புதுச்சேரி

கருத்தரங்கில் செல்வகணபதி எம்.பி. பங்கேற்ற காட்சி.

மோடி 20 கருத்தரங்கம்

Published On 2022-10-02 13:56 IST   |   Update On 2022-10-02 13:56:00 IST
  • பிரதமர் மோடியின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்டங்கள் நடைபெற்று க்கொண்டிருக்கிறது.
  • இவ்விழாவில் ஜிப்மர் மருத்துவமனையின் டீன் பங்கஜ் குந்த்ரா வரவேற்ப்புரையாற்றினார்.

புதுச்சேரி:

பிரதமர் மோடியின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்டங்கள் நடைபெற்று க்கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக மோடி- 20 கருத்தரங்கம் ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் ஜிப்மர் மருத்துவமனையின் டீன் பங்கஜ் குந்த்ரா வரவேற்ப்புரையாற்றினார். முன்னாள் நீதிபதி அருள் தொடக்க உரையாற்றினார். செல்வகணபதி எம்.பி தலைமை விருந்தினராக பங்கேற்று கருத்தரங்கை தொடங்கிவைத்தார்.

அவர் பேசுகையில் மோடியின் 20 ஆண்டுகள் சாதனைகளை மாநில அளவிலும் தேசிய அளவிலும் பட்டியலிட்டார்.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினரும் கல்வியாளரும்மான காயத்திரி இக்கருத்தரங்கில் மோடி 20 என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

இந்த கருத்தரங்கில் 300-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடன் பங்கேற்றார்கள்.

இறுதியில் ஜிப்மர் மருத்துவமனையின் பதிவாளர் பேராசிரியர் ரவிக்குமார் சிட்டோரிஸ் நன்றியுரை வழங்கினார்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஜிப்மர் மருத்துவமனையின் அலுவலர்கள் மற்றும் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News