புதுச்சேரி

தார்சாலை அமைக்கும் பணியை நேரு எம்.எல்.ஏ ஆய்வு செய்த காட்சி.

தார்சாலை அமைக்கும் பணி நேரு எம்.எல்.ஏ ஆய்வு

Published On 2023-07-19 04:44 GMT   |   Update On 2023-07-19 04:44 GMT
  • பழுதடைந்த பழையதார் சாலைகளை மாற்றி புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
  • ஆய்வின்போது சிமெண்ட் சாலைகள் தரமான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா? என்பதை குறித்து அதிகாரியிடம் கேட்டறிந்தார்.

புதுச்சேரி:

புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட மறைமலை அடிகள் சாலை யில் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் மத்திய பிரிவு மூலம் பழுதடைந்த பழைய தார் சாலையை மாற்றி புதிய தார் சாலை அமைக்கும் பணி மற்றும் காங்கிரீட் வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளையும் மேலும் இளங்கோ நகர் வார்டு பகுதியான கென்னடி நகர் பகுதியில் உள்ள லயன்ஸ்கிளப் வீதியில் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் மத்திய பிரிவு மூலம் பழுதடைந்த பழையதார் சாலைகளை மாற்றி புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளில் வாய்க்கால் கட்டும் பணி மற்றும் மழை காலங்களில் மழைநீர் பகுதியில் தேங்காதவாறு எளிதாக வெளியேறும் வகையில் வாட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. நேரு அப்பகுதியில் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது சிமெண்ட் சாலைகள் தரமான முறையில் அமைக்கப்பட்டு ள்ளதா? என்பதை குறித்து அதிகாரியிடம் கேட்டறிந்தார்.

ஆய்வின் போது போக்குவரத்து காவல் ஆய்வாளர் செந்தில்குமார், பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் மத்திய பிரிவு செயற்பொறியாளர் உமாபதி, உதவி பொறியாளர் பன்னீர்செல்வம், இளநிலை பொறியாளர் சிவப்பிரகாசம், நகராட்சி உதவி பொறியாளர் நமச்சிவாயம், நகராட்சி இளநிலை பொறியாளர் குப்புசாமி மற்றும் அரசு அதிகாரிகள், மனிதநேய மக்கள் சேவை இயக்க நிர்வாகிள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News