பிள்ளைசாவடி மீனவ கிராமத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. ஆகியோர் ஆய்வு செய்த காட்சி.
கடல் அரிப்பு பகுதியை ரங்கசாமி பார்வையிட்டார்
- புதுவை பிள்ளைச்சாவடியில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பு அதனால் ஏற்பட்டுள்ள மீனவர்களின் வாழ்வாதார பாதிப்பை முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரில் ஆய்வு செய்தார்.
- கடல் அரிப்பால் பிள்ளைச்சாவடி மீனவ மக்கள் படகு நிறுத்த இடம் இல்லாமல் அருகாமையில் உள்ள சுடுகாட்டு பகுதியில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
புதுச்சேரி:
புதுவை பிள்ளைச்சாவடியில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பு அதனால் ஏற்பட்டுள்ள மீனவர்களின் வாழ்வாதார பாதிப்பை முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரில் ஆய்வு செய்தார்.
புதுவை காலாப்பட்டு அருகே உள்ள பிள்ளைச்சாவடி மீனவப் பகுதியில் கடல் சீற்றத்தால் கடல் அரிப்பு ஏற்பட்டு மீனவ பகுதியில் இருந்த சாலைகள், தென்னை மரங்கள், ஒரு சில குடியிருப்புகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டது. மேலும் கடல் அரிப்பால் பிள்ளைச்சாவடி மீனவ மக்கள் படகு நிறுத்த இடம் இல்லாமல் அருகாமையில் உள்ள சுடுகாட்டு பகுதியில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
கடல் அரிப்பை தடுக்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொகுதியின் எம்.எல்.ஏ. கல்யாண சுந்தரத்திடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். மேலும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் மீனவர்கள் இருந்தனர். இதனால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் கடல் அரிப்பு பகுதிகளை இன்று ஆய்வு செய்தனர்.
அப்போது மீனவர்களின் பாதிப்பை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.எடுத்துக் கூறினார். மேலும் மீனவர்களின் கோரிக்கையை ஏற்ற முதல்-அமைச்சர் ரங்கசாமி, கடல்அரிப்பை தடுக்க அரசு உரிய நடவடிக்கை விரைவாக மேற்கொள்ளும் என உறுதி அளித்தார்.