புதுச்சேரி

முள்ளோடையில் அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி பா.ம.க. கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.

புதுவை எல்லை பகுதியில் பஸ்சை தடுத்து நிறுத்தி பா.ம.க. மறியல்

Published On 2023-03-11 07:34 GMT   |   Update On 2023-03-11 07:34 GMT
  • பாகூர் பகுதியை சேர்ந்த பா.ம.க.வினர் பஸ் இயக்கப்படுவதை கண்டித்து புதுவை எல்லையான முள்ளோடையில் அரசு பஸ்சை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினரை கிருமாம்பாக்கம் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

பாகூர்:

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து இன்று கடலூர் மாவட்டம் முழுவதும் பந்த் போராட்டம் நடைபெறும் என்று பா.ம.க. தலைவர் ராமதாஸ் அறிவித்தார்.

பா.ம.க.வினர் வணிக நிறுவனங்கள் கடைகளின் உரிமையாளரிடம் நோட்டீஸ் வழங்கி முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினர்.

ஆனால் கடலூரில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. புதுவையில் இருந்து கடலூர் செல்ல போலீசார் ஏற்பாடு செய்து இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பாகூர் பகுதியை சேர்ந்த பா.ம.க.வினர் பஸ் இயக்கப்படுவதை கண்டித்து புதுவை எல்லையான முள்ளோடையில் அரசு பஸ்சை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினரை கிருமாம்பாக்கம் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

Tags:    

Similar News