புதுச்சேரி

கோப்பு படம்.

தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

Published On 2023-01-29 10:24 IST   |   Update On 2023-01-29 10:24:00 IST
  • வில்லியனூர் அருகே தொழிலாளி மயங்கி விழுந்து இறந்து போனார். வில்லியனூர் அருகே பெருங்களூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அனந்தராமன். கூலி தொழிலாளி.
  • இந்த நிலையில் அனந்தராமன் வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

புதுச்சேரி:

வில்லியனூர் அருகே தொழிலாளி மயங்கி விழுந்து இறந்து போனார்.

வில்லியனூர் அருகே பெருங்களூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அனந்தராமன். கூலி தொழிலாளி. இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். மதுகுடிக்கும் பழக்கமுள்ள அனந்தராமனுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நீரிழிவு நோய் இருந்து வந்தது. டாக்டரின் ஆலோசனையின் படி மருந்து-மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

இந்த நிலையில் அனந்தராமன் வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அனந்தராமன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது மனைவி ஜெயந்தி கொடுத்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News