புதுச்சேரி

கோப்பு படம்.

தொழிலாளி பரிதாப சாவு

Published On 2022-09-10 05:43 GMT   |   Update On 2022-09-10 05:43 GMT
  • குடிபோதையில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார்.
  • சம்பவத்தன்று வேலை முடிந்து இவர் பாக்கமுடையான்பட்டில் உள்ள ஒரு மது கடையில் மது குடித்து விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

புதுச்சேரி:

குடிபோதையில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார்.

லாஸ்பேட்டை குறிஞ்சிநகர் 6-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் புஷ்ப நாதன்(வயது62). இவர் கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் சென்டரிங் வேலை செய்து வந்தார். இவருக்கு ராணி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. புஷ்பநாதனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று வேலை முடிந்து இவர் பாக்கமுடையான்பட்டில் உள்ள ஒரு மது கடையில் மது குடித்து விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது.

உடனே தகவல் அறிந்த அவரது மருமகன் தனசேகரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து புஷ்பநாதனை மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி புஷ்பநாதன் பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து அவரது மனைவி ராணி கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News