந்து சஞ்சரிக்கின்றார். மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 2-ம் இடமான தன ஸ்தானத்தில் குருவின் பார்வை பதிகின்றது. இதனால் பல நன்மைகள் கிடைக்கப்போகின்றது. சித்திரை 9-ல் லாப ஸ்தானத்திற்கு குரு வரப்போகின்றார். அஷ்டமத்துச் சனி வாக்கிய கணித ரீதியாக தற்சமயம் விலகி உள்ளது.

    எனவே, குடும்பத்தில் சுபிட்சங்கள் அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல்கள் சரளமாக இருக்கும். அடுத்தடுத்து நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். கூட்டுக் குடும் பத்தில் இருந்த பிரச்சினை ஒவ்வொன்றாக அகன்று, உறவுகள் ஒன்றுசேரும். வாட்டி வதைத்த நோய் விலகி, உடல் ஆரோக்கியம் பெறுவீர்கள்.

    சனியின் சஞ்சாரம்

    மாதத் தொடக்கத்தில் சனி பகவான் உங்கள் ராசிக்கு 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். அஷ்டமத்துச் சனி விலகி விட்டது. சனி பகவான் இப்பொழுது அடியெடுத்து வைத்திருக்கும் இடம் பாக்கிய ஸ்தானமாகும். சில மாதங்கள் மட்டும் கும்பத்தில் சனி பகவான் வாசம் செய்தாலும், அதற்குள் உங்கள் முன்னேற்றத்திற்கு அஸ்திவாரம் அமைத்துக் கொடுத்துவிடுவார். எனவே நம்பிக்கை யோடு காரியங் களை செய்ய முற்படுங்கள். தந்தை வழி உறவில் இருந்த விரிசல் அகலும். முறையான பாகப்பிரிவினை நடைபெற இப்பொழுது வழிபிறக்கும். குடும்பத்தை விட்டுப் பிரிந்து பணிபுரிந்தவர்கள் இப்பொழுது குடும்பத்துடன் வந்திணையும் வாய்ப்பு கைகூடும். இதயம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும்.

    மேஷ - குரு

    சித்திரை 9-ந் தேதி மேஷ ராசிக்கு குரு பகவான் செல்கிறார். இந்தக் குருப்பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு லாப ஸ்தானத்திற்கு வரும் குரு சேமிப்பை உயர்த்தும். எதிர்பாராத நன்மைகளையும் செய்யப் போகின்றார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு, 11-ல் சஞ்சரிக்கும் பொழுது திடீர் திருப்பங்களை உருவாக்குவார். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிவதால் அந்த இடங்களுக்குரிய ஆதிபத்யங்கள் எல்லாம் சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும்.

    சகோதர ஒற்றுமை பலப்படும். தடைப்பட்ட சில காரியங்கள் தன்னிச்சையாக நடைபெறும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். 'பல காலமாக பிள்ளைகளுக்குத் திருமணம் பேசியும் முடிவாகவில்லையே' என்று ஆதங்கப் பட்டவர்களுக்கு, விரைவில் நல்ல செய்தி வரும். வெளிநாட்டில் உள்ள பிரபல நிறுவனங்களில் இருந்து அதிக சம்பளம் தருவதாகச் சொல்லி அழைப்புகள் வரலாம்.

    மிதுன - சுக்ரன்

    உங்கள் ராசிக்கு பஞ்சம - விரயாதிபதியான சுக்ரன், சித்திரை 20-ந் தேதி உங்கள் ராசிக்கு வரப்போகின்றார். இதன் விளைவாகத் தொழில் மாற்றம், இடமாற்றம், வீடு மாற்றம் உள்ளிட்ட நன்மைக்குரிய சில மாற்றங்கள் உருவாகும். வாங்கிய இடத்தை விற்று விட்டு, புதிதாக இடம் வாங்கும் யோகமும் உண்டு. ஒரு சிலருக்கு வாகன யோகமும் வாய்க்கும். இல்லத்தில் சுப காரியங்கள் நடைபெற வழி ஏற்படும். பிள்ளைகளுக்கான கல்யாண காரியங்கள் சிறப்பாக நடைபெறும். பணவரவிற்கு குறைவு ஏற்படாது. கொடுத்த வாக்குறுதியை குறிப்பிட்ட நேரத்தில் காப்பாற்றி விடுவீர்கள்.

