புதுச்சேரி

கோட்டகுப்பத்தில் நடந்த அனைத்து வியாபாரிகள் சங்க முப்பெரும் விழாவில் இன்ஸ்பெக்டர் ராபின்சன் பேசும்போது எடுத்த படம்.

வியாபாரிகள் கந்து வட்டிக்கு கடன் வாங்க கூடாது- இன்ஸ்பெக்டர் அறிவுரை

Published On 2022-12-27 13:38 IST   |   Update On 2022-12-27 13:38:00 IST
  • தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கோட்டகுப்பம் அனைத்து வியாபாரிகள் சங்க 3-ம் ஆண்டு தொடக்க விழா, ஈ.சி.ஆர். சாலையில் 5 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
  • தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரம ராஜா சிறப்புரை ஆற்றினார்.

புதுச்சேரி:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கோட்டகுப்பம் அனைத்து வியாபாரிகள் சங்க 3-ம் ஆண்டு தொடக்க விழா, ஈ.சி.ஆர். சாலையில் 5 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.

கோட்டகுப்பம் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் அன்சர்பாஷா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் சங்க செயலாளர் முகமதுவக்கீல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பொருளாளர் கமால் ஹசேன், உயர்மட்ட குழு நிர்வாகி குமார், துணைத் தலைவர் ஹலீல் பாய் ஆகியோர் வரவேற்றனர். உயர்மட்ட குழு தலைவர்கள் முகமது பாரூக், அஸ்ரப் சேட், முகமது அலி, முகமது இஸ்மாயில், ரவிராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரம ராஜா சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கோட்ட க்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது:-

வியாபாரிகள் தங்களது நிறுவனங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதியை வாடிக்கையாளர்களுக்கு அமைத்து தர வேண்டும். அப்பொழுதுதான் அதிகப்படியான வாடிக்கையாளர்கள். உங்களது நிறுவனங்களுக்கு வருவார்கள்.

சி.சி.டி.வி. கேமராவை வியாபாரிகள் சுயநலத்தோடு கடைக்குள் மட்டும் பொருத்தக் கூடாது சாலைகளிலும் சி.சி.டி.வி. கேமராவை பொருத்தி கடைக்கு வருபவர்களை கண்காணிக்கும் படியாக செய்ய வேண்டும். வியாபாரிகள் முறையான வருமான வரி செலுத்தினாலே தேசிய வங்கிகளில் குறைந்த வட்டிக்கு கடன்களை பெற்று வியாபாரத்தில் முதலீடு செய்து அதிக லாபங்களை பெறலாம்.

கந்து வட்டி என்பது வைரஸ் போன்றது. கந்து வட்டிக்கு கடன் வாங்கி வியாபாரிகள் தயவு செய்து தொழிலை தொடங்க வேண்டாம். கடனுக்கு வட்டி கொடுத்து உங்கள் வருமானத்தில் தொகையை இழக்க நேரிடும்.

இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர்கள் கதிர்வேல், முகமது இலியாஸ், ஹமீது அர்த்த உள்ளார் முஹம்மது பாரூக், சவுரிராஜன், துணை செயலாளர் பாபு என்ற பக்ருதீன், சபீர் அகமது, வீரப்பன் துபைல் அகமது உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சங்க இன செயலாளர் சாகுல் அமீது என்கிற சையது இப்ராஹிம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News