என் மலர்tooltip icon

    மேஷம் - வார பலன்கள்

    மேஷம்

    வார ராசிபலன் 4.5.2025 முதல் 10.5.2025 வரை

    4.5.2025 முதல் 10.5.2025 வரை

    நிதானமாக செயல்பட வேண்டிய வாரம். ராசியில் 5ம் அதிபதி சூரியனுடன் 3,6 ம் அதிபதி புதன் சேர்க்கை. புத ஆதித்ய யோகம். உயர் கல்விக்கு நல்ல கல்லூரியில் விரும்பிய பாடத்திட்டத்தில் படிக்க முடியும். பள்ளி விடுமுறைக்கு பூர்வீகம் சென்று வரலாம். குடும்ப சுப விசேஷங்கள் மற்றும் ஊர் பண்டிகைகளில் கலந்து மகிழ்வீர்கள். கவுரவப் பதவிகள் கிடைக்கும். வேலையில் இடமாற்றம் வரலாம். அரசு உத்தியோக முயற்சி பலன் தரும்.

    சிலர் பூர்வீகத்தை விட்டு வெளியேறலாம். பூர்வீகச் சொத்து விற்பனையில் நிலவிய சர்ச்சைகள் அகலும். பரம்பரை நோய்க்காக வைத்தியம் செய்ய நேரும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக கடன் பெற நேரும். காதல் மோதலில் முடியும். அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களான ரேஸ், பங்குச்சந்தை, லாட்டரி கடனை உற்பத்தி செய்யும். குல, இஷ்ட தெய்வத்திற்கு சிலர் புதிய பிரார்த்தனைகள் வைப்பார்கள். புதிய முயற்சிகளால் அதிக அலைச்சல் கடன் உருவாகலாம். சரியான நேரத்திற்கு உண்ண, உறங்க முடியாது. ஜாமீன் சார்ந்த விசயங்கள், சங்கடங்கள் மற்றும் தடுமாற்றம் வரலாம். காவல் தெய்வங்களை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    வார ராசிபலன் 27.4.2025 முதல் 03.5.2025 வரை

    27.4.2025 முதல் 03.5.2025 வரை

    புதிய வாய்ப்புகள் தேடி வரும் வாரம். ராசியில் உச்ச சூரியன் இருப்பதால் புதியதாக அரசியல் ஆர்வம் அதிகரிக்கும். சிலருக்கு அரசுத் துறை அல்லது அறநிலையத் துறை சார்ந்த பொறுப்புகள், அரசாங்க வேலை, கவுரவப் பதவிகள் கிடைக்கும். தங்கம் விலை உயர்வை பொருட்படுத்தாமல் தங்கத்தில் முதலீடு செய்வீர்கள்.

    புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வால் மனதில் மகிழ்ச்சி பொங்கும். உடன் பிறப்புகளால் ஏற்பட்ட மனக் கசப்பு சுமூகமாகும். ஆரோக்கிய குறைபாடு அகலும். சிலருக்கு வாழ்க்கை மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய இடப் பெயர்ச்சி உண்டாகும். குல, இஷ்ட, தெய்வ அனுகிரகம் கிடைக்கும். பிரார்த்தனைகள், நிறைவேற்ற உகந்த காலம். பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் செய்து மகிழ்வீர்கள்.

    தேவைக்கு பணம் கிடைக்கும். பெண்களுக்கு ஆடம்பர பொருட்களில் ஆர்வம் மற்றும் சேர்க்கை அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்காலத் தேவைக்காக திட்டமிட்டு செயல்படுவீர்கள். புத்திர பாக்கியம் உண்டாகும். காதல் திருமணம் நடக்கும். தினமும் துக்க நிவாரண அஷ்டகம் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    வார ராசிபலன் 20.4.2025 முதல் 26.4.2025 வரை

    20.4.2025 முதல் 26.4.2025 வரை

    எண்ணங்கள் பூர்த்தியாகும் வாரம். ராசியில் உச்சம் பெற்ற பூர்வ புண்ணிய அதிபதி சூரியன். பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுகிறது ஆன்ம பலம் பெருகும். சிலருக்கு அரசு வேலை கிடைக்கும். குல தெய்வ இஷ்ட தெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறும்.

