புதுச்சேரி
வடக்கு மாநில அ.ம.மு.க. ஆலோசனை கூட்டம்
- புதுவை வடக்கு மாநில அ.ம.மு.க. ஆலோசனை கூட்டம் மாநில செயலாளர் எஸ்.டி.சேகர் தலைமையில் நடைபெற்றது.
- தொகுதி செயலாளர்கள் செந்தில் என்கிற குமாரவேல் ராமசந்திரன், ரத்தினக்குமார், கலைவாணி பூங்குழலி, அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை வடக்கு மாநில அ.ம.மு.க. ஆலோசனை கூட்டம் மாநில செயலாளர் எஸ்.டி.சேகர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அவை த்தலைவர் சுப்பிரமணியன், இணைச்செயலாளர் லாவண்யா, மகளிரணி செயலாளர் காமாட்சி, துணைச்செயலாளர் தமிழரசி, அ.ம.மு.க. நிர்வாகிகள் ரகுபதி, ஆனந்தன், ஜெயலலிதா பேரவை செயலாளர் காண்டீபன், தொழிற்சங்க பேரவை செயலாளர் பிரகாஷ், இளைஞர் பாசறை செயலாளர் இளம்வழுதி, சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்சன், மாணவரணி செயலாளர் ஜெகதீஷ், தொகுதி செயலாளர்கள் செந்தில் என்கிற குமாரவேல் ராமசந்திரன், ரத்தினக்குமார், கலைவாணி பூங்குழலி, அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.