டென்னிஸ்

ருதுஜா போசலே - கர்மன் தண்டி 

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்- இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி கால் இறுதிக்கு தகுதி

Published On 2022-09-15 08:06 GMT   |   Update On 2022-09-15 08:06 GMT
  • இன்று நடைபெறும் கால் இறுதியில் கர்மன் தண்டி-ருதுஜா போசலே ஜோடி லூயிசா ஸ்டெபானி (பிரேசில்) கேப்ரியேபா டப்ரோவ்ஸ்கி (கனடா) ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
  • ரியா பாட்டியா, ஷர்மதா பாலு, இந்தியாவின் அங்கிதா ரெய்னா, நெதர்லாந்தின் வான்டெர் ஹோக் ஜோடி முதல் சுற்றில் தோற்றன.

சென்னை ஓபன் மகளிர் டென்னிசில் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய ஜோடியான கர்மன் தண்டி-ருதுஜா போசலே 3-6, 7-6 (7-5), 10-4 என்ற செட் கணக்கில் ஜெசி ரோம்பிஸ் (இந்தோனேசியா) பிரார்த்தனா தோம்பரே (இந்தியா) ஜோடியை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றது.

இன்று நடைபெறும் கால் இறுதியில் கர்மன் தண்டி-ருதுஜா போசலே ஜோடி லூயிசா ஸ்டெபானி (பிரேசில்) கேப்ரியேபா டப்ரோவ்ஸ்கி (கனடா) ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

ரியா பாட்டியா - ஷர்மதா பாலு

மற்றொரு இந்திய ஜோடியான ரியா பாட்டியா, ஷர்மதா பாலு, இந்தியாவின் அங்கிதா ரெய்னா, நெதர்லாந்தின் வான்டெர் ஹோக் ஜோடி முதல் சுற்றில் தோற்றன.

Tags:    

Similar News