- பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் ஓணம் பண்டிகை நிறைவு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
- நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புதுவை இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி இயக்குனர் டாக்டர் உதயசங்கர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்து பேசினார்.
புதுச்சேரி:
பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் ஓணம் பண்டிகை நிறைவு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதன்மை நிர்வாக ஆலோசகர் பாபு டேனியல் தலைமை தாங்கினார்.பிம்ஸ் முதல்வர் அனில் பூர்த்தி வரவேற்றார். மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகர் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புதுவை இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி இயக்குனர் டாக்டர் உதயசங்கர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் அருட் தந்தை ஜோபி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றது. முடிவில் மருத்துவ மாணவ-மாணவிகளுக்கு கேம் ஷோ நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசினை நிர்வாக குழு முதன்மை ஆலோசகர் பாபு டேனியல் மற்றும் இயக்குனர் உதயசங்கர், முதல்வர் அனில் பூர்த்தி ஆகியோர் வழங்கினர்.நிகழ்ச்சியில் செவிலியர் கல்லூரி முதல்வர் மோனி, டாக்டர் கவிதா உதயசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.