புதுச்சேரி
பட்டா வழங்க முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கோரிக்கை
- மக்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
- சுமார் 70 ஆண்டுகளாக பட்டா இன்றி 4 தலைமுறையாக வசித்து வருகின்றனர்.
புதுச்சேரி:
முதலியார் பேட்டை பாரதிமில் திட்டு வண்ணார வீதி மக்கள் நலச்சங்கம் சார்பில் சங்க தலைவர் கண்ணன் செயலாளர் ராஜேஸ்வரி, பொருளாளர் பால குரு இணைச்செயலாளர் வெண்ணிலா பிரேமா ஆகியோர் தலைமையில் அப்பகுதி மக்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
முதலியார் பேட்டை பாரதி மில் திட்டு வண்ணார வீதியில் வசிக்கும் மக்கள் சுமார் 70 ஆண்டுகளாக பட்டா இன்றி 4 தலைமுறையாக வசித்து வருகின்றனர். எனவே அவர்களுக்கு பட்டா வழங்க ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.