    இம்மாதம் முருகப்பெருமான் வழிபாடு முன்னேற்றத்தை வழங்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஏப்ரல்: 16, 17, 20, 21, 28, 29, மே: 3, 4, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    மிதுனம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    15.3.2023 முதல் 13.4.23 வரை

    சிகரம் போல் உயர சிறப்பாக உழைக்க வேண்டுமென்று சொல்லும் மிதுன ராசி நேயர்களே!

    பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது தங்கு தடைகள் அகலவும், தக்க விதத்தில் சுபகாரியங்கள் நிகழவும் கிரக நிலைகளின் சஞ்சாரம் சாதகமாக இருக்கின்றது. அஷ்டமத்துச் சனி விலகும் இந்த மாதம் அற்புதமான பலன்கள் உங்களைத் தேடிவரப்போகின்றது. ஒப்பற்ற வாழ்க்கை அமையும். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்து முடிப்பீர்கள். நற்பெயருக்கு களங்கம் விளைவித்தவர்கள் விலகிச் செல்வர். நாடு மாற்றங்களும், வீடு மாற்றங்களும் நலமாக அமையும். இதுவரை பற்றாக்குறையிலேயே இருந்த உங்கள் வாழ்க்கை பணத்தேவைகள் பூர்த்தியாகும் விதத்தில் இனிமேல் அமையப்போகிறது.

    உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் முற்பகுதியில் சனி சஞ்சரிக்கிறது. எனவே பங்குனி 14-ந் தேதி வரை செவ்வாயின் பார்வை சனியின் மீது பதிகின்றது. இக்காலத்தில் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்க வேண்டும். வம்பு, தும்புகள் வந்துசேரும். தண்டச் செலவுகளும், தட்டுப்பாடுகளும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து நிற்கும். சண்டை, சச்சரவுகள் குடும்பத்தில் அதிகரிக்கும். அமைதி கிடைக்க வேண்டுமானால் அருகில் இருப்பவர்களை அனுசரித்துக் கொள்ளுங்கள். ஆதாயம் கிடைக்க வேண்டுமானால் தொழில் கூட்டாளிகளை கண்காணித்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களிடம் ஒப் படைக்கப்பட்ட பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைத்தால் பிரச்சினைகள் தலைதூக்கும்.

    மேஷ - புதன்

    பங்குனி 15-ந் தேதி உங்கள் ராசிநாதன் புதன், லாப ஸ்தானத்திற்கு செல்கிறார். எனவே அதிர்ஷ்ட வாய்ப்புகள் அரங்கேறும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். தொழிலில் கூடுதல் லாபம் கிடைத்து பொருளாதார நிலை உயரும். வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து பணிபுரிய அழைப்புகள் வரலாம். அலைச்சலும் இல்லை, அல்லலும் இல்லை. உழைப்புக்கு, உடனடியாக பலன் கிடைக்கும் நேரம் இது. பரிசம் போடுவதற்கு பலமான வாய்ப்பு வரும். வரிசையாய் யோகம் வரும்.

    ரிஷப - சுக்ரன்

    பங்குனி 24-ந் தேதி, விரயாதிபதி சுக்ரன் விரய ஸ்தானத்திற்கு செல்கிறார். அடுக்கடுக்காக விரயங்கள் வந்தாலும் அனைத்தும் நன்மைக்குத்தான். வீடு வாங்க விரயம், விவாகம் நடைபெற விரயம், வாகனம் வாங்க விரயம், புதிய தொழில் தொடங்க விரயம் என்று பட்டியல் போடும் நேரம் இது. பஞ்சமாதிபதியாகவும் சுக்ரன் விளங்குவதால், நெஞ்சம் மகிழும் சம்பவம் நிறைய நடைபெறும். ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் உள்ளத்தில் இடம்பெறுவீர்கள். புதிய நிறுவனங்களில் இருந்து வரும் அழைப்புகள் புன்னகையை வரவழைத்துக் கொடுக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் பொன்னான வாய்ப்புகள் வந்து சேரும். வியாபாரம் செய்பவர்கள், வெற்றிப் படிக்கட்டில் ஏறுவர். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும். கலைஞர் களுக்கு புகழ் ஏணியின் உச்சிக்குச் செல்லும் வாய்ப்பு உருவாகும். மாணவ - மாணவியர்கள் அக்கைறயோடு படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம். பெண்களுக்கு குதூகலம் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். ஆடை, ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டு. எதிர்பார்த்த சுபநிகழ்ச்சிகள் இல்லத்தில் இனிதே நடைபெறும்.