    குழந்தைப்பேறுக்கான வைத்தியம் பலன் தந்து புத்திர பாக்கியம் கிடைக்கும். சிந்தனைகள், எண்ணங்களில் வேகம் அதிகரிக்கும். தொழில் ஞானம், தந்திரம் மிகுதியாகும். வியாபாரத்தில் வீண் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதிப்பார்கள்.

    சரளமான பணப்புழக்கம் இருக்கும். நிறைவேறாத அனைத்து ஆசைகளும் நிறைவேறும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். சிலர் அதிர்ஷ்டத்தை துரத்தி ஏமாறவும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு பிள்ளைகளால் பெருமையும், நிம்மதியும் உண்டாகும். கருத்து வேறுபாட்டால் விலகி சென்ற நண்பர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். வீடு, வாகன யோகம் சித்திக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நவகிரக குரு பகவானை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    வார ராசிபலன் 13.4.2025 முதல் 19.4.2025 வரை

    13.4.2025 முதல் 19.4.2025 வரை

    சாதகமான வாரம். தனஅதிபதி சுக்ரன் வக்ர நிவர்த்தி ஆவதால் பெரும் செல்வம் வரப்போகிறது. செல்வத்தைச் சேர்ப்பதிலும் உலக இன்பங்களை அனுபவிப்பதிலும் நாட்டம் மிகுதியாகும். திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவர்கள். பொறுமையாகவும், இளகிய மனம் உடையவர்களாகவும் இருப்பீர்கள். கற்பனை கலந்து பிறரை ஈர்க்கும் படி பேசுவதால் பொது ஜனத் தொடர்பு உண்டாகும். மனதின் வேகத்திற்கு ஏற்ப செயல்களில் விவேகம் இருக்கும். காரணமற்ற கற்பனைக் கவலைகள் அகலும். சமுதாய மதிப்பு நிறைந்த இடத்தில் சம்பந்தம் அமையும்.

    சம்பந்தி நல்ல பொருளாதார வசதி மிகுந்தவராக இருப்பார்கள். விலை உயர்ந்த பட்டு, துணிகள் நகைகள், அழகு, ஆடம்பர பொருட்கள், வாசனை திரவியங்களில் பயன்படுத்தும் ஆர்வம் கூடும். சுவையான உணவுகளை சாப்பிடுவீர்கள். தம்பதிகளுக்குள் ஈகோ குறையும். 15.4.2025 அன்று இரவு 8.27 முதல் 18.4.2025 அன்று காலை 8.21 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகளில் தடை ஏற்படும். நெருங்கியவர்களிடையே மன வருத்தம் ஏற்படலாம். தினமும் துர்க்கா அஷ்டகம் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    வார ராசிபலன் 06.4.2025 முதல் 12.4.2025 வரை

    06.4.2025 முதல் 12.4.2025 வரை

    வேகத்துடன், விவேகத்தையும் கடைபிடிக்க வேண்டிய வாரம். ராசி அதிபதி செவ்வாய் சுக ஸ்தானத்தில் நீசம் பெறுவதால் ஓய்வின்றி உழைக்க நேரும். எந்த காரியமும் அதிக முயற்சிக்குப் பிறகே பலன் தரும். சிலருக்கு சிறு சிறு ஆரோக்கிய தொல்லை ஏற்படும்.எதையும் திட்டமிட்டு செய்தால் சிக்கல்கள் மற்றும் சிரமங்களில் இருந்து விடுபட முடியும். பூமி, மனை வாங்குவது பற்றிய சிந்தனை மேலோங்கும். பத்திரப் பதிவில் நிலவிய தடை தாமதங்கள் விலகும். வீடு, வேலை மாற்றம் அல்லது திடீர்ப் பயணங்கள் உருவாகும்.

    உடன் பிறந்தவர்களுடன் சிறு சிறு மனத்தாங்கல் உருவாகும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். சிலருக்கு விபரீத ராஜ யோகத்தால் தங்கம், வெள்ளி, அதிர்ஷ்ட பணம் கிடைக்கும். மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். இரண்டாவது குழந்தை பிறக்கும். இளம் பெண். ஆண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பஞ்சமி திதியில் வாராகியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    வார ராசிபலன் 30.3.2025 முதல் 5.4.2025 வரை

    30.3.2025 முதல் 5.4.2025 வரை

    செயல்பாடுகளில் பொறுமை தேவைப்படும் வாரம்.ராசி அதிபதி செவ்வாய் சுக ஸ்தானத்தில் நீச்சமடைகிறார். தோற்றப் பொலிவில் மாற்றங்கள் ஏற்படலாம்.மனதில் புதுவிதமான ஆசைகள், எண்ணங்கள் உருவாகும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். வாழ்க்கைத் துணை பற்றிய புரிதல் உண்டாகும். வேலை மாற்றம், இடமாற்றம் பற்றிய சிந்தனை கூடும். சிலர் புதிய வாகனம், செல்போன் மாற்றி மகிழ்ச்சியடைவீர்கள்.அரசு பணியாளர்கள் தேவையற்ற செயல்களை தவிர்ப்பது நல்லது. சொத்துக்கள் வாங்குவது விற்பது பங்கு வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும்.

    குழந்தை இல்லாதவர்களுக்கு வாரிசு உண்டாகும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். சிந்தனை, செயல்பாடுகள் எல்லாம் சிறப்பாக மாறும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றம் உண்டாகும். தற்பெருமை பேசுவதையும், பேராசையையும் குறைத்துக் கொள்வது நல்லது. மகிழ்ச்சியை அதிகரிக்க குருவாயூரப்பனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    30.3.2025 முதல் 05.4.2025 வரை

    செயல்பாடுகளில் பொறுமை தேவைப்படும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் சுக ஸ்தானத்தில் நீச்சமடைகிறார். தோற்றப் பொலிவில் மாற்றங்கள் ஏற்படலாம். மனதில் புதுவிதமான ஆசைகள், எண்ணங்கள் உருவாகும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். வாழ்க்கைத் துணை பற்றிய புரிதல் உண்டாகும். வேலை மாற்றம், இடமாற்றம் பற்றிய சிந்தனை கூடும். சிலர் புதிய வாகனம், செல்போன் மாற்றி மகிழ்ச்சியடைவீர்கள்.

    அரசு பணியாளர்கள் தேவையற்ற செயல்களை தவிர்ப்பது நல்லது. சொத்துக்கள் வாங்குவது விற்பது பங்கு வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். குழந்தை இல்லாதவர்களுக்கு வாரிசு உண்டாகும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். சிந்தனை, செயல்பாடுகள் எல்லாம் சிறப்பாக மாறும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் உண்டாகும். தற்பெருமை பேசுவதையும், பேராசையையும் குறைத்துக் கொள்வது நல்லது. மகிழ்ச்சியை அதிகரிக்க குருவாயூரப்பனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    வார ராசிபலன் 23.3.2025 முதல் 29.3.2025 வரை

    23.3.2025 முதல் 29.3.2025 வரை

    கடன் தொல்லை தீரும் வாரம். ராசியில் பதியும் சனியின் பார்வை இன்னும் சில நாட்களில் விலகி ஏழரைச் சனி ஆரம்பிக்கப்போகிறது. உடலும் மனதும் புத்துணர்வு பெறும்.உங்கள் கடமையை மன நிறைவாக செய்து முடிக்கக் கூடிய சந்தர்ப்பம் அமையும். நல்லது கெட்டது அறிந்து தைரியமாக விரைந்து முடிவெடுப்பீர்கள். 3,6-ம் அதிபதி புதன் நீசம் பெறுவதால் கடன் தொல்லை குறையும். ஜாமீன் வழக்கில் இருந்து முழுவதுமாக விடுபடுவீர்கள். ஆரோக்கிய குறைபாடுகள் அகலும்.

