Recap 2023
2023 ரீவைண்ட்: சர்ச்சையான ராகுல் காந்தி தகுதிநீக்கம்
- பிரதமர் குறித்து அவதூறு பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
- இதையடுத்து, சபாநாயகர் ஓம் பிர்லா ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
2 ஆண்டு சிறைத்தண்டனை
பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை கடந்த மார்ச் மாதம் அளிக்கப்பட்டது. இதனால் இவரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
தகுதி நீக்கம்
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்தன. அதானி குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்புவதை தடுக்கவே அவரை வெளியேற்றி விட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.
தண்டனை நிறுத்திவைப்பு
அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்ததால் ராகுல் காந்திக்கு நிம்மதி ஏற்பட்டது. தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால் அவரது எம்.பி பதவியும் தப்பியது.