புதுச்சேரி

லூர்து மாதா தேவாலய ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2024-04-06 09:49 GMT   |   Update On 2024-04-06 09:49 GMT
  • ஒவ்வொரு ஆண்டும் இந்த தேவாலயத்தில் ஆண்டு பெருவிழா மிக சிறப்பாக நடைபெறும்.
  • தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

புதுச்சேரி வில்லியனூரில் பிரசித்தி பெற்ற தூய லூர்து மாதா தேவாலம் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த தேவாலயத்தில் ஆண்டு பெருவிழா மிக சிறப்பாக நடைபெறும்.

இந்த விழாவில் புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிரான்சு உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று மாதா வழிபடுவார்கள்.

இந்த ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றதுடன் தொடங்கியது. காலை 5.30 மணிக்கு அருள்நிறை ஆலயத்தில் நடைபெற்ற கூட்டு திருப்பலிக்கு பின்னர், மாதா உருவம் தாங்கிய திருக்கொடி பக்தர்கள் புடைசூழ மாதா திருக்குளத்தை சுற்றி பவனியாக கொண்டு செல்லப்பட்டது.

அதன் பின்னர் திருத்தல முற்றத்தில் உள்ள கொடிமரத்தில் புதுவை-கடலூர் உயர் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் கொடிடையேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 13-ந் தேதி வரை நவநாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் திருப்பலிகள், சிறிய தேர்பவனி நடைபெறுகிறது.

14-ந் தேதி திருப்பலியை தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு மாதாவுக்கு வைரகிரீடம் சூட்டப்பட்டு ஆடம்பர தேர்பவனி நடை பெறுகிறது.

Similar News