    தொல்லைகள் தந்த எதிரிகள் விலகிச் செல்வார்கள். இளைய சகோதர, சகோதரிகளுடன் ஏற்பட்ட பிணக்கு மறையும்.ஆற்றலும் திறமையும் வெளிப்படும். பணப் பிரச்சினை அகலும். தாய், தந்தையுடன் ஏற்பட்ட மனக் கசப்பு அகலும். புதிய சொத்துககள் வாங்கும் முயற்சி கைகூடும். வேலைப்பளு மிகுதியால் குடும்பத்தி னருக்கு அதிக நேரம் ஒதுக்க முடியாத நிலை இருக்கும். கடன் கேட்கும் உற்றார், உறவினர் நண்பர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். திருமணம் மற்றும் குழந்தைப் பேறில் நிலவிய தடைகள் அகலும். அமாவாசையன்று பித்ருக்களை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    வார ராசிபலன் 16.3.2025 முதல் 22.3.2025 வரை

    16.3.2025 முதல் 22.3.2025 வரை

    விரயத்தை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். 12-ம்மிடமான விரயஸ்தானத்தில் நான்கு கிரகச்சேர்க்கை. தனாதிபதி சுக்ரன் விரயாதிபதி குருவுடன் பரிவர்த்தனை என கிரக நிலவரம் சற்று சுமாராக உள்ளது. பொறுப்புடன் செயல்பட வேண்டிய நேரம்.எல்லா விசயமும் வேகமாகவும் தனக்கு சாதகமாகவும் நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மிகுதியாக இருக்கும். வெளியே தைரியமாக இருந்தாலும் உள்ளத்தில் பயமே மேலோங்கி நிற்கும்.வீண் செலவால் மனச் சஞ்சலம் மனக் குழப்பம் உருவாகும்.

    தவறான போன் தகவலை நம்பி வங்கிக் கணக்கு எண்களை யாரிட மும் தெரிவிக்க கூடாது. சேமிப்பில் உள்ள பணத்தை இழக்கும் வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை. ஏழரைச் சனியின் ஆதிக்கம் துவங்க உள்ளதால் முதலீட்டாளர்கள் இயன்றவரை பெரிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். 19.3.2025 அன்று மதியம் 2.06 மணி முதல் 22.3.2025 அன்று நள்ளிரவு 1.46 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவர்ச்சியான விளம்பரத்தை நம்பி புதிய தொழிலில் இறங்க வேண்டாம். சிலருக்கு கடன் அல்லது பொருள் இழப்பு அல்லது சிறு நோய் தாக்கம் உண்டாகலாம்.தினமும் கந்த சஷ்டி கவசம் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    வார ராசிபலன் 9.3.2025 முதல் 15.3.2025 வரை

    9.3.2025 முதல் 15.3.2025 வரை

    விரயத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய வாரம். ஏழரைச் சனி ஆரம்பித்தாலும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ராசியை சனி பார்த்த காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை சமாளித்த உங்களுக்கு இது பெரிய கஷ்டமாகத் தெரியாது. இதுவரை பொருளாதார சிக்கல்களில் இருந்த பின்னடைவுகள் நீங்கி நன்மைகள் ஆரம்பிக்கும். வாக்கால் தொழில் நடத்தும் வழக்கறிஞர்கள், பேச்சாளர்கள், விற்பனை பிரதிநிதிகள், ஜோதிடர்களுக்கு வருமானம் இரட்டிப்பாகும்.வேலை தேடுபவர்களுக்கு நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் படிப்படியான முன்னேற்றம் இருக்கும். உங்களின் திறமையை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்.

    பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு கட்டுப்படுவார்கள். 12-ம்மிடமான விரயத்தில் அதிக கிரகங்கள் உள்ளதால் அவசியம், அநாவசியம் உணர்ந்து செயல்பட வேண்டும். கேட்ட இடத்தில் கேட்டவுடன் கடன் கிடைக்கும். அப்பாட்மென்ட் வீடு அல்லது பிளாட் வாங்க ஏற்ற காலம். மறைமுக பணப் பரிமாற்றத்தில் கவனம் தேவை. சிலர் பேரன், பேத்தியை பார்க்க வெளிநாடு சென்று வரலாம். திருமண முயற்சிகள் வெற்றி தரும். மாசி மகத்தன்று சந்தன அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    வார ராசிபலன் 02.03.2025 முதல் 08.03.2025 வரை

    02.03.2025 முதல் 08.03.2025 வரை

    லாபகரமான வாரம். 11-ம் மிடமான லாப ஸ்தானத்தில் சூரியன், சனி சேர்க்கை இருப்பதால் முன்னேற்றத்திற்கான பாதை தென்படும். உண்மை,நேர்மை உங்களை சுமூகமாக வழி நடத்தும். புதிய திட்டங்கள் தீட்டி சவாலான செயல்களையும் சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள்.

    உழைப்பிற்கு ஏற்ற வருமானம் நிச்சயம் உண்டு. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். மூத்த சகோதர, சகோதரி, சித்தப்பாவால் அதிர்ஷ்டம் உண்டாகும். பல வருடங்களாக எதிர்பார்த்த திடீர் அதிர்ஷ்டம் உயில் சொத்து வரலாம்.

    போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம், வாங்கும் யோகம் உண்டாகும். அரசின் உதவித் தொகை கிடைப்பதில் நிலவிய தடைகள் அகலும். ஆரோக்கிய குறைபாடுகள் அதிகரிக்கும். வீடு கட்டும் பணி துரிதமாகும். அதற்கு தேவையான நிதியுதவி கிடைக்கும்.

    பல சாதகங்கள் நடந்தாலும் ஏழரைச் சனி துவங்கும் காலம் என்பதால் மன உளைச்சலும் இருக்கும். வாழும் கலையை உணர்ந்தவர்களை வாழ்நாள் வினைகள் பாதிக்காது என்பதால் பிரபஞ்சத்திடம் உங்கள் கோரிக்கையை சமர்ப்பிக்கவும். முருகன் வழிபாடு செய்வதால் பய உணர்வு அகலும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    வார ராசிபலன் 23.2.2025 முதல் 01.03.2025 வரை

    23.2.2025 முதல் 01.03.2025 வரை

    தொழில் வளர்ச்சி உண்டாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் சகாய ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி பெறுகிறார். உங்களின் பலமும், வளமும் அதிகரிக்கும். முயற்சிகளில் ஏற்பட்ட தடைகள், தாமதங்கள் அகலும். சகல விதத்திலும் அனுகூலங்கள் உண்டாகும்.

    சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் காலதாமதம் ஏற்படுவதால் தன் கையே தனக்கு உதவி என்று உணர்வீர்கள். பெயர், புகழ், அந்தஸ்து உயர்ந்து சமுதாயத்தில் நல்லதொரு இடத்தினை பிடிக்க முடியும். பணிச்சுமைகள் குறைந்து மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும்.

    சிறப்பான பணவரவால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். உயர் கல்விக்கு சிலர் வெளிநாடு செல்லலாம். குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்தவர்களின் திறமைக்கு தகுந்த ஊதியம் கிடைக்கும்.

    ஏழரைச் சனியின் காலம் என்பதால் சுய தொழில் புரிபவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். கணவன் மனைவிக்குள் நிலவிய வாக்குவாதம் விலகும். தேக நலனில் இருந்த குறைபாடுகள் அகலும். மகா சிவராத்திரியன்று பச்சரிசி மாவினால் அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×