    இம்மாதம் பெருமாள் வழிபாடு பெருமை சேர்க்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    மார்ச்: 19, 20, 21, 24, 26, ஏப்ரல்: 1, 2, 6, 7.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.

    மிதுனம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    13.2.2023 முதல் 14.3.2023 வரை

    நினைத்த காரியத்தை நினைத்தபடி முடிக்கும் மிதுன ராசி நேயர்களே!

    மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் அஷ்டமத்தில் உள்ள சனியோடு இணைந்து சஞ்சரிக்கிறார். அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் விரயங்களை அதிகரிக்கச் செய்யும். அதே நேரம் மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். எனவே செலவிற்கு பயப்பட வேண்டியதில்லை. தேவையான நேரத்தில் தேவையான தொகை உங்கள் கைக்கு கிடைக்கலாம். இருப்பினும் வீண் விரயங்களில் இருந்து விடுபட சுபவிரயங்களை மேற்கொள்ளுங்கள்.

    மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 12-ம் இடமான விரய ஸ்தானத்தில் லாபாதிபதி செவ்வாய் சஞ்சரிக்கிறார். எனவே இடம், பூமி விற்பனையும் அதன் மூலம் லாபமும் கிடைக்கும். இதுவரை இழுபறி நிலையில் இருந்த பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். சொந்த வீட்டில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே வாக்கு, தனம், குடும்பம், தாய், வாகனம், ஜீவனம் ஆகிய இடங்களெல்லாம் புனிதமடைகிறது. அந்த ஆதிபத்யங்களின் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். குறிப்பாக குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் கிடைக்கலாம். அதிக ஊதியம் தருவதாகச் சொல்லி நல்ல நிறுவனங்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்ள முன்வருவீர்கள்.

    உச்ச சுக்ரன் சஞ்சாரம்

    மாசி 4-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் சுக்ரனுக்கு, அது உச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் உச்சம் பெறும்பொழுது, பிள்ளைகள் வழியில் பெரும் விரயம் ஏற்படலாம். அவர்களின் மேற்படிப்பு, கல்யாணம் போன்றவற்றிற்காக செலவிடும் சூழ்நிலை ஒருசிலருக்கு அமையும். குறிப்பாக பூர்வீக சொத்துகளை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் லாபத்தை, தொழிலுக்கு முதலீடு செய்ய முன்வருவீர்கள்.

    கும்ப - புதன் சஞ்சாரம்

    மாசி 9-ந் தேதி, கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கும், 4-ம் இடத்திற்கும் அதிபதியான புதன், 9-ம் இடத்தில் சஞ்சரிக்கும் போது ஒளிமயமான எதிர்காலத்திற்கு உத்திரவாதம் கிடைக்கும். பொருளாதார வளர்ச்சியில் இருந்த தடைகள் அகலும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். சகோதரர்களுக்குள் ஒற்றுமை பலப்படும். தந்தை வழி ஆதரவு உண்டு. கல்வி கேள்விகளில் ஒரு சிலர் முன்னேற்றம் காண்பர்.

    மீன - புதன் சஞ்சாரம்

    மாசி 25-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிநாதனான புதன் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. செய்யும் காரியங்களில் தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும். ஆரோக்கியத் தொல்லை உண்டு. குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவு ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    மேஷ - சுக்ரன் சஞ்சாரம்

    மாசி 29-ந் தேதி, மேஷ ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு விரயாதிபதியான சுக்ரன், லாப ஸ்தானத்திற்கு வரும் போது, விரயத்திற்கேற்ற லாபம் கிடைக்கும். எதை எந்த நேரம் செய்ய வேண்டுமோ, அதை அந்த நேரத்தில் செய்து முடிக்க இயலும். ஒரு செயலைச் செய்ய பணம் இல்லையே என்று தயங்கத் தேவையில்லை. காரியத்தை தொடங்கிவிட்டால் நண்பர்களின் உதவி தானாக வந்துசேரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

    மிதுன - செவ்வாய் சஞ்சாரம்

    மார்ச் 30-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். இக்காலத்தில் மிகமிக கவனம் தேவை. அஷ்டமத்துச் சனியை, செவ்வாய் பார்ப்பதால் குடும்பத்திலும், உத்தியோகத்திலும் பிரச்சினை ஏற்படலாம். இனம்புரியாத கவலை மேலோங்கும். பிள்ளைகளை நெறிப்படுத்த இயலாது. விரயங்கள் கூடும். வீடு மாற்றம், இடமாற்றம் வரலாம். திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வதன் மூலம் அமைதி கிடைக்கும்.

