புதுச்சேரி

கோப்பு படம்.

null

சுகாதாரதுறையில் காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டும்

Published On 2023-06-05 04:25 GMT   |   Update On 2023-06-05 04:31 GMT
  • இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
  • மக்கள் உயிரோடு விளையாடுவதை அரசு நிறுத்த வேண்டும்.

புதுச்சேரி:

இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் புதுவை மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசு மருத்துவ மனைகளில் தற்போது டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மக்கள் உயிரை பாதுகாக்க கூடிய மருத்துவ மனைகளில் விபத்து காலங்களில் அவசர சிகிச்சை இல்லாமல் மக்கள் அல்லல்படுகின்றனர்.

காரைக்காலில் விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக சரியான மருத்துவ சிகிச்சை இல்லாததால் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதே நிலை புதுவையின் பல்வேறு மருத்துவமனைகளிலும் உள்ளது. தற்போது எம்.டி, எம்.எஸ், முடித்த 147 டாக்டர்கள், 100-க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ். டாக்டர்கள், 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், 48 பார்மாசிஸ்ட் காலி பணியிடங்கள் உள்ளன.

நிதித்துறை செயலாளர் தலைமை செயலாளரை காரணம் காட்டி மக்கள் உயிரோடு விளையாடுவதை அரசு நிறுத்த வேண்டும்.

சுகாதாரத் துறையை தனது பொறுப்பில் வைத்துள்ள முதல்-அமைச்சர் ரங்கசாமி இதன் மீது உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும்.

இவ்வாறு சலீம் அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News