புதுச்சேரி

ரத்ததான முகாமை நேரு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி. அருகில் கராத்தே சுந்தர்ராஜன் உள்ளார்.

ரத்ததான முகாம்-நேரு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2022-10-03 08:26 GMT   |   Update On 2022-10-03 08:26 GMT
  • புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
  • பள்ளியின் முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் பள்ளியின் மூத்த அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதுச்சேரி:

புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. 6-ம் நாளான ரத்ததான முகாம் மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

முகாமிற்கு டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் பள்ளியின் மூத்த அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியை நேரு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநிலச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன், டாக்டர் ரத்னவேல் காமராஜன், ஜிப்மர் மருத்துவமனை ரத்த வங்கி பொறுப்பாளர் மற்றும் டாக்டர்கள் வடிவேல், ரோஷினி, மதன் மற்றும் உதவும் பேரியக்கம் நிறுவனர் புதுவை குமார் கலந்து கொண்டனர் முகாமில் 500-க்கும் மேற்பட்டோர் தன்னார்வலர்கள் சமூக சேவகர்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தும் கண்களை பரிசோதனை செய்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெயந்தி மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாண வர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News