    இம்மாதம் அனுமன் வழிபாடு நன்மையை வழங்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-பிப்ரவரி: 13, 21, 22, 25, 26, மார்ச்: 4, 5, 9, 10.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    மிதுனம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    16.12.22 முதல் 14.1.23 வரை

    சவாலான காரியத்தை சாதாரணமாக முடித்துக் காட்டும் மிதுன ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் சப்தம ஸ்தானத்தில் சூரியனோடும் சுக்ரனோடும் இணைந்து புதன் சஞ்சரிக்கிறார். எனவே 'புத சுக்ர யோகம்', 'புத ஆதித்ய யோகம்' உருவாகின்றது. எனவே அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் நடைபெற்றாலும் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இடமாற்றங்கள் இனிமை தரும் விதம் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணி ஓய்வு பெற்ற பின்பும் கூட மீண்டும் பணிபுரியும் வாய்ப்பு உண்டு.

    புதன் வக்ர இயக்கம்

    உங்கள் ராசிக்கும், 4-ம் இடத்திற்கும் அதிபதியான புதன், மார்கழி 3-ந் தேதி, தனுசு ராசியில் வக்ரம் பெறுகிறார். சுக ஸ்தானத்திற்கு அதிபதியான புதன் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கியத் தொல்லையால் மருத்துவச் செலவு அதிகரிக்கும். உங்கள் ராசிநாதனாகவும் புதன் விளங்குவதால் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. இரக்க சிந்தனையின் காரணமாக சில இடையூறுகளை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காது. மகிழ்ச்சி குறையும். விலை உயர்ந்த பொருட்கள் அல்லது வாகனங்கள் வாங்கும் முயற்சியில் ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். உறுதியான உத்தியோக மாற்றம் கூட கைநழுவிச் செல்லலாம். இக்காலத்தில் சிறப்பு வழிபாடுகள் தேவை.

    மகர - சுக்ரன் சஞ்சாரம்

    உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், மார்கழி 15-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். 12-க்கு அதிபதியான சுக்ரன் 8-ல் சஞ்சரிக்கும் போது, 'விபரீத ராஜயோகம்' செயல்படும். எனவே திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். திறமை மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து சில காரியங்களை முடித்துக் கொடுப்பர். பெண்வழிப் பிரச்சினைகள் அகலும். புதிய வாகனம் வாங்கிப் பயணிக்கும் எண்ணம் கைகூடும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வெளிநாட்டில் இருந்து ஒருசில அழைப்புகள் வரலாம். பிள்ளைகளின் வேலைவாய்ப்பு கருதி எடுத்த முயற்சி வெற்றிபெறும்.

    புதன் வக்ர நிவர்த்தி

    தனுசு ராசியில் சஞ்சரிக்கும் புதன், மார்கழி 24-ந் தேதி வக்ர நிவர்த்தியாவதால் நல்ல பலன்கள் இல்லம் தேடி வரப்போகிறது. குறிப்பாக ராசிநாதன் வக்ர நிவர்த்தியாவதால் ஆரோக்கியம் சீராகும். ஆதாயம் தரும் தகவல்கள் அதிகம் கிடைக்கும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். நிச்சயித்த பிறகு நின்றுபோன திருமணங்கள் மீண்டும் கைகூடும். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகளின் பழக்கத்தால் பணி நிரந்தரமாக எடுத்த முயற்சி கைகூடும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. வெற்றிச் செய்திகள் அதிகம் வீடு தேடி வரும்.

