புதுச்சேரி

மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் வளவன்

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்

Published On 2022-10-12 10:50 IST   |   Update On 2022-10-12 10:50:00 IST
  • புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து சாலைகளும் பழுதடைந்து பராமரிக்கப்படாமல் நீண்ட காலமாக உள்ளது.
  • இதுபோன்ற அடிப்படை சாலை வசதிகள் செய்து தராமல் தினக்கூலி பிழைப்புக்காக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் அடாவடியாக ரூ.1000 வசூலிக்கப்படு கின்றது.மிகவும் கண்டி க்கத்தக்கது.

புதுச்சேரி:

புதுவை மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் வளவன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

புதுவை அரசு கொண்டு வந்துள்ள கட்டாய ஹெல்மெட் சட்டத்தை உடனடியாக திரும்ப் பெற வேண்டும். புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து சாலைகளும் பழுதடைந்து பராமரிக்கப்படாமல் நீண்ட காலமாக உள்ளது.

இதனால் அதிகளவில் விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இதுபோன்ற அடிப்படை சாலை வசதிகள் செய்து தராமல் தினக்கூலி பிழைப்புக்காக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் அடாவடியாக ரூ.1000 வசூலிக்கப்படு கின்றது.மிகவும் கண்டி க்கத்தக்கது.

புதுவை அரசு உடனடியாக ெஹல்மெட் தொடர்பான கட்டாய வசூல் வேட்டையை ரத்து செய்து புதுவை மக்களை காப்பாற்ற வேண்டும்.

மத்திய அரசு வழிகாட்டுதல் இருந்தும் சீட்பெல்ட் அணியாத அமைச்சர்கள், எல்.எல்.ஏ.க்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத புதுவை அரசு அப்பாவி இரு சக்கர வாகன ஓட்டிகளை குறிவைப்பது, புதுவை அரசின் மின்துறை தனியார் மயமாக்கும் நடவடிக்கை–களுக்கு புதுவை அனைத்து மக்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதை திசை திருப்புவதற்காக இந்த ஹெல்மெட் கட்டாய அபராதம் கொண்டு வந்ததாக மக்கள் பேசிக் கொள்கின்றனர்.

புதுவை மாநில மக்கள் பேரியக்கம் இந்த கட்டாய 'ஹெல்மெட்' வசூல் வேட்டையை வன்மையாக கண்டிக்கின்றது. ேமலும் காலம் தாழ்த்தாமல் இந்த சட்டத்தை ரத்து செய்து வரும் பண்டிகை நாட்களில் புதுவை மக்களை நிம்மதியாக வாழ விட வேண்டும் என்றும் கவர்னர் மற்றும் முதல்-அமைச்சரை கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News