புதுச்சேரி

கருத்தரங்கில் தமிழ்நாடு ஓ.பி.சி. அணி மாநில பொது செயலாளர் வீர திருநாவுக்கரசு பேசிய போது எடுத்த படம்.

பிரதமர் மோடி சாதனைகள் குறித்து கருத்தரங்கு

Published On 2022-09-28 08:04 GMT   |   Update On 2022-09-28 08:04 GMT
  • பிரதமர் மோடியின் 72-வது பிறந்த தினத்தை முன்னிட்டு புதுவையில் பா.ஜனதா சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
  • கருத்தரங்கில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் செல்வகணபதி எம்.பி. பா.ஜனதா மாநில துணைத்தலைவர் ரவிச்சந்திரன் உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், மாநில செயலாளர் லதா, ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதுச்சேரி:

பிரதமர் மோடியின் 72-வது பிறந்த தினத்தை முன்னிட்டு புதுவையில் பா.ஜனதா சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

இதன் ஒரு கட்டமாக லாஸ்பேட்டை தனியார் ஓட்டலில் பிரதமரின் வாழ்க்கை தொலைநோக்கு கொள்கை மற்றும் சாதனைகள் குறித்து அனைத்து துறை அறிவு சார் வல்லுநர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கு நடந்தது.

பாரதீய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஓ.பி.சி. அணி மாநில பொதுச் செயலாளர் வீர திருநாவுக்கரசு கலந்து கொண்டார்.

கருத்தரங்கில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் செல்வகணபதி எம்.பி. பா.ஜனதா மாநில துணைத்தலைவர் ரவிச்சந்திரன் உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், மாநில செயலாளர் லதா, ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கருத்தரங்கு நிகழ்ச்சியினை அறிவு சார் பிரிவு மாநில அமைப்பாளர் முருகன், தொழில்துறை பிரிவு மாநில அமைப்பாளர் ராஜகணபதி, பொருளாதாரப் பிரிவு மாநில இணை அமைப்பாளர் ரமேஷ், தொழில் துறை பிரிவு மாநில இணை அமைப்பாளர் திருமால், அமைப்புசாரா பிரிவு மாநில இணை அமைப்பாளர் கமலன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags:    

Similar News