புதுச்சேரி

முடநீக்கு உபகரணங்கள் பெறுவதற்கான பதிவு முகாமை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்த காட்சி.

இலவச முடநீக்கு உபகரணங்கள் பெற பதிவு முகாம்

Published On 2022-07-23 08:49 GMT   |   Update On 2022-07-23 08:49 GMT
  • முகாமை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.
  • இன்று தவளக்குப்பத்தில் உள்ள சுப மங்கள மஹால் திருமண நிலையத்தில் நடைபெற்றது.

புதுச்சேரி:

மணவெளி தொகுதியை சேர்ந்த மாற்று திறனாளிகளுக்கு இலவச முடநீக்கு உபகரணங்கள் பெறுவதற்கான பதிவு முகாமை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார். புதுவை அரசின் சமூக நலத்துறை சார்பில் மணவெளி தொகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச முடநீக்கு உபகரணங்கள் பெறுவதற்கான பதிவு முகாம் இன்று தவளக்குப்பத்தில் உள்ள சுப மங்கள மஹால் திருமண நிலையத்தில் நடைபெற்றது.

இந்த முகாமினை தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சமூக நலத்துறை துணை இயக்குனர் கலாவதி, மணவெளி தொகுதி முக்கிய பிரமுகர்கள் பா.ஜனதா மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு, கிருஷ்ணமூர்த்தி, தவளைகுப்பம் கூட்டுறவு சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி, இயக்குனர் சக்திவேல், முன்னாள் கவுன்சிலர் ராஜா, மணி, ரமேஷ், சிவா, செல்வி, வாழுமுனி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த முகாமில் 350-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு அவர்களுக்கான உபகரணங்கள் வேண்டி பதிவு செய்து கொண்டனர். இந்த முகாமில் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கை கால்களை இழந்தவர்களுக்கும் சக்கர நாற்காலி, செயற்கை கை மற்றும் கால், ஊன்றுகோல் உள்ளிட்ட உபகரணங்களும் காதுகேளாதோருக்கு காது கேட்கும் கருவிகளும் கண் பார்வை குன்றியவர்களுக்கு உரிய உபகரணங்களும் இந்த முகாமில் பதிவு செய்யப்பட்டு அளவுகள் எடுக்கப்பட்டு அவர்களுக்குரிய உபகரணங்கள் ஒரு மாத காலத்தில் வழங்கப்படும்.

Tags:    

Similar News