ஒன்பிளஸின் புதிய நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது - விலை எவ்வளவு தெரியுமா?
- ஒன்பிளஸ் நார்டு 2T 5ஜி மாடல் மீடியாடெக் டைமென்சிட்டி 1300 புராசசரை கொண்டுள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன், 4500 mAh பேட்டரி பேக் அப் உடன் வந்துள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நாட்டு சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகமாகி உள்ளது. ஒன்பிளஸ் நார்டு 2T 5ஜி என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் இன்று (ஜூலை 1) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 5ந் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது.
இதன் 8ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.28 ஆயிரத்து 999 ஆகவும், 12ஜிபி + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.33 ஆயிரத்து 999 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஒன்பிளஸ் நார்டு 2T 5ஜி மாடலில் ஆக்சிஜன் 12.1 இயங்குதளம், 6.43 இன்ச் புல் ஹெச்.டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மீடியாடெக் டைமென்சிட்டி 1300 புராசசரை கொண்டுள்ளது. டிரிபிள் கேமரா செட் அப் உடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன், 4500 mAh பேட்டரி பேக் அப் உடன் வந்துள்ளது. 80W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது.