புதுச்சேரி

எம்.வி.ஆர். மருத்துவ மையத்தில் நடைபெற்று வரும் மருத்துவ முகாமில் டாக்டர் எம்.ஆர். வித்யா தலைமையில் டாக்டர்கள் பரிசோதனை செய்யும் காட்சி.

உடல் பரிசோதனை முகாம்

Published On 2022-11-28 06:57 GMT   |   Update On 2022-11-28 06:57 GMT
  • புதுவை ஈ.சி.ஆர் மெயின் ரோடு லாஸ்பேட்டையில் அமைந்துள்ள எம் வி ஆர் மருத்துவ மையத்தில் வருடம்தோறும் நவம்பர் 14-ம் தேதி உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு மாபெரும் உடல் நல பரிசோதனை முகாம் நடைபெறும்.
  • நரம்பு மற்றும் ரத்த ஓட்ட பரிசோதனைகள் அனைத்தும் ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள பரிசோதனைகள் சிறப்பு கட்டணச்சலுகையில் ரூ.4 ஆயிரம் கட்டண த்திற்கே செய்யப்படுகிறது.

புதுச்சேரி:

புதுவை ஈ.சி.ஆர் மெயின் ரோடு லாஸ்பேட்டையில் அமைந்துள்ள எம்.வி.ஆர் மருத்துவ மையத்தில் வருடம்தோறும் நவம்பர் 14-ம் தேதி உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு மாபெரும் உடல் நல பரிசோதனை முகாம் நடைபெறும் அதனையொட்டி இந்த ஆண்டும் மருத்துவ முகாம் கடந்த 1-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இது குறித்து எம்.வி.ஆர். மருத்துவமைய மருத்துவ இயக்குனர் டாக்டர் எம்.ஆர்.வித்யா கூறியதாவது:-

இம்முகாமில் ரத்த சர்க்கரை அளவு, ரத்த கொழுப்பு அளவு, ரத்த சோகை பரிசோதனை, ரத்தத்தில் வைட்டமின் டி அளவு, சிறுநீரக ரத்தப் பரிசோதனை, கல்லீரல் ரத்தப் பரிசோதனை, இருதய பரிசோதனை, மார்பு எக்ஸ் ரே, வயிற்றுப்பகுதிக்கான ஸ்கேன், கண் விழித்திரை புகைப்படம், பல், நரம்பு மற்றும் ரத்த ஓட்ட பரிசோதனைகள் அனைத்தும் ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள பரிசோதனைகள் சிறப்பு கட்டணச்சலுகையில் ரூ.4 ஆயிரம் கட்டண த்திற்கே செய்யப்படுகிறது.

இம்முகாமில் பரிசோதனைகள் செய்துகொள்ளும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு முதுநிலை சர்க்கரை நோய் குறித்து ஆலோசனை இலவசமாக வழங்கப்படுகிறது. முகாமில் பரிசோதனைகள் கொள்பவர்களுக்கு காலை உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இம்முகாமிற்கான ஏற்பாட்டினை எம்.வி.ஆர் மருத்துவ மையத்தின் இணை மருத்துவ இயக்குனர் தேவநாதன் வாசு மற்றும் மேலாளர் தேவதாஸ் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News