புதுச்சேரி

கோப்பு படம்.

பதவி உயர்வு வழங்க வேண்டும்-காவலர் பொது நல இயக்கம் கோரிக்கை

Published On 2023-03-02 10:27 IST   |   Update On 2023-03-02 10:27:00 IST
  • புதுவை காவல்துறையில் 6-வது சம்பள கமிஷன் அடிப்படையின்படி 10 வருடம் பணி முடித்த காவலர்களை தலைமை காவலர்களாக பதவி உயர்வு அளிக்க வேண்டும்.
  • ஜனாதிபதி உத்தரவு 6-வது சம்பள கமிஷன் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கவில்லை என்று 2012-ம் ஆண்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் காவலர் பொதுநல இயக்கம் புகார் அளித்தது.

புதுச்சேரி:

புதுவை காவலர் பொது நல இயக்க பொது செயலாளர் கணேசன் மத்திய உள்துைற மந்திரி அமித்ஷா, புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் புதுவை போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

புதுவை காவல்துறையில் 6-வது சம்பள கமிஷன் அடிப்படையின்படி 10 வருடம் பணி முடித்த காவலர்களை தலைமை காவலர்களாக பதவி உயர்வு அளிக்க வேண்டும். மேலும் 20 வருடம் பணி முடித்தவர்களை உதவி சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு அளிக்க வேண்டும்.

அதுபோல் 30 வருட பணி முடித்தவர்களை சப்-இன்ஸ்பெக்டர் பணி உயர்வு வழங்க வேண்டும் என்று 6-வது சம்பள கமிஷன் உத்தரவு பிறப்பித்தது. 7-வது சம்பள கமிஷன் அமுல்படுத்தியும் இதுவரை பதவி உயர்வு உத்தரவை அமுல்படுத்தாமல் உள்ளது வேதனை அளிக்கிறது.

ஜனாதிபதி உத்தரவு 6-வது சம்பள கமிஷன் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கவில்லை என்று 2012-ம் ஆண்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் காவலர் பொதுநல இயக்கம் புகார் அளித்தது.

அந்த புகாரின் அடிப்படையின்படி புதுவை போலீசாருக்கு உடனே பதவி உயர்வு அளிக்க ஐ.ஜி-க்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார். ஆனால் இதுவரை பதவி உயர்வு வழங்காமல் உள்ளதை, போர்க்கால அடிப்படையில் பதவி உயர்வு அளிக்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் புதுவை போலீஸ்

டி.ஜி.பி. ஆகியோர் நடவடிக்கை எடுத்து போலீசாருக்கு பதவி உயர்வு வழங்கி அவர்களின் வாழ்வில் வசந்தம் வீச வேண்டும்.

மேலும் காவல்துறையில் போலீசார் சோர்வு இல்லாமல் பணியாற்ற ஊக்குவிக்கும் வகையில் இந்த பதவி உயர்வு அமையும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News