புதுச்சேரி

கோப்பு படம்.

சுற்றுலா பயனாளிகளுக்கு கெட்டுப்போன உணவு சப்ளை-மக்கள் வாழ்வுரிமை இயக்கம் குற்றச்சாட்டு

Published On 2023-04-07 04:57 GMT   |   Update On 2023-04-07 04:57 GMT
  • புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் தேவையான உணவுகளை ஒட்டல், விடுதிகள் வழங்குகிறது.
  • தெருவோரக் கடைகள் உள்ளிட்ட அனைத்து உணவு தயாரிக்கும் மற்றும் விநியோகம் செய்யும் நிறுவனங்களை கண்காணித்து தொடர் சோ தனைகளை மேற்கொள்ள வேண்டும்.

புதுச்சேரி:

மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் ஜெகன்நாதன் வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறியி ருப்பதாவது:-

புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் தேவையான உணவுகளை ஒட்டல், விடுதிகள் வழங்குகிறது. தனியார் உணவு நிறுவனங்கள் லாப நோக்கத்துடன் தரமற்ற, கெட்டுப்போன உணவுகளை விநியோகம் செய்யும் ஆபத்தான நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆபத்தை உணர்ந்து அரசும், உணவு கலப்பட தடுப்புப் பிரிவு துறையும் போர்க்கால அடிப்படையில் விடுதிகள், ஒட்டல்கள், தெருவோரக் கடைகள் உள்ளிட்ட அனைத்து உணவு தயாரிக்கும் மற்றும் விநியோகம் செய்யும் நிறுவனங்களை கண்காணித்து தொடர் சோ தனைகளை மேற்கொள்ள வேண்டும்.

உண்பதற்கு தகுதி இல்லாத உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து அழிக்க வேண்டும். உண்பதற்கு லாயக்கற்ற உணவினை தயாரித்த நிறுவன உரிமங்களையும் ரத்து செய்து கலப்பட உணவு தயாரிப்பு நிறுவனங்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News