புதுச்சேரி

கோப்பு படம்.

ஓடும் பஸ்சில் தனியார் நிறுவன சூப்பர்வைசருக்கு கத்தி குத்து

Published On 2023-01-17 13:45 IST   |   Update On 2023-01-17 13:45:00 IST
  • சேதராப்பட்டில் ஓடும் பஸ்சில் தனியார் நிறுவன சூப்பர்வைசரை கத்தியால் குத்திய நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
  • பஸ் கண்டக்டரிடம் ஜக்காம்பேட்டைக்கு சந்தோஷ்பிரபு டிக்கெட் கேட்ட போது கலையரசன் திடீரென ஜக்காம்பேட்டைக்கா செல்கிறாய் என கூறி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தோஷ்பிரபுவின் மார்பில் குத்தினார்.

புதுச்சேரி:

சேதராப்பட்டில் ஓடும் பஸ்சில் தனியார் நிறுவன சூப்பர்வைசரை கத்தியால் குத்திய நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

திண்டிவனம் அருகே சிங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்பிரபு(வயது40). இவர் கரசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர் வைசராக பணி புரிந்து வருகிறார். நேற்று மாலை வழக்கம் போல் பணி முடிந்து ஒரு தனியார் பஸ் மூலம் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார். அதே பஸ்சில் கழுதாளி கிராமத்தை சேர்ந்த கலையரசன் (38) என்பவரும் பயணம் செய்தார்.

பஸ் கண்டக்டரிடம் ஜக்காம்பேட்டைக்கு சந்தோஷ்பிரபு டிக்கெட் கேட்ட போது கலையரசன் திடீரென ஜக்காம்பேட்டைக்கா செல்கிறாய் என கூறி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தோஷ்பிரபுவின் மார்பில் குத்தினார். இதில் வலி தாங்காமல் சந்தோஷ் பிரபு அலறவே உடனடியாக பஸ்சை டிரைவர் நிறுத்தினார்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி கலையரசன் தப்பியோடி விட்டார். கத்தி குத்தில் காயமடைந்த சந்தோஷ்பிரபு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து சேதராப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News