புதுச்சேரி
ஆந்திராவிற்கு காரில் ரூ.1 லட்சம் மது பாட்டில் கடத்தல்
- 2 பேர் கைது- கார் பறிமுதல்
- காரில் 10-க்கும் மேற்பட்ட அட்டைப் பெட்டிகளில் புதுச்சேரி மதுபாட்டில் களை கடத்தி வந்தது தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுவை அடுத்து தமிழகப் பகுதியான திருச்சிற்றம்பலம் கூட்ரோடு-கிளியனூர் தேசிய நெடுஞ்சாலையில் கோட்டகுப்பம் கலால் துறை சோதனை சாவடி உள்ளது. இங்கு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டி ருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்தனர். அந்த காரில் 10-க்கும் மேற்பட்ட அட்டைப் பெட்டிகளில் புதுச்சேரி மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
காரில் வந்தவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மல்லி (வயது 38), மற்றும் ராம்மோகன் (வயது 45) என்பது தெரிய வந்தது. ஆந்திராவில் கூடுதல் விலைக்கு மதுபானத்தை விற்பனை செய்ய புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி சென்றது தெரிய
வந்தது. இதனையடுத்து இருவரையும் கலால் துறை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ஆயிரம் மதுபாட்டில் களையும் காரையும் பறிமுதல் செய்தனர்.