புதுச்சேரி

கட்டிடம் இடிந்த இடத்தை உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க. பொறுப்பாளர் கோபால் பார்வையிட்ட காட்சி.

புதுவையில் அரசு கட்டிட சுவர் இடிந்து சுற்றுலா பயணி பலி

Published On 2023-01-16 03:46 GMT   |   Update On 2023-01-16 03:46 GMT
  • விசாரணையில் இடிபாட்டில் சிக்கி இறந்த நபர் தஞ்சாவூர் விளார் பகுதியை சேர்ந்த சந்திரன் மகன் ஜெகதீசன் என்பதும் அவர் புதுவைக்கு வந்த சுற்றுலா பயணி என்பதும் தெரிந்தது.
  • மறைவான இடத்தில் சிறுநீர் கழிக்க ஒதுங்கிய போது சம்பவம் நடந்துள்ளது.

புதுச்சேரி:

உருளையன்பேட்டை கென்னடி நகருக்கு செல்லும் சுப்புராயப்பிள்ளை சத்திரம் சாலையில் அரசின் கால்நடை துறை அலுவலகம் உள்ளது.

கால்நடை துறை அலுவலக கட்டிடத்தின் மதில்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகளில் அந்த வழியாக சென்ற சுமார் 40 வயது மதிக்கதக்க நபர் சிக்கி கொண்டார்.

அவரது கூச்சல் சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் வந்தனர். தகவல் அறிந்த தி.மு.க. பொறுப்பாளர் கோபால் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தார். பொதுமக்கள் துணையோடு இடிபாட்டில் சிக்கியிருந்த நபரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த உருளையன்பேட்டை போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் இடிபாட்டில் சிக்கி இறந்த நபர் தஞ்சாவூர் விளார் பகுதியை சேர்ந்த சந்திரன் மகன் ஜெகதீசன் (42) என்பதும் அவர் புதுவைக்கு வந்த சுற்றுலா பயணி என்பதும் தெரிந்தது. மேலும் மறைவான இடத்தில் சிறுநீர் கழிக்க ஒதுங்கிய போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

கால்நடை துறை அலுவலக மதில் சுவர் மிகவும் மோசமாக உள்ளது என்றும், விபத்து ஏற்படுவதற்கு முன் அதனை உடனடியாக இடிக்க வேண்டும் என்றும் கென்னடி நகர் தி.மு.க. நிர்வாகிகள் துறை இயக்குநரிடம் ஒரு மாதத்திற்கு முன்பு மனு அளித்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் அலட்சியத்தால் ஒரு உயிர் பலியாகி உள்ளதாக அந்த பகுதி மக்கள் கூறினர்.

இடிபாட்டில் சிக்கியவரை உருளையான்பேட்டை தி.மு.க. பொறுப்பாளர் கோபால் தலைமையில் தி.மு.க.வினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய பின் கட்டிடம் இடிந்த இடத்தை பார்வையிட்டனர்.

Tags:    

Similar News