புதுச்சேரி

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கென்னடி எம்.எல்.ஏ. உணவு வழங்கிய காட்சி. 

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

Published On 2022-11-13 09:33 IST   |   Update On 2022-11-13 09:33:00 IST
  • புதுவை மாநிலத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக உப்பளம் தொகுதியில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக சென்று சுமார் 2500-க்கு மேற்பட்டோருக்கு உணவுகளை வழங்கினார்.
  • பொதுமக்களை நேரில் அணுகி நிவாரண உதவிகள்,மற்றும் சீரமைப்பு பணிகளை செய்து பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.

புதுச்சேரி:

புதுவை மாநிலத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக உப்பளம் தொகுதியில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக சென்று சுமார் 2500-க்கு மேற்பட்டோருக்கு உணவுகளை வழங்கினார்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் தாழ்வான குடியிருப்பு பகுதிகளை கென்னடி எம்.எல்.ஏ. பார்வையிட்டு அவர்களுக்கு தார்ப்பாய் மற்றும் உணவுகள் உடனுக்குடன் வழங்கி வருகிறார்.

பொதுமக்களை நேரில் அணுகி நிவாரண உதவிகள்,மற்றும் சீரமைப்பு பணிகளை செய்து பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். இதில் தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி, தி.மு.க. மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, தி.மு.க. கிளைச் செயலாளர்கள் செல்வம் மற்றும் மணிகண்டன், காளபன், டேவிட், லாரன்ஸ், மோரிஸ், ரகுமான் தி.மு.க. கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News