    செவ்வாய் வக்ர நிவர்த்தி

    உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், மார்கழி 29-ந் தேதி ரிஷபத்தில் வக்ர நிவர்த்தியாகிறார். ஜீவன ஸ்தானம் எனப்படும் ஆறாமிடம், எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றையும் குறிக்கும். எனவே செவ்வாயின் வக்ர நிவர்த்திக்குப் பின், மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். உங்கள் முன்னேற்றத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உடல்நலத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உருவாகலாம். மருத்துவச்செலவு உண்டு. ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும்.

    லாபாதிபதியாகவும் செவ்வாய் விளங்குவதால் தொழிலில் ஓரளவு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுசெய்யவும், சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றவும் எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து நல்ல சம்பளத்துடன் அழைப்புகள் வரலாம். இளைய சகோதரத்தோடு இருந்த பகை மாறும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தென்படும். இடம், பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும். முன்னோர் சொத்துக்களை விற்றுவிட்டு முறையாக புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    இம்மாதம் சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபடுவது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- டிசம்பர்: 16, 17, 28, 29, ஜனவரி: 1, 2, 8, 9. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

    மிதுனம்

    இந்த வார ராசிப்பலன்

    17.11.21 முதல் 15.12.21 வரை

    எதையும் உற்சாகத்தோடு செய்யத் தொடங்கும் மிதுன ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன், லாபாதிபதி செவ்வாயோடு இணைந்திருக்கின்றார். எனவே, பொருளாதார நிலையில் முன்னேற்றம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உடல் நலத்தோடும், உற்சாகத்தோடும் செயல்படுவீர்கள்.

    செவ்வாய்-சனி பார்வைக் காலம்

    மாதத் தொடக்கத்தில் இருந்து கார்த்திகை 20-ந் தேதி வரை செவ்வாய்-சனியின் பார்வை இருக்கின்றது. மகரத்திலுள்ள சனி துலாத்தில் உள்ள செவ்வாயைப் பார்க்கின்றார். செவ்வாய் மகரத்திலுள்ள சனியைப் பார்க்கின்றார். அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் எதிலும் கொஞ்சம் விழிப்புணர்ச்சி தேவை. என்றாலும், குருவின் பார்வை இருப்பதால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. சகோதரர்களுக்குள் பூசல்கள் உருவாகும். `வாங்கிய இடத்தை விற்க நேரிடுகின்றதே' என்று கவலைப்படுவீர்கள்.

    விருச்சிக புதனின் சஞ்சாரம்

    கார்த்திகை முதல் நாளே விருச்சிக ராசிக்கு புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும் 4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் புதன், 6-ம் இடத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். மக்கள் செல்வங்கள் மகிழ்ச்சிக்குரிய விதம் நடந்து கொள்வர். தக்க தருணத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். தனவரவு திருப்தியாக இருக்கும். இந்த நேரத்தில் கட்டிடம் கட்டும் முயற்சி, கல்யாண வாய்ப்புகள் கைகூடும்.

    தனுசு புதனின் சஞ்சாரம்

    கார்த்திகை 18-ந் தேதி தனுசு ராசிக்குப் புதன் செல்கின்றார். அங்குள்ள சுக்ரனோடு சேர்ந்து புத-சுக்ர யோகத்தை உருவாக்குகின்றார். அதுமட்டுமல்லாமல் உங்கள் ராசியையும் பார்க்கின்றார். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வெளிநாட்டு முயற்சி கைகூடும். பொதுவாழ்விலும், உத்தியோகத்திலும் உயர் பதவிகள் கிடைத்து உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும்.

    மகர சுக்ரனின் சஞ்சாரம்

    கார்த்திகை 19-ந் தேதி மகர ராசிக்குச் சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். 12-க்கு அதிபதி அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் விபரீத ராஜயோக அடிப் படையில் சில நல்ல சம்பவங்கள் நடைபெறலாம். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். கிளைத் தொழில் தொடங்கும் யோகம் உண்டு. பிள்ளைகளின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் திடீர் முன்னேற்றங்கள் வரலாம்.

    விருச்சிக செவ்வாயின் சஞ்சாரம்

    கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்குச் செவ்வாய் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு செவ்வாய் செல்வதால் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது. உற்சாகம் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எதையும் எளிதில் நம்பிச் செயல்படுவதால் துயரங்கள் கூடும். பல காரியங்கள் தாமதப்படலாம். ஆனந்த வாழ்வமைய அனுமனை வழிபடுவது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    நவம்பர்: 17, 18, 25, 26, 30, டிசம்பர்: 1, 10, 11, 14, 15

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிளிப்பச்சை.

