புதுச்சேரி

பாகூர் மூலநாதர் சாமி கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை இழுத்த காட்சி.

மூலநாதர் கோவில் தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை இழுத்தனர்.

Published On 2022-07-12 15:01 IST   |   Update On 2022-07-12 15:01:00 IST
  • பாகூரில் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் கோவில் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது.
  • இக்கோவில் 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் பராந்தக சோழனால் கட்டப்பட்டதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.

புதுச்சேரி:

பாகூரில் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் கோவில் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது.

பழமையான கோவில் இக்கோவில் 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் பராந்தக சோழனால் கட்டப்பட்டதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.

இத்தகைய பழமையான கோவிலில் கொரோனா ஊரடங்குக்கு பிறகு 2 ஆண்டுக்கு பின் கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு பூஜைகளும், இரவில் பல்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடந்தது.

திருக்கல்யாணம் கடந்த 10-ந் தேதி பொதுமக்கள் சார்பில் மூலநாதர்-வேதாம்பிகை அம்மன் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 7.30 மணியளவில் தேரோட்டம் நடை பெற்றது.

இந்து சமய அற–நிலையத்துறை ஆணையர் சிவசங்கர், செந்தில்குமார் எம்.எல்.ஏ. உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

இந்த தேரினை பெரும்பாலான பெண்களே இழுத்து சென்று நேர்த்தி கடனை செலுத்தினர். மேலும் கிராம மக்கள் காய், பழம், பூ, மிட்டாய் வீசினர். பின்னர் விளக்கு ஏற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இந்த தேர் பாகூர் மாட வீதிகள் வழியாக வலம் வந்து பின்னர் கோவிலை வந்தடைந்து. இதில் பாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை இழுத்தனர்.

விழாவுக்கான ஏற்பாடு களை கோவில் அறங்காவல் குழு தலைவர் முத்துராமன், துணைத் தலைவர் சக்திவேல், செயலாளர் காத்தவராயன், பொருளாளர் பிரபு மற்றும் பாகூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News