புதுச்சேரி

மூவர்ணத்தில் பாண்லே குல்பி தயாராகும் காட்சி.

மூவர்ணத்தில் பாண்லே குல்பி விற்பனை

Published On 2022-08-13 09:39 GMT   |   Update On 2022-08-13 09:39 GMT
  • பால், ஐஸ்கிரீம், தயிர், வெண்ணை, நெய், குல்பி போன்றவை பாண்லே பாலகங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
  • பாண்லே பாக்கெட்டுகளில் வாசகங்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகிப்படுகிறது.

புதுச்சேரி:

புதுவை குருமாம்பேட்டில் இயங்கும் பால் உற்பத்தியாளர் ஒன்றியம் மூலம் பால், ஐஸ்கிரீம், தயிர், வெண்ணை, நெய், குல்பி போன்றவை பாண்லே பாலகங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுதோறும் தேசிய கொடியை ஏற்ற வலியுறுத்தி பாண்லே பாக்கெட்டுகளில் வாசகங்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகிப்படுகிறது. அடுத்த கட்டமாக மக்கள் விரும்பி உண்ணும் குல்பியை தேசியக் கொடியின் 3 வண்ணத்தில் தயாரித்து வினியோகிக்கப்படுகிறது.

16-ந் தேதி வரை அனைத்து பாண்லே பாலகத்தின் மூவர்ணத்தில் குல்பி கிடைக்கும் என பாண்லே மேலாண் இயக்குனர் முரளி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News