புதுச்சேரி

மூதாட்டியின் கண்கள் தானம்

மூதாட்டியின் கண்கள் தானம்

Published On 2022-10-28 10:41 IST   |   Update On 2022-10-28 10:41:00 IST
திருக்கனூர் அருகே உள்ள கூனிச்சம்பட்டு திடீர் நகரை சேர்ந்தவர் ராஜம் அம்மாள் (வயது 65). இவர் உடல்நிலை சரியில்லாமல் திடீரென இறந்தார்.

புதுச்சேரி:

திருக்கனூர் அருகே உள்ள கூனிச்சம்பட்டு திடீர் நகரை சேர்ந்தவர் ராஜம் அம்மாள் (வயது 65). இவர் உடல்நிலை சரியில்லாமல் திடீரென இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருக்கனூர் லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் பரந்தாமன் முயற்சியின் பேரில் நிர்வாகிகள் அவரது குடும்பத்தினரை சந்தித்து கண் தானம் குறித்து வலியுறுத்தினர். அவர்களது கு டு ம் ப த் தி ன ரு ம்  ரா ஜ ம் அம்மாளின் கண்களை தானம் அளிக்க சம்மதித்தனர்.

இதையடுத்து திருக்கனூர் லயன்ஸ் சங்கம் சார்பில் ராஜம் அம்மாளின் கண்கள் தானம் பெறப்பட்டு, புதுவை அரவிந்தர் கண் மருத்துவமனை வசம் ஒப்படை க்கப்பட்டது. திருக்கனூர் லயன்ஸ் சங்க நிர்வாகிகளின் முயற்சியால் இறந்து போன ராஜம் அம்மாளின் கண்கள் வாயிலாக வேறு ஒரு நபருக்கு கண் பார்வை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

Tags:    

Similar News