என் மலர்
கும்பம் - Kumbam
வார ராசிபலன் 5.10.2025 முதல் 11.10.2025 வரை
5.10.2025 முதல் 11.10.2025 வரை
விழிப்புடன் செயல்பட வேண்டிய காலம். அடுத்து வரும் 48 நாட்களுக்கு ராசியில் பதிந்த குருவின் பார்வை விலகப் போகிறது. ராசியில் தனித்த ராகு நிற்பதால் சம்பந்தம் இல்லாத அறிமுகம் இல்லாத நபர்களால் ஏமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணப் பரிவர்த்தனையில் கவனம் தேவை. வரவிற்கு மீறிய செலவு இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது.
போட்டிகளைச் சமாளிக்க உழைக்கவேண்டி வரும். கடன், எதிரி தொல்லை அதிகமாகும் என்பதால் புதிய முயற்சிகள் அதிக முதலீடு ஆகியவற்றில் திட்டமிட்டு செயல்பட வேண்டும். முக்கிய பொறுப்புகளை யாரையும் நம்பி ஒப்படைக்க கூடாது. மூத்த சகோதரம், சித்தப்பாவால் வம்பு, வழக்கு, கடன் உண்டு. சகோதர சகோதரிகள் முன்னுக்கு பின் முரணாக பேசி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.
உறவுகளிடம் வீண் விவாதங்களைத் தவிர்த்தல் நலம். வழக்கு விசாரணை தள்ளிப்போகும். சிலர் தொழில், வேலைக்காக பூர்வீகத்தை விட்டு வெளியூர், வெளிநாட்டிற்கு இடம் பெயரலாம். சிறு உடல் உபாதைகள் அவ்வப்போது தோன்றும். ஸ்ரீ ராமரை பட்டாபிஷேக கோலத்தில் வழிபட எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






