புதுச்சேரி

பஸ் சிறை பிடிப்பு போராட்டம் நடந்த போது எடுத்தபடம்

பஸ்கள் சிறைபிடிக்கும் போராட்டம்

Published On 2022-07-20 14:45 IST   |   Update On 2022-07-20 14:45:00 IST
  • போலீஸ் நிலையம் முன்பு பஸ்களை சிறைபிடிக்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
  • இதற்காக ஆம்பூர் சாலையில் ஒன்று கூடினர்

புதுச்சேரி:

போக்குவரத்து நெரிசலை சீர் செய்யாத போலீசாரை கண்டித்து பெரியார் திராவிடர் விடுதலை கழகம், அலைகள் இயக்கம், அகில இந்திய மக்கள் கழகம் ஆகியவற்றின் சார்பில் போக்குவரத்து போலீஸ் நிலையம் முன்பு பஸ்களை சிறைபிடிக்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக ஆம்பூர் சாலையில் ஒன்று கூடினர். அங்கிருந்து ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்துக்கு பெரியார் திராவிடர் விடுதலை கழக கோகுல்காந்தி நாத் தலைமை வகித்தார். அலைகள் இயக்கம் பாரதி, மக்கள் கழகம் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் செஞ்சி சாலையில் சென்ற பஸ்களை மறிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதில் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News