    மிதுனம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    ஆலோசனை சொல்வதில் அசகாய சூரர்களான மிதுன ராசி நேயர்களே!

    ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன், சூரியனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். எனவே பொருளாதார நிலை சிறப்பாக அமைந்தாலும், அஷ்டமத்துச் சனி வலுவடைந்திருப்பதால் விரயங்களே அதிகரிக்கும். திட்டமிட்டபடி எதையும் செய்ய இயலாது.

    துலாம் - சுக்ரன் சஞ்சாரம்

    உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், ஐப்பசி 2-ந் தேதி துலாம் ராசிக்கு செல்கிறார். துலாம், சுக்ரனுக்கு சொந்த வீடாகும். பாக்கிய ஸ்தானாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது, வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டும். வளர்ச்சி அதிகரிக்கும். முன்னோர் சொத்துக்களில் முறையான பங்கீடு கிடைக்கும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். பெண் பிள்ளைகளின் திருமண சீர்வரிசையை முன்னிட்டு, தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் தனிக்கவனம் செலுத்துவீர்கள்.

    துலாம் - புதன் சஞ்சாரம்

    உங்கள் ராசிநாதனாகவும், 4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் புதன். அவர் பஞ்சம ஸ்தானத்திற்கு வரும்பொழுது மிகுந்த யோகத்தை வழங்குவார். குறிப்பாக பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாகவும், கடல்தாண்டிச் சென்று பணிபுரிவது சம்பந்தமாகவும் மேற்கொள்ளும் முயற்சிகள் கைகூடும். மாமன், மைத்துனர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டு. புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் சம்பள உயர்வு மற்றும் சலுகைகள் கிடைக்கும்.

    மிதுன - செவ்வாய் வக்ரம்

    ஐப்பசி 18-ந் தேதி, மிதுனத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ரம் பெறுவதோடு, மகரத்தில் சஞ்சரிக்கும் சனியையும் அல்லவா பார்க்கிறார். எனவே மிக மிக கவனம் தேவை. இந்த நேரத்தில் எந்த முடிவும் எடுக்க இயலாது. விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் நிகழும். இடம் வாங்கியதில் பிரச்சினை, பத்திரப் பதிவில் தடை ஏற்படலாம். உதவுவதாகச் சொன்னவர்கள், கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண்பழிகள் வந்து சேரலாம். பணியில் இருந்து விலகிக்கொள்ள வேண்டிய கட்டாயச் சூழலும் உருவாகலாம்.

    விருச்சிக - புதன் சஞ்சாரம்

    ஐப்பசி 23-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், சுக ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் புதன், 6-ம் இடத்தில் மறைவது யோகம்தான். மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் கிடைக்கும். மக்கள் செல்வங்களால் மேன்மை உண்டாகும். சிக்கல்களில் இருந்தும், சிரமங்களில் இருந்தும் விடுபடுவீர்கள். நட்பால் நன்மை உண்டு. நவீனப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும்.

    விருச்சிக - சுக்ரன் சஞ்சாரம்

    ஐப்பசி 26-ந் தேதி, விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சுக்ரன் சஞ்சரிக்கப் போகிறார். 12-க்கு அதிபதி 6-ல் சஞ்சரிக்கும் இந்த நேரம் `விபரீத ராஜயோகம்' செயல்படப் போகிறது. எனவே திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வளர்ச்சி கூடும். பஞ்சமாதிபதியாகவும் சுக்ரன் விளங்குவதால் பெண் பிள்ளைகள் வழியில் இருந்த பிரச்சினைகள் அகலும்.

    குரு வக்ர நிவர்த்தி

    உங்கள் ராசிக்கு 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, ஐப்பசி 30-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். 10-ல் குரு சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. அதே நேரம் மீன ராசி குருவிற்கு சொந்த வீடாக இருப்பதாலும், குருவின் பார்வை 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிவதாலும் இட மாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் ஏற்படலாம். ஒரு சிலர் சுயதொழில் தொடங்கலாமா? என்று சிந்திப்பீர்கள். குரு பார்வையால் கடன்சுமை குறைய வழிபிறக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    அக்டோபர்: 18, 19, 23, 24, நவம்பர்: 3, 4, 7, 8, 14, 15, 16.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.

    மிதுனம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    18.9.22 முதல் 17.10.22 வரை

    எவரையும் பார்த்தவுடன் பேச்சாற்றலால் கவர்ந்திழுக்கும் மிதுன ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன், சுக்ரனோடு இணைந்து 'புத-சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். எனவே எதிர்பாராத விதத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.

    கன்னி - சுக்ரன் சஞ்சாரம்

    உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் புரட்டாசி 8-ந் தேதி கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகி, அங்கு நீச்சம் பெறுகிறார். அது அவ்வளவு நல்லதல்ல. பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி நீச்சம் பெறுவதால், காரியங்களில் தடைகள் வரலாம். நல்ல வாய்ப்புகள் வந்தாலும் அதை உபயோகப்படுத்திக் கொள்ள இயலாது. அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. பாகப்பிரிவினையில் இழுபறி நிலை ஏற்படும்.

    கன்னி - புதன் சஞ்சாரம்

    புரட்டாசி 16-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் புதன், அங்கு உச்சம் பெறுகிறார். உடல் ஆரோக்கியம் சீராகும். உள்ளத்தில் அமைதி கிடைக்கும். கடன்சுமை பாதிக்கு மேல் குறையும். நீண்டநாள் எண்ணங்கள் நிறைவேற, போதுமான வருமானம் கிடைக்கும். படிப்பில் ஏற்பட்ட தடை அகலும். விலகியிருந்த உறவினர்கள் இப்பொழுது மீண்டும் வந்திணைவர். வீடு வாங்கும் திட்டங்கள் நிறைவேறும். தாயின் உடல்நலம் சீராகும். சுக ஸ்தானம் பலமடைந்திருக்கும் இந்த நேரத்தில், சுகங்களும், சந்தோஷங்களும் தானாக வந்து சேரும்.

    மிதுன - செவ்வாய் சஞ்சாரம்

    உங்கள் ராசிக்கு 6, 11-க்கு அதிபதியான செவ்வாய், புரட்டாசி 22-ந் தேதி உங்கள் ராசிக்கே வருகிறார். இதனால் கடன் சுமை அதிகரிக்கும். உங்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை மற்றவர்களிடம் கொடுக்க வேண்டாம். அவர்களால் அதை நிறைவேற்ற முடியாமல் பெரும் பிரச்சினையில் கொண்டு வந்துவிடும்.

    உங்கள் ராசியில் இருக்கும் செவ்வாய், மகரத்தில் உள்ள சனியைப் பார்ப்பதால் மிகமிக கவனத்துடன் செயல்பட வேண்டும். குறிப்பாக ஆரோக்கியத் தொல்லை, அடுத்தவர் நலன்கருதி எடுத்த முயற்சியில் ஆதாயக் குறைவு, கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாத நிலை உருவாகும். விரயாதிபதி செவ்வாய், சனியைப் பார்ப்பதால் விரயங்கள் கூடும். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வதே நல்லது.

    சனி வக்ர நிவர்த்தி

    புரட்டாசி 23-ந் தேதி, சனி வக்ர நிவர்த்தியாகிறார். அஷ்டமத்துச் சனி வலுவடையும் இந்த நேரத்தில், வரவைக் காட்டிலும் செலவு கூடும். வளர்ச்சியில் தளர்ச்சி அதிகரிக்கும். வீண் விரயங்கள் தலைதூக்கும். எதிர்மறை சிந்தனைகள் தோன்றும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. பணிபுரியும் இடத்தில் பணப்பொறுப்பில் இருப்பவர்கள் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

    இம்மாதம் செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபட்டால் முன்னேற்றம் கூடும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-செப்டம்பர்: 20, 21, 26, 27, அக்டோபர்: 7, 8, 12, 13, 16.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- இளஞ்சிவப்பு.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சியில் வெற்றி கிடைக் கும். கணவன் - மனைவி கருத்து வேறுபாடு அதிகரிக்கும். திட்டமிட்டபடி காரியங் களை செய்ய இயலாது. அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கத்தால் காரியங்கள் தடைபடும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்குத் திடீரென இடமாற்றம் ஏற்பட நேரிடலாம். சகப் பணியாளர்களால் தொல்லையுண்டு.

    ×