புதுவை கலிதீர்த்தாள்குப்பம் எம்.ஐ.டி. கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் கோவை ஷ்யூர்டி ஐ.எம்.எப். நிறுவன மனிதளவளத்துறை மேலாளர் சக்திவேல் மற்றும் குழுவினர் பங்கேற்றனர்.
எம்.ஐ.டி. கல்லூரியில் ேவலைவாய்ப்பு முகாம்
- புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (எம்.ஐ.டி) கோவை ஷ்யூர்டி ஐ.எம்.எப். நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
- பின் குழு கலந்துரையாடல் மற்றும் நேர்காணல் ஆகிய சுற்றுகளாக முகாம் நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (எம்.ஐ.டி) கோவை ஷ்யூர்டி ஐ.எம்.எப். நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
கல்லூரி தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தனர். முதல்வர் மலர்க்கண் முகாமை தொடங்கி வைத்தார்.
கோலை ஷ்யூர்டி ஐ.எம்.எப். நிறுவன மனிதவள துறை மேலாளர் சக்திவேல் மற்றும் குழுவினர், நிறுவன விபரங்கள் இங்கு பணிபுரிவோருக்கான சூழல், எதிர்கால குறிக்கோள்கள், ஊதியம் பற்றி கூறினர்.
பின் குழு கலந்துரையாடல் மற்றும் நேர்காணல் ஆகிய சுற்றுகளாக முகாம் நடைபெற்றது. இதில் துறை சார்ந்த வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், மேலாண்மை மற்றும் பொறியியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் செய்திருந்தார்.