புதுச்சேரி

புதுவை தமிழ் சங்கத்தில் நடந்த வள்ளலார் விழாவில் எதிர்க்கட்சி தலைவர் சிவா போசிய போது எடுத்த படம்.

புதுவை தமிழ் சங்கத்தில் வள்ளலார் விழா

Published On 2022-10-07 05:10 GMT   |   Update On 2022-10-07 05:10 GMT
  • அருட்பிரகாச வள்ளலாரின் 200-வது பிறந்த முன்னிட்டு புதுவை தமிழ் சங்கத்தில் சிறப்பு வில்லிசை இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
  • எதிர்க்கட்சி தலைவர் சிவா வில்லுப்பாட்டு இசை நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி:

அருட்பிரகாச வள்ளலாரின் 200-வது பிறந்த முன்னிட்டு புதுவை தமிழ் சங்கத்தில் சிறப்பு வில்லிசை இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ் சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். செயலாளர் சீனு மோகன் தாசு வரவேற்றார். துணைத் தலைவர் ஆதிகேசவன், துணைச்செயலாளர் அருள் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் தொடக்க உரையாற்றி கவிதை வாசித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் சிவா வில்லுப்பாட்டு இசை நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து எல்லாம் தந்த வள்ளல் என்ற தலைப்பில் வில்லிசை வேந்தர் பட்டாபிராமன் குழுவினரின் சிறப்பு வில்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

புலவர் துரை மாலிறையன் , போலீஸ் சூப்பிரண்டு வீர. பாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் பொருளாளர் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.

விழாவில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உசேன், சீனு.கந்தகுமார்,, தினகரன், சிவேந்திரன், கணேசுபாபு மற்